Friday, May 23, 2014

இந்திரலோகம் திரும்பிய அர்ஜுனன்! - வனபர்வம் பகுதி 171

Arjuna returned to Indraloka! | Vana Parva - Section 171 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

நிவாதகவசர்களைக் கொன்ற பிறகு, அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புதல்....

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "மாயையின் உதவியுடன் கண்ணுக்குப்புலப்படாமலேயே தைத்தியர்கள் போரிடத்தொடங்கினர். கண்ணுக்குப் புலப்படும் ஆயுதங்களின் சக்தியைப் பயன்படுத்தி நானும் அவர்களுடன் போரிட்டேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்ட கணைகள், பல்வேறு இடங்களில் இருந்த அவர்களின் தலைகளை அறுக்கத் தொடங்கின. இப்படி அந்த மோதலில் நான் தாக்கிய போது, திடீரெனத் தங்கள் மாயையை விலக்கிய நிவாதகவசர்கள், விரைவாகத் தங்கள் நகரத்திற்குள் நுழைந்தனர். இப்படி அந்தத் தைத்தியர்கள் ஓடி, அனைத்தும் தெரியத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதை நான் கண்டேன். அங்கே நொறுக்கப்பட்ட ஆயுதங்களையும், ஆபரணங்களையும், உறுப்புகளையும், கவசங்களையும் நூற்றுக்கணக்காக நான் கண்டேன். குதிரைகள் ஓரிடத்தில் இருந்து மறு இடம் செல்வதற்கு இடமே கிடைக்கவில்லை {அப்படி அந்த இடம் நிறைந்திருந்தது}. ஆகையால் ஒவ்வொரு குதிப்புக்கும் அவை ஆகாயத்தில் செல்வது போல இருந்தது.


கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்த நிவாதகவசர்கள் ஆகாயத்தைப் பாறைக்குவியல்களால் மறைத்தார்கள். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிற பயங்கரமான தானவர்கள், பூமியின் குடலுக்குள் நுழைந்து கொண்டு, குதிரைகளின் கால்களையும், தேரின் சக்கரங்களையும் பற்றினர். நான் போரிட்டுக் கொண்டிருந்த போதே, அவர்கள், பாறைகளால் எனது குதிரைகளைக் கடுமையாகக் குழப்பி, (எனது) தேரோடு சேர்த்து என்னையும் தாக்கினர். ஏற்கனவே விழுந்திருந்த பாறைகளாலும், விழுந்த கொண்டிருப்பவைகளாலும், நான் இருந்த அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு மலைக்குகையைப் போலக் காட்சியளித்தது. பாறைகள் என்னை முழுவதும் மூடின, குதிரைகளும் கடுமையாக நசுக்கப்பட்டன. இதனால் நான் கடுமையாகத் துயருற்றேன். இதை மாதலி {இந்திரனின் தேரோட்டி} கவனித்தான். பயந்திருக்கும் என்னைக் கண்ட அவன் {மாதலி}, என்னிடம், "ஓ! அர்ஜுனா, அர்ஜுனா! நீ அஞ்சாதே. ஓ! மனிதர்களின் தலைவா {அர்ஜுனா}, வஜ்ராயுதத்தை ஏவு" என்றான்.

அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், தேவர்களின் மன்னனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான ஆயுதமான அந்தப் பயங்கரமான வஜ்ராயுதத்தைச் செலுத்தினேன். காண்டீவத்திற்கு மந்திரங்களை ஊட்டிய நான், அந்தப் பாறைகள் இருந்த இடத்தைக் குறி வைத்து, இடி போலத் தாக்குகின்ற கூரான இரும்புக் கணைகளை அடித்தேன். வஜ்ரத்தினால் ஏவப்பட்ட அந்த மிகக்கடுமையான கணைகள் அங்கே இருந்த அனைத்து மாயைகளுக்குள்ளும் புகுந்து, நிவாதகவசர்களுக்கு மத்தியில் சென்றது. இடியின் சீற்றத்தால் {அந்த ஆயுதங்களால்} கொல்லப்பட்ட மலை போன்ற தானவர்கள், பூமியில் மொத்தமாகக் குவியலாக விழுந்தனர். தேரின் குதிரைகளைப் பூமிக்கடியில் கொண்டு போன தானவர்களுக்கு மத்தியில் நுழைந்த அக்கணைகள், அவர்களை யமனின் மாளிகைக்கு அனுப்பி வைத்தன. கொல்லப்பட்ட அல்லது நிலைகுலையச்செய்யப்பட்ட நிவாதகவசர்களால் அந்தப் பகுதியே முழுவதுமாக நிரம்பியிருந்தது. மலைகளைப் போன்ற அவர்கள் பாறைகளைப் போலச் சிதறிக் கிடந்தனர். குதிரைகளுக்கோ, தேருக்கோ, மாதலிக்கோ அல்லது எனக்கோ எந்தக் காயமும் ஏற்படாதிருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

பிறகு ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, புன்னகைத்தவாறே மாதலி {இந்திரனின் தேரோட்டி} என்னிடம், "ஓ! அர்ஜுனா, தேவர்களில் கூட உன்னிடம் காணப்படும் பராக்கிரமம் காணப்படவில்லை" என்றான். அந்தத் தானவப் படை அழிக்கப்பட்ட போது, அந்நகரத்தில் இருந்த {அசுரப்} பெண்கள் அனைவரும் இலையுதிர் கால நாரைகள் போல {சாரஸப் பறவைகள் போல} ஒப்பாரி வைத்தனர். பிறகு, தேரின் சடசடப்பொலி நிவாதகவசர்களின் மனைவியருக்கு அச்சமூட்டும்படி நான் மாதலியுடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தேன். அப்போது, மயில்களைப் போல {நிறத்தில்} இருந்த அந்தப் பத்தாயிரம் குதிரைகளையும், சூரியனைப் பிரதிபலித்த அந்தத் தேரையும் கண்ட அப்பெண்கள் கூட்டமாக ஓடினர். {அப்படி அவர்கள் ஓடும்போது} பயந்திருந்த அம்மங்கையரின் ஆபரணங்களில் (அது கீழே விழும்போது) மலைகளில் இருந்து விழும் பாறைகளைப் (பாறைகளின் ஒலி) போல ஒலி கேட்டது. (ஒரே நீளத்தில்), பீதியடைந்திருந்த அந்தத் தைத்தியர்களின் மனைவியர், எண்ணிலடங்கா ரத்தினங்களுடன் பலவண்ணங்களில் மின்னிய தங்கள் தங்கள் பொன் மாளிகைக்குள் நுழைந்தனர்.

தேவர்களின் நகரைக் காட்டிலும் மேன்மையான அந்த அற்புதமான நகரைக் கண்ட நான், மாதலியிடம், "தேவர்கள் ஏன் இது போன்று (இடத்தில்) வசிக்கவில்லை?. நிச்சயமாக இது புரந்தரனின் {இந்திரனின்} நகரத்தை விட மேன்மையாகத் தோன்றுகிறது" என்றேன். அதற்கு மாதலி, "ஓ பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் இது எங்கள் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} நகரமாகவே இருந்தது. பிறகு நிவாதகவசர்களால் தேவர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டனர். கடும் தவங்களை இயற்றிய அவர்கள் பெருந்தகப்பனைத் {பிரம்மனை} திருப்தி செய்து, 'தாங்கள் இங்கே வசிக்க வேண்டும் என்றும், தேவர்களுடன் போர் ஏற்படும்போது அபாயங்களில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும்' என்றும் வரங்கள் கேட்டனர் (கேட்டு அதை அடைந்தனர்). பிறகு சக்ரன் {இந்திரன்}, சுயம்புவான தலைவனிடம் {பிரம்மனிடம்} "ஓ! தலைவா, எங்கள் நன்மையில் விருப்பத்துடன், சரியானதைச் செய்யும்" என்றான். அதன்பேரில், ஓ! பாரதா {அர்ஜுனா}, இவ்விஷயத்தில் அந்தத் தலைவன்{பிரம்மன்} (இந்திரனிடம்), "ஓ! எதிர்களைக் கொல்பவனே {இந்திரனே}, வேறு உடல் {அர்ஜுனன் என்ற உடல்} கொண்டு, நீயும் (தானவர்களை அழிப்பாய்) செய்வாய்" என்று கட்டளையிட்டான். பிறகு, அவர்களைக் கொல்வதற்காகவே, சக்ரன் {இந்திரன்}, உன்னிடம் அந்த ஆயுதங்களைக் கொடுத்தான். உன்னால் கொல்லப்பட்ட இவர்களைத் தேவர்களால் கொல்ல இயலவில்லை. ஓ! பாரதா {அர்ஜுனா}, காலத்தின் நிறைவால், அவர்களை அழிப்பதற்காக நீ இங்கு வந்தாய். அதைச் செய்தும் முடித்தாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, இந்தப் பேய்கள் {அசுரர்கள்} கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, மகேந்திரன் {இந்திரன்}, உன்னிடம் இந்த ஆயுதங்களில் உள்ள அற்புதமான தலைமையான சக்திகளை வெளிப்படுத்தினான்" என்றான்.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தானவர்களை அழித்து, அந்நகரத்தை வீழ்த்திய பிறகு நான் மாதலியுடன் {இந்திரனின் தேரோட்டியுடன்} சேர்ந்து மீண்டும் தேவர்கள் வசிப்பிடம் சென்றேன்"
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்