Friday, April 18, 2014

பீமனைத் தேடிய யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 154

Yudhishthira's search for Bhima! | Vana Parva - Section 154 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தாங்கள் இருந்த இடத்தில் தோன்றிய தீச்சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன், பீமனைத் தேடல்; பீமன் மலர் தேடி வடகிழக்கில் சென்றிருக்கலாம் என்று திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; யுதிஷ்டிரன் ராட்சசர்கள் உதவியுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தை அடைந்து பீமனைக் காண்பது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, பாரதர்களில் சிறந்தவனான பீமன் தெய்வீகமானதும் அரிதானதுமான பல வண்ண புது மலர்களை அபரிமிதமாகச் சேகரித்தான்.

அச்சமயத்தில் போரை முன்னறிவிக்கும் வகையில், சரளைக் கற்களைக் தூக்கி வீசவல்லதும், கடுமையாகத் தாக்குவதுமான கடும் காற்று வீசியது. பயங்கரமான எரிகற்கள் இடிபோன்ற சத்தத்துடன் விழுந்தன. இருள் சூழ்ந்து சூரியன் ஒளியிழந்தான். அவனது கதிர்களை இருள் மூடியது. தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திய பீமன் வெளியிட்ட பயங்கரச் சத்தம் வானத்திலேயே உலவி கொண்டிருந்தது. பூமி நடுங்கத் தொடங்கியது. தூசி மழை பொழிந்து. திசைகள் சிவந்தன. விலங்குகளும் பறவைகளும் கிறீச்சொலி கொண்ட குரலுடன் கதறின. எதையும் பிரித்துப் பார்க்க முடியாதவாறு அனைத்தையும் இருள் மூடியது. பிற தீய சகுனங்களும் அங்கே தெரிந்தன.


இந்த விசித்திர நிலையைக் கண்ட பேச்சாளர்களில் முதன்மையான தர்மனின் மகன் யுதிஷ்டிரன், "யார் நம்மை வெல்லப்போகிறார்கள்? போரில் மகிழும் பாண்டவர்களே, உங்களுக்கு நல்லது நடக்கட்டும்! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நான் காணும் காட்சி, நமது பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நேரம் அருகில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது" என்றான். இதைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்} சுற்றிலும் பார்த்தான். எதிரிகளை ஒடுக்கும் பீமனை காணாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன் கிருஷ்ணையிடமும் {திரௌபதியிடமும்}, இரட்டையர்களிடமும் கடும் செயல்களைச் செய்யும் பீமனைக் குறித்து விசாரித்தான். அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! பாஞ்சாலி {திரௌபதி}, பீமன் ஏதோ பெரும் சாதனையைச் செய்ய நினைத்திருக்கிறான் போலும். அல்லது தைரியமான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அவன் {பீமன்}, ஏற்கனவே ஏதாவது வீரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறானா? அச்சத்தைத் தரும் போரைக் குறிக்கும் பெரும் அபாயத்தை முன்னறிவிக்கவே, இத்தகு தீச்சகுனங்கள் சுற்றிலும் தெரிகின்றன" என்றான்.

தனது அன்பிற்குரிய ராணியிடம் {திரௌபதியிடம்} யுதிஷ்டிரன் இப்படிச் சொல்லும்போது, இனிய புன்னகையும் உயர் மனமும் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, அவனது {யுதிஷ்டிரனின்} துயரத்தை நீக்கும் வகையில், "ஓ! மன்னா, இன்று காற்றால் அடித்து வரப்பட்டதே ஒரு சௌகாந்திகத் தாமரை. அதை அன்பால் நான் பீமசேனரிடம் காண்பித்தேன். அதன் பிறகு அந்த வீரரிடம் "உம்மால் இது போன்ற மலர்களை எடுத்துக் கொண்டு வர முடியுமானால், அதை எடுத்துக். கொண்டு விரைவாக வர வேண்டும்" என்று சொன்னேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, வலுத்த கரம் கொண்டவர் {பீமர்}, எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, வடகிழக்கு நோக்கிச் சென்றிருக்கலாம்" என்றாள்.

அவளின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்களிடம், "விருகோதரன் {பீமன்} சென்ற பாதையில் நாமும் ஒன்றாகச் சேர்ந்து செல்வோம். களைத்துப் போய், பலமற்று இருக்கும் அந்தணர்களை ராட்சசர்கள் சுமக்கட்டும். ஓ! கடோத்கசா, ஓ! தேவனைப் போன்றவனே, நீ கிருஷ்ணையை {திரௌபதியைச்} சுமந்து கொள். பீமன் காட்டுக்குள் சென்றிருக்கிறான் என்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. அவன் சென்று நீண்ட நேரமும் ஆயிற்று. வேகத்தில் அவன் காற்றுக்கு நிகரானவனாவான். வினதையின் மகனைப் {கருடனை} போல அவன் விரைவாக நிலத்தைக் கடந்து, தனது விருப்பப்படி வானத்தில் ஏறும் சக்தியையும் பெற்றவனாவான். ஓ! ராட்சசர்களே, நாம் உங்களது பராக்கிரமத்தின் மூலம் தொடர்ந்து செல்வோம். வேதங்களை அறிந்த சித்தர்களுக்கு அவனாக முதலில் எந்தத் தீங்கையும் செய்ய மாட்டான்" என்றான் {யுதிஷ்டிரன்}.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன ஹிடிம்பையின் மகனும் {கடோத்கஜனும்}, பிற ராட்சசர்களும் குபேரனின் தாமரைத் தடாகத்தை அறிந்ததால், லோமசருடனும் பிற அந்தணர்களுடனும், பாண்டவர்களைச் சுமந்து கொண்டு மகிழ்ச்சிகரமாகக் கிளம்பினர். விரைவாக அந்த இடத்தை அடைந்த அவர்கள், சௌகாந்திகங்களும், மற்றத் தாமரைகளும் நிரம்பிய கானகம் சூழந்த அந்த அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகளில் நீண்ட கண்கள் கொண்ட யக்ஷர்கள் கொல்லப்பட்டும், கண்கள், கரங்கள், தொடைகள் அடித்தொடிக்கப்பட்டு, தலைகள் நசுக்கப்படும் கிடப்பதையும், அங்கே உயர் ஆன்ம பீமன் உணர்ச்சிப்பெருக்குடன் நிற்பதையும் கண்டனர். நிலைத்த கண்களுடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, இரு கரங்களையும் சேர்த்து உயர்த்திப் பிடித்த கதாயுதத்துடன், பிரளய காலத்து யமனைப் போலக் கோபத்துடன் அத்தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தான்.

நீதிமானான யுதிஷ்டிரன் அவனை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொண்டு இனிய வார்த்தைகளில், "ஓ! கௌந்தேயா {பீமா}, நீ என்ன செய்துவிட்டாய்? உனக்கு நன்மை ஏற்படட்டும்! நீ எனக்கு நன்மை செய்ய விரும்பினால், இதுபோன்ற மூர்க்கமான செயல்களையோ, அல்லது தேவர்களுக்குக் குற்றமிழைக்கும் செயல்களையோ இனி செய்யக் கூடாது" என்று சொன்னான். குந்தியின் மகனுக்கு {பீமனுக்கு} இவ்வாறு அறிவுரை கூறிபிறகு, மலர்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தெய்வீகமானவர்கள் அதே தடாகத்தில் விளையாட ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் பெருத்த உடல் படைத்த நந்தவனக் காவலர்கள், தங்கள் ஆயுதங்களாகப் பாறைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நீதிமானான யுதிஷ்டிரனையும், பெரும் முனிவரான லோமசரையும், நகுலன் மற்றும் சகாதேவனையும், அந்தணர்களில் முதன்மையானவர்களையும் கண்ட அவர்கள் பணிவுடன் வணங்கினார்கள். பிறகு நீதிமானான யுதிஷ்டிரனால் சமாதானப்படுத்தப்பட்ட ராட்சசர்கள் திருப்தியடைந்தார்கள். பிறகு குபேரனுக்கு அறிந்தவாறே, அந்தக் குருக்களில் முதன்மையானவர்கள் கந்தமாதனச் {மலைச்} சரிவுகளில் அமைந்த அந்த இடத்தில் அர்ஜுனனை எதிர்பார்த்து சில காலம் தங்கினார்கள்.

http://www.mediafire.com/view/h526b06w895kf8a/வன_பர்வம்_158__ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.pdf
http://www.mediafire.com/view/6ciys7a7y2tawfw/வனபர்வம்_158_ஆர்ஷ்டிஷேணரின்_அறிவுரை.doc

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்