Monday, April 14, 2014

ஹனுமான் சுயவரலாறு! - வனபர்வம் பகுதி 147

Biography of Hanuman! | Vana Parva - Section 147 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ஹனுமான் சொன்ன சுயவரலாறு

ஹனுமான் {பீமனிடம்} சொன்னான், "தனது மனைவி {சீதை} கடத்தப்பட்ட பிறகு, ரகுவின் வழித்தோன்றால் {ராமன்}, தனது தம்பியுடன் {லட்சுமணனுடன்} சேர்ந்து தனது ராணியைத் {சீதையைத்} தேடிக் கொண்டிருந்த போது, வானரத் தலைவனான சுக்ரீவனை மலைச்சிகரத்தில் சந்தித்தான். பிறகு அவனுக்கும் {சுக்ரீவனுக்கும்}, உயர் ஆன்ம ராகவனுக்கும் இடையில் ஒரு நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. பிறகு பின்னவன் {ராமன்}, வாலியைக் கொன்று, சுக்ரீவனை அரசாட்சி ஏற்க வைத்தான். நாட்டை அடைந்த பிறகு சுக்ரீவன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வானரங்களைச் சீதையைத் தேடி அனுப்பி வைத்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே அந்த எண்ணிலடங்கா குரங்குகளுடன் நானும் சீதையைத் தேடி தென்திசை நோக்கிப் பயணித்தேன்.

பிறகு வலிமைமிக்கச் சம்பாதி என்ற பெயர் கொண்ட கழுகு, சீதை இராவணனின் வசிப்பிடத்தில் இருக்கும் வரலாற்றைச் சொன்னது. பிறகு ராமனுக்கு வெற்றியைத் தேடித்தரும் முயற்சியில் நான் நூறு யோஜனைகள் பரந்திருந்த கடலை திடீரெனத் தாண்டினேன். ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, எனது சுய பராக்கிரமத்தில் முதலைகள் மற்றும் சுறாக்களின் வசிப்பிடமான கடலைக் கடந்து, இராவணனின் வசிப்பிடத்தில் தேவர்களின் மகளுக்கு ஒப்பாக இருந்த, மன்னன் ஜனகனின் மகளான சீதையைக் கண்டேன். ராமனின் அன்பிற்குரியவளான மங்கை வைதேகியிடம் {சீதையிடம்} நான் பேசிய பிறகு, கோபுரங்களும், பாதுகாப்பு அரண்களும், வாயில்களும் கொண்ட மொத்த இலங்கையையும் எரித்து, எனது பெயரைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

என்னிடம் இருந்து அனைத்தையும் கேட்ட தாமரை இதழ் போன்ற கண்களை உடைய ராமன், தான் செய்ய வேண்டிய செயல்களை உறுதி செய்து கொண்ட பிறகு, தனது படைக்கு ஒரு வழி ஏற்படுத்துவதற்காக, ஆழமான கடலின் மேல் ஒரு பாலத்தை அமைத்தான். குரங்குக் கூட்டமும் அந்தப் பாலத்தைக் கடந்தன. பிறகு ராமன் தனது பராக்கிரமத்தால் போரில் ராட்சசர்களையும், உலகத்தையே ஒடுக்கியவனான இராவணனையும் அவனது அடிப்பொடிகளையும் கொன்றான். தனது தம்பியுடன் சேர்ந்து ராட்சசர்களின் மன்னனை {இராவணனை} அவனது மகன்கள் மற்றும் உறவினர்களோடு சேர்த்து கொன்ற பிறகு, பக்திமானும், மதிப்பிற்குரியவனும், நம்பி வந்தவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான விபீஷணனை ராட்சசத் தலைவனாக நியமித்து, இலங்கையின் அரசுரிமையை அவனிடம் {விபீஷணனிடம்} கொடுத்தான் {இராமன்}. பிறகு தொலைந்து போன வேதத்தை மீட்டு வந்தது போலத் தனது மனைவியை {சீதையை} மீட்டு வந்தான் {ராமன்}.

பிறகு ரகுவின் மகனான ராமன், தனக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மனைவியுடன் {சீதையுடன்}, தனது சொந்த நகரமும், எதிரிகளால் அடைய முடியாத நகரமுமான அயோத்யைக்குத் திரும்பி, அங்கே அந்த மனிதர்களின் தலைவன் வசிக்கலானான். பிறகு மன்னர்களில் முதன்மையான ராமன் அரசாட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். பிறகு, தாமரை மலர் போன்ற கண்களையுடைய ராமனிடம் நான் {ஹனுமான்} ஒரு வரம் கோரினேன், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே, ராமா, உனது சாதனைகளின் வரலாறு உலகத்தில் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் நான் உயிர் வாழக் கடவேன்" என்று கேட்டேன். அதற்கு அவன் {ராமன்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ! பீமா, சீதையின் அருளாலும் {ராமனின் அருளாலும்}, எனது கேளிக்கைக்கான அனைத்து அற்புதமான பொருட்களும், இங்கே யார் வசித்தாலும் எனக்கு வழங்கப்படுகிறது. ராமன் பதினோராயிரம் {11000} ஆண்டுகள் அரசுபுரிந்தான்.

பிறகு தனது சொந்த இருப்பிடத்திற்கு உயர்ந்தான். அது முதல், ஓ! பாவமற்றவனே {பீமா}, இங்கே அப்சரசுகளும், கந்தர்வர்களும் சேர்ந்து அந்த வீரனின் {ராமனின்} சாதனைகளைப் பாடி என்னை மகிழ்விக்கின்றனர். ஓ! குருக்களின் மகனே {பீமனே}, இந்தப் பாதை மனிதர்களால் கடக்க முடியாத பாதை. ஓ! பாரதா {பீமா}, அதனாலேயே, யாரும் உன்னை வீழ்த்தவோ சபிக்கவோ கூடாது என்ற காரணத்திற்காகவே இறவாதவர்கள் {தேவர்கள்} நடந்து செல்லும் பாதையில், உனது வழியைத் தடுத்தேன். இது சொர்க்கத்திற்குச் செல்லும் வழிகளில் ஒன்று. இது தேவர்களுக்கானது; இதன் வழியே மாள்பவர்கள் {மனிதர்கள்} செல்ல முடியாது. ஆனால், நீ தேடி வந்த தடாகம், அதோ அந்தத் திசையில் இருக்கிறது" என்றான் {ஹனுமான்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்