Monday, March 10, 2014

பலராமன் வேதனை - வனபர்வம் பகுதி 119

Valarama's agony! | Vana Parva - Section 119 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும், துரியோதனன் பூமி ஆள்வதையும் நினைத்து பலராமன் வருந்துவது...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர்? அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாவைக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது?"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடற்கரையில் இருக்கும் புனிதமான இடமான பிரபாசத்தை விருஷ்ணிகள் அடைந்தபோது, அவர்கள் பாண்டுவின் மகன்களைச் சூழ்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு பசும்பால், குருக்கத்திப்பூ {Kunda Flower}, சந்திரன், வெள்ளி மற்றும் தாமரையின் வேரைப் போன்ற நிறம் கொண்டு, காட்டு மலர்மாலை அணிந்து, கலப்பையை ஆயுதமாகக் கொண்ட தாமரை இதழ்போன்ற கண்களைக் கொண்ட பலராமன், "ஓ! கிருஷ்ணா, "பெருந்தன்மை கொண்ட யுதிஷ்டிரன், ஜடா முடியுடன் வனவாசம் செய்து மரவுரி தரித்து இத்தகு இழி நிலையில் இருப்பதால் அறப்பயிற்சி நன்மைக்கோ அல்லது நேர்மையற்ற செயல்கள் தீமைக்கோ இட்டுச் செல்வதை நான் காணவில்லை. இப்போது துரியோதனன் பூமியை ஆள்கிறான். இருப்பினும் இந்தப் பூமி அவனை இன்னும் விழுங்கவில்லை.


இதனால், குறைந்த அறிவுடைய மனிதன்கூட, அறம் சார்ந்திருப்பதைவிட, தீய வழி வாழ்வே சரியானது என்றே நம்புவான். துரியோதனன் வளமிக்க நிலையிலும், யுதிஷ்டிரன் அரியணை திருடப்பட்டும் இப்படித் துன்புற்றால், இக்காரியத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? இந்தச் சந்தேகமே அனைத்து மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் சென்று, உண்மையில் கண்டிப்புடன், இதயத்தில் தயாளத்துடன், அறத்தேவன் {தர்மதேவன்_எமதர்மன்} மூலம் உதித்த மக்கள் தலைவன் {யுதிஷ்டிரன்} இங்கே இருக்கிறான். இந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, நாட்டையும் இன்பத்தையும் கொடுப்பானேயொழிய, வாழ்வதற்காக ஒருபோதும் நேர்மையான பாதையில் இருந்து விலக மாட்டான்.

பீஷ்மர், கிருபர், அந்தணரான துரோணர், சபையின் மூத்த உறுப்பினரான வயோதிக மன்னன் {திருதராஷ்டிரன்} ஆகியோர் பிருதையின் மகன்களை வெளியேற்றிய பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்? தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான்? தன்னை மீறி நடக்காத மகன்களை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா? தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான்? தனது நாட்டிலிருந்து குந்தியின் மகன்களை வெளியேற்றியதால் அல்லவா அப்படி ஆனான்?

தனது மகன்களுடன் சேர்ந்து மனிதத்தன்மையற்ற இக்குற்றச் செயலைச் செய்திருக்கும் விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்}, இறந்தவர்கள் உடலை எரிக்கும் இடத்தில் மலர்கள் நிறைந்த தங்க மரங்களைக் காண்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் தோள்களை உயர்த்தி., தங்கள் சிவந்த பெரிய கண்களை உருட்டி முறைத்துப் பார்த்த போது, அவர்களது தீய ஆலோசனையை இவர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அச்சமற்ற முறையில் அவர் போருக்குத் தேவையான ஆயுதங்களுடனும், தம்பிகளின் துணையுடனும் இருந்த யுதிஷ்டிரனைக் கானகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.

ஓநாயைப் போலப் பெரும்பசியுடனும் உண்ணும் விருப்பத்துடனும் இங்கே இருக்கும் பீமன், போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளின் பலத்தாலேயே ஒரு படையணியையே அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன். போர்க்களத்தில் இருக்கும் பெரும் படைகளும் இவனது வெறும் போர்க் கர்ஜனையை மட்டுமே கேட்டு முற்றிலும் காலியாகும். இப்போது அந்தப் பலம் வாய்ந்தவன் பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைப்பு தரும் பயணங்களால் மெலிந்திருக்கிறான். ஆனால் அவன் தன் கைகளில் கணைகளையும், பிற போர் ஆயுதங்களையும் ஏந்தி எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்தால், அவன் தனது கானக வாழ்வின் துயரங்களை நினைவு கூர்ந்து, தனது எதிரிகளைக் கொல்வான். இது நிச்சயமாக நடக்கும் என நான் கருதுகிறேன்.

இந்த முழு உலகத்திலும் இவனது {பீமனது} பலத்துக்கும் வீரத்துக்கும் இணையாக வேறு எந்த ஒரு ஆன்மாவும் பெருமை பேச முடியாதே. ஐயோ, இவனது உடல் குளிராலும், வெப்பத்தாலும் காற்றாலும் மெலிந்து போயிருக்கிறதே. ஆனால், அவன் போரிட எழுந்து நின்றால், எதிரிகளில் ஒரு மனிதனையும் விடமாட்டான். இந்தப் பெரும் போர்வீரனான இந்தப் பலம் நிறைந்த பீமன், தேரில் ஏறி, ஓநாயின் பசி கொண்டு தனி ஒருவனாகக் கிழக்குத் திசையில் இருந்த மனிதர்களின் ஆட்சியாளர்களை மொத்தமாகப் போரில் வென்று காயமில்லாமல் பத்திரமாகத் திரும்பினான். அதே பீமன், மரவுரி தரித்து, கானகத்தில் இழி வாழ்வு வாழ்ந்து துயரத்தில் இருக்கிறான்.

இந்தப் பலமிக்கச் சகாதேவன் தெற்கில் உள்ள மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தியவன். கடற்கரையில் கூடியிருக்கும் அந்த மனிதர்களின் தலைவர்கள் துறவியின் கோலத்தில் இவனைக் காண்கிறார்கள். போர்க்களத்தில் வீரமிக்க நகுலன் தனி ஒருவனாக மேற்குத் திசை ஆண்ட மன்னர்களை வீழ்த்தியவன். அவன் இப்போது கனிகளையும் கிழங்குகளையும் உண்டு ஜடாமுடி தரித்து, உடலெல்லாம் அழுக்கடைந்து கானகத்தில் திரிகிறான். தேரில் ஏறினால் ஒருபெரும் போர்வீராங்கனையும் ஒரு மன்னனின் {துருபதனின்} மகளுமான இவள் {திரௌபதி}, வேள்விச் சடங்கின் போது வேள்விப் பீடத்தில் இருந்து உதித்தவளாவாள். எப்போதும் மகிழ்ச்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவள், கானகத்தில் துயர்நிறைந்த வாழ்வை எப்படி வாழ்கிறாள்? வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர்? அறத்தின் மகன் வீழ்ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான்? ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை?" என்று கேட்டான் {பலராமன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்