Monday, March 31, 2014

"அனைவரையும் சுமப்பேன்" என்றான் பீமன்! - வனபர்வம் பகுதி 140

Bhima offered to bear all! | Vana Parva - Section 140 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன், திரௌபதி, சகாதேவன் மற்றும் பலரைத் திரும்பிச் செல்லுமாறு யுதிஷ்டிரன் கேட்டுக் கொள்வது; கடக்க முடியாத இடங்களில் திரௌபதியையும், நகுல சகாதேவனையும் தான் சுமப்பதாக பீமன் சொல்வது; நான் நடப்பேன் என்று திரௌபதி சொல்வது; அர்ஜுனனை நினைத்து யுதிஷ்டிரன் வருந்துவது...

யுதிஷ்டிரன், "ஓ! விருகோதரா {பீமா}, இந்த இடத்தில் பலமும் சக்தியும் வாய்ந்த கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் இருக்கின்றன. எனினும், நாம் அவற்றை நமது தவம் மற்றும் அக்னிஹோத்திரங்களின் பலன்களால் அவற்றைக் கடந்து செல்லலாம். ஓ! குந்தியின் மகனே {பீமா}, ஆகையால், நீ உனது ஆற்றல்களைப் பெருக்கி, பசி மற்றும் தாகத்தைப் போக்கு. மேலும் ஓ! விருகோதரா {பீமா} உனது வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் அடைய நடவடிக்கை எடு.
ஓ! குந்தியின் மகனே {பீமனே}, அந்தத் தவசி (லோமசர்) கைலாச மலையைக் குறித்து என்ன சொன்னார் என்பதைக் கேட்டாய். எனவே, கவனமாகச் சிந்தித்த பிறகு, இந்த இடத்தைக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படிக் கடப்பாள் என்பதை உறுதி செய். அல்லது ஓ! அகன்ற கண் கொண்ட பலம்வாய்ந்த பீமா, நீ சகாதேவனையும், நமது அனைத்து தேரோட்டிகளையும், சமையற்காரர்களையும், பணியாட்களையும், தேர்களையும், குதிரைகளையும், பயணத்தால் களைப்படைந்திருக்கும் அந்தணர்களையும் இங்கிருந்து அழைத்துச் செல். நானும் நகுலனும் கடும் தவங்களைப் பயிலும் தவசியான லோமசருடன் நோன்புகள் நோற்று, அதிகச் சுமையில்லாதவர்களாக முன்னேறுகிறோம். நீ எனது வருகையை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் கங்கையின் தோற்றவாயில், திரௌபதியைப் பாதுகாத்துக் கொண்டு நான் வரும் வரை காத்திரு" என்றான்.


அதற்குப் பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பரதகுலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, இந்த அருளப்பட்ட இளவரசி {திரௌபதி}, துன்பத்தாலும் துயரத்தாலும் புண்பட்டுப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காணும் நம்பிக்கையில் எளிதாக முன்னேறுவாள். போரில் பின்வாங்காத உயர் ஆன்ம அர்ஜுனனைக் காணாது, நீர் அடையும் மனவருத்தம் மிகப்பெரியதே. ஓ! பரதரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னையோ, சகாதேவனையோ, கிருஷ்ணையையோ {திரௌபதியையோ} காணவில்லையென்றால் உமது மனவருத்தும் நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். நமது பணியாட்களுடனும், தேரோட்டிகளுடனும், சமையற்காரர்களுடனும், உமது கட்டளையின் பேரில் செல்லும் இன்னும் மற்றவர்களுடனும் அந்தணர்கள் திரும்பட்டும். ராட்சசர்களால் பாதிக்கப்பட்டும், எவரும் அணுக முடியாத இந்த முரட்டுத்தனமான மலைப்பாங்கான பகுதிகளில் உம்மை விட்டுவிட்டு நான் செல்ல மாட்டேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உயர்ந்த நற்பேறு பெற்ற இந்த இளவரசி {திரௌபதி}, தனது தலைவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாள். ஆகையால் நீரில்லாமல் அவள் வரமாட்டாள். சகாதேவன் எப்போதும் உமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறான், அவனும் தனது பாதச்சுவடுகளைத் தேடி பின்வாங்க மாட்டான். அவனது மனநிலையை நான் அறிவேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி, நாங்கள் அனைவரும் சவ்யசச்சினைக் {அர்ஜுனனைக்} காண ஆவலுடன் இருக்கிறோம். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றாகவே செல்லலாம். நமது தேர்கள் மூலமாகப் பல குகைகளையுடைய இந்த மலையை நாம் அடைய முடியவில்லையென்றால், கால்நடையாகச் செல்லலாம். ஓ மன்னா, நீர் வருந்தாதீர், நான் பாஞ்சாலன் மகளை {திரௌபதியை}, அவள் நடக்க இயலாத பகுதிகளில் தூக்கிக் கொள்வேன். ஓ மன்னா, நான் இதுகுறித்துத் தீர்மானித்து விட்டேன். ஆகையால் உமது மனம் கவலை கொள்ள வேண்டாம். கடக்க முடியாத பகுதிகளில் தங்கள் தாயின் மகிழ்ச்சிக்குக் காரணமான இந்த இளம் உடல் கொண்ட இரட்டை வீரர்களையும் {நகுல சகாதேவர்களையும்} நான் சும்பபேன்" என்றான் {பீமன்}.

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ பீமா, சிறப்புமிக்கப் பாஞ்சாலியையும், இந்த இரட்டையர்களையும் சுமப்பதாக நீ பேசுவதால், உனது பலம் அதிகரிக்கட்டும். நீ அருளப்பட்டிரு. இத்தகு வீரம் வேறு எந்த ஒரு மனிதனிடமும் கிடையாது. உனது பலம், புகழ், தகுதி, மதிப்பு ஆகியவை பெருகட்டும்! ஓ நீண்ட கரமுடையவனே, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, நமது தம்பிகளான இரட்டையர்களையும் சுமக்க முன்வருவதால், உனக்குக் களைப்போ தோல்வியோ எப்போதும் ஏற்படாது" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அழகான கிருஷ்ணை {திரௌபதி} புன்னகையுடன், "ஓ பாரதக் குலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, என்னால் நடக்க முடியும். எனவே நீ என்னைக் குறித்து வருத்தப்படாதீர்" என்றாள்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "கந்தமாதன மலையை அடைவது ஒருவரின் தவத்தால் மட்டுமே முடியும். எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நாம் அனைவரும் தவம்பயில்வோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகுலா, சகாதேவா, பீமசேனா, ஓ குந்தியின் மகன்களே {பாண்டவர்களே} நீங்களும் நானும் வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காண்போம்" என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டு, சுபாகுவின் அழகான பரந்த நாட்டைக் கண்டனர். இமயத்தின் அருகில் இருந்த அந்த நாட்டில் குதிரைகளும் யானைகளும், கிராதர்களும், தங்கணர்களும், நூற்றுக்கணக்கான புளிந்தர்களையும் {குளிந்தர்கள்} இருந்தனர். அந்தப் பகுதி தேவர்கள் அடிக்கடி வரும்பகுதியாகவும், அற்புதங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. புளிந்தர்களுக்குத் தலைவனான மன்னன் சுபாகு, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வணங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இப்படி மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, வசதியாக அந்த இடத்தில் தங்கிய பிறகு, ஆகாயத்தில் பளிச்சென மின்னிய இமய மலையை நோக்கிய பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் பணியாட்களான இந்திரசேனன் மற்றும் பிறரையும், சமையற்காரர்களையும், கண்காணிப்பாளர்களையும், திரௌபதியின் பணியாட்களையும் மற்றும் அனைத்து செல்வங்களையும் அந்தப் பெரும் ரதவீரர்களான குருக்களின் மைந்தர்கள் புளிந்தர்களின் தலைவனிடம் {சுபாகுவிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்நாட்டில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} எச்சரிக்கையாக முன்னேறினர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனைக் காணும் நோக்கத்தோடு மகிழ்ச்சியாகச் சென்றனர்.

யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ! பீமசேனா, ஓ! பாஞ்சாலி, இரட்டையர்களே எனது வார்த்தைகளைக் கேளுங்கள். கடந்த பிறவிகளில் செய்யப்பட்ட செயல்கள் (அதற்குண்டான பலனைக் கொடுக்காமல்) அழிந்து போவதில்லை. பாருங்கள்! எப்படிப்பட்ட நாம் இப்படிக் கானகவாசிகளானோம். தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண்பதற்காகக் களைத்துப் போய்த் துயரத்தில் இருக்கும் நாம், ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டு, இந்தக் கடக்கமுடியாத இடங்களைக் கடப்போமாக. பஞ்சுப் பொதியை எரிக்கும் நெருப்பு போல இதுவே என்னை எரிக்கிறது. ஓ வீரா {பீமா}, நான் எனது பக்கத்தில் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணவில்லை. நான் எனது தம்பிகளுடன் அவனைக் காண்பதற்காகக் கானகத்தில் வசித்து வருகிறேன். யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} ஏற்பட்ட பெருத்த அவமானத்தின் நினைவும் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா {பீமா}, வலிமையான வில்லும், ஒப்பற்ற சக்தியும் கொண்டவனும், நகுலனுக்கு மூத்தவனுமான சிறப்புமிக்கப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.

உண்மையில் உறுதி கொண்ட வீரனான அர்ஜுனனைக் காண்பதற்காக, கடந்த ஐந்து வருடங்களாக நான் பலதரப்பட்ட தீர்த்தங்களையும், அழகிய கானகங்களையும், தடாகங்களையும் கடந்தேன். இருப்பினும் நான் இன்னும் அவனைச் சந்திக்கவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன். கருநீல நிறமும், நீண்ட கரங்களும், சிம்மம் போன்ற இடுப்பும் கொண்ட குடகேசனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன். 

ஆயுதங்களை அறிந்தவனும், போரில் நிபுணனும், வில்லாளிகளில் ஒப்பற்றவனுமான குருக்களில் முதன்மையானவனை {அர்ஜுனனை} நான் காணவில்லை.ஓ! விருகோதரா, இதற்காகவே நான் வருந்துகிறேன். 

உத்திரம் நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவனும், பகைவர்களுக்கு மத்தியில் பிரளய கால யமன் போலத் திரிபவனும், மதப்பெருக்குள்ள யானை போன்றவனும், சிங்கம் போன்ற தோள்களை உடையவனும், சக்ரனுக்கு நிகர்த்த வீரமும் சக்தியும் கொண்டவனும், இரட்டையர்களுக்கு {நகுல சகாதேவனுக்கு} மூத்தவனும், வெள்ளைக் குதிரைகள் கொண்டவனும், ஒப்பற்ற வீரனும், பலமான வில்லைக் கொண்டவனும் பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணாமல் நான் துயரத்தில் இருக்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன். 

குறுகிய மனம் கொண்டவனால் {துரியோதனனால்} அவமதிக்கப்பட்ட போதும் , மன்னிக்கும் இயல்பு கொண்டவன் அவன் {அர்ஜுனன்} நேர்மையானவர்களுக்குப் பாதுகாப்பையும் நன்மையையும் கொடுப்பவன். ஆனால் தீயன செய்ய முயலும் கடினமான நபர்களுக்குத் தனஞ்சயன் {அர்ஜுனன்} கடும் விஷத்தைப் போன்றவனாவான். அவன் இந்திரனைப் போன்றவனாவான்.

அளவில்லா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, பகைவரும் வீழ்ந்து போகும்போது கருணையும் பாதுகாப்பும் அளிப்பவனாவான். அவன் {அர்ஜுனன்} நமக்கு அனைவருக்கும் புகலிடமாவான். அவன் {அர்ஜுனன்} எதிரிகளைப் போரில் நசுக்குவான். அவன் எவ்வளவு நிதியையும் திரட்டும் சக்தி படைத்தவன் . அவனே நமது மகிழ்ச்சிக்குக் காரணமானவன். அவனின் {அர்ஜுனனின்} வீரத்தாலேயே நாம் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இழந்த அத்தனை செல்வத்தையும் அடைந்தோம். ஓ! வீரா {பீமா}, அவனது பலத்தாலேயே மூன்று உலகமும் கொண்டாடும்படியான ஒரு சபா மண்டபத்தைக் கட்டினோம். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, வீரத்தில் அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவன், போரில் அவன் ஒப்பற்றவன். இணையில்லாதவன். கார்த்தவீரியனைப் போன்றவன். ஐயோ! ஓ! பீமா நான் அவனைக் காணவில்லை. பராக்கிரமத்தில் அவன் மிகுந்த பலசாலியான சங்கர்ஷணருக்கும் (பலராமன்) வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} நிகரானவன். கரங்கள் மற்றும் ஆன்ம பலத்தில் அவன் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போன்றவன். கருணையில் அவன் நிலவைப் போன்றவன். கோபத்தில் அவன் யமனைப் போன்றவன்.

ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே {பீமா}, மனிதர்களில் போர்க்குணமிக்கப் புலி போன்ற அவனைக் {அர்ஜுனனைக்} காணும் நோக்கத்தோடு நாம் கந்தமாதன மலையை அடைவோம். அங்கே கொண்டாடப்படும் இலந்தை மரத்தின் அருகே நரன் மற்றும் நாராயணரின் ஆசிரமும் இருக்கிறது. அது யக்ஷர்கள் வசிக்கும் இடமாகவும் இருக்கிறது. அந்த மலைகளில் சிறந்த மலையை நாம் காண்போம். கடும் தவம்பயின்று காலாலேயே நடந்து சென்று ராட்சசர்களால் பாதுகாக்கப்படும் குபேரனின் அழகிய தடாகத்திற்குச் செல்வோம். ஓ! விருகோதரா {பீமா} அந்த இடத்தில் நாம் வாகனத்தில் செல்ல முடியாது. ஓ! பரதனின் மகனே {பீமா}, பேராசை கொண்டவர்களோ, கொடுமையானவர்களோ அல்லது எளிதில் கோபம் கொள்பவர்களோ அந்த இடத்தை அடைய முடியாது. ஓ! பீமா, அர்ஜுனனைக் காண்பதற்காகக் கடும் நோன்புகள் கொண்ட இந்த அந்தணர்களுடன் சேர்ந்து நாமும் நமது வாள்களைக் கட்டிக் கொண்டும், விற்களைத் தாங்கிக் கொண்டும் அங்கே செல்வோம். சுத்தமற்றவர்களையே, ஈக்களும், கொசுக்களும், புலிகளும், சங்கங்களும், ஊர்வனவும் சந்திக்கும். ஆனால் சுத்தமானவர்கள் அவற்றைச் சந்திக்க முடியாது. எனவே, நாம் கட்டுக்கோப்பாக, நமது புலன்களில் இருந்து விடுபட்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காண விரும்பி கந்தமாதன மலைக்குச் செல்வோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்