Sunday, March 09, 2014

யுதிஷ்டிரனுக்குக் காட்சியளித்த பரசுராமர் - வனபர்வம் பகுதி 117

Rama showed himself to Yudhishthira! | Vana Parva - Section 117 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தந்தை ஜமதக்னியின் இறப்புக்குப் பழிவாங்கிய பரசுராமர்; க்ஷத்திரியர்களின் இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்களை உருவாக்கி தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது; பூமியை அந்தணர்களுக்குக் கொடுப்பது; தன்னிடம் இருந்த செல்வத்தை அந்தணர்களுக்குப் பிரித்துக் கொடுப்பது; யுதிஷ்டிரனுக்கும் அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்து ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் தென்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வது…

ராமர் {பரசுராமர்} சொன்னார், "ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, குற்றம் என்னுடையதே. அந்த அற்ப முட்டாள் பாவிகளான கார்த்தவீரியனின் மகன்கள் கணைகளால் கானகத்தில் இருக்கும் மானைப் போல கொல்லப்பட்டீர்.  ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, அறம்சார்ந்து, நேர்மையான பாதையில் தடுமாற்றம் இல்லாது, அசையும் உயிரினங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதிருந்தீரே. நீர் இவ்வழியில் இறந்து போக விதி எப்படி அனுமதித்து? வயோதிகரும், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும், போரிட விருப்பமில்லாதவருமான உம்மை நூறு கூர்மையான கணைகளால் கொன்றவர்கள் எப்படிப்பட்ட மிக மோசமான பாவத்தை இழைத்திருக்கிறார்கள்? வெட்கமற்ற அந்த மனிதர்கள் தங்கள் செயலை நண்பர்கள் மற்றும் சேவகர்கள் முன்னிலையில் உதவியற்ற எதிர்ப்பில்லாத அறம்சார்ந்த மனிதனைக் கொன்றோம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார்கள்?"


ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படியே தவத்தில் பெருமைமிக்க அவர் {பரசுராமர்} பரிதாபகரமாக அழுது புலம்பி, இறந்து போன தனது தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்தார். எதிரிகளின் நகரங்களைக் வெற்றிகொள்ளும் ராமர் {பரசுராமர்} சிதையில் தனது தந்தையின் உடலைத் தகனம் செய்து சபதம் செய்தார். ஓ பாரத குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் மிகுந்த வலிமையும், துணிவு மிகுந்த வீர ஆன்மாவும் கொண்டு, மரண தேவனுக்கு ஒப்பாக இருந்த அவர் {பரசுராமர்}, மொத்த படைவீரர்களின் சாதியையும் {க்ஷத்திரியர்களையும்} படுகொலை செய்வதாக சபதம் செய்து, மிகுந்த கோபத்துடன் தனது ஆயுதத்தை எடுத்து, தனியொருவராக கார்த்தவீரியனின் மகன்களைக் கொன்றார்.

ஓ! படைவீரர்கள் சாதியின் {க்ஷத்திரியர்களின்} தலைவா {யுதிஷ்டிரா}, எதிரிகளை அடிக்கும் வல்லமைபெற்ற தலைவரான ராமர் {பரசுராமர்} கார்த்தவீரியன் மகன்களைத் தொடர்ந்த வந்த க்ஷத்திரியர்களை மூன்று முறை அழித்தொழித்தார். அந்த வலிமிக்க தலைவர் ஏழு முறை {3 x 7 = 21 இருபத்தொரு முறையென்று நினைக்கிறேன்} உலகத்தை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்தார்.

சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் அவர்களின் {க்ஷத்திரியர்களின்} இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்கள் அவரால் {பரசுராமரால்} உண்டாக்கப்பட்டது. அங்கே அந்த பெரும்பலம்வாய்ந்த பிருகு குலக் கொழுந்து {பரசுராமர்} தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்தினார். பிருகுவும், ரிசீகரும் அவர் முன்பு உருவம் கொண்டு வந்து ஆலோசனை வழங்கினர்.

பிறகு அச்சமூட்டும் பெயர் கொண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, ஒரு பெரும் வேள்வியைச் செய்து, தேவர்களின் தலைவனைத் {இந்திரனைத்} திருப்தி செய்து, ஆலோசனை கூறும் புரோகிதர்களுக்கு {ரித்விக்குகளுக்கு} பூமியை வழங்கினார். ஓ மனிதர்களைக் காப்பவனே {யுதிஷ்டிரா}, அவர் {பரசுராமர்} தங்கத்தாலான ஒரு பலிபீடத்தை எழுப்பினார். அது பத்து வியாமா அகலமும் {40 முழம் [ஒரு வியாமா என்பது 4 முழம்]}, ஒன்பது வியாமா {36 முழம்} உயரமும் இருந்தது. அதை பெருமை மிக்க காசியபருக்குப் பரிசாகக் கொடுத்தார் {பரசுராமர்}. பிறகு காசியபரின் உத்தரவின் பேரில் அந்தணர்கள் அந்த பலிப்பீடத்தை பல பங்குகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படியே அவர்கள் {அந்த அந்தணர்கள்} காண்டவாயமர்கள் (பங்கு பிரித்துக் கொண்டவர்கள்) என்ற பெயர் பெற்றனர்.

மகத்தான பலம் கொண்ட படைவீரர் குலத்தை {க்ஷத்திரியர்களை} அழித்தவர் {பரசுராமர்}, பூமியை உயர் ஆன்ம காசியபருக்கு அளித்தார். பின்பு கடுமை மிகுந்த தவத்தில் ஈடுபட்டார். இப்போது அவர் மலைகளின் ஏகாதிபதியான மகேந்திரத்தில் வசிக்கிறார். இப்படியே அவருக்கும் பூமியில் வசித்த அனைத்து படைவீரர்கள் சாதிக்கும் பகைமை ஏற்பட்டது. மகத்தான பலம் கொண்ட ராமர் {பரசுராமர்} இவ்வழியிலேயே மொத்த உலகையும் அடக்கினார்" என்றார் {அக்ருதவ்ரணர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு பதினான்காவது சந்திர நாளில் {சதுர்த்தசியில்}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ராமர் {பரசுராமர்}, சரியான நேரத்தில், அங்கிருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கும்}, அறம் சார்ந்த மன்னனுக்கும் (யுதிஷ்டிரனுக்கும்), அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்தார். ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தலைவனும் {யுதிஷ்டிரனும்} தனது தம்பிகளுடன் சேர்ந்து ராமரை {பரசுராமரை} வழிபட்டான். ஓ! மனிதர்களை ஆள்பவர்களில் மிகவும் நேர்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த இருபிறப்பாளர் வகையின் உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கு} அவன் உயர்ந்த மரியாதைகளைச் செலுத்தினான். ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} வணங்கிய பிறகு, அவரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்று, அவரது {பரசுராமரின்} வழிகாட்டுதல் படி அந்த இரவை மகேந்திர மலையில் கழித்து, தெற்குப் பகுதிகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கினான் {யுதிஷ்டிரன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்