Monday, August 25, 2014

பீமனின் கோபம்? - வனபர்வம் பகுதி 254

The wrath of Bhima!  | Vana Parva - Section 254 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்வி செய்வதற்காகத் துரியோதனன் அனைவரையும் அழைப்பது; துச்சாசனன் பாண்டவர்களை அழைக்க ஒரு தூதுவனை அனுப்புவது; யுதிஷ்டிரன் வாழ்த்துவது; பீமன் கோபத்துடன் பேசி, துரியோதனனுக்கு எச்சரிக்கை அனுப்புவது; வேள்வி நிறைவடைவது; துரியோதனன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அனைத்து கைவினைஞர்களும், முக்கியமான ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, உயர்ந்த ஞானம் கொண்ட விதுரனும், திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, “அற்புதமான வேள்விக்குரிய அனைத்து தயாரிப்புகளும் முடிந்துவிட்டன. ஓ! மன்னா {துரியோதனா}, ஓ பாரதா, நேரமும் வந்துவிட்டது. பெரும் மதிப்புமிக்கத் தங்கக் கலப்பையின் நிர்மாணம் முடிந்தவிட்டது" என்றனர். இதைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவனான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} வேள்விகளில் தலைமையான வேள்வியை ஆரம்பிக்க உத்தரவிட்டான். பிறகு, அபரிமிதமான உணவு வகைகளுடன், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட அந்த வேள்வி ஆரம்பித்தது. காந்தாரியின் மகன் {துரியோதனன்} அவ்வேள்வியை விதிப்படி தொடங்கிவைத்தான். திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த விதுரன், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், கொண்டாடப்படும் காந்தாரி ஆகியோர் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தனர்.


ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இளவரசர்கள் மற்றும் அந்தணர்களை அழைக்க விரைவாகச் செல்லும் தூதுவர்களைத் துரியோதனன் அனுப்பினான். விரைவாகச் செல்லும் வாகனங்களின், தங்கள் (ஒவ்வொருவருக்கும்) நிர்ணயிக்கப்பட்ட திசைகளில் அவர்கள் {தூதுவர்கள்} சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட தூதுவன் கிளம்பும் போது துச்சாசனன், “விரைவாகத் துவைத வனத்திற்குச் செல்; பிறகு அந்தக் கானகத்தில் இருக்கும் அந்தணர்களையும், தீய மனிதர்களான பாண்டவர்களையும் முறையாக அழை" என்றான். அதன்பேரில் அவன் {அந்தத் தூதுவன்} அங்கே சென்று அனைத்துப் பாண்டவர்களையும் வணங்கி, “தனது வலிமையின் மூலம் பெருஞ்செல்வத்தை அடைந்த, மன்னர்களில் சிறந்த, குருக்களில் முதன்மையான துரியோதனன், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு வேள்வியைக் கொண்டாடுகிறான் {நடத்துகிறான்}. பல திசைகளில் இருந்து மன்னர்களும், அந்தணர்களும் அங்கே போகிறார்கள் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அந்த உயர் ஆன்ம கௌரவனால் அனுப்பப்பட்டேன்; அந்த மன்னனும் மனிதர்களின் தலைவனுமான திருதராஷ்டிரன் மகன், உங்களை அழைக்கிறான். எனவே, அந்த ஏகாதிபதியின் மகிழ்சிகரமான வேள்வியைக் காண்பதே உமக்குத் தகும்" என்றான்.

அத்தூதுவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் புலியான அந்த அரசன் யுதிஷ்டிரன், “மூதாதையர்களின் புகழை மேம்படுத்தும் மன்னன் சுயோதனன் {துரியோதனன்} நற்பேறினாலேயே வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடுகிறான். நிச்சயமாக நாங்கள் அங்கு வர வேண்டும்; ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது; பதிமூன்றாவது வருடம் (நிறைவடையும்) வரை, நாங்கள் எங்கள் நோன்பை நோற்க வேண்டியுள்ளது" என்றான். நீதிமானான யுதிஷ்டிரனின் பேச்சைக் கேட்ட பீமன் {தூதுவரிடம்}, “அதன்பிறகு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் அங்கே வருவார். அப்போது ஆயுதங்களால் கிண்டப்பட்ட நெருப்பில் அவனைத் (துரியோதனனைத்) தூக்கி எறிவார். சுயோதனனிடம், “பதிமூன்றாவது வருடம் நிறைவடையும்போது, மனிதர்களின் தலைவனான அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, போர்க்களம் எனும் வேள்வியில், திருதராஷ்டிரர்கள் மேல், கோபம் எனும் தெளிந்த நெய்யை ஊற்றும்போது, {பீமனாகிய} நானும் வருவேன்" என்று சொல்லும்" என்றான் {பீமன்}.

ஆனால் மற்ற பாண்டவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, எந்த விரும்பத்தகாதவற்றையும் பேசவில்லை. அந்தத் தூதுவன் (திரும்பிய போது) அனைத்தையும் திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். பிறகு திருதராஷ்டிரனின் நகரத்திற்கு, மனிதர்களில் முதன்மையானவர்களும், பல நாடுகளின் தலைவர்களும், உயர்ந்த அறம்சார்ந்த அந்தணர்களும் வந்தனர். முறையாக விதிப்படி வரவேற்கப்பட்ட அந்த மனிதர்களில் தலைவர்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்து மனநிறைவு கொண்டனர். அனைத்து கௌரவர்களாலும் சூழப்பட்ட ஏகாதிபதிகளில் முதன்மையான திருதராஷ்டிரன், மகிழ்ச்சியின் எல்லையை அனுபவித்து, விதுரனிடம், “ஓ! க்ஷத்தா {விதுரா}, வேள்வி மண்டபத்தில் இருக்கும் அனைவருக்கும் விரைவாக உணவைப் பரிமாறி அவர்களைப் புத்துணர்ச்சிபெற்று, மனநிறைவு கொள்ளச் செய்" என்றான்.

ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, அவ்வுத்தரவுக்கு இசைந்த அறநெறி அறிந்த கற்ற விதுரன், மகிழ்ச்சியாக, இறைச்சி, மற்றும் உண்ணத்தக்க, குடுக்கத்தக்க பானங்கள், மணமிக்க மாலைகள், பல்வேறு வகையிலான ஆடைகள் ஆகியவற்றைப் பொருத்தமான அளவுக்குக் கொடுத்து அனைவரையும் உற்சாகமூட்டினான். ({விருந்தினர்கள்} அவர்கள் தங்குவதற்காக) மண்டபங்களைக் கட்டியிருந்த அந்த வீரனான மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, இளவரசர்களுக்கும் அந்தணர்களுக்கும் பலவிதமான செல்வங்களைக் கொடுத்து அவர்களை உற்சாகமூட்டி வழியனுப்பினான். அனைத்து மன்னர்களையும் இப்படி அனுப்பிய அவன் {துரியோதனன்}, தன் தம்பிகள் சூழ, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் துணையுடன் ஹஸ்தினாபுரத்திற்குள் நுழைந்தான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்