Monday, August 25, 2014

துரியோதனனின் வைஷ்ணவ வேள்வி? - வனபர்வம் பகுதி 253

Vaishnava Sacrifice of Duryodhana!  | Vana Parva - Section 253 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

ராஜசூய வேள்வி செய்ய விரும்பிய துரியோதனன்; யுதிஷ்டிரனும் திருதராஷ்டிரனும் உயிரோடு இருப்பதால் துரியோதனன் அவ்வேள்வியைச் செய்ய முடியாது என்று புரோகிதர் சொன்னது; ராஜ சூய வேள்விக்கு ஈடான வைஷ்ணவ வேள்வியைத் துரியோதனன் செய்யலாம் என்று சொன்னது; வைஷ்ண வேள்வி செய்ய நடந்த ஏற்பாடுகள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா, ஓ !மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, எதிரி வீரர்களைக் கொல்பவனான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! கௌரவா, துரியோதனா, நான் சொல்லும் வார்த்தைகளை உன் இதயத்தில் நிறுத்து. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, எனது வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அனைத்து வழிகளிலும் அதன்படி செயல்படுவதே உனக்குத் தகும். ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, ஓ! வீரா, இப்போது இந்தப் பூமி {உனக்கு} எதிரிகளற்று இருக்கிறது. எதிரிகளை அழித்த பிறகு மனோபலம் கொண்ட சக்ரன் {இந்திரன்} எப்படி ஆண்டானோ, அதே போல அவளை {பூமியை} ஆட்சி செய்" என்றான்.



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் சொல்லப்பட்ட மன்னன் அவனிடம் {கர்ணனிடம்} மீண்டும், “ஓ! மனிதர்களில் காளையே, ஒருவனுடன் இணக்கமாக இருந்து, முழுவதும் அவனுடைய நன்மையையே நீ நோக்கமாகக் கொண்டிருக்கிறாய் எனும்போது, உன்னைப் புகலிடமாகக் கொண்ட இந்த ஒருவனால் {துரியோதனனான என்னால்} அடைய முடியாதது எது? இப்போது எனக்கு ஒரு காரியம் இருக்கிறது. அதைக் கேள். வேள்விகளில் முதன்மையான பெரும் ராஜசூய வேள்வி பாண்டவர்களால் செய்யப்பட்டதைக் கண்டதால், எனக்கு (அதே வேள்வியைச் செய்ய) ஒரு விருப்பம் எழுந்திருக்கிறது. ஓ! சூதனின் மகனே {கர்ணா}, எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் மன்னனிடம், “பூமியிலுள்ள அனைத்து மன்னர்களும் இப்போது உனக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். எனவே, முதன்மை அந்தணர்களை அழை. ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, வேள்விக்குத் தேவையான பொருட்களை முறையாகச் சேகரி. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {துரியோதனா}, பரிந்துரைக்கப்பட்ட வேதமறிந்த ரித்விக்குகளைக் கொண்டு உனது சடங்குகளை விதிப்படி கொண்டாடு. ஓ! மன்னா, ஓ பாரதகுலத்தின் காளையே {துரியோதனா}, உனது அந்தப் பெரும் வேள்வி நடக்கும்போது, இறைச்சி, பானம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் நிறைந்திருக்கட்டும்" என்றான் {கர்ணன்}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகன் புரோகிதரை அழைத்து அவரிடம், “அற்புதமான தக்ஷினைகளுடன் கூடிய வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்வியைச் சரியான உரிய முறையில் எனக்காகக் கொண்டாடுங்கள் {நடத்துங்கள்}” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஓ! மன்னர்களின் இளவரசனே {துரியோதனா}, உனது குடும்பத்தில் அந்த வேள்விகளில் சிறந்த வேள்வியைக் கொண்டாடமுடியாது. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் தந்தை நீண்ட வாழ்நாளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதன் காரணமாகவும் நீ அந்த வேள்வியைச் செய்யக்கூடாது. ஓ! தலைவா {துரியோதனா}, ராஜசூயத்துக்கு ஈடான மற்றுமொரு பெருவேள்வி இருக்கிறது. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ அந்த வேள்வியைச் செய்யலாம்.

எனது இவ்வார்த்தைகளைக் கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பூமியில் உள்ள இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் உனக்குக் கப்பம் கட்டுபவர்களாக இருப்பதால், சுத்தமாகவும் சுத்தமல்லாததாகவும் தங்கத்தைக் கப்பமாகக் கொடுப்பார்கள். அந்தத் தங்கங்களைக் கொண்டு, ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, இப்போது ஒரு (வேள்வி) கலப்பையைச் செய். ஓ! பாரதா {துரியோதனா}, வேள்வி செய்யும் இடத்தை அந்தக் கலப்பையால் உழு. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, உரிய சடங்குகளுடன், எந்த இடையூறும் இல்லாமல், மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட சுத்தமான உணவுகளுடன் {உழப்பட்ட} அந்த இடத்தில் வேள்வி நடைபெறட்டும். அறம்சார்ந்த மனிதர்களுக்குத் தகுந்த அவ்வேள்வியின் பெயர் வைஷ்ணவம் ஆகும். பழைமையான விஷ்ணுவைத் தவிர வேறு எவரும் அவ்வேள்வியை இதற்கு முன்னால் செய்ததில்லை. இந்தப் பெரும் பிரம்மாண்டமான வேள்வி, வேள்விகளில் சிறந்த ராஜசூய வேள்விக்குச் சமமானது ஆகும். மேலும், அது {வேள்வி} நம்மை விரும்புகிறது. அது உனது நன்மைக்காகவும் கொண்டாடப்படட்டும். மேலும் அது எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடக்கூடியதாகும். (இதைச் செய்வதால்) உனது விருப்பங்கள் நிறைவேறும்" என்றார்.

இப்படி அந்த அந்தணர்களால் சொல்லப்பட்ட திருதராஷ்டிரன் மகனான அம்மன்னன் {துரியோதனன்}, கர்ணன், தனது தம்பிகள் மற்றும் சுபலனனின் மகன் {சகுனி} ஆகியோரிடம், “சந்தேகத்திற்கு அப்பால், அந்தணர்களின் வார்த்தைகள் எனக்கு முற்றிலும் பிடித்திருக்கிறது. அவற்றால் நீங்களும் மகிழ்ந்தீர்களென்றால், தாமதிக்காமல் அதை வெளிப்படுத்துங்கள்" என்றான். இப்படிக் கோரப்பட்ட அவர்கள் மன்னனிடம் {துரியோதனனிடம்}, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். பிறகு மன்னன் ஒருவர் பின் ஒருவராக அவரவர்க்கு உரிய பணிகளில் அமர்த்தினான். சிற்பிகளை அழைத்து (வேள்வி) கலப்பையைச் செய்யச் சொன்னான். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டவையெல்லாம் ஒன்றுன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டது. 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்