Thursday, August 21, 2014

"பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு" என்றான் சகுனி! - வனபர்வம் பகுதி 249

"Give back unto the sons of Pritha their kingdom!" said Sakuni!  | Vana Parva - Section 249 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…

அசுரர்கள் துரியோதனன் சந்திப்பு
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, "ஓ! குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ! மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய்? நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.




துணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது? {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு" என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், "அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்" என்றான் {துரியோதனன்}.

அவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்?" என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.

அதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.

அச்சடங்குகள் முடிந்த போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, "திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா" என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்."

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்