Sunday, March 09, 2014

பாண்டவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 118

Krishna met the Pandavas! | Vana Parva - Section 118 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கிருஷ்ணன், பலராமன் மற்றும் பல விருஷ்ணி குலத்தோர் பாண்டவர்களைச் சந்திப்பது; அவர்களிடம் பாண்டவர்கள் தங்கள் நிலையை விளக்குவது; பாண்டவர்கள் நிலை கண்டு அவர்கள் வருந்துவது…


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பெருமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது பயணத்தைத் தொடர்ந்து, கடற்கரையோரமாகப் பல வித்தியாசமான இடங்களுக்குச் சென்று, புரோகித சாதியைச் சேர்ந்த மனிதர்கள் அடிக்கடி செல்லும் புனிதமான காண்பதற்கினிய பல இடங்களில் நீராடினான். ஓ பரிக்ஷித்தின் மகனே {ஜனமேஜயா}, அவன் {யுதிஷ்டிரன்} உரிய முறையில் தனது தம்பிகளுடன் நீராடி அனைத்திலும் புனிதமான ஒரு அற்புதமான நதிக்குச் {பிரசஸ்தை} சென்றான். அங்கேயும் அந்தப் பெருமை மிக்க மன்னன் மூழ்கி, தனது மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் கொடுத்து, இருபிறப்பாளர் வர்க்கத்தின் {அந்தணர்களின்} தலைவர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தான்.


பிறகு அவன் {யுதிஷ்டிரன்} கடலில் நேரடியாக விழும் கோதாவரி நதிக்குச் சென்றான். அங்கே அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபட்டான். பிறகு அவன் திராவிட நிலத்தில் உள்ள கடலை அடைந்து, அகஸ்தியரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு புனிதமான இடத்திற்குச் சென்று, அதையும் கடந்து புண்ணியமிக்கப் பரிசுத்தமான இடங்களுக்கும் சென்றான். பிறகு அந்த வீரம் மிகுந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்தன்மையுடைய புனித இடங்களுக்கும் {நாரீ தீர்த்தங்களுக்கும்} சென்றான். அங்கே அவன், வில்தாங்குபவர்களில் தலைவனான அர்ஜுனனின் நன்கு அறியப்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைக் கதைகளைக் கேட்டான். அங்கே புரோகித வர்க்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களின் {அந்தணர்களின்} பாராட்டுகளைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.

ஓ! பூமியின் பாதுகாவலா! அந்த உலகத்தின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து அந்தப் புனிதமான இடங்களில் நீராடினான். அர்ஜுனனின் வீரத்தைப் புகழ்ந்து அந்த இடத்தில் மகிழ்ச்சியாகத் தனது நேரத்தைக் கடத்தினான். பிறகு அவன், அந்தக் கடற்கரையை ஒட்டிய புனிதமான இடங்களில் ஆயிரம் {1000} பசுக்களைக் கொடுத்தான். பிறகு, தனது தம்பிகளிடம் அர்ஜுனன் எப்படிப் பசுக்களைத் தானம் கொடுத்தான் என்று மகிழ்ந்து சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒன்றன்பின் ஒன்றாகக் கடற்கரையோரமுள்ள சூர்ப்பாரகம் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்திலும் புனிதமான இடத்தை அடையும் வரை, பல புனிதமான இடங்களையும், மற்றப் பல புனிதமான இடங்களையும் இதய விருப்பம் நிறைவேறி தரிசித்தான்.

பிறகு கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கடந்து உலகத்தில் கொண்டாடப்படும் ஒரு கானகத்தை அடைந்தான். பழங்காலத்தில் அங்கே தேவர்கள் தவம்பயின்றனர். அறம்சார்ந்தவர்களான மனிதர்களின் ஆட்சியாளர்கள் பலர் பல வேள்விச் சடங்குகளை அங்கே செய்திருந்தனர். நீண்டு பருத்து அழகான கரங்களைக் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அங்கே வில்லேந்துபவர்களில் முதன்மையான ரிசீகரின் மகனது கொண்டாடப்படும் பலிப்பீடத்தைக் கண்டான். அப்பீடம் தவசிகளாலும், வழிபடத்தக்க அறம்சார்ந்தவர்களாலும் சூழப்பட்டிருந்தது. பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைத்துத் தேவர்கள், வசுக்கள், வாயு, மற்றும் இரண்டு தெய்வீக மருத்துவர்கள், சூரியன் மகனான யமன், செல்வத்தின் தலைவன், இந்திரன், விஷ்ணு, படைப்புத் தலைவன் {பிரம்மன்}, சிவன், சந்திரன், நாளின் ஆசிரியர் {சூரியன்}, நீர்த்தலைவன், சத்யஸ்கள் கூட்டம், மூதாதையர்கள், தொடர்பவர்களுடன் கூடிய ருத்திரர், கல்வித் தேவதை {சரஸ்வதி}, சித்தர்கள் கூட்டம் மற்றும் பல இறவாத தேவர்களின் புனிதமான காண்பதற்கினிய சன்னதிகளை {கோவில்களை} கண்டான்.

அக்கோவில்களில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல உண்ணாநோன்புகள் நோற்று, பெருமளவில் ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். தனது உடலுடன் அனைத்து புண்ணிய இடங்களிலும் மூழ்கி, மீண்டும் சூர்ப்பாரகத்திற்கு வந்தான். அவன் தனது தம்பிகளுடன் அதே கடற்கரைக்கு வந்து, உலகம் முழுவதும் அந்தணர்களால் புகழ் பரப்பப்பட்ட புனிதமான இடமான பிரபாசத்துக்கு வந்தான். இரு பெரிய சிவந்த கண்களைக் கொண்டவன், அங்கே தனது தம்பிகளுடன் நீராடி, மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தினான். மற்ற அந்தணர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, லோமசருடன் சேர்ந்த அதையே செய்தனர்.

பனிரெண்டு நாட்களுக்குக் காற்று மட்டும் நீர் மட்டுமே உண்டு வாழ்ந்தான். பிறகு எல்லாப்புறமும் நெருப்பு சூழ இரவும் பகலும் {ஆன்ம} சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்தான். இப்படியே அறம் சார்ந்த மனிதர்களில் பெரியவன் {யுதிஷ்டிரன்} தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். இப்படி அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மன்னன் {யுதிஷ்டிரன்} கடும் தவமிருக்கிறான் என்ற செய்தி பலராமனையும், கிருஷ்ணனையும் எட்டியது. விருஷ்ணி குலத்தில் இரு தலைவர்களும் தங்கள் படைகளுடன் அஜமீட குலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிரனிடம் வந்தனர். உடலெல்லாம் அழுக்குடன் தரையில் படுத்துக் கிடந்த பாண்டுவின் மகன்களையும், துன்ப நிலையில் இருந்த துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கண்ட அவர்களது துயரம் பெரிதாக இருந்தது. கதறி அழுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.

பிறகு, துரதிர்ஷ்டத்தால் வீழ்த்த முடியாத வீரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும், சாம்பனையும், கிருஷ்ணனின் மகனையும் {பிரத்தியும்னனையும்}, சினியின் பேரனையும் {சாத்யகியையும்}, மற்ற விருஷ்ணிகளையும் சந்தித்து உரிய வகையில் மரியாதை செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் பதிலுக்குப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} அதே போல மரியாதை செலுத்தினர். பிறகு அவர்கள் அனைவரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்திரனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். மிகவும் திருப்தியடைந்த அவன் {யுதிஷ்டிரன்}, தனது எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும், தாங்கள் காட்டில் எப்படி வசித்தனர் என்பதையும், அர்ஜுனன் ஆயுத அறிவியலைக் கற்க எப்படி இந்திரனின் வசிப்பிடம் சென்றான் என்பதையும் விவரித்து, இதயத்தால் மகிழ்ந்தான். அவர்களும் அவனிடம் இருந்து அனைத்து செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர். ஆனால் பாண்டவர்கள் மிகவும் மெலிந்திருப்பதைக் கண்ட பெருந்தன்மையுடைய கம்பீரமான விருஷ்ணிகளால் கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் உணர்ந்த வேதனையால், அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் தடையற வழிந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்