Saturday, May 03, 2014

வந்தான் அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 163

Arjuna's arrival! | Vana Parva - Section 163 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனனின் வருகைக்காகப் பாண்டவர்கள் காத்திருந்தது; அனைத்து ஆயுதங்களையும் இந்திரனிடம் பெற்ற அர்ஜுனன் கந்தமாதனம் திரும்பியது...

வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், "மலைகளில் அற்புதமான மலையில் {மேரு மலையில்} வசித்துக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் அற்புதமான நோன்புகளை நோற்றுக் கொண்டு, அர்ஜுனனைக் காண்பதற்கு ஆவலாக இருந்தனர். கந்தர்வர்களும், பெரும் முனிவர்களும், பெரும் பராக்கிரமமும், தூய்மையான விருப்பங்களும், உண்மையும், பொறுத்துக் கொள்ளும் ஆற்றலும் உடையவர்களில் முதன்மையான அந்தச் சக்தி மிகுந்தவர்களை {பாண்டவர்களை} மகிழ்ச்சிகரமாகக் காண வந்தனர். பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த அற்புதமான மலையை அடைந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகள், அந்தத் தெய்வீகப் பகுதியை அடைந்ததால் மருதர்களைப் போல மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். மலர்கள் நிறைந்தும், மயில்கள் மற்றும் நாரைகளின் ஒலிகளும் நிறைந்த அந்த மலையின் சரிவுகளிலும், சிகரங்களிலும் பெரும் உற்சாகத்துடன் அவர்கள் {பாண்டவர்களும் சகாக்களும்} வாழ்ந்தனர்.


அந்த அழகான மலையில் தாமரைகள் நிறைந்த தடாகங்களையும், மரங்களடர்ந்த அத்தடாகங்களின் இருள் சூழ்ந்திருக்கும் கரைகளையும், அதில் கரண்டவங்களையும் அன்ன பறவைகளையும் அவர்கள் கண்டனர். பலதரப்பட்ட மலர்களும் ரத்தினங்களும் நிறைந்த அந்த மலர்ந்த விளையாட்டிடம், செல்வத்தை அளிக்கும் மன்னனை {குபேரனை} ஆக்கிரமிக்கும் வண்ணம் இருந்தது. எப்போதும் (அங்கேயே) உலவிக்கொண்டிருந்த, தவசிகளின் முதன்மையான (பாண்டவர்கள்), பல நிறங்களில் இருந்த நறுமணம் பொருந்திய பெரிய மரங்களும், மேகக்கூட்டங்களும் நிறைந்திருக்கும் அம்மலையின் சிகரத்தைக் காணும் சக்தியற்றிருந்தனர்.

ஓ! பெரும் வீரா {ஜனமேஜயா}, அந்த மலையின் சுய ஒளியாலும், வருடாந்தரச் செடிகளின் பிரகாசத்தாலும் அங்கே இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் தெரியாதிருந்தது. அந்த மலையிலேயே தங்கியிருந்து, ஒப்பற்ற சக்தி கொண்ட சூரியனின் பாதுகாப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களுக்கு மத்தியில் அந்த மனிதர்களில் முதன்மையான வீரர்கள் {பாண்டவர்கள்}, சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டனர். சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, அந்த மலை மற்றும் திசைகளின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, இருளை விலக்குபவனின் {சூரியனின்} கதிர்களால் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் சந்திகளைக் கண்டும், அந்த வீரர்கள், உண்மையில் உறுதியான பலம்வாய்ந்த ரதசாரதியின் {அர்ஜுனனின்} வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தினசரி சடங்குகளையும், வேதங்களையும் உரைத்து, அறச்சடங்குகளை முதன்மையாகச் செய்து, புனிதமான நோன்புகள் பயின்று உண்மைக்கு {சத்தியத்துக்கு} உண்மையாக அவர்கள் {பாண்டவர்கள்} இருந்தனர்.

"ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று அர்ஜுனன் திரும்புவதை விரைவாகக் காணும் நாம் மகிழ்ச்சியை உணர்வோமாக" என்று சொன்ன பார்த்தர்கள் {பாண்டவர்கள்} யோகப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த மலையில் இருக்கும் அழகான வனங்களைக் கண்டும், அவர்கள் கிரீடியையே {அர்ஜுனனையே} நினைத்துக் கொண்டிருந்ததால் அனைத்து பகலும் இரவும் அவர்களுக்கு ஒரு வருடத்தைப் போலத் தோன்றியது. தௌமியரின் அனுமதியுடன், உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஜடா முடி தரித்து (வனத்திலிருந்து) சென்ற அந்த நொடியில் இருந்து மகிழ்ச்சி அவர்களை விட்டுச் சென்றது. ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி இருக்கும் அவர்கள் எப்படி மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்? தங்கள் அண்ணனான யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், மதயானை போன்ற நடை கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} காம்யக வனத்தில் அவர்களைப் பிரிந்ததில் இருந்து அவர்கள் அனைவரும் துயரத்திலேயே மூழ்கியிருந்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே, பரதனின் வழித்தோன்றல்களான அவர்கள் {பாண்டவர்கள்}, ஆயுதங்களைக் கற்கும் நோக்குடன் வாசவனின் {இந்திரனின்} வசிப்பிடம் சென்றிருக்கும், வெள்ளைக் குதிரைகள் கொண்ட அவனைக் {அர்ஜுனனைக்} குறித்து நினைத்துக் கொண்டு அந்த மலையில் ஒரு மாத காலத்தைக் கடுமையுடன் கழித்தனர். ஆயிரம் கண் கொண்டவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் வசித்த அர்ஜுனன், தேவர்கள் தலைவனிடம் இருந்து, அக்னி {ஆக்னேயம்}, வருண {வாருணம்}, சோம {சௌம்யம்}, வாயு {வாயவ்ய}, விஷ்ணு {வைஷ்ணவம்}, இந்திர {ஐந்திரம்}, பசுபதி {பாசுபதம்}, பிரம்ம {பிரம்மம்}, பாரமேஷ்டி {பாரமேஷ்டியம்}, பிரஜாபதி, யம, தாதா, சவிதா, துவஷ்டா, வைஸ்ரவணா ஆகிய அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டு, நூறு வேள்விகள் செய்தவனை {இந்திரனை} வணங்கி வலம் வந்து அவனது {இந்திரனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் கந்தமாதனம் வந்தான்.


இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்