Sunday, March 30, 2014

பாண்டவர்கள் கைலாயம் ஏற முற்படுவது! - வனபர்வம் பகுதி 139

Pandavas approach the Kailasa to ascend! | Vana Parva - Section 139 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

லோமசரின் வழிகாட்டுதலின் படி யுதிஷ்டிரன்  பல மலைகளையும் அற்புத தீர்த்தங்களையும் கடந்தது.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஓ மன்னா, இப்போது நீ உசீரவிஜம், மைநாகம், ஸ்வேதம் மற்றும் கால மலைகளைத் தாண்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் காளையே, இப்போது உனக்கு முன்பாக ஏழு கங்கைகள் பாய்ந்தோடுகின்றன. இவ்விடம் புண்ணியம் நிறைந்த புனிதமான இடமாகும். இங்கே இடைவெளி இல்லாமல் அக்னி சுடர்விட்டு எரிகிறது. மனுவின் எந்த மகனும் {எந்த மனிதனும்} இந்த அற்புதக் காட்சியைக் காண இயன்றதில்லை. ஆகையால், ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதோ இந்தத் தீர்த்தங்களைத் தீவிரமானக் கவனம் கொண்ட மனதுடன் பார். நாம் கால மலையைக் கடந்து வந்துவிட்டதால் தேவர்களின் விளையாட்டு மைதானத்தில் அவர்களுடைய கால்தடங்களைப் பார்ப்பாய். நாம் இப்போது, யக்ஷர்களாலும், யக்ஷர்களின் மன்னர்களான மாணிபத்திரன், மற்றும் குபேரன் ஆகியோர் வசிக்கும் வெள்ளைப் பாறை போல இருக்கும் இந்த மந்தர மலையில் ஏறுவோம்.


ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பதாயிரம் {80,000} பேர் கொண்ட கந்தர்வப்படையும், அதைப்போல நான்கு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில், கைகளில் ஆயுதங்களுடனும் பல்வேறு உருவங்களிலும் இருக்கும் கிம்புருஷர்களும், யக்ஷர்களும், யக்ஷ மன்னன் மாணிபத்திரனுக்காகக் காத்திருக்கின்றனர். இப்பகுதிகளில் அவர்களது சக்தி அதிகமாக இருக்கும். வேகத்தில் அவர்கள் காற்றைப் போல இருக்கிறார்கள். சந்தேகமற அவர்களால் தேவர்களின் தலைவனையும் {இந்திரனையும்} அவனது ஆசனத்தில் இருந்து இறக்க முடியும். அப்படிப்பட்ட அவர்களால் பாதுகாக்கப்பட்டும், ராட்சசர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் இருக்கும் இந்த மலைகள் அணுகுவதற்கு மிகவும் அரிதானது {ஏறுவதற்குக் கடினமானது}. ஆகையால், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது நினைவுகளைக் கவனமாக ஒருமுகப்படுத்து. அது ஒருபுறம் இருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் குடும்பங்களும், குபேரனின் கடுமையான அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாம் அவர்களையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஓ! குந்தியின் மகனே, உனது சக்திகளைக் குவித்துக் கொள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கைலாச மலை ஆறு யோஜனை உயரம் கொண்டது. அதில் {கைலாச மலையில்} மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்று இருக்கிறது.

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எண்ணிலடங்கா யக்ஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், கந்தர்வர்களும் குபேரனின் அரண்மனைக்குச் செல்லும் இந்த வழியாகச் செல்கின்றனர். ஓ! மன்னா, என்னாலும், பலம்வாய்ந்த பீமசேனனாலும் காக்கப்படும் நீ, உனது சுய தவ அறத்தாலும், சுய கட்டளையாலும், நீ இன்றும் அவர்களோடு கலக்க வேண்டும். மன்னன் வருணனும், போர்க்களங்களை வெல்லும் யமனும், கங்கையும், யமுனையும், இந்த மலையும், மருதர்களும், அசுவினி இரட்டையர்களும், அனைத்து நதிகளும், தடாகங்களும் உன்னைக் காக்கட்டும். ஓ! ஒளிவீசுபவனே {யுதிஷ்டிரனே}, தேவர்களிடமும், அசுரர்களிடமும், வசுக்களிடமும் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கட்டும். ஓ! கங்கா தேவி, இந்திரனுக்குப் புனிதமான பொன் மலையிலிருந்து உனது கர்ஜனை எனக்குக் கேட்கிறது. ஓ! மங்கள தேவியே இந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனைவராலும் வழிபடப்படும் அஜமீட குலத்தைச் சேர்ந்த இந்த மன்னனை {யுதிஷ்டிரனைக்} காப்பாற்று. ஓ! மலையின் (இமயத்தின்) மகளே, இந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்த மலைப்பாங்கான பகுதிக்குள் நுழையப்போகிறான். எனவே அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உன் பாதுகாப்பை வழங்கு" என்றார் {லோமசர்}

"இப்படி நதியிடம் {கங்கையிடம்} பேசிய லோமசர் யுதிஷ்டிரனிடம், "எச்சரிக்கையாக இரு" என்றார்.

யுதிஷ்டிரன் , "முன்னெப்போதும் இல்லாத வகையில் லோமசர் குழம்புகிறார். ஆகையால், எல்லோரும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} காப்பாற்ற வேண்டும். நாம் கவனக்குறைவாக இருக்க முடியாது. இந்த இடத்தை அணுகுவது கடினம் என்று லோசமருக்கு நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இங்கே நமது செயல்கள் மிகுந்த தூய்மையுடன் இருக்க வேண்டும்" என்று அனைவரிடமும் சொன்னான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பெரும் வீரம் கொண்ட பீமனிடம், "ஓ பீமசேனா, கிருஷ்ணையை {திரௌபதியைக்} கவனமாகக் காத்து வா. அர்ஜுனன் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், ஆபத்துக் காலங்களில் கிருஷ்ணை {திரௌபதி} உன்னுடைய பாதுகாப்பை மட்டுமே எப்போதும் நாடுகிறாள்" என்றான் {யுதிஷ்டிரன்}.

பிறகு அந்த உயரான்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனை அணுகி, அவர்களது தலையை முகர்ந்து, அவர்கள் உடலைத் தடவி கண்களில் நீருடன், "அச்சப்பட வேண்டாம். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்" என்றான் {யுதிஷ்டிரன்}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்