Tuesday, May 27, 2014

அர்ஜுனனைத் தடுத்த நாரதர்! - வனபர்வம் பகுதி 174

Narada prevents Arjuna! | Vana Parva - Section 174 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தான் பெற்ற தெய்வீக ஆயுதங்களை அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குக் காட்டியது; ஆயுதங்களின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உலகம் நடுங்கியது; இந்திரனால் அனுப்பப்பட்ட நாரதர் அர்ஜுனனைத் தடுத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்ததும் நீதிமானான யுதிஷ்டிரன் எழுந்து, தனது தம்பிகளுடன் சேர்ந்து தேவையான கடமைகளைச் செய்தான். பிறகு தனது தாயின் {குந்தியின்} மகிழ்வுக்குக் காரணமான அர்ஜுனனிடம் அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, தானவர்களை எவற்றைக் கொண்டு வீழ்த்தினாயோ அவ்வாயுதங்களைக் (எனக்கு) காட்டு" என்றான்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன்பேரில், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டுவின் மகனான அதீத தூய்மை பயிலும் பெரும் பலமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டினான். மலைகளைத் துருவமாகவும் {pole} தரையை அச்சாகவும் {axle}, அடர்த்தியான மூங்கில் மரங்களை {துருவத்தையும் அச்சையும் இணைக்கும்} முப்பட்டையான மரமாகவும் {socket pole} கொண்ட பூமியில் தனது தேரில் அமர்ந்திருப்பது போல, பிரகாசமிக்க தெய்வீக கவசத்துடனும் காந்தியுடனும் அமர்ந்திருந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துத் துவங்கும் பொருட்டுத் தனது காண்டீவத்தையும், தனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட சங்கையும் எடுத்தான்.


அந்தத் தெய்வீக ஆயுதங்கள் பொருத்தப்பட்டபோது, (அர்ஜுனனின்) பாதங்களால் ஒடுக்கப்பட்ட பூமி, (தன் மேலிருந்த) மரங்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினாள்; நதிகளும், கடலும் கலங்கித் தத்தளித்தன. (மலைப்) பாறைகள் வெடித்தன; காற்றும் அமைதியடைந்தது (வீசவில்லை). சூரியன் பிரகாசிக்கவில்லை; நெருப்புச் சுடர்விடவில்லை; இறுபிறப்பாளர்களின் வேதங்கள் பிரகாசிக்கவில்லை {அந்தணர்களுக்கு வேதங்கள் நினைவுக்கு வரவில்லை}. மேலும், ஓ! ஜனமேஜயா, இதனால் துன்பப்பட்ட பூமிக்கு அடியில் வசிக்கும் உயிரினங்கள், நடுக்கத்துடனும் உருக்குலைந்த முகத்துடனும் மேலெழும்பி கரங்கள் கூப்பிபடி பாண்டவர்களைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்ட அவை, தனஞ்சயனைத் (தங்கள் உயிருக்காகத்} தஞ்சம் அடைந்தன.

பிறகு பிரம்ம முனிவர்களும், சித்தர்களும், பெருமுனிவர்களும், அசையும் உயிரினங்கள் அனைத்தும் (காட்சிக்கு) வந்தன. தேவ முனிவர்களில் முதன்மையானவர்களும், தேவர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், இறகு படைத்த குழுக்களும் {பறவைகளும்}, (பிற) விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} (காட்சியில்) வந்தன. பெருந்தகப்பனும் {பிரம்மாவும்}, அனைத்து லோகபாலர்களும், தெய்வீகமான மகாதேவனும் தங்களைத் தொடர்பவர்களுடன் அங்கே வந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்சரக்கூட்டங்களும் (அங்கே) ஆடின.

அப்படிப்பட்ட வேளையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் அனுப்பப்பட்ட நாரதர் அங்கே வந்து, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இனிய வார்த்தைகளால், "அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ! குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த நிகழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, பார்த்தன் {அர்ஜுனன்} போர்க்களத்தில் உனது எதிரிகளை அடிக்கும்போது, நீயும் இந்த ஆயுதங்களைக் காண்பாய்" என்றார் {நாரதர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ! கௌரவா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அதே வனத்தில் திரௌபதியுடன் கூடிய பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்