Monday, April 14, 2014

"வாலை நகற்று" என்ற ஹனுமான்! - வனபர்வம் பகுதி 146

Move my tail aside said Hanuman! | Vana Parva - Section 146 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமன் ஹனுமானை வழிவிடச் சொல்வது; ஹனுமான் போகாதே என்று எச்சரிப்பது; மீண்டும் பீமன் ஹனுமானை மிரட்டுவது; ஹனுமான் தனது வாலை நகர்த்தி வைத்துவிட்டு செல்லுமாறு அடக்கத்துடன் சொல்வது; பீமனால் ஹனுமானின் வாலை நகர்த்த முடியாமல் போவது; தான் யார் என்பதை ஹனுமான் சொல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, புத்திசாலி குரங்குத் தலைவனின் {ஹனுமானின்} வார்த்தைகளைக் கேட்ட பீமன், "யார் நீ? ஏன் குரங்கின் உருவை ஏற்றிருக்கிறாய்? அந்தணர்களுக்கு அடுத்த க்ஷத்திரியக் குலத்தைச் சேர்ந்தவன் கேட்கிறேன். குரு குலத்தில் சந்திர வம்சத்தில் குந்தியின் கருவறையில் பிறந்த பாண்டுவின் மகன்களில் ஒருவனும், வாயுத்தேவனின் வாரிசுமான எனது பெயர் பீமசேனன்" என்றான். குரு வீரனின் {பீமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் புன்னகைத்தான். அந்த வாயுத்தேவனின் மகன் (ஹனுமான்), வாயுத்தேவனின் வாரிசிடம் (பீமசேனனிடம்), "நான் ஒரு குரங்கு {வானரம்}. நீ விரும்பும் பாதையில் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். போதும். நீ திரும்பிச் செல்லுதல் நலம். அழிவைச் சந்திக்காதே" என்றான் {ஹனுமான்}.


அதற்குப் பீமசேனன் {ஹனுமானிடம்}, "ஓ குரங்கே {வானரமே}, எதன் மூலமும் உண்டாகும் அழிவைக் குறித்து நான் கேட்கவில்லை. எனக்கு வழியை விடு. எழு! எனது கைகளால் துன்பத்தை அடையாதே" என்றான். ஹனுமான், "எழுவதற்கு எனக்குப் பலமில்லை; நான் நோயால் துன்புறுகிறேன். நீ செல்ல வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்" என்றான். பீமன், "குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்" என்றான். அதற்கு ஹனுமான், "கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார்? ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். உன்னால் முடிந்தால் அதைச் சொல்" என்றான்.

பீமன் {ஹனுமானிடம்}, "அவன்  எனது தமயன். அனைத்தையும் அற்புதமாகவும் சரியாகவும் செய்பவன். அவன் புத்திகூர்மை கொண்டவன். மன பலமும் உடல் பலமும் கொண்டவன். ராமாயணத்தில் அறியப்பட்ட சிறப்பு மிக்கக் குரங்குகள் தலைவன் அவனே. ராமனின் ராணிக்காக {சீதைக்காக}, அந்தக் குரங்கு மன்னன் ஒரே எட்டில் நூறு யோஜனைகள் கொண்ட கடலைத் தாண்டினான். அந்தப் பெரும் பலமிக்கவனே எனது தமயன். நான் சக்தியிலும், பலத்திலும், பராக்கிரமத்திலும், போரிலும் அவனுக்குச் சமமானவன். என்னால் உன்னைத் தண்டிக்க முடியும். அதனால் எழுந்திரு. ஒன்று எனக்கு வழியை விடு, அல்லது எனது பராக்கிமத்தை இன்று பார். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால், நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்" என்று மறுமொழி கூறினான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பலத்திலும், தனது கரங்களின் வலிமையின் மீது கொண்ட கர்வத்திலும் (பீமன்) அவன் போதையுண்டிருப்பதை அறிந்த ஹனுமான், இதயத்தில் கேலியாக நினைத்து, "ஓ! பாவமற்றவனே, கண்டிக்காதே. வயதின் காரணமாக, எனக்கு எழுந்திருக்கும் அளவு பலமில்லை. என்னிடம் இரக்கம் கொண்டு, எனது வாலை ஒரு புறமாக நகர்த்தி வை" என்றான். இப்படி ஹனுமானால் சொல்லப்பட்ட பீமன், தனது கரங்களின் பலத்தில் கர்வம் கொண்டும், {ஹனுமானை} சக்தியிலும் பராக்கிரமத்திலும் குறைந்தவன் என நினைத்து, தனக்குள், "இந்த வாலைப் பிடித்து, சக்தியும், வீரமும் அற்ற இந்தக் குரங்கை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்" என்று எண்ணினான்.

அதன்பிறகு, புன்னகையுடனும், கேலியுடனும் தனது இடது கையால் வாலைப் பிடித்தான். ஆனால் அந்த வலிமைமிக்கக் குரங்கின் வாலை அவனால் {பீமனால்} நகர்த்த முடியவில்லை. பிறகு இந்திரனின் நினைவாக நடப்பட்ட தூணைப் போல இருந்த அவ்வாலை இரு கைகளாலும் பிடித்து இழுத்துப் பார்த்தான். இருப்பினும் வலிமைமிக்கப் பீமனால் இரு கைகளாலும் அந்த வாலை உயர்த்த முடியவில்லை. அவனின் {பீமனின்} புருவங்கள் நெறிந்தன, கண்கள் உருண்டன, முகம் சுருங்கியது, அவனின் {பீமனின்} உடல் முழுவதும் வேர்த்தது. இருப்பினும் அவனால் அதை உயர்த்த முடியவில்லை. மிகவும் முயற்சித்த பிறகும், சிறப்புமிக்கப் பீமன் அவ்வாலை உயர்த்துவதில் தோல்வியுற்றான். பிறகு அவன் {பீமன்}, அக்குரங்கின் பக்கத்தில் வந்து வெட்கத்துடன் முகம் கவிழ்ந்து நின்றான்.

அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து {ஹனுமானிடம்}, "ஓ! குரங்குகளில் முதன்மையானவனே இரக்கம் கொள். எனது கடும் வார்த்தைகளுக்காக என்னை மன்னித்துக் கொள். நீ சித்தனா, தேவனா, கந்தர்வனா அல்லது குஹ்யனா? ஆவலால் கேட்கிறேன். குரங்கின் உருவில் இருக்கும் நீ யார் என்பது ரகசியமில்லை என்றால், ஓ! நீண்ட கரம் கொண்டவனே, நான் கேட்கலாம் என்றால் சொல். ஒரு சீடனாக உன்னைக் கேட்கிறேன், ஓ! பாவமற்றவனே நான் உனது புகலிடத்தைக் கோருகிறேன்" என்றான் {பீமன்}.

அதற்கு ஹனுமான் {பீமனிடம்}, "ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் எல்லையை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமா} கேள். ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு {வானரம்}, எனது பெயர் ஹனுமான். பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, காற்றுக்கும் நெருப்புக்கும் இடையே இருப்பது போல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு இருந்தது. ஏதோ காரணத்திற்காகத் தனது தமயனால் {வாலியால்} துரத்தப்பட்ட சுக்ரீவ்வன் என்னுடன் நீண்ட நாட்களாக ரிஷ்யமுக மலையில் வசித்து வந்தான். தசரதனின் பெரும் பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவின் மானுட உருவமுமான வீரன் ராமன் இவ்வுலகத்தில் தனது பிறப்பை அடைய நேர்ந்தது. வில்லாளிகளில் முதன்மையான அவன் {ராமன்}, தனது தந்தையின் நன்மைக்காகத் தனது ராணியையும் {சீதையையும்}, தனது தம்பியையும் {இலட்சுமணனையும்} அழைத்துக் கொண்டு வந்து தண்டக வனத்தில் வசிக்க ஆரம்பித்தான். ராட்சச ஏகாதிபதியும் தீயவனுமான இராவணன், ரத்தினம் போன்ற புள்ளிகள் கொண்ட பொன் மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ராட்சசன் உதவியோடு, மனிதர்களில் முதன்மையானவனை {ராமனை} வஞ்சித்து, அவனுடைய (ராமனின்) ராணியை {சீதையைக்} கபடத்தாலும் பலத்தைப் பயன்படுத்தியும் ஜனஸ்தானத்திலிருந்து கடத்திச் சென்றான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்