Wednesday, August 20, 2014

துச்சாசனன் கண்ணீர்! - வனபர்வம் பகுதி 247

The tears of Dussasana!  | Vana Parva - Section 247 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சித்திரசேனன், துரியோதனன் வந்த நோக்கத்தை யுதிஷ்டிரனிடம் வெளிப்படுத்துவது; துரியோதனன் அவமானத்தால் கூனிக் குறுகிப் போவது; தனக்கு நேர்ந்த அவமானத்தால் உணவைத் துறந்து, உயிர் விடப்போவதாகத் துரியோதனன் தீர்மானிப்பது; நீ இல்லாமல் நான் ஆள மாட்டேன் என்று துச்சாசனன் துரியோதனனிடம் கதறி அழுவது; கர்ணன் துரியோதனனுக்குச் சமாதானம் கூறுவது...

துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், "பகை வீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், பிறகு சித்திரசேனனை அணுகி, சிரித்துக் கொண்டே ஆண்மை நிறைந்த வார்த்தைகளால், "ஓ! வீரா, ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே {சித்திரசேனா}, என் சகோதரர்களை விடுவிப்பதே உனக்குத் தகும். பாண்டுவின் மகன்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் {கௌரவர்கள்} அவமதிக்கப்பட இயலாதவர்கள்" என்றான். இப்படிப் பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனால் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, ஓ! கர்ணா, துன்பத்தில் மூழ்கி இருக்கும் பாண்டுவின் மகன்களையும் அவர்களது மனைவியையும் காணவே நாம் அந்த இடத்திற்கு வந்தோம் என்ற நமது நோக்கத்தைப் பாண்டவர்களிடம் வெளிப்படுத்தினான்.




அந்தக் கந்தர்வன் நமது ஆலோசனைகளை வெளிப்படுத்திய போது, வெட்கத்தில் மூழ்கிய நான், அங்கேயே மறைந்து போவதற்கு, பூமி ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். பின்பு பாண்டவர்களுடன் கூடிய கந்தர்வர்கள் கட்டப்பட்டிருந்த எங்களை யுதிஷ்டிரனிடம் அழைத்துச் சென்று, நமது ஆலோசனைகளை வெளிப்படுத்தினர். எனது எதிரிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்று, துயரத்தில் மூழ்கி, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நான், எங்கள் குடும்பப் பெண்களின் கண்களுக்கு முன்பாகவே யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டேன். ஐயோ, இதைவிட வேறு என்ன பெரிய சோகம் எனக்கு இருக்க முடியும்?

ஐயோ, என்னால் யார் எப்போதும் துன்புறுத்தப்பட்டார்களோ, நான் யாருக்கு எப்போதும் எதிரியாக இருந்தேனோ, அவர்களாலேயே சிறைமீட்கப்பட்டேன். எனது உயிருக்காக அவர்களுக்குக் கடன்பட்ட நான் இழிந்தவனாகி விட்டேனே. ஓ! வீரா {கர்ணா}, இவ்வழியில் பெறப்பட்ட உயிரோடு இருப்பதைவிட, நான் அந்தப் பெரும் போர்க்களத்தில் மரணத்தைச் சந்தித்திருந்தால் அது மேலானதாக இருந்திருக்குமே. நான் கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருந்தால், எனது புகழ் உலகம் முழுதும் பரவியிருக்கும். நானும் இந்திரனின் சொர்க்கத்தில், நித்தியமான அருளுடன், மங்களமான பகுதிகளை அடைந்திருப்பேன்.

அதனால், மனிதர்களில் காளைகளே, நான் இப்போது என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கேளுங்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, நான் அனைத்து உணவையும் துறந்து இங்கேயே தங்கியிருப்பேன். எனது தம்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்லட்டும். கர்ணன் உட்பட எனது நண்பர்கள் அனைவரும், மற்றும் துச்சாசனன் தலைமையிலான எங்கள் உறவினர்கள் அனைவரும் இப்போதே தலைநகர் திரும்பட்டும். எதிரியால் அவமதிக்கப்பட்ட நான் அங்கே {தலைநகருக்கு} வரவே மாட்டேன். முன்பு எதிரியிடம் இருக்கும் மதிப்பைப் பறித்து, எனது நண்பர்களின் மதிப்பை எப்போதும் உயர்த்திய நான், இப்போது எனது நண்பர்களுக்குக் கவலையையும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுப்பவனாகிவிட்டேன். யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} சென்று மன்னரிடம் {திருதராஷ்டிரரிடம்} நான் என்ன சொல்வேன்?

பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், சஞ்சயன், சோமதத்தன் மற்றும் பிற மதிக்கத்தக்க மூத்தவர்கள் என்னிடம் என்ன கேட்பார்கள்? பிற வகைகளைச் சேர்ந்த முக்கிய மனிதர்களும், சுதந்திரமான தொழில் செய்யும் மனிதர்களும் என்னிடம் என்ன கேட்பார்கள்? நான்தான் அவர்களுக்கு மறுமொழியாக என்ன சொல்வேன்? இதுவரை எதிரிகளின் தலைக்கு மேல் இருந்து, அவர்களின் மார்புகளை மிதித்த நான், இப்போது அந்நிலையில் இருந்து விழுந்துவிட்டேன். அவர்களிடம் இனி நான் எப்படித்தான் பேசுவேன்? செழிப்பு, அறிவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடையும் ஆணவமிக்க மனிதர்கள், வெறுமை பொங்கிய என்னைப் போலவே, அபூர்வமாகவே அருள் காலத்தை அனுபவிப்பார்கள்.

ஐயோ, அறியாமையால் வழிநடத்தப்பட்டு மிகவும் முறையற்ற, தீய செயலைச் செய்த முட்டாள் ஆனதால், நான் இத்தகைய துயரத்தில் விழுந்தேனே. இனியும் உயிரை என்னால் தாங்க முடியாததால், நான் பட்டினி கிடந்து சாவேன். எதிரியால் துயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட, துணிச்சல் மிகுந்த எவன்தான் {Man of spirit} தனது இருப்பை {தன் வாழ்நாளை} நீண்ட காலம் நீட்டிச் செல்வான்? கர்வம் கொண்ட நான், ஆண்மையற்றுப் போய், துயரத்தில் மூழ்கியதை, பராக்கிரமம் கொண்ட பாண்டவர்கள் பார்த்ததால் எதிரிகளின் நகைப்புக்குள்ளானேன்" என்றான் {துரியோதனன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதுபோன்ற நினைவுகளுக்கு வழி கொடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், துச்சாசனனிடம், "ஓ! துச்சாசனா, ஓ! பாரதக் குலத்தவனே, எனது இவ்வார்த்தைகளைக் கேள்! நான் உனக்கு வழங்கும் இந்த {அரச} பட்டத்தை ஏற்று, என் இடத்தில் மன்னனாக இரு. கர்ணானாலும், சுபலனின் மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட பரந்த பூமியை நீ ஆட்சி செய். மருதர்களைப் பார்த்துக் கொள்ளும் இந்திரனைப் போல, உன் தம்பிகளைப் பேணிப் பராமரித்து, அவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெறுவாயாக. நூறு வேள்விகளைச் செய்தவனைச் {இந்திரனைச்} சார்ந்திருக்கும் தேவர்களைப் போல, நண்பர்களும் உறவினர்களும் உன்னைச் சார்ந்து இருக்கட்டும். சோம்பலில்லாமல் நீ எப்போதும் அந்தணர்களுக்கு பணிக்கொடை கொடுக்க வேண்டும். உனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நீ எப்போதும் புகலிடமாக இரு. தேவர்களைப் பார்த்துக் கொள்ளும் விஷ்ணுவைப் போல, எப்போதும் உனது அனைத்து இரத்த உறவுகளை நீ பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களை நீ எப்போதும் பேணிப் பாதுகாக்க வேண்டும். உனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டும்படியும், உனது எதிரிகளைக் கண்டித்தும் இந்த உலகத்தை ஆட்சி செய்; போ!" என்றான் {துரியோதனன்}.

பிறகு அவனது {துச்சாசனனின்} கழுத்தைக் கட்டிக் கொண்ட துரியோதனன், மீண்டும் "போ!" என்றான். அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட துச்சாசனன், உற்சாகத்தை முற்றிலும் இழந்து, பெருந்துயரில் மூழ்கி, கண்ணீரால் அடைபட்ட குரலுடன், கைகள் கூப்பி, தனது அண்ணனுக்குச் சிரம் தாழ்த்தி, "மனம் இரங்குவீராக" என்றான். இப்படிச் சொல்லிய அவன் கனத்த இதயத்துடன் கீழே பூமியில் விழுந்தான். துயரால் தாக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தனது அண்ணனின் பாதங்களில் கண்ணீர் சிந்தி மீண்டும், "இது நடக்காது! இந்தப் பூமி பிளந்து போகலாம், ஆகாயம் துண்டு துண்டாகலாம், சூரியன் தனது பிரகாசத்தை இழக்கலாம், சந்திரன் தனது குளுமையைக் கைவிடலாம், காற்று அதன் வேகத்தைக் கைவிடலாம், தனது இருப்பிடத்தில் இருந்து இமயம் நகரலாம், சமுத்திரத்தின் நீர் வற்றிப் போகலாம், நெருப்பு தன் வெப்பத்தைக் கைவிடலாம், எனினும், ஓ! மன்னா {துரியோதனரே}, ஒருபோதும் நீரில்லாமல் {நீயில்லாமல்} இந்தப்பூமியை நான் ஆளமாட்டேன்" என்றான். துச்சாசனன் மீண்டும், "மனம் இரங்கும், ஓ! மன்னா! {துரியோதனரே}, நமது குலத்தில் மன்னனாக நூறாண்டு காலம் உம்மால் மட்டுமே இருக்க முடியும்" என்றான். மன்னனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய துச்சாசனன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் வழிபாட்டுக்குரிய தனது அண்ணனின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, இனிய குரல் கொண்டு அழத் தொடங்கினான்.

துச்சாசனனும், துரியோதனனும் இப்படி அழுவதைக் கண்ட கர்ணன் பெருந்துயரத்துடன் அவர்கள் இருவரையும் அணுகி, "குரு இளவரசர்களே, சாதாரண மனிதர்களைப் போல, அறிவற்றுப் போய், ஏன் துயருக்கு ஆளாகிறீர்கள்? கவலையோடு இருக்கும் மனிதனின் துயரத்தை, அவனது கண்ணீர் ஒருபோதும் நீக்காது. அழுகை ஒருவனின் துயரை நீக்க முடியாது என்கிற போது, இப்படிச் சோகத்துக்கு வழி கொடுப்பதால் உங்களுக்கு லாபமென்ன? இத்தகு நடத்தையால் எதிரியை மகிழ்ச்சியூட்டாது, பொறுமையை உங்கள் துணைக்கு அழையுங்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உன்னை விடுவித்து, பாண்டவர்கள் தங்கள் கடமையையே  செய்திருக்கிறார்கள். மன்னனின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் வசிக்கும் அவர்கள், எப்போதும் மன்னனுக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பாண்டவர்கள், உனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உன்னால் பாதுகாக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சாதாரண மனிதனைப் போல இத்தகு துயரத்தில் ஆழ்வது உனக்குத் தகாது. உணவைக் கைவிட்டு, உயிரை விடப்போவதாக நீ தீர்மானித்ததைக் கண்ட உனது இரத்த உறவுகளான தம்பிகள் அனைவரும் சோகமாகவும், உற்சாகமற்றும் இருப்பதைப் பார். நீ அருளப்பட்டிரு! எழுந்து உனது நகரத்திற்கு வா, உனது இரத்த உறவுகளான தம்பிகளுக்கு ஆறுதல் கூறு" என்றான் {கர்ணன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்