Tuesday, August 26, 2014

கர்ணனின் சபதம்? - வனபர்வம் பகுதி 255

The vow of Karna!  | Vana Parva - Section 255 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துரியோதனன் செய்த வேள்வி, யுதிஷ்டிரன் செய்த வேள்வியின் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது என்று சிலர் சொல்வது; நண்பர்கள் துரியோதனன் செய்த வேள்வியை மெச்சுவது; நான் எப்போது ராஜசூய வேள்வியைச் செய்வேன் என்று துரியோதனன் கேட்பது; கர்ணன் ஏற்கும் நோன்பு; கர்ணன் ஏற்ற சபதத்தைக் கேள்விப்பட்ட யுதிஷ்டிரன் துயருறுவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, துரியோதனன் (நகரத்திற்குள்) நுழைந்து கொண்டிருந்த போது, தோற்காத வலிமை கொண்ட அந்த இளவரசனைப் புகழ்ச்சியாளர்கள் {சூதர்கள்} துதிபாடினர். அந்த வலிமைமிக்க வில்லாளியான மன்னர்களில் முதன்மையானவனை {துரியோதனனை} பிறரும் புகழ்ந்தனர். அவன் மீது நெல் பொரிகளையும் {fried paddy}, சந்தனக் குழம்பையும் வாரி இறைத்த குடிமக்கள், “ஓ! மன்னா {துரியோதனா}, நீ அடைந்த நற்பேறாலேயே உனது வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது" என்றார்கள். அங்கிருந்தவர்களில் இரக்கமற்ற பேச்சுக் கொண்ட சிலர் அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்}, “நிச்சயமாக, இவ்வேள்வி யுதிஷ்டிரனுடைய வேள்வியுடன் ஒப்பிட முடியாததாகும்; இது அதில் {யுதிஷ்டிரன் நடத்திய வேள்வியில்} பதினாறில் ஒரு பங்கிற்குக்கூட ஈடாகாது" என்றனர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத பொறுப்பற்ற சிலர் அம்மன்னனிடம் இப்படியே பேசினர்.

இருப்பினும் அவனது {துரியோதனனின்} நண்பர்கள், “உனது இந்த வேள்வி மற்ற அனைத்தையும் விஞ்சி நிற்கிறது. இதுபோன்ற வேள்வியைச் செய்து புனிதமடைந்த யயாதி, நகுஷன், மாந்தாதா, பாரதன் ஆகியோர் சொர்க்கம் சென்றனர்" என்றனர். இத்தகு ஏற்புடைய வார்த்தைகளைத் தனது நண்பர்களிடம் கேட்ட அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, மிகவும் மனநிறைவு கொண்டு, நகரத்திற்குள் நுழைந்து இறுதியாகத் தனது சொந்த வசிப்பிடத்திற்குச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் தந்தை {திருதராஷ்டிரன்}, தாய் {காந்தாரி}, பீஷ்மர், துரோணர், கிருபர், ஞானியான விதுரன் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட பிறரின் பாதங்களை வழிபட்டான். பிறகு தன் தம்பிகளால் வழிபடப்பட்டான். அந்தத் தம்பிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவன் {துரியோதனன்}, தம்பிகள் சூழ தனது அற்புத இருக்கையில் அமர்ந்தான்.

அப்போது, சூதனின் மகன் {கர்ணன்} எழுந்து, “ஓ! பாரதகுலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, உனது இந்தப் பெரும் வேள்வி, நீ பெற்ற நற்பேறாலேயே நல்ல முறையில் நிறைவடைந்தது. எனினும், பிருதையின் {குந்தியின்} மகன்களைப் {பாண்டவர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, நீ ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, ஓ! மனிதர்களின் தலைவா {துரியோதனா}, நான் உனக்கும் மீண்டும் பெருமையை ஏற்படுத்துவேன்" என்றான். பிறகு திருதராஷ்டிரன் மகனான அந்தப் பலமிக்க மன்னன் {துரியோதனன்}, “நீ சொல்வது உண்மையே. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, தீய மனம் கொண்ட பாண்டவர்கள் கொல்லப்பட்டு, பிரம்மாண்டமான ராஜசூயம் என்னால் செய்யப்படும்போது, ஓ! வீரா {கர்ணா}, நீ மீண்டும் என்னைப் பெருமைப் படுத்துவாய்" என்று மறுமொழி கூறினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சொன்ன அந்தக் கௌரவன் {துரியோதனன்} கர்ணனை ஆரத்தழுவி, ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {துரியோதனன்}, தன்னைச் சூழ்ந்திருந்த குருக்களிடம், “கௌரவர்களே, பாண்டவர்களைக் கொன்று, பெரும்பொருட்களால் செய்ய வேண்டிய ராஜசூயம் என்ற முதன்மையான வேள்வியை நான் எப்போது செய்வேன்?” என்று கேட்டான். அப்போது, கர்ணன் அவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ மன்னர்களில் களிறே {யானையே} {ராஜகுஞ்சரா} {துரியோதனா}, நான் சொல்வதைக் கேள். அர்ஜுனனை நான் கொல்லாதவரை, நான் யாரையும் எனது பாதத்தைக் கழுவ விட மாட்டேன்; இறைச்சியை உண்ணாதிருப்பேன்; நான் அசுர நோன்பை நோற்பேன் [1], எவர் என்னிடம் எதைக் (எந்தப் பொருளைக்) கோரினாலும், “அது என்னிடம் இல்லை" என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.” என்றான் கர்ணன். போர்க்களத்தில் பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன் என்று கர்ணன் சபதமேற்ற போது, பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகளும், பெரும் வில்லாளிகளுமான திருதராஷ்டிரனின் மகன்கள் உற்சாகத்தால் பெருத்த ஆரவாரம் செய்தனர். அந்தத் திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே நினைத்தனர். பிறகு, மன்னர்களின் தலைவனான அருள் நிறைந்த துரியோதனன், மனிதர்களில் காளையரான அவர்களை விட்டுவிட்டு, சித்திரரதத் தோட்டத்திற்குள் நுழையும் தலைவன் குபேரனைப் போலத் தனது அறைக்குள் நுழைந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் அனைவரும் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றனர்.

[1] (பர்துவான் பண்டிட்டுகளின் {வங்காள மொழியில் பாரதத்தை மொழிபெயர்த்தவர்கள் என நினைக்கிறேன்} கூற்றுப்படி) இந்த அசுரர்கள் நோன்பு என்பது மது குடிக்க மாட்டேன் என்று நோன்பேற்பதாகும் {இங்கே கும்பகோணம் தமிழ் பதிப்பும் மதுவுண்ண மாட்டேன் என்றே சொல்கிறது}. ஆனால் இங்கே ஆரியர்களின் சுத்தமான நடத்தைகளைக் கைவிட்டு, "எனது விருப்பம் நிறைவேறும் வரை அசுரர்களின் நடத்தையைக் கைக்கொள்வேன்" என்று கர்ணன் நோன்பேற்பதாகக் கொள்வதே பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கங்குலி சொல்கிறார். வழக்கம் போல இந்த விளக்கத்துக்கு மத்தியில் { } என்ற அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்துகள் என்னுடையவை.

அதேவேளையில், தூதர்கள் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த வில்லாளிகளான பாண்டவர்கள் பரபரப்படைந்து, கவலையடைந்தனர். (அந்நேரத்தில் இருந்து) அவர்கள் சிறு மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மேலும், விஜயனை {அர்ஜுனனைக்} கொல்ல சூதமகன் {கர்ணன்} ஏற்ற சபதத்தைப் புலனாய்வின் மூலம் பெற்ற {பாண்டவர்களின்} ஒற்றர்கள், அச்செய்தியை அவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொண்டு வந்தனர். ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, இதைக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, கவலையின் எல்லையை அடைந்தான். துளைக்க முடியாத கவசம் கொண்ட கர்ணனை அற்புத பராக்கிரமம் கொண்டவன் என்று கருதி, தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, அமைதியை அறியவில்லை. கவலை நிறைந்த அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன் {யுதிஷ்டிரன்}, மூர்க்கமான விலங்குகள் நிறைந்த அந்தத் துவைதவனத்தைக் கைவிட மனதில் தீர்மானம் கொண்டான்.

அதேவேளையில், திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்}, தனது வீரமிக்கத் தம்பிகளுடனும், பீஷ்மர், துரோணர் மற்றும் கிருபருடனும் சேர்ந்து பூமியை ஆளத் தொடங்கினான். படையெடுப்பு செய்த புகழ் என்ற மகுடம் தரித்த சூதமகனின் {கர்ணனின்} உதவியுடன் துரியோதனன், எப்போதும் பூமியின் ஆட்சியாளர்களின் நன்மையிலேயே எப்போதும் குறியோடு இருந்தான். அபரிமிதமான தானங்களுடன் வேள்விகளைச் செய்து அந்தணர்களில் முதன்மையானவர்களை வழிபட்டான். எதிரிகளை வீழ்த்துபவனான அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, தானத்தையும் இன்பம் அனுபவிப்பதையும் பலனாகக் கொண்டவையே செல்வங்கள் என்பதை உறுதியாக மனதில் தீர்மானித்துத் தனது தம்பிகளுக்கு நன்மைகளைச் செய்தான்.



இந்த இடத்தோடு கோஷயாத்திரா பர்வம் முற்றுபெற்று மிருகஸ்வப்நோத்பவ பர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால் கங்குலி இங்கு முடிக்காமல் கோஷயாத்திரா பர்வத்தைத் தொடர்ந்து செல்கிறார்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்