Wednesday, April 16, 2014

ஹனுமான் நீதி! - வனபர்வம் பகுதி 149

Hanuman's Law | Vana Parva - Section 149 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ஹனுமான் தனது பெரும் உடலை பீமனுக்குக் காட்டுவது; சௌகந்திக வனத்திற்குச் செல்லும் பாதையை ஹனுமான் பீமனுக்குக் காட்டுவது; நால்வகை மனிதர்களின் கடமைகளை ஹனுமான் பீமனுக்கு உரைப்பது.

பீமசேனன் {ஹனுமானிடம்} சொன்னான், "உமது முந்தைய வடிவத்தைக் காணாது நான் செல்ல மாட்டேன். உம்மிடம் நான் உதவி பெறக்கூடியவனாக இருந்தால், நீர் உமது சொந்த உருவை எனக்குக் காட்ட வேண்டும்" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குரங்கு {ஹனுமான்} சிரித்துக் கொண்டே தான் கடலைத் தாண்டிய போது கொண்டிருந்த உருவை வெளிக்காட்டினான். தனது தம்பியை {பீமனை} திருப்தி செய்ய விரும்பிய ஹனுமான் உயரத்திலும் அகலத்திலும் மாபெரும் உருவெடுத்தான். அளக்கமுடியா பிரகாசம் கொண்ட அந்தக் குரங்கு {ஹனுமான்}, மரங்களடர்ந்த அந்த வாழைத் தோப்பை மறைத்த படி விந்தியமென வளர்ந்து நின்றான். மலையைப் போல உருவெடுத்த தாமிர விழிகளும், கூரிய பற்களும், புருவம் சுருங்கிய குறியுடைய முகமும் கொண்ட அந்த வானரம் {ஹனுமான்}, தனது நீண்ட வாலை ஆட்டியபடி எல்லாப் புறங்களிலும் வியாபித்துக் கிடந்தான். குருக்களின் மகன் {பீமன்} தனது அண்ணனின் பெருத்த உருவத்தைக் கண்டு மலைத்ததால் அவனுக்குத் திரும்பத் திரும்ப மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது. சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், பொன் மலையைப் போலவும், எரியும் ஆகாயம் போலவும் இருந்த அவனைக் கண்ட பீமன் தனது கண்களை மூடிக் கொண்டான். பிறகு ஹனுமான் பீமனிடம் புன்னகையுடன், "ஓ! பாவமற்றவனே, இந்த அளவுக்கு மட்டுமே எனது உருவை உன்னால் காண முடியும். எனினும், நான் எனது உருவத்தை நான் விரும்பியவாறு இதை விட அதிகமாகப் பெருக்கிக் கொண்டே போக முடியும். ஓ பீமா, எதிரிகளுக்கு மத்தியில் எனது உருவம் சுயசக்தி கொண்டு தானே அதிகமாக வளரும்" என்றான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விந்திய மலையைப் போல இருந்த ஹனுமானின் கடுமை நிறைந்த அற்புத உடலைக் கண்ட வாயுத் தேவனின் மகன் {பீமன்} தடுமாறிப் போனான். மயிர் சிலிர்த்தவனாய் இருந்த உயர்ந்த பண்புகளுடைய மனம் கொண்ட பீமன், தனது கரங்களைக் கூப்பி, ஹனுமானிடம், "ஓ தலைவா, உமது உடலின் பெரும் அளவுகளைக் கண்டேன். ஓ உயர்ந்த பலம் கொண்டவரே, உமது சக்தியால் உம்மைக் குறைத்துக் கொள்ளும். உதிக்கும் சூரியனைப் போலவும், அளவிட முடியாதவராகவும், கட்டுப்படுத்தப்பட முடியாதவராகவும் மைநாக மலையைப் போலவும் இருக்கும் உம்மை என்னால் காண முடியவில்லை. ஓ வீரரே, நீர் அருகில் இருந்த போதும் ராமன் ராவணனை தானே எதிர்த்துச் சென்றான் என்பதில் இன்று எனது இதயம் ஆச்சரியம் கொள்கிறது. உமது கரத்தின் பலத்தால் நீர் ஒருவரே இலங்கையையும், அதன் போர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் அழித்திருக்க முடியுமே. ஓ வாயுத்தேவனின் மகனே {ஹனுமாரே}, உம்மால் அடைய முடியாதது எதுவுமில்லை. ராவணனும், அவனைப் பின்பற்றுவோர் அனைவரும் சேர்ந்து ஒருங்கே வந்தாலும் போரில் உம் ஒருவருக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்தும் நிகராக மாட்டார்கள்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட வானரத்தலைவன் ஹனுமான் பாசமாக முறையான வார்த்தைகளால் பதிலளித்தான். ஹனுமான், "ஓ வலுத்த கரம் கொண்டவனே, ஓ பாரதா {பீமா}, நீ சொல்வது போலத்தான் {உண்மைதான்}. ஓ பீமசேனா, அந்த ராட்சசர்களில் இழிந்தவன் {இராவணன்} எனக்கு நிகராக மாட்டான். ஆனால் உலகங்களின் முள்ளான ராவணன் என்னால் கொல்லப்பட்டிருந்தால், ரகு மகனின் {ராமனின்} புகழுக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கும். அதற்காகவே நான் அவனை விட்டேன். அந்த ராட்சசர்களின் தலைவனையும், அவனது அடிபொடிகளையும் கொன்று, சீதையைத் தனது நகரத்திற்குக் கொண்டு வந்த அந்த வீரன் {ராமன்}, மனிதர்கள் மத்தியில் தனது புகழை நிலைக்க வைத்தான். ஓ! பெரும் ஞானியே, உனது சகோதரர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் வாயுத்தேவனால் காக்கப்பட்டும் பேறுடனும் மங்களகரமாகவும் செல்.

ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீமனே}, இவ்வழி சௌகந்திக வனத்திற்குச் செல்கிறது. (இத்திசையில் முன்னேறினால்) யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வரும் குபேரனின் நந்தவனத்தை நீ காணலாம். உனது சுயபலத்தால் நீ பூக்களைப் பறிக்காதே. குறிப்பாக மனிதர்களிடம் மதிப்பைப் பெறும் தகுதி தேவர்களுக்கு இருக்கிறது. ஓ பாரதக் குலத்திற்சிறந்தவனே, காணிக்கைகள், ஹோமங்கள், மதிப்பிற்குரிய வணக்கங்கள், மந்திரங்கள் உரைத்தல் மற்றும் துதி ஆகியவற்றால் தேவர்கள் மனிதர்களுக்கு அருளை வழங்குகிறார்கள். ஓ பாரதா {பீமா}, ஓ குழந்தாய், எனவே, கடுஞ்செயல் புரியாதே. உனது வகைக்கான {வர்ணத்துக்கான} கடமைகளில் இருந்து வழுவாதே. உனது கடமைகளைப் பற்றிக் கொண்டு, உயர்ந்த அறநெறியை புரிந்து கொண்டு பயின்று வா. கடமைகளை அறியாது, முதியோர்களைச் சேவிக்காது இருந்தால் பிருஹஸ்பதியைப் போன்ற மனிதர்களும் அறம் மற்றும் பொருளை உணர மாட்டார்கள். தீமை நன்மையென்ற பெயரிலும், நன்மை தீமை என்ற பெயரிலும் வரும் வழக்குகளின் வேறுபாடுகளை ஒருவன் உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற வழக்குகளில் புத்திகூர்மையற்றவர்கள் குழம்பிவிடுவார்கள். தர்ம நோன்புகளிலிருந்து நெறி உருவாகிறது; நெறி வேதங்களில் நிறுவப்பட்டிருக்கிறது; வேதங்களிலிருந்து வேள்விகள் வந்தன; வேள்விகள் மூலம் தேவர்கள் நிறுவப்படுகின்றனர்; வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி செய்யப்படும் வேள்விகளாலும் தர்மவிதிகளாலும் தேவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மனிதர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசானஸ் {சுக்ரன்} ஆகியோரின் விதிகளைப் பின்பற்றியும், தங்கள் தொழில்களாலும் தங்களைப் பராமரித்துக் கொள்கின்றனர். கூலிகள் பெறுவதன் மூலமும், வரிகள் வசூலிப்பதன் மூலமும், வியாபாரம், விவசாயம் மற்றும் மாடு ஆடு வளர்ப்பு ஆகியவற்றின் மூலமும் இந்த உலகம் பராமரிக்கப்படுகிறது.

தொழில் மூலமே உலகம் பிழைத்திருக்கிறது. மூன்று வேதங்கள் {கல்வி}, விவசாயம், வணிகம், அரசமைப்பு உருவாக்குதல் ஆகியவை இருபிறப்பாளர்களின் {அந்தண, க்ஷத்திரிய, வைசிய வர்ணத்தாரின்} தொழில்கள் என ஞானமுள்ளோரால் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைப் பின்பற்றித் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. இவை சரியாகப் பின்பற்றப்படும்போது உலகம் எளிதாகத் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. எனினும், மக்கள் நேர்மையாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாததாலும், வேத தகுதியற்றிருப்பதாலும், அரசற்று இருப்பதாலும் உலகம் அநீதியால் சூழப்படுகிறது. மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்யவில்லை என்றால் அழிந்து போவார்கள். ஆனால் இந்த மூன்று தொழில்களையும் சரியாகப் பின்பற்றினால் தர்மம் செழிக்கும். அந்தணர்களின் தர்மம் ஆன்மாவின் ஞானத்தை அடைவதாகும். இந்த வகையின் {வர்ணத்தின்} நிறம் மட்டுமே அண்டம் முழுவதும் ஒன்றாகவே இருக்கிறது {the hue of that order alone is universally the same}. வேள்விக் கொண்டாட்டம், கல்வி, பரிசுகள் கொடை ஆகியவை நன்கு அறியப்பட்ட {அனைத்து வகையினருக்கும் [வர்ணத்தாருக்கும்]} பொதுவான மூன்று கடமைகளாகும்.

வேள்விகள் நடத்துவதும், கல்வி கற்பிப்பதும், பரிசுகள் ஏற்பதும் ஒரு அந்தணனின் கடமையாகும். (குடிமக்களை) ஆள்வது க்ஷத்திரியனின் கடமையாகும்; (கால்நடை) வளர்த்தல் வைசியனின் கடமையாகும்; இருபிறப்பாளர் வகைகளுக்கு {பிராமணர்களுக்கு} சேவை செய்வதே சூத்திரனின் கடமையாகும். சூத்திரர்கள் பிச்சை எடுக்கக்கூடாது; ஹோமங்கள் செய்யக்கூடாது; நோன்புகள் நோற்கக்கூடாது; அவர்கள் தங்கள் தலைவனின் {முதலாளியின்} வசிப்பிடத்தில் வசிக்க வேண்டும். ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனது தொழில் (குடிமக்களை) பாதுகாக்கிற க்ஷத்திரியத் தொழிலாகும். புலன்களில் இருந்து விடுபட்டு, எளியவனாக இருந்து உனது கடமைகளைச் செய். அனுபவம் நிறைந்த மனிதர்களுடன் ஆலோசனை நடத்துபவனும், நேர்மையான, புத்திசாலியான, கல்வி கற்ற அமைச்சர்களால் உதவப்படுபவனுமான மன்னன் மட்டுமே ஆளலாம். தீமைக்கு அடிமையாக இருக்கும் மன்னன் தோல்வியைச் சந்திக்கிறான். சரியான தண்டனையும், நல்ல உதவிகளையும் செய்யும் மன்னனாலேயே உலகம் பாதுகாப்பாக இருக்கிறது.

எனவே, {ஒரு மன்னன்} பகை நாட்டின் இயல்பையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும், எதிரிகளின் கூட்டாளிகளையும், அவர்களின் செழிப்பு மற்றும் அழிவையும், அவர்கள் அதிகாரத்தை அடைந்த வழிகளையும் ஒற்றர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒற்றர்கள் ஒரு மன்னனின் முக்கியத் துணைவர்களாவார்கள்; நுண்நயம் {திறமை}, ராஜதந்திரம், உள்ளத்துணிவு, தண்டனை தரும் முறை, அருள் மற்றும் புத்திகூர்மை ஆகியன வெற்றிக்கு வழிவகுக்கும். பிரிவோ அல்லது சமாதானம், பரிசு, சண்டைமூட்டுதல், தண்டனை, பார்வை ஆகியவை இணைந்தோ வெற்றியைக் கொடுக்கும்.

ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, அரசியலுக்கு {அரசாட்சிக்கு} வேர் இராஜதந்திரமாகும்; இராஜதந்திரம் ஒற்றர்களின் முக்கியத் தகுதியாகும். சரியான தீர்மானங்கள் அரசியலில் வெற்றியைக் கொடுக்கும். ஆகையால், அரசியலில் அந்தணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட வேண்டும். ரகசிய காரியங்களில், பெண்களுடனோ, மூடனுடனோ, சிறுவனுடனோ, பேராசைக்காரனுடனோ, பைத்தியக்காரனுடனோ ஆலோசிக்கக் கூடாது. ஞானமுள்ளோரிடம் மட்டுமே ஆலோசிக்க வேண்டும். செயல்களைத் திறன் படைத்த அலுவலர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும்.

நட்புடன் உள்ள மனிதர்கள் மூலம் அரசாட்சி செய்ய வேண்டும். மூர்க்கர்களை எல்லாக் காரியங்களிலும் விலக்க வேண்டும். தர்ம காரியங்களில் பக்திமான்களையும், பொருளீட்டுவதில் கற்றறிந்தவர்களையும், குடும்பப் பாதுகாப்புக் காரியங்களில் அலிகளையும் {eunuch = நபும்சகர் = அலி}, நேர்மையற்ற காரியங்களில் குரூர்களையும் நியமிக்க வேண்டும். எதிரிகளின் செயல்களில் செய்யத்தக்கது, செய்த்தகாதது, அவர்களது பலம் மற்றும் பலமற்ற தன்மை, ஆகியவற்றையும், தன் ஒற்றர்களைக் கொண்டும், பகைநாட்டு ஒற்றர்களைப் பயன்படுத்தியும் அறிய வேண்டும். நேர்மையான மனிதர்களுக்குச் சாதகமாக அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; சட்டத்தை மதிக்காதவர்கள், அடங்காத மனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு மன்னன் நீதியுடன் தண்டனையும், உதவியும் செய்யும்போது, சட்டத்தின் ஆட்சி சரியாகப் பராமரிக்கப்படும். ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {பீமா}, அறிவதற்குக் கடினமான ஒரு மன்னனின் கடமைகளை நான் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

மன அமைதியுடன் இவற்றைப் பின்பற்றி உனது வகைக்கான {வர்ணத்திற்கான} செயலைச் செய். அந்தணர்கள் அறத்தகுதி, புலனடக்கம், வேள்விகள் மூலம் சொர்க்கத்தை அடைகின்றனர். வைசியர்கள் கொடை, விருந்தோம்பல், அறச்செயல்கள் மூலம் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். க்ஷத்திரியர்கள் குடிமக்களைப் பாதுகாத்தும் தண்டித்தும், காமம், விரோத மனப்பான்மை, கோபம் ஆகியவற்றால் பாதிக்கபடாதிருந்தும் தெய்வீக உலகங்களை அடைகிறார்கள். (குடிமக்களை) நீதியுடன் தண்டித்தால் ஒரு மன்னன் நல்ல மனிதர்கள் அடையும் உலகத்தை அடைகிறான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்