Thursday, April 17, 2014

மலர்களை அடைந்த பீமன்! - வனபர்வம் பகுதி 153

Bhima collected the flowers! | Vana Parva - Section 153 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சௌகாந்திக மலர் பெற தான் வந்த காரணத்தை பீமன் சொல்வது; மலர்களைப் பறிக்க முடியாது என்று குரோதவாசர்கள் சொல்வது; பீமன் அதை மறுத்து மலர்களைப் பறிக்கச் செல்வது; ராட்சசர்களுக்கு பீமனுக்குமிடையில் நடந்த மோதல்; நூற்றுக்கணக்கான ராட்சசர்களை பீமன் கொல்வது; பின்வாங்கி ராட்சசர்கள் குபேரனிடம் சென்று முறையிடுவது; குபேரன் மலர்களை பீமன் பறித்துக் கொள்ளட்டும் என்று சொல்வது...

 பீமன் {குரோதவாசர்களிடம்} சொன்னான், "நான் பாண்டுவின் மகன், பிறப்பால் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்தவன், எனது பெயர் பீமசேனன். ஓ! ராட்சசர்களே, நான் விசால என்ற பெயர் கொண்ட இலந்தை மரத்திற்கு எனது சகோதரர்களுடன் வந்திருக்கிறேன். அவ்விடத்தில் பாஞ்சாலி {திரௌபதி}, இந்தப் பகுதியில் இருந்து வீசிய காற்றால் அடித்துவரப்பட்ட அற்புதமான சௌகாந்திக தாமரையைக் கண்டாள். அவள் அது போன்ற மலர்களை நிறைய அடைய விரும்புகிறாள். ராட்சசர்களே, களங்கமற்ற எனது மனைவியின் {திரௌபதியின்} விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடனே நான் அம்மலர்களைப் பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.


அதற்கு ராட்சசர்கள், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {பீமா}, இவ்விடம் குபேரனுக்குப் பிடித்தமான விளையாட்டிடமாகும். மரணத்துக்கு ஆட்படும் மனிதர்கள் இங்கே விளையாட முடியாது. ஓ! விருகோதரா {பீமா}, தெய்வீக முனிவர்களும், தேவர்களும் கூட யக்ஷர்கள் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்றுத்தான் இத்தடாகத்தின் நீரை அருந்தி இங்கே விளையாடுவார்கள். ஓ பாண்டவா {பீமா}, கந்தர்வர்களும் அப்சரசுகளும் கூட இத்தடாகத்திற்கு வருவார்கள். பொக்கிஷத் தலைவனை அவமதித்து, சட்டத்தை மீறி இங்கே விளையாடும் தீயவன், சந்தேகற இங்கே அழிவைச் சந்திக்கிறான். அவனை {குபேரனை} அவமதித்து, பலத்தால் தாமரைகளைக் கவர்ந்த செல்ல முயற்சிக்கிறாய். பிறகு ஏன் நீ உன்னை நீதிமானான யுதிஷ்டிரன் தம்பி என்று சொல்லிக் கொள்கிறாய்? முதலில், யக்ஷர்களின் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்ற பிறகு இத்தடாகத்தின் நீரை அருந்தி, மலர்களையும் எடுத்துச் செல். அப்படிச் செய்யவில்லையென்றால், ஒரு தாமரையின் மீது கூட உனது பார்வை பட இயலாது" என்றார்கள் {குரோதவாசர்கள்}

பீமசேனன், "ராட்சசர்கள், நான் பொக்கிஷத் தலைவனை {குபேரனை} இங்குக் காணவில்லை. நான் அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனை {குபேரனைக்} கண்டால் கூட, நான் அவனிடம் கெஞ்ச மாட்டேன். க்ஷத்திரியர்கள் {யாரிடமும்} எப்போதும் கெஞ்சமாட்டார்கள். இதுவே நிலைத்த அறநெறி; எவ்வகையிலேனும் நான் க்ஷத்திரிய அறநெறியைக் கைவிட மாட்டேன். இத்தாமரைத் தடாகம் இம்மலையின் அருவியில் இருந்தே ஊற்றெடுத்திருக்கிறது. இது குபேரனின் மாளிகைக்குள் இல்லை. எனவே, வைஸ்ரவணனுடன் சேர்ந்து அனைத்து உயிரினங்களுக்கும் இதில் சமபங்கு சொந்தமானதே. இத்தகு இயல்பு கொண்ட ஒன்றுக்காக யார் ஒருவரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பான்?" என்று கேட்டான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ராட்சசர்களிடம் இப்படிச் சொன்ன அந்த வலுத்த கரம் கொண்ட பொறுமையற்ற பலம்வாய்ந்த பீமசேனன், அத்தாமரைத் தடாகத்துக்குள் மூழ்கினான். இதன் காரணமாக அந்தப் பலம்வாய்ந்தவன் ராட்சசர்களால், "இதைச் செய்யாதே" என்று கண்டிக்கப்பட்டான். பிறகு அவர்கள் அனைவரும் அனைத்துப் பக்கங்களிலும் கூடிய நின்று கோபத்தால் திட்ட ஆரம்பித்தனர். அந்த ராட்சசர்களைக் கேலி செய்த அந்தக் கடும் பராக்கிரமம் நிறைந்த பலசாலி {பீமன்} (மேலும் மேலும்) மூழ்கினான். அவர்கள் {ராட்சசர்கள்} அனைவரும் அவனை {பீமனை} எதிர்க்கத் தயாரானார்கள். கண்களை உருட்டிக் கொண்டு, தங்கள் கரங்களை உயர்த்திய படி கோபத்துடன் பீமசேனனை நோக்கி ஓடி, "அவனைப் பிடியுங்கள்!", "அவனைக் கட்டிப் போடுங்கள்", "அவனை வெட்டுங்கள்! நாம் பீமசேனனைச் சமைத்து உண்டு விடலாம்!" என்று கத்தினர்.

இதைக் கண்ட அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, தங்கத்தகடுகள் பொருத்தப்பட்ட தனது பலமிக்கப் பளு நிறைந்த கதாயுதத்தை எடுத்து அவர்களை நோக்கி "நில்லுங்கள்" என்று சொன்னான். அவர்கள் {ராட்சசர்கள்}, பளபளக்கும் ஈட்டிகள், போர்க்கோடரிகள் மற்றும் பல ஆயுதங்களுடனும் உணர்ச்சி வேகத்துடனும் திடீரெனத் துள்ளிக் குதித்தார்கள். பீமனை அழிக்க விரும்பிய அந்தக் கொடியவர்களும் மிகுந்த பயங்கரம் கொண்டவர்களுமான குரோதவாசர்கள் அவனை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், வாயுவினால் குந்தியின் கருவறையில் பெறப்பட்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் பலமும் சக்தியும் நிறைந்த வீரனாக இருந்தான். அதனால், உயர் ஆன்ம பீமன் தனது அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, அவர்கள் கரங்களை ஒடித்து, முதன்மையாக வந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அந்தத் தடாகத்தின் கரையிலேயே கொன்று போட்டான். அவனது வீரத்தையும் பலத்தையும், நிபுணத்துவத்தையும், வேகத்தையும், கரங்களின் பலத்தையும் தாங்க முடியாத அந்த முதன்மை வீரர்கள் {ராட்சசர்கள்} திடீரென ஓடிப் பின்வாங்கினர்.

பீமசேனனால் அடிக்கப்பட்டும் துளைப்பட்டும் இருந்த குரோதவாசர்கள் போர்க்களத்திலிருந்து விலகி, குழப்பத்தால் விரைவாகக் கைலாசத்தின் சிகரத்தில் ஏறி வானத்தில் தங்களைத் தாங்கிக் கொண்டார்கள். தைத்தியர்களையும், தானவர்களையும் வீழ்த்திய சக்ரன் {இந்திரன்} போல, தனது வீரத்தால் எதிரிகளை வீழ்த்திய அவன் (பீமன்) வெற்றியடைந்ததால், தடாகத்துக்குள் மூழ்கி, தனது நோக்கத்தை அடைய விரும்பி, தாமரைகளைச் சேகரித்தான். அமுதம் போன்ற அந்நீரைப் பருகிய அவனது சக்தியும் பலமும் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது. பிறகு அவன் விழுந்த அற்புதமான நறுமணமிக்கச் சௌகாந்திகத் தாமரைகளைச் சேகரிக்க ஆரம்பித்தான்.

மறுபுறம், பீமேசேனனின் பலத்தால் விரட்டப்பட்ட குரோதவாசர்கள், மிகவும் பயந்து போய், செல்வத்தலைவன் {குபேரன்} முன்பு நின்று, பீமனின் வீரம் மற்றும் போரில் அவனது பலத்தைக் குறித்துச் சுருக்கமாகச் சொன்னார்கள். அவர்களது வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேவன் {குபேரன்} சிரித்தவாறு, "கிருஷ்ணைக்காக {திரௌபதிக்காக} பீமன் தான் விரும்பிய அளவு எவ்வளவு வேண்டுமானாலும் தாமரைகளை எடுத்துச் செல்லட்டும். இது ஏற்கனவே நான் அறிந்ததுதான்" என்றான். அதன்பிறகு, செல்வத்தலைவனின் {குபேரனின்} அனுமதியை எடுத்துக் கொண்ட (ராட்சசர்கள்), கோபத்தைக் கைவிட்டு, குருக்களில் முதன்மையானவனிடம் {பீமனிடம்} சென்றனர். அங்கே பீமன் தாமரைத் தடாகத்தில் தனியாக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். 

http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்