Tuesday, August 12, 2014

கர்ணன் தீட்டிய திட்டம்! - வனபர்வம் பகுதி 236

A plan contrived by Karna!  | Vana Parva - Section 236  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

திருதராஷ்டிரன் தன்னைத் துவைதவனம் செல்ல அனுமதிக்க மாட்டான் எனவும், அதனால், திருதராஷ்டிரன் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதற்கு ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டுமாறும் துரியோதனன் கர்ணனைப் பணித்தது; மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்று திருதராஷ்டிரனிடம் சொல்லுமாறு துரியோதனனிடம் கர்ணன் சொன்னது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மன்னன் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். எனினும், விரைவில், அந்த இளவரசன் {துரியோதனன்} மனச் சோர்வடைந்து, அப்படிப் பேசியவனிடம் {கர்ணனிடம்}, "ஓ! கர்ணா, நீ சொல்வது, எப்போதும் என் மனதில் இருக்கிறது. எனினும், பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்குச் செல்வதற்கான அனுமதியை என்னால் பெற முடியாது. மன்னர் திருதராஷ்டிரர் எப்போது அந்த வீரர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில், தங்கள் தவங்களால் பாண்டுவின் மகன்கள் மேலும் பலமடைந்திருப்பதாக மன்னர் {திருதராஷ்டிரர்} கருதுகிறார். அல்லது, நமது நோக்கங்களைப் புரிந்திருப்பதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் நமக்கு அனுமதி வழங்கமாட்டார். ஓ! பெரும் பிரகாசமிக்கவனே, துவைதவனத்தில் வனவாசத்தை மேற்கொண்டு இருக்கும் பாண்டவர்களை அழிப்பதைவிட நமக்கு வேறு எதுவும் காரியம் கிடையாது என்பதை அறிந்ததால் அவர் {திருதராஷ்டிரர்} அனுமதி வழங்க மாட்டார்.



பகடையாட்டத்தின் போது, என்னிடமும், உன்னிடமும், சுபலனனின் மகனிடமும் {சகுனியிடமும்} க்ஷத்திரி {விதுரர்} பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். அந்த வார்த்தைகள் அனைத்தையும், மற்றவர்கள் புலம்பியதையும் (அவரும் {விதுரரும்} பிறரும் புலம்பியதையும்) நினைத்துப் பார்த்தால், நான் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை என் மனதால் தீர்மானிக்க முடியவில்லை. பீமனும், பல்குனனும் {அர்ஜுனன்} கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து தங்கள் நாட்களை வனத்தில் வலியுடன் கடத்துவதை என் கண்களால் கண்டால், நிச்சயம் நான் பெரிதும் மகிழ்வேன். பாண்டுவின் மகன்கள் மரவுரி உடுத்தி மான் தோல்களை அணிந்திருப்பதைக் காணும்போது நான் அடையும் மகிழ்ச்சியை, இந்த முழு உலகின் ஆட்சியும் நான் பெறும்போது கூட அடைய மாட்டேன். ஓ! கர்ணா, துருபதன் மகள் {திரௌபதி} அந்த வனத்தில் சிவப்புக் கந்தலாடை அணிந்திருப்பதைக் காண்பதை விட என்ன மகிழ்ச்சி எனக்குப் பெரிதாக இருக்கும்?

பாண்டுவின் மகன்களான யுதிஷ்டிரனும் பீமனும், நான் பெரும் செல்வாக்கு அடைந்திருப்பதைக் கண்டால்தான், எனது வாழ்வின் பெரிய இலக்கை அடைந்த நிறைவைக் கொள்வேன். எனினும், நான் கானகத்திற்குச் செல்வதற்கான வழிகளைக் காணவில்லை. உண்மையில், நான் அங்குச் செல்வதற்கு, எதைக் கொண்டு மன்னரின் அனுமதியைப் பெற முடியும்! எனவே, நாம் கானத்திற்குச் செல்லும் வகையில், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்}, துச்சாசனனோடும் சேர்ந்து ஒரு திறமை வாய்ந்த திட்டத்தை முயன்று கண்டுபிடி {திறமையான திட்டத்தை உருவாக்கு}! நானும், நான் அங்குச் செல்வதா வேண்டாமா என்று எனது மனதில் உறுதி செய்து கொண்டு, நாளை மன்னரின் முன்னிலைக்குச் செல்கிறேன். குருக்களில் சிறந்தவரான பீஷ்மரோடு நான் அமர்ந்திருக்கும்போது, நீ சகுனியோடு சேர்ந்து நீங்கள் உருவாக்கிய திட்டத்தை முன்மொழி. பயணம் குறித்துப் பீஷ்மர் மற்றும் மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எங்கள் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வேண்டிக் கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறேன்" என்றான் {துரியோதனன்}.

"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிய அவர்களை அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்று விட்டனர். இரவு கடந்ததும், கர்ணன் மன்னனிடம் {துரியோதனனிடம்} வந்தான். அவனிடம் வந்த கர்ணன் சிரித்துக் கொண்டே துரியோதனனிடம், "என்னால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, அதைக் கேள்! நமது மந்தைகள் {இடைச்சேரிகள்} துவைதவனக் காட்டில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன! ஆடுமாடுகளின் மந்தைகளைக் கண்காணிக்கிறோம் என்ற சாக்கைச் சொன்னால், நிச்சயம் நாம் அனைவரும் அங்கே செல்லலாம். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, மாட்டு மந்தைகளுக்கு மன்னர்கள் அடிக்கடி செல்வது {கோஷ யாத்திரை செல்வது} முறையே. ஓ! இளவரசே {துரியோதனா}, இதுவே நோக்கமாக முன்மொழியப்பட்டால், உனது தந்தை நிச்சயம் உனக்கு அனுமதி வழங்குவார்!" என்றான்.

துரியோதனனும் கர்ணனும் இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையில், சகுனி அவர்களிடம் "அங்குச் செல்வதற்கு, இந்தத் திட்டத்தையே சிரமமற்றது என நானும் கண்டேன்! மன்னர் {திருதராஷ்டிரர்} நமக்கு நிச்சயம் அனுமதி வழங்குவார். மேலும் அவரே நம்மைப் போகும்படியும் ஏவுவார். நமது மந்தைகள் அனைத்தும் துவைதவனக் காடுகளில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. மாட்டு மந்தைகளைக் கண்காணிக்கச் செல்கிறோம் என்ற சாக்கில் நாம் அனைவரும் அங்குச் செல்வோம் என்பதில் ஐயமில்லை" என்றான் {சகுனி}.

பிறகு அவர்கள் மூவரும் சிரித்து, ஒருவருக்கொருவர் கைகளைக் கொடுத்தனர். ஒரு தீர்மானத்தை அடைந்த அவர்கள், குருக்களின் தலைவனைக் {திருதராஷ்டிரனைக்} காணச் சென்றனர்." 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்