Wednesday, April 02, 2014

நரகாசுரன் வதமும்! வராக அவதாரமும்! - வனபர்வம் பகுதி 141

Naraka's slaughter and Varaha avatar! | Vana Parva - Section 141 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

லோமசர் பாண்டவர்களுக்கு நரகாசுரன் கதையையும், பூமி பாதாளத்துக்குள் மூழ்கியதையும், அதை விஷ்ணு பன்றி உரு கொண்டு மீட்ட கதையையும் சொல்வது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாண்டுவின் மகன்களே, பல மலைகளையும், நதிகளையும், நகரங்களையும், கானகங்களையும், அழகிய தீர்த்தங்களையும் நீங்கள் கண்டீர்கள். புனிதமான நீர்நிலைகளையும் உங்கள் கரங்களால் தொட்டிருக்கிறீர்கள். இப்போது இந்த வழி தெய்வீக மலையான மந்தரத்திற்குச் செல்கிறது. ஆகையால் கவனத்துடனும், உள் அடக்கத்துடனும் இருங்கள். தகுதியான செயல்கள் புரிந்த தெய்வீக முனிவர்கள் மற்றும் தேவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இருக்கிறீர்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் தேவர்கள் மற்றும் தவசிகளின் கூட்டத்தால் போற்றப்படும் அழகான பெரும் நதி {நதியான அலகாநந்தை [அலகை]} இலந்தை மரம் இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்கிறது. உயர் ஆன்மா கொண்டவர்களான வைஹாயசர்கள், வாலஹில்யர்கள் மற்றும் வலிமைமிக்க ஆன்மா கொண்ட கந்தர்வர்கள் ஆகியோர் அடிக்கடி அந்த இடத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சாமம் பாடும் தவசிகளான மரீசி, புலகஹர், பிருகு மற்றும் அங்கீரஸ் ஆகியோர் இந்த இடத்தில் தான் சாம வேதத்தை முழங்கினர். இங்கேதான் மருதர்களுடன் கூடிய தேவர்களின் தலைவன் {இந்திரன்} தனது தினசரி வழிபாடுகளைச் செய்கிறான். சத்யஸ்களும், அசுவினிகளும் அவனுக்குச் {இந்திரனுக்குச்} சேவை செய்கின்றனர். சூரியனும், சந்திரனும், கோள்களும், மற்ற ஒளிரும் தேவர்களும் இரவும் பகலும் இந்நதியை நாடுகின்றனர். ஓ! பெரும்நற்பேறு பெற்ற ஏகாதிபதியே, காளையைத் தனது குறியாகக் கொண்ட இந்த உலகத்தைக் காக்கும் மகாதேவன், கங்கையின் தோற்றுவாயில் {கங்கா துவாரத்தில்} இந்நதியின் பெரும் வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கினான். ஓ! குழந்தைகளே, ஆறு பண்புகளைக் கொண்ட இந்தத் தேவியை {கங்கையை} அணுகி, மனச்செறிவுடன் இவளைத் தொழுது கொள்ளுங்கள்"


உயர் ஆன்மா கொண்ட லோமசரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டுவின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் பாய்ந்தோடிய அந்நதியை {கங்கையை} மரியாதையுடன் வழிபட்டான். பாண்டுவின் பக்திமிக்க மகன்கள் அவளை {கங்கையைப்} போற்றி வழிபட்ட பிறகு முனிவர்களுடன் சேர்ந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்கள் தொலைவில் மேரு மலையைப் போன்று பரந்த அளவிலான வெள்ளைப் பொருட்கள், எல்லாப் பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதைக் காண நேரந்தது. பாண்டுவின் மகன்கள் தன்னை இது குறித்துக் கேட்பார்கள் என்று உணர்ந்த தர்க்கமறிந்த லோமசர், "ஓ! பாண்டுவின் மகன்களே, ஓ! மனிதர்களில் சிறந்தவர்களே, உங்களுக்கு முன்பாக, பரந்த அளவில் ஒரு மலையைப் போலவும், அழகிய கைலாசக் குன்று போலவும் நீங்கள் காணும் இவை வலிமைமிக்கத் தைத்தியனான நரகனின் {நரகாசுரனின்} எலும்பு குவியலாகும். இவை இம்மலையை அடைந்ததால் இம்மலையைப் போலவே காணப்படுகிறது. தேவர்களின் நன்மைக்காக நித்திய தெய்வமும், பரமாத்மாவுமான விஷ்ணுவால் அந்தத் தைத்தியன் {நரகாசுரன்} கொல்லப்பட்டான். இந்திரனின் இடத்தை, கடும் தவத்தின் மூலமும் வேத ஞானத்தின் மூலமும் அடைவதற்காக, அந்த வலிமைமிக்க மனம் கொண்டவன் (அந்தப் பேய் {அசுரன் நரகாசுரன்}) பத்தாயிரம் {10,000} வருடங்களுக்குக் கடும் தவமிருந்தான். அவனது துறவினாலும், கரங்களின் பலம் மற்றும் வலிமையாலும் அவன் வெல்லப்பட இயலாத அளவு வளர்ந்து, எப்போதும் (இந்திரனுக்கு) தொல்லை கொடுத்தான்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, அவனது {நரகனின்} பலத்தையும், தவத்தையும், ஆன்ம நோன்புகளையும் கண்ட இந்திரன் பயத்தில் மூழ்கினான். {ஆகையால்}, அவன் நித்திய தெய்வமான விஷ்ணுவை மனதால் நினைத்தான். எங்குமிருக்கும் அந்த அருள் நிறைந்த அண்டத் தலைவன் {விஷ்ணு}, அவன் {இந்திரன்} முன்பாகத் தோன்றினான். தவசிகளும் தேவர்களும் விஷ்ணுவைத் தங்கள் வழிபாடுகளால் துதி செய்தனர். அழகிய சுடரால் ஒளியூட்டப்பட்ட ஆறு பண்புகள் கொண்ட அக்னியும் அவனது {விஷ்ணுவின்} முன்னிலையில் தனது பிரகாசத்தை இழந்தான். தனது முன்னிலையில் தெய்வமான விஷ்ணுவைக் கண்ட, வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உடனடியாகத் தனது தலையைத் தாழ்த்தி வணங்கி, தனது பயத்திற்குக் காரணத்தை விஷ்ணுவிடம் உரைத்தான். அதற்கு விஷ்ணு, "ஓ! சக்ரா {இந்திரா}, தைத்தியர்களின் தலைவனான நரகனைக் குறித்து நீ அஞ்சுகிறாய் என்பதை நான் அறிவேன். தனது தவ வெற்றியின் மூலம் அவன் இந்தப் பதவிக்குக் குறி வைக்கிறான். ஆகையால், அவன் தவத்தில் வெற்றிக் கண்டிருந்தாலும், நீ நிம்மதி கொள்ளும்படிக்கு, நிச்சயமாக நான் அவனது உடலில் இருந்து ஆன்மாவைக் கொய்வேன். தேவர்களின் தலைவா {இந்திரா} சற்று நேரம் பொறுப்பாயாக" என்றான். பிறகு வலிமையின் எல்லையான விஷ்ணு தனது கரத்தால் (தாக்கி) அவனது (நரகனின்) புலன்களை இழக்கச் செய்தான். அவன் {நரகாசுரன்} இந்தப் பூமியின் மீது மலைகளின் ஏகாதிபதி (இடியால்) அடிபட்டு விழுவது போல விழுந்தான். இந்த அற்புதத்தால் கொல்லப்பட்ட அவனது எலும்புகள் இந்த இடத்தில் குவிந்திருக்கின்றன. விஷ்ணுவின் மற்றொரு செயலும் இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு முறை இந்த முழு உலகமும் பாதாளப் பகுதிகளுக்குள் {கடலுக்குள்} மூழ்கித் தொலைந்து போனது. பிறகு அவள் {பூமி}, ஒற்றைக் கொம்பு {தந்தம் = tusk} கொண்ட பன்றியின் உருவில் {வராக அவதாரம்} இருந்த அவனால் {விஷ்ணுவால்} மேலே உயர்த்தப்பட்டாள்" என்று சொன்னார் {லோமசர்}.

யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, "ஓ! வழிபடத்தகுந்தவரே, தேவர்களுக்குத் தலைவனான விஷ்ணு நூறு யோஜனைகள் ஆழம் மூழ்கிப் போன பூமியை எப்படி உயர்த்தினார் என்பதைக் குறிப்பாக உரைப்பீராக. படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தாங்கும் பெரும் நற்பேறு பெற்ற பூமாதேவி, நிலையாக நின்று அனைத்து வகையான பயிர்களையும் விளையச் செய்பவள் ஆயிற்றே. அப்படிப்பட்ட அவள், யாருடைய சக்தியால் நூறு யோஜனைகளுக்குக் கீழே மூழ்கடிக்கப்பட்டாள்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட பெருஞ்செயல் பரமாத்மாவல் நிகழ்த்தப்பட்டது? ஓ! இரு பிறப்புக் கொண்ட குலத்தின் {அந்தணர்களின்} தலைவரே {லோமசரே}, நடந்தவாறே அவை முழுமையும் அறிய விரும்புகிறேன். நிச்சயமாக அது உம்மால் அறியப்பட்டிருக்கிறது" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, நீ (உரைக்குமாறு) என்னைக் கேட்டுக் கொண்ட கதையை நான் முழு நீளத்தில் சொல்கிறேன் கேள். ஓ! குழந்தாய், பழங்காலத்தில், கிருத யுகத்தில் ஒரு பயங்கரமான காலத்தில், யமனின் கடமைகளை நித்தியமான ஆதி தேவனே மேற்கொண்டான். ஓ! வீழாதவனே, தேவர்களுக்குத் தேவன் யமனின் வேலைகளைச் செய்தபோது, பிறப்புகள் எப்போதும் போல இருந்தாலும் இறப்புகள் நேரவில்லை. பிறகு பறவைகளும் விலங்குகளும், பசுக்களும், ஆடுகளும், மான்களும், அனைத்து ஊனுண்ணும் விலங்குகளும் பல்கிப் பெருகின. ஓ! மனிதர்களில் புலியே, எதிரிகளை வீழ்த்துபவனே, மனிதகுலமும் நீரூற்று போல ஆயிரக்கணக்கில் பெருகியது. ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, உயிரினங்களின் எண்ணிக்கை பயங்கரமாகப் பெருகி, அதிக பாரத்தால் தள்ளாடிய பூமி, நூறு யோஜனைகள் ஆழத்திற்கு மூழ்கியது. அவளது அங்கங்கள் அனைத்தும் வலியால் துன்பப்பட்டு, தீவிர அழுத்தத்தால் புலன்கள் இழந்து துயரத்தில் இருந்த பூமா தேவி, தேவர்களில் முதன்மையான நாராயணனின் பாதுகாப்பை நாடினாள். பூமி, ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே {நாராயணரே}, உமது அருளாலேயே, நான் இவ்வளவு நீண்ட நெடுங்காலத்திற்கு நிலையாக இருந்தேன். ஆனால் இப்போது எனக்குச் சுமை அதிகமாகிவிட்டது. என்னால் இனிமேலும் தாங்க முடியாது. ஓ! புகழத்தக்கவரே, எனது பாரத்தைக் குறைப்பதே உமக்குத் தகும். நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன். ஓ! தலைவா, எனக்கு அருள் செய்யும்" என்று கேட்டாள். அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட, ஆறு பண்புகள் கொண்ட அந்த நித்திய தலைவன் அன்பாதரவும் பரிவும் கொண்ட தெளிவான எழுத்துகளாலான வார்த்தைகளை உரைத்தான். விஷ்ணு, "ஓ! அனைத்து வளங்களையும் தாங்கும் பாதிக்கப்பட்ட பூமியே {பூமாதேவியை}, அஞ்சாதே. உனது பாரம் குறையும்படி நான் செயல்புரிவேன்" என்றான்."

"லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "இப்படி மலைகளைக் காது வளையங்களாகக் கொண்ட பூமியை {பூமாதேவியை} அனுப்பிய அவன் {விஷ்ணு}, திடீரென அதிகப் பிரகாசத்துடன் கூடிய ஒற்றைக் கொம்பு கொண்ட பன்றியுரு கொண்டான். தனது சிவந்த விழிகளால் பயங்கரத்தை உண்டாக்கி, சுடரும் தனது மேனியில் இருந்து நெருப்பை வெளியிட்டுக் கொண்டு, அந்தப் பகுதியில் பெரும் உருவம் கொண்டான். ஓ! வீரனே {யுதிஷ்டிரா}, பிறகு வேதங்களில் நிறைந்திருப்பவன் {விஷ்ணு} பிரகாசிக்கும் தனது ஒற்றைத் தந்தத்தால் பூமியைத் தாங்கிக் கொண்டு, அவளை நூறு யோஜனைகள் உயர்த்தினான். அவளை {பூமியை} அப்படி உயர்த்திய போது பெரும் அதிர்வு ஏற்பட்டது, அனைத்து தேவர்களும், துறவு பூண்ட தவசிகளும் கூட அதனால் நடுங்கினர். சொர்க்கமும், வானமும், ஏன் பூமியும் கூட ஓ! ஐயோ! என்ற ஆச்சரியக் குறிகளால் நிரம்பின. தேவர்களோ அல்லது மனிதர்களோ யாரும் அமைதியாக இருக்க இயலவில்லை. எண்ணிலடங்கா தேவர்கள் முனிவர்களுடன் சேர்ந்து, சுய ஒளியில் எரிந்து கொண்டிருந்த பிரம்மனிடம் சென்றனர். பிறகு அனைத்துயிர்களின் செயலுக்கும் சாட்சியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிரம்மனை அணுகி, "ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மாவே}, அசையும் மற்றும் அசையாத உயிர்களும் அடங்கிய படைக்கப்பட்ட அனைத்துயிர்களும் நடுங்கிப் போயுள்ளன. அவர்கள் அமைதியற்றிருக்கின்றனர். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மனே}, கடல்களும் அமைதியாக இல்லை. முழுப் பூமியும் நூறு யோஜனைகள் கீழ் சென்றுள்ளது. இதற்கு யாது காரணம்? யாருடைய ஆதிக்கத்தால் மொத்த அண்ட மும் கொந்தளித்திருக்கிறது? தயைகூர்ந்து இவை அனைத்தையும் எங்களுக்கு விளக்கும். நாங்கள் அனைவரும் குழம்பிப் போயுள்ளோம்" என்று கேட்டான் {இந்திரன்}.

அதற்குப் பிரம்மன் {இந்திரனிடம்}, "இறவாதவர்களே {தேவர்களே}, எக்காரணத்திற்காகவும், இடத்திற்காகவும் அசுரர்களின் மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்கள். சொர்க்கத்தின் இந்த நடுக்கும், எங்கும் நிறைந்த, அழியா ஆன்மாக் கொண்ட நித்தியமான பரமாத்மாவின் ஆதிக்கத்தால் நிகழ்த்தப்பட்டது. அந்தப் பரமாத்மாவான விஷ்ணு நூறு யோஜனைகளுக்கு மூழ்கிப் போன பூமியை உயர்த்தினான். இந்த நடுக்கம், பூமி உயர்வதால் ஏற்படுகிறது. இதை அறிந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை விலக்கிக் கொள்ளுங்கள்" என்றான். தேவர்கள், "பூமியை உயர்த்திய அவர் {விஷ்ணு} எங்கே? ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே, அந்த இடத்தை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அங்கே செல்வோம்" என்றனர். பிரம்மன், "நீங்கள் செல்லுங்கள், உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். நீங்கள் நந்தனத்தில் ஓய்வெடுக்கும் அவனை {விஷ்ணுவைக்} காண்பீர்கள். அங்கே வழிபடத்தக்க சுபர்ணன் {கருடன்} உங்களுக்குத் தெரிவான். பூமி உயர்த்தப்பட்ட பிறகு, யாரால் பூமி வெளிப்பட்டதோ, அந்தப் பரம்பொருள், அனைத்தையும் உட்கொள்ளும் பிரளய கால நெருப்பு போல எரிந்து கொண்டு பன்றியின் உருவில் இருக்கிறான். அவனது {விஷ்ணுவின்} மார்பில் ஸ்ரீவத்சம் என்ற ரத்தினம் காணப்படும், அழிவறியா அப்பரம்பொருளைக் காணுங்கள்" என்றான் {பிரம்மன்}."

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பிறகு தேவர்கள், பெருந்தகப்பனைத் {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்டு, எல்லையற்ற அப்பரம்பொருளிடம் வந்தனர். பின் அவனது புகழைக் கேட்ட பிறகு, அவனிடம் பிரியாவிடை பெற்று, எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, இந்தக் கதையைக் கேட்ட அனைத்துப் பாண்டவர்களும், காலந்தாழ்த்தாமல் விரைவாக லோமசர் காட்டிய வழியில் முன்னேறினர்".

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்