Monday, August 11, 2014

துரியனைத் தூண்டிய சகுனி! - வனபர்வம் பகுதி 235

Duryodhana, induced by Sakuni!  | Vana Parva - Section 235 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

செழிப்புடன் இருக்கும் தன்னைக் காட்டி, பாண்டவர்களின் பொறாமையைத் தூண்டி அவர்களது துன்பத்தை அதிகரிக்கும்படி சகுனியும், கர்ணனும் துரியோதனனைத் தூண்டியது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சகுனி, சந்தர்ப்பம் கிடைத்த போது, கர்ணனின் துணையோடு துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {சகுனி}, "ஓ! பாரதா {துரியோதனா}, உனது பராக்கிரமத்தினால் வீரர்களான பாண்டவர்களை நாடு கடத்திய பிறகு, சம்பரனைக் கொன்றவன் சொர்க்கத்தை ஆண்டதைப் போல, எதிரிகள் இல்லாத இப்பூமியை ஆட்சி செய்! ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கின் மன்னர்கள் அனைவரும் உனக்குக் கப்பம் செலுத்துகின்றனர். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, முன்பு பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்த பிரகாசமான செழிப்பனைத்தையும், இப்போது உனது தம்பிகளுடன் கூடிய நீ அடைந்துவிட்டாய்? இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு யுதிஷ்டிரனிடம் இருந்த அந்தப் பிரகாசமான செழுமையை நாம் முன்பு கனத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். ஓ! மன்னா {துரியோதனா}, இப்போது அந்தச் செல்வங்கள் உனது தம்பிகளுடன் சேர்ந்த உனக்குச் சொந்தமாகிவிட்டது. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட ஏகாதிபதி {துரியோதனா}, அரசனான யுதிஷ்டிரனிடம் இருந்து அந்தச் செழிப்பை அறிவின் பலத்தால் மட்டுமே பறித்தோம்.


ஓ! எதிரி வீரர்களைக் கொல்பவனே {துரியோதனா}, பூமியின் அனைத்து மன்னர்களும் உனக்கு அடங்கி வாழ்ந்து, முன்பு யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்தது போல, இப்போது உனது கட்டளைக்காகக் காத்திருக்கின்றனர். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மலைகள், கானகங்கள், நகரங்கள், சுரங்கங்கள், குன்றுகளுடன் கூடி, கடல்களின் சுற்றளவோடு கட்டுக்கடங்காத பரப்புக் கொண்ட பூமா தேவி இப்போது உனதாகிவிட்டாள். உனது பராக்கிரமத்தின் காரணமாக, அந்தணர்களால் புகழப்பட்டும், மன்னர்களால் வழிபடப்பட்டும், சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போல நீ பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய். ருத்திரர்களால் சூழப்பட்ட யமனைப் போலவும், மருதர்களால் சூழப்பட்ட வாசவனைப் {இந்திரனைப்} போலவும் குருக்களால் சூழப்பட்ட நீ, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறாய்.

எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, எந்தக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், எந்த அடக்குமுறைக்கும் அடிபணிந்து வாழாமல் இருந்த பாண்டுவின் மகன்கள், தங்கள் செழிப்பை இழந்திருக்கும் இந்த நேரத்தில், நாம் அவர்களைப் பார்க்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இப்போது பாண்டவர்கள் துவைதவனத்தில் இருக்கும் தடாகத்தின் கரையில், காட்டையே தங்கள் இல்லமாகக் கொண்டு, எண்ணற்ற அந்தணர்கள் புடைசூழ வாழ்ந்து வருகிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது வெப்பக் கதிர்களால் அனைத்தையும் தகிக்க வைக்கும் சூரியனைப் போல, அனைத்துச் செல்வங்களுடனும் கூடிய நீ, உன்னுடைய மகிமையை பாண்டுவின் மகன்களைக் காணச் செய்து {அவர்களை}, அனலால் தகிக்க வைப்பதற்கு அவ்விடம் {அவர்கள் இருக்கும் இடத்திற்கு} செல்வாயாக. நீ நாட்டை அடைந்தவன், அவர்கள் நாட்டை இழந்தவர்கள், நீ செழிப்புடன் இருப்பதையும், அவர்கள் அதை இழந்திருப்பதையும், நீ செல்வாக்குடன் இருப்பதையும் அவர்கள் வறுமையில் இருப்பதையும் {அவர்களும், நீயும்} காண, ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களைச் சென்று பார்.

பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் புடைசூழ, அனைத்துப் பெரிய அருளையும் அனுபவித்துக் கொண்டு, நகுஷனின் மகனான யயாதியைப் போல இருக்கும் உன்னைப் பாண்டுவின் மகன்கள் காணட்டும். ஒருவனின் நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவராலும் காணப்படும் செழிப்பு, நன்கு நிலைபெற்றதாகக் கருதப்படுகிறது. மலை மேல் இருக்கும் ஒருவன், பூமியில் தவழ்ந்து செல்பவனைக் காண்பதைப் போல, தான் செழிப்புடன் வாழும்போது, எதிரிகள் மோசமான நிலையில் வாழ்வதைக் காண்பதை விட ஒருவனுக்கு எது முழுமையான மகிழ்ச்சியை அளிக்கக்கூடும்? ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தானம் பெறுவது, செல்வத்தை அடைவது, அல்லது நாட்டை அடைவது ஆகியவற்றைவிட, எதிரிகளின் துயரைக் கண்டு ஒருவன் அடையும் இன்பம் பெரியதாகும்.

செல்வாக்குடன் இருக்கும் ஒருவன் {நீ} மரவுரியும், மான் தோல்களையும் உடுத்தியிருக்கும் தனஞ்சயனைக் கண்டால் எந்த மகிழ்ச்சிதான் அவனுடையதாகாது {உனதாகாது}? {எல்லையற்ற மகிழ்ச்சியை அடைவாய்}. மரவுரியும், மான்தோல்களும் அணிந்து, துயரத்துடன் இருக்கும் கிருஷ்ணை {திரௌபதி}, விலையுயர்ந்த உடைகள் அணிந்திருக்கும் உனது மனைவியைக் கண்டு மேலும் துன்புறட்டும். ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும் உனது மனைவியைக் காணும்போது, செல்வத்தை இழந்து துக்கத்தில் இருக்கும் துருபதன் மகள் {திரௌபதி}, சபைக்கு மத்தியில் (துச்சாசனனால் இழுத்து வரப்பட்ட போது) அடைந்த துன்பத்தை விட அதிகமான துன்பத்தை அடைந்து, தன்னையும், தன் வாழ்வையும் நிந்தனை செய்து கொள்ளட்டும்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, மன்னனிடம் {துரியோதன்னிடம்} இப்படிப் பேசிய பிறகு, கர்ணனும் சகுனியும் {1} தங்கள் சொற்பொழிவை முடித்துக் கொண்டு அமைதியடைந்தனர்"



{1} சகுனி சொன்னதாக ஆரம்பிக்கும் வைசம்பாயனர், அந்த உரையை முடிக்கும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் {இந்தக்குறி {} இட்ட இடத்தில்}, சகுனியும் கர்ணனும் அப்படிப் பேசியதாகச் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்தப் பகுதியின் ஆரம்பத்தில் கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு துரியோதனன் திருப்தியடைந்தான் {Having heard these words of karna, king duryodhana became highly pleased} என்று வைசம்பயானர் சொல்வதாகக் கங்குலி ஆரம்பிக்கிறார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்