Friday, May 02, 2014

தௌமியர் விளக்கம்! - வனபர்வம் பகுதி 162

The description made by Dhaumya! | Vana Parva - Section 162 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனுக்குத் தௌமியர் மந்தரம், மேரு மலைகளைக் குறிப்பிட்டுச் சொன்னதும், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதும்..

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, சூரியோதயத்தின் போது, தனது தினசரி வழிபாடுகளை முடித்த தௌமியர், ஆரிஷ்டஷேணருடன் இருந்த பாண்டவர்களிடம் வந்தார். ஆரிஷ்டஷேணரின் பாதங்களை வணங்கிய தௌமியர், கூப்பிய கரங்களுடன் அனைத்து அந்தணர்களையும் வணங்கினார். பிறகு யுதிஷ்டிரனின் வலது கரத்தைப் பற்றிய தௌமியர் கிழக்கை நோக்கிக் கொண்டே, "ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இந்த மலைகளின் மன்னன் மந்தரம் பரந்து, பூமியை நிரப்பிக் கடல் வரை விரிந்திருக்கிறது. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, வனங்களும், கானகங்களும், மலைகளும் நிறைந்த இந்தப் பகுதியை இந்திரனும், வைஸ்ரவணனும் {குபேரனும்} ஆட்சி செய்கிறார்கள். ஓ! குழந்தாய், அனைத்துக் கடமைகளையும் அறிந்த புத்திகூர்மையுள்ள முனிவர்கள், இதுவே இந்திரன் மற்றும் மன்னன் வைஸ்ரவணனின் {குபரேனின்} வசிப்பிடம் என்று சொல்கின்றனர். இருபிறப்பாளர்களும், கடமைகளை அறிந்த முனிவர்களும், சித்தர்களும், சத்யஸ்களும், தேவர்களும், இங்கிருந்தபடியே, சூரியன் உதிக்கும்போதே அவனைத் துதிக்கின்றனர்.


உயிருடன் இருக்கும் அனைத்து உயிரினங்களின் தலைவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனுமான மன்னன் யமன், ஆவி பிரிந்து வருபவர்கள் அடையத்தக்க இந்தத் தென்திசையை ஆள்கிறான். புனிதமானதும், காண்பதற்கு அற்புதம் வாய்ந்ததும், முதன்மையான செழிப்பு கொண்டதுமான இந்தச் சன்யமனம் {Sanyamana [சம்யமிநீ]} ஆவி பிரிந்தவர்கள் தலைவனின் {யமனின்} வசிப்பிடமாக இருக்கிறது. புத்திகூர்மையுடையவர்கள் அந்த மலைகளின் ஏகாதிபதியை அஸ்தம் (என்ற பெயரில்) என்று அழைக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கு வந்த சூரியன், எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்கிறான். இந்த மலைகளின் மன்னன் {அஸ்தகிரி} மேலும், பரந்த ஆழத்திலும் நிலைத்திருக்கும் மன்னன் வருணன், அனைத்து உயிர்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஓ! உயர்ந்த நற்பேறு பெற்றவனே, வடக்குப் பகுதிகளைப் பிரகாசிக்க வைத்துக் கொண்டு, பலம்வாய்ந்த மகாமேரு கிடக்கிறது. பிரம்மத்தை அறிந்தவர்களுக்குப் புகலிடமாக இருக்கும் அந்த மங்களகரமான மலையில் {மகாமேருவில்}, பிரம்மனின் சபை இருக்கிறது. அங்குதான் அசையும் மற்றும் அசையாத அனைத்தையும் படைத்தவனும் அனைத்து உயிர்களின் ஆன்மாவுமான பிரஜாபதி இருக்கிறான். பிரம்மனின் மனதில் பிறந்த ஏழு மகன்களின் {பிரம்மனின் மானசபுத்திரர்கள்} வசிப்பிடமாக மங்களகரமான ஆரோக்கியமான மகாமேரு இருக்கிறது. அந்த எழுவரில் ஏழாமவன் தக்ஷன் ஆவான். ஓ! குழந்தாய், இங்கேதான் வசிஷ்டரைத் தலைமையாகக் கொண்ட ஏழு தெய்வீக முனிவர்களும் உதித்து அஸ்தமிக்கிறார்கள்.

பெருந்தகப்பன் (பிரம்மா), தேவர்களுடன் சுயஞானத்துடன் அமரும் மேருவின் அற்புதமான, பிரகாசமான சிகரத்தைப் பார். பிரம்மனின் வசிப்பிடத்துக்கு அடுத்ததாக, உயிர்களின் படைப்புக்குத் துவக்கமும், உண்மையான தலைமைக் காரணமுமான, பிறப்பு இறப்பும் அறியா முதன்மைத் தலைவனான நாராயணனின் இடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மங்களகரமான இடத்தில் தேவர்களும் காண முடியாத அனைத்து சக்திகளும் இருக்கின்றன. சுயப்பிரகாசத்துடன் இருக்கும் உயர் ஆன்ம விஷ்ணுவின் பகுதி, சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தை விட அதிகமாகப் பிரகாசிப்பதால் தேவர்களாலோ தானவர்களாலோ அதைக் காண இயலாது. நாராயணனுடைய அந்த இடம் மேருவுக்குக் கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஓ! குழந்தாய், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், சுயம்புவும், அண்டத்தின் முதன்மைக்காரணமானவனும், அனைத்து உயிர்களிலும் இருப்பவனும், அங்கே அற்புதமான அருளுடன் இருக்கிறான். பிரம்ம முனிவர்களே {பிரம்மரிஷிகளே} அங்கே செல்ல முடியாது என்கிற போது பெருமுனிவர்களைக் {மகாரிஷிகளைக்} குறித்து என்ன சொல்ல?

ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, யதிக்கள் {மனதால் தியானிப்பவர்கள்} மட்டுமே அங்கே செல்ல முடியும். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, (அவ்விடத்தில்) எந்த ஜோதிகளும் பிரகாசிப்பதில்லை. அங்கே அந்தப் புத்திக்கு எட்டாத ஆன்மா கொண்டவன் {விஷ்ணு} மட்டுமே ஆழ்நிலையில் ஒளிர்கிறான். அங்கே மரியாதையுடனும், கடும் தவத்துடனும், பக்திப்பயிற்சிகளின் அறத்தால் யதிக்கள் நாராயணனான ஹரியை அடைகின்றனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அங்கே சென்று சுயம்புவும், தேவர்களுக்கும், உயர் ஆன்மா கொண்டவர்களுக்கும், யோக வெற்றி பெற்றவர்களுக்கும், கர்வம் மற்றும் அறியாமை அகற்றியவர்களுக்கும் நித்தியமான தேவனுமான அண்ட ஆன்மாவை {நாராயணனை} அடைந்தவர்கள், மீண்டும் உலகத்துக்குத் திரும்புவதில்லை. ஓ! உயர்ந்த நற்பேறு பெற்ற யுதிஷ்டிரா, இந்தப் பகுதி ஆதியற்றது, அழிவற்றது, முடிவுமற்றது. இது கடவுளின் சாரமுடையது.

ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரா}, சூரியனும் சந்திரனும் ஒவ்வொரு நாளும் எதிர் திசையில் மேருவைச் சுற்றி வருகின்றன. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, ஓ! பலம்பொருந்திய ஏகாதிபதியே, அனைத்து ஒளிக் கோள்களும் இதே போல இந்த மலைகளின் மன்னனை {மேருவைச்} சுற்றி வருகின்றன. இப்படியே இருளை அகற்றும் வழிபடத்தகுந்த சூரியன், மற்றக் கோள்களை இழுத்துக் கொண்டு இதை (மலையை) வலம் வருகிறான். பிறகு நிலைத்து, மாலை வேளையைக் கடந்த நாளை உண்டாக்கும் சூரியன், வடதிசையை நோக்கிப் பயணிக்கிறான். பிறகு மீண்டும் மேருவை நெருங்கும் தெய்வீகமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய விரும்பி கிழக்கு நோக்கி பயணிக்கிறான். இதே போலத் தெய்வீகமான சந்திரனும் மற்ற நட்சத்திரங்களுடன் கூடி இந்த மலையை வலம் வருகிறான். மாதத்தைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அவனது {சந்திரனின்} வருகையால் பர்வ சந்திகள் பிரிகின்றன. இப்படியே தடையில்லாமல் பெரும் மேருவை வலம் வந்து அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்த பிறகு, சந்திரன் மீண்டும் மந்தரத்திற்குச் செல்கிறான். இதே வழியில், இருளை அழிப்பவனான தெய்வீக சூரியன், தடங்கலற்ற பாதையில் நகர்ந்து, அண்டத்தின் அசைவுகளுக்குக் காரணமாகிறான். பனியை உண்டாக்க விரும்பும்போது, அவன் தெற்கே சென்று, அனைத்து உயிரினங்களுக்கும் குளிர்காலத்தைக் கொடுக்கிறான்.

பிறகு சூரியன், தெற்கில் இருந்து திரும்பி, தனது கதிர்களைக் கொண்டு அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிர்களிடம் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். அதன் காரணமாக, மனிதர்களுக்கு வியர்வை, சோர்வு, மயக்கம் மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. அனைத்து உயிர்களும் உறக்க {மயக்க/ களைப்பு} உணர்ச்சிக்கு ஆட்படுகின்றன. பிறகு, அறியப்படாத பகுதிகளில் இருந்து மீண்டு வரும் அந்தத் தெய்வீகமாகப் பிரகாசிப்பவன் {சூரியன்} மழையைப் பொழிய வைத்து, உயிரினங்களை மீள வைக்கிறான். மழை, காற்று, வெப்பம், ஆகிய வசதிகளால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைப் பேணிப் பாதுகாக்கும் பலம்வாய்ந்த சூரியன் மீண்டும் தனது பழைய வழியைக் கைக்கொள்கிறான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இப்படி உலவும் சூரியன் காலச்சக்கரத்தைத் தங்குதடையின்றிச் சுழற்றி, படைத்த பொருட்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா} அவனின் {சூரியனின்} வழி தடையற்றது; அவன் {சூரியன்} ஒரு போதும் ஓய்வதில்லை. அனைத்து உயிர்களின் சக்தியை உறிஞ்சி மீண்டும் அவற்றுக்குத் திரும்ப அளிக்கிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேரத்தை பகல், இரவு, காலம் {விநாடி}, கஷ்த்தம் {நாழிகை} ஆகியவாறு பிரிக்கும் அந்தத் தலைவனான சூரியன், அனைத்து உயிர்களின் உயிரையும், அசைவையும் நிர்ணயிக்கிறான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்