Monday, April 14, 2014

ஹனுமானின் யுக விளக்கம்! - வனபர்வம் பகுதி 148

Hanuman's description of Yugas! | Vana Parva - Section 148 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ஹனுமான் சொன்ன யுகங்களின் விளக்கம்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச்சொல்லப்பட்ட வலிமையான கரங்களைக் கொண்ட பலமிக்கப் பீமசேனன், பாசத்துடனும், இதய மகிழ்ச்சியுடனும், தனது அண்ணணான வானரத் தலைவன் ஹனுமானை வணங்கி, மென்மையான வார்த்தைகளில், "என்னைவிடப் பேறு பெற்றவர்கள் யாரும் இல்லை; நான் எனது அண்ணனைக் கண்டுவிட்டேன். இது எனக்குச் செய்யப்பட்ட மிகப்பெரும் ஆதரவு; நான் உம்மிடம் மிகத் திருப்தி கொண்டேன். நீர் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இப்போது விரும்புகிறேன். ஓ வீரரே, சுறாக்கள் மற்றும் முதலைகளின் வசிப்பிடமான கடலை தாண்டிய நேரத்தில், நீர் அடைந்த ஒப்பற்ற வடிவத்தைக் காண விரும்புகிறேன். அப்படிச் செய்தால் நான் திருப்தி கொள்வேன். உமது வார்த்தைகளையும் நம்புவேன்" என்றான்.


இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெரும் வானரம் {ஹனுமான்} சற்றே சிரித்து, "அந்த வடிவத்தை நீயோ, வேறு எவரோ காண இயலாது. அந்த யுகத்தில் இருந்த நிலைகள் வேறு. அந்த நிலை இப்போது இல்லை. கிருத யுகத்தில், பொருட்களின் நிலை ஒன்று, திரேதா யுகத்தில் மற்றொன்று, துவாபர யுகத்தில் இன்னும் ஒன்று என்ற நிலையே இருந்தது. இந்த யுகத்தில் அழிவு நடைபெறுகிறது; என்னிடம் இப்போது அந்த வடிவம் இல்லை. நிலம், நதிகள், செடிகள், பாறைகள், சித்தர்கள், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் வேறு வேறு யுகங்களில் பொருட்களின் நிலைகளுக்கு இணங்கியும் காலத்திற்கு இணங்கியுமே இருக்கின்றன. ஆகையால், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, எனது முந்தைய வடிவத்தைக் காண விரும்பாதே. யுகத்துடன் இணக்கமாகவே நான் இருக்கிறேன். நிச்சயமாக, காலம் தவிர்க்க முடியாதது" என்றான் {ஹனுமான்}.

பீமசேனன் {ஹனுமானிடம்}, "யுகங்களின் கால அளவையும், ஒவ்வொரு யுகத்தின் வகைமுறைகள், சடங்குகள், அறம், இன்பம் மற்றும் பொருள், செயல்கள், சக்தி, வாழ்வு {பிறப்பு}, மரணம் {இறப்பு} ஆகியவற்றை எனக்குச் சொல்லும்" என்று கேட்டான். அதற்கு ஹனுமான், "ஓ குழந்தாய் {பீமா}, ஒரே நித்திய தர்மம் மட்டுமே நடைமுறையில் இருந்த யுகம் கிருதம் என்று அழைக்கப்படுகிறது. யுகங்களில் சிறந்த அந்தச் யுகத்தில் அனைவரும் தர்மத்தில் சரியாக இருந்தனர். ஆகையால் அப்போது எந்தத் தர்மச் செயல்களுக்கும் தேவை ஏற்படவில்லை. பிறகு அறத்திற்கு எந்தச் சீரழிவும் ஏற்படவில்லை; மக்களும் குறையவில்லை {இறப்பில்லை}. இதன் காரணமாகவே அந்த யுகம் கிருதம் {சரியானது} என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த யுகம் குறைவை அடைந்தது.

ஓ! குழந்தாய் {பீமா}, கிருத யுகத்தில், தேவர்களோ, பேய்களோ {dmons அசுரர்களோ}, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, ராட்சசர்களோ, நாகர்களோ கிடையாது. அப்போது வாங்குவதும் விற்பதும் இல்லாதிருந்தது. சாம, ரிக், யஜுர் என எதுவும் இல்லை. உடல் உழைப்பு எதுவும் அப்போது இல்லை. வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் கிடைத்தன. உலகைத் துறப்பதே ஒரே தகுதியாக இருந்தது. அந்த யுகத்தில் நோயோ, புலன்களின் சிதைவோ இல்லை. கோபம், பெருமை {கர்வம்}, பாசாங்குத்தனம், குழப்பம், விருப்பமின்மை, தந்திரம், பயம், துன்பம், பொறாமை, பேராசை ஆகியன அப்போது இல்லை. இதன் காரணமாகவே, யோகிகளின் தலைமைப் புகலிடமான, பரப்பிரம்மனை அனைவரும் அடைந்தனர். வெண்நிறம் அணிந்த நாராயணனே உயிரினங்களின் ஆன்மாவாக இருந்தான்.

கிருத யுகத்தில், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரது தனித்துவமான பண்புகள் அனைத்தும் இயற்கையாக இருந்தன. அவர்கள் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்தனர். அப்போது பிரம்மனே ஒரே புகலிடமாக இருந்தான். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் இயற்கையாகவே பிரம்மனை அடைவதாக இருந்தது. அவர்களது ஞானத்தின் நோக்கம் பிரம்மனாகவே இருந்தது. அவர்களது அனைத்துச் செயல்களும் பிரம்மனைக் குறித்தே இருந்தன. இவ்வழியில் அனைத்து வகையினரும் தகுதியை அடைந்தனர். ஒரே சீரான ஆன்மாவே அவர்களது தியான நோக்கமாக இருந்தது. அப்போது ஒரே மந்திரம் தான் (ஓம் என்ற மந்திரம் மட்டும்தான்) இருந்தது. ஒரே கட்டளையே இருந்தது. பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே வேதத்தையே பின்பற்றினார்கள். அவர்களுக்கு ஒரே தர்மமே {மதமே} இருந்தது. காலத்தின் பிரிவுகளின் படி அவர்கள், எந்த நோக்கத்தையும் கொள்ளாமல் நால்வகை வாழ்வுகளை மேற்கொண்டதால் அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைந்தனர். பிரம்மத்துடன் தன்னை அடையாளம் காண்பதே கிருத யுகத்தின் தர்மமாக {மதமாக} இருந்தது. கிருத யுகத்தில் நான்கு வகைகளின் {வர்ணங்களின்} அறங்கள் நான்கு பிரிவுகள் {கால்கள்} உடையதாக இருந்தது. முக்குணங்கள் {சத்வம், ரஜஸ், தமஸ்} இல்லாத அந்த யுகமே கிருத யுகமாகும்.

திரேதா யுகத்தின் தன்மையையும் என்னிடம் இருந்து கேட்டுக் கொள். இந்த யுகத்திலேயே வேள்விகள் அறிமுகமாகின. அறமும் கால் இழந்தது. (உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கும்) நாராயணன் சிவப்பு நிறத்தை ஏற்றான். மனிதர்கள் உண்மையைப் {சத்தியத்தைப்} பயின்று, தங்களைத் தர்மங்களிலும், தர்மச் சடங்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுமுதல் வேள்விகளும், பலதரப்பட்ட தர்ம நோன்புகளும் நடைமுறைக்கு வந்தன. திரேதா யுகத்தில் மக்கள் நோக்கத்தை அடைவதை பல வழிகளில் செய்யத் தொடங்கினர். அவர்கள் செயல்கள் மூலமாகவும் கொடைகள் மூலமாகவும் அவற்றை அடைந்தனர். அவர்கள் அறத்தின் பாதையில் இருந்து வழுவாதிருந்தார்கள். அவர்கள் தவத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தனர். நால் வகைகளும் {வர்ணங்களும்} தங்கள் கடமைகளைச் சரியாகப் பின்பற்றிச் சடங்குகளைச் செய்தனர். திரேதா யுகத்தின் மனிதர்கள் இப்படியே இருந்தனர்.

துவாபர யுகத்தில் அறம் ஒரு பாதிக் குறைந்தது {இரு கால்கள் குறைந்து, இரு கால்களில் நின்றது}. நாராயணன் மஞ்சள் நிறத்தை அணிந்தான். வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. சில மனிதர்கள் நான்கு வேதங்களை அறிந்தனர், சிலர் மூன்று வேதங்களை அறிந்தனர், சிலர் ஒரு வேதத்தை அறிந்திருந்தனர். மேலும் சிலர் ரிக்கைக் கூட அறியவில்லை. சாத்திரங்கள் இப்படிப் பகுக்கப்பட்டபிறகு செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, துறவிலும் கொடையிலும் ஈடுபட்டனர். முழு வேதத்தையும் பயிலும் திறனற்றதால், அது பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. அறிவு குறைந்ததன் விளைவாகச் சிலரே உண்மையில் நிலைத்திருந்தார்கள். மக்கள் சத்தியத்தில் இருந்து வழுவிய போது, பலதரப்பட்ட நோய்களும், காமம் {ஆசை} பெருகவும், இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட ஆரம்பித்தன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தவம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். சிலர் வாழ்வில் நல்ல காரியங்களை விரும்பியோ அல்லது சொர்க்கத்தை விரும்பியோ வேள்விகள் கொண்டாடினர். துவாபர யுகம் தொடங்கியதும் மனிதர்கள் அவர்கள் செய்யும் அக்கிரமங்களால் சிதைவுக்குள்ளாகினர்.

ஓ! குந்தியின் மகனே {பீமா}, கலி யுகத்தில் அறம் ஒரே காலில் நிற்கிறது. இந்த இரும்பு யுகத்தின் தொடக்கத்தில் நாராயணன் கருப்பு நிறத்தை அணிகிறான். இந்த யுகத்தில் வேதங்களும் நெறிகளும், அறம், வேள்விகள், அற நோன்புகள் ஆகியன பயன்பாட்டில் இருந்து விழுகின்றன. ஈதி {அதிக மழை, வறட்சி, எலிகள், வெட்டுக் கிளி, பறவைகள், அண்டை நாட்டுப் பகை மன்னர்கள் - ஆகிய பயிருக்கு சாதகமற்ற ஆறு பொருள்கள்}, நோய், களைப்பு, கோபம், பிற குறைபாடுகள், இயற்கைப் பேரிடர், துயரம், பற்றாக்குறை பயம் ஆகியன உண்டாகும். யுகம் கரையும்போது, அறமும் குறைவடைகிறது. அறம் குறையும் போது, உயிரினங்கள் அழிகின்றன. உயிரினங்கள் அழிந்தால் இயற்கை அழிவைச் சந்திக்கிறது. யுக முடிவில் செய்யப்படுகிற அறச் செயல்கள் எதிர்மறை பலன்களை அளிக்கின்றன. பல யுகங்கள் வாழ்வன கூட இம்மாற்றங்களுக்கு ஆட்படுகின்றன. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலை அறிந்ததால் இதைச் சொல்கிறேன். ஒரு நல்ல மனிதன் ஏன் மிதமிஞ்சிய பொருளைக் {பயனற்றதைக்} குறித்து ஆவலாக இருக்க வேண்டும்? ஓ! நீண்ட கரங்கள் கொண்டவனே {பீமா}, ஒவ்வொரு யுகத்தின் தன்மைகள் குறித்து முழுமையாகச் சொல்லிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். இனி நீ திரும்பிப் போ" என்றான் {ஹனுமான்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்