Thursday, May 01, 2014

குபேரன் மறைந்தான்! - வனபர்வம் பகுதி 161

Kubera vanished! | Vana Parva - Section 161 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனுக்குச் சில உபதேசங்களைச் செய்த குபேரன், அர்ஜுனனின் நலத்தைச் சொல்லி அங்கிருந்து மறைவது...

பொக்கிஷத்தலைவன் {குபேரன்} சொன்னான், "ஓ! யுதிஷ்டிரா, பொறுமை, திறன் (சரியான) நேரம், இடம் மற்றும் பராக்கிரமம் ஆகிய ஐந்தும் காரியங்களில் வெற்றியை நோக்கி மனிதனை இட்டுச் செல்கின்றன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கிருத யுகத்தில், மனிதர்கள் பொறுமையாகவும், தங்களுக்கு உரிய பணிகளில் திறன்வாய்ந்தும் தங்கள்கள் பராக்கிரமத்தைக் காட்டுவது எவ்வாறு என்பதை அறிந்துமிருந்தனர். ஓ!க்ஷத்திரியர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பொறுமையோடிருந்து தனக்கான இடம், மற்றும் நேரத்தை புரிந்து கொண்டு, மனித தர்மங்களை நன்கு அறிந்த ஒரு க்ஷத்திரியன், நீண்ட காலம் இந்த உலகத்தைத் தனியாக ஆளுகிறான். ஓ! வீரா, இதன் படி நடந்து கொள்பவன் இந்த உலகத்தில் புகழையும், அடுத்த உலகத்தில் அற்புத நிலையையும் அடைகிறான்.


தனது பராக்கிரமத்தை உரிய இடத்தில் காலத்தில் வெளிப்படுத்திய வசுக்களோடு கூடிய சக்ரன் {இந்திரன்}, சொர்க்கத்தின் ஆளுமையை அடைந்தான். கோபத்திலிருப்பவனுக்குத் தனது வீழ்ச்சி தெரியாது. இயற்கையிலேயே தீயவனும், தீய எண்ணம் கொண்டவனும், இடம் நேரம் அறியாது செயல் புரிபவனும், இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டாளின் முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகும். விரும்பத்தகுந்த நேரம் மற்றும் செயல்களை அறியாதவன் இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறான். தீய நோக்கம் கொண்ட ஏமாற்றுகர மனிதர்கள் அனைத்து வகையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று எண்ணி முரட்டுச் செயல்களைச் செய்வார்கள்.

ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பீமசேனன் அச்சமற்றவனாகவும், கடமைகளை அறியாதவனாகவும், செருக்குடையவனாகவும், குழந்தையின் மனம் கொண்டவனாகவும், பொறுமையற்றவனாகவும் இருக்கிறான். ஆகையால் அவனைக் குறித்து ஆய்வு செய். மீண்டும் பக்திமானான முனிவர் ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்திற்கு இந்தத் தேய்பிறைகாலத்தில் திரும்பி பயமோ துயரமோ அற்று இரு. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, என்னால் நியமிக்கப்பட்டு அழகையிலும் {அழகாபுரியில்} வசிக்கும் அனைத்து கந்தர்வர்களும் மற்றும் இந்த மலையில் வசிப்பவர்களும், ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, உன்னையும், இந்த அந்தணர்களில் சிறந்தவர்களையும் காப்பார்கள். மேலும், ஓ! மன்னா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, தனது முரட்டுத் தனத்தால் விருகோதரன் இங்கு வந்தான் என்பதை அறிந்தாய், ஆகையால் அவனை ஆய்வு செய். ஓ! ஏகாதிபதி, இது முதல், இந்தக் கானகத்தில வசிக்கும் அனைத்து உயிர்களும் உன்னை வந்து சந்தித்து, உனக்காகக் காத்திருந்து, எப்போதும் உங்கள் அனைவரையும் காப்பாற்றும்.

மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, எனது பணியாட்கள் எப்போதும் உனக்குப் பலதரப்பட்ட இறைச்சிகளையும், சுவைமிக்கப் பானங்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஓ! மகனே, யுதிஷ்டிரா, தெய்வீகக் கூடுகையால் பெறப்பட்ட அர்ஜுனன் மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, விருகோதரன் வாயுத்தேவனுக்கும், நீ தர்மனும், பலம் கொண்ட இரட்டையர்கள் அசுவினிகளுக்கும் எப்படிப் பாதுகாக்கப்படத் தகுந்தவர்களோ, அதே போலவே எனக்கும் நீங்கள் அனைவரும் ஆவீர்கள். பிறப்பால் பீமசேனனுக்கு அடுத்தவனான, பொருள் அறிவியலும், அனைத்து மனித விதிகளையும் அறிந்தவனுமான பல்குனன் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறான். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை என்று உலகத்தில் அறியப்பட்ட அனைத்து நிறைகுணங்களும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அவனது பிறப்பில் இருந்து நிறுவப்பட்டிருக்கின்றன.

தன்னடக்கம், தானம், பலம், புத்திக்கூர்மை, அடக்கம், தாங்கும் திறன், அற்புதமான சக்தி ஆகிய அனைத்தும் அந்த அற்புத ஆன்மாகக் கொண்ட மகத்தானவனிடம் {அர்ஜுனனிடம்} நிறுவப்பட்டுள்ளன. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, ஆவியின் வறுமையால் {Poverty of Spirit}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} எந்த வெட்கங்கெட்ட செயலையும் செய்ததில்லை. பார்த்தன் {அர்ஜுனன்} ஒரு பொய் சொன்னான் என்று இந்த உலகத்தில் யாரும் சொன்னதில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களாலும், பித்ருக்களாலும், கந்தர்வர்களாலும் மதிக்கப்பட்டுச் சக்ரனின் வசிப்பிடத்தில் ஆயுத அறிவியலைப் பயின்று கொண்டிருக்கிறான் குருக்களின் புகழைத் தூண்டுபவன் {அர்ஜுனன்}.

ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பூலோகத்தின் அனைத்து ஆட்சியாளர்களையும் நீதியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உனது தகப்பனின் பாட்டனான சந்தனுவையும் தனது செயலைக் குறித்துத் திருப்தி கொள்ள வைத்தான் தனது குலத்தில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}. ஓ! மன்னா, யமுனையின் கரையில் தேவர்களையும், பித்ருக்களையும், அந்தணர்களையும் வழிபட்டு, ஏழு பெரும் குதிரை வேள்விகளைச் செய்து சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் உலகத்தில் வசித்து வரும் உனது முப்பாட்டனும் கடும் தவசியுமான சக்கரவர்த்திச் சந்தனு, உனது நலம் குறித்து விசாரித்தான்" என்றான் {குபேரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், "செல்வத்தைப் பகிர்ந்தளிப்பவனின் {குபேரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அவனிடம் மிகவும் திருப்தி கொண்டனர். பிறகு தனது தடி, கதாயுதம், வாள், வில் ஆகியவற்றை இறக்கிய பாரதர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்} குபேரனை வணங்கினான். பாதுகாப்பை அளிப்பவனான கருவூலத்தலைவன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவனைக் {யுதிஷ்டிரனைக்} கண்டு, "எதிரிகளின் கர்வத்தை அழிப்பவனாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனாகவும் இரு. எதிரிகளை ஒடுக்குபவனே, எங்கள் அழகிய பகுதியில் வாழு. உனது விருப்பங்களுக்கு யக்ஷர்கள் குறுக்கே நிற்க மாட்டார்கள். குடகேசன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த பிறகு விரைவில் திரும்பி வருவான். மகவத்தால் {இந்திரனால்} விடை கொடுத்து அனுப்பப்படும் தனஞ்சயன் உன்னிடம் வந்து சேர்வான்" என்றான் {குபேரன்}.

அற்புதச் செயல்கள் செய்யும் யுதிஷ்டிரனிடம் இப்படிச் சொன்ன குஹ்யர்களின் தலைவன் {குபேரன்}, அந்த மலைகளில் சிறந்த மலையில் மறைந்தான். ஆயிரம் ஆயிரம் யக்ஷர்களும், ராட்சசர்கள் பஞ்சணைகள் கொண்ட, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அவனைத் தொடர்ந்து சென்றனர். குதிரைகள் குபேரனின் வசிப்பிடத்தை நோக்கி முன்னேறிய போது, பறவைகள் காற்றில் பறக்கும் ஒலி எழும்பியது. கருவூலங்களின் தலைவனது {குபேரனின்} சாரதிகள் வானத்தை இழுப்பது போல, காற்றில் பறந்து சென்றனர்.

பிறகு செல்வத்தலைவனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், ராட்சசர்களின் சடலங்கள் அந்த மலைச்சிகரத்தில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டன. புத்திகூர்மை கொண்ட அகஸ்தியர் சாபத்தின் காலத்தை நிர்ணயித்தது போல, மோதலில் கொல்லப்பட்ட ராட்சசர்கள் சாபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். பாண்டவர்கள் ராட்சசர்களால் மதிக்கப்பட்டுப் பல இரவுகளை அந்த வசிப்பிடத்தில இனிமையாகக் கழித்தனர்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்