Thursday, August 28, 2014

முத்கலரும்! துர்வாசரும்! - வனபர்வம் பகுதி 258

Mudgala and Durvasa!  | Vana Parva - Section 258 | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

முத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார்? ஓ! பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார்? இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்" என்றான்.


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முத்கலர் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மனிதர் (தவசி) வாழ்ந்து வந்தார். அவர் உண்மையுள்ளவராகவும் {சத்தியவானாகவும்}, தீக்குணத்தை விலக்கியவராகவும், புலன்களை அடக்கியவராகவும் இருந்தார். அவர் {முத்கலர்} சிலம், உஞ்சம் [1] ஆகிய வாழ்வுமுறைகளைப் பின்பற்றிவந்தார். {தானியங்களைச் சேர்த்து} ஒரு புறாவைப் போல வாழ்ந்து வந்தாலும், வலிமைமிக்கத் தவத்தகுதி கொண்டு அவர் {முத்கலர்}, விருந்தினர்களை உபசரித்து, இஷ்டிகிரிதா என்றழைக்கப்படும் வேள்வியையும், மற்றும் பிற சடங்குகளையும் செய்தார். தன் மகன் மற்றும் தன் மனைவியுடன் இருந்த அந்தத் தவசி {முத்கலர்} பதினைந்து நாட்களுக்கு உண்டு, மீதி பதினைந்து தினங்களுக்குப் புறா வாழ்வு வாழ்ந்தார் {அதாவது தானியங்களைச் சேகரித்தார்} {And that sage together with his son and wife, ate for a fortnight, and during the other fortnight led the life of a pigeon, collecting a drona of corn.}. தர்சம், பௌர்ணமாஸ்யம் ஆகிய வேள்விகளைச் செய்த அந்தச் சூதற்றவர் {முத்கலர்}, தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படைத்த பின்பு  மீந்ததையே உண்டு தன் நாட்களைக் கடத்தி வந்தார்.

[1] (அ) சோள உமிகளையும் {ears of corn = சோளத்தின் பருக்கைகளை} என நினைக்கிறேன்} (ஆ) அரிக்கட்டுகளை எடுத்துச் செல்லும் உழவர்களால் நிலத்தில் விட்டுச் {சிந்திச்} செல்லப்படும் தனிப்பட்ட தானியங்களையும் {தனித் தனித் தானியங்களையும்} எடுத்துத் தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறையே (அ) சிலம் என்றும் (ஆ) உஞ்சம் என்றும் அழைக்கப்பட்டன என்கிறார் கங்குலி.

கதிர் நெல் முதலியவற்றைச் சேகரித்து அவற்றை உண்டு வாழ்வது சிலம் என்றும், தானியமணிகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து அவற்றை உண்டு வாழ்வது உஞ்சம் என்றும்கூடச் சொல்வார்கள். மேலும், உஞ்சவிருத்தி என்பது  பிச்சை எடுத்து உயிர் வளர்த்தல் என்றும் சொல்லப்படுகிறது.

மங்களகரமான சந்திர நாட்களில், மூன்று உலகங்களுக்கும் தலைவனான இந்திரன், தேவர்கள் துணையுடன் தானே அங்கு வந்து, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவரது {முத்கலரின்} வேள்வியில் காணிக்கையாகத் தரப்படும் உணவை உண்டு வந்தான். முனிவர்களின் வாழ்வு முறையைப் பின்பற்றி வந்த அவர் {முத்கலர்}, அது போன்ற நாட்களில் வந்த விருந்தினர்களுக்கு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடு உணவு கொடுத்து உற்சாகமூட்டினார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்}, சுறுசுறுப்புடன் தன் உணவைப் பகிர்ந்தளித்த போது, மீதியிருந்த துரோணம் அளவு சோளம், மேலும் விருந்தினர்கள் தோன்றியதும் {வந்ததும்} பெருகலாயிற்று. சுத்தமான மனம் கொண்ட அவரது {முத்கலரின்} அறத்தால், அத்தவசி {முத்கலர்} தானம் செய்த உணவு, நூற்றுக்கணக்கான அந்தணர்கள் பசியாறும் அளவுக்குப் பெருகிற்று.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நோன்புகள் நோற்கும் அறம் சார்ந்த முத்கலரைப் பற்றிக் கேள்விப்பட்ட துர்வாசர், வெட்டவெளியை மட்டுமே மறைப்பாகக் {ஆடையாகக்} கொண்டு [2], வெறி பிடித்தவனைப் {பைத்தியக்காரனைப்} போல வேடம் பூண்டு, முடியில்லாத தலையுடன் அங்கே வந்து {முத்கலரிடம் வந்து}, ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, {முத்கலரை} அவமதிக்கும் பல்வேறு வார்த்தைகளைப் பேசினார். அந்த முனிவர்களின் சிறந்தவர் {துர்வாசர்}, அந்த அந்தணரிடம் {முத்கலரிடம்} வந்து, "ஓ! அந்தணர்களில் முதன்மையானவனே {முத்கலா}, உணவை நாடி இங்கே நான் வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக" என்றார். அதற்கு முத்கலர் அந்தத் தவசியிடம் {துர்வாசரிடம்}, "நீர் வரவேற்கப்படுகிறீர்" என்றார்.

[2] நிர்வாணமாக என்கிறார் கங்குலி

விருந்தினர்களைப் பசியாற்றும் நோன்பிருந்தவர் {முத்கலர்}, பசியால் பாதிக்கப்பட்டு வெறிபிடித்தவர் போல இருந்த அந்தத் தவசிக்கு {துர்வாசருக்கு}, கால் கழுவவும், வாய் கழுவவும் நீர் கொடுத்து, அவர் முன்னிலையில் அற்புதமான உணவை வைத்தார். பசியால் துன்புற்ற அந்தக் கடும் முனிவர் {துர்வாசர்}, தனக்குக் காணிக்கையாக்கப்பட்ட அனைத்து உணவையும் முழுமையாக உண்டார். அதனால், முத்கலர் மீண்டும் அவருக்கு {துர்வாசருக்கு} {தன்னிடம் இருந்த அனைத்து உணவையும் கொண்டு} உணவளித்தார். பிறகு அந்த உணவு அனைத்தையும் உண்டு முடித்த அவர் {துர்வாசர்}, அசுத்தமான மீந்த உணவை தன் மேனியில் பூசிக்கொண்டு, தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றுவிட்டார்.

இதே போலவே, அடுத்து வந்த காலத்திலும் {அடுத்த பதினைந்து தினத்திலும்}, அவர் மீண்டும் வந்து, உஞ்ச வாழ்வு முறை வாழ்ந்து வந்த ஞானியால் {முத்கலரால்} படைக்கப்பட்ட உணவனைத்தையும் உண்டார். அதனால், உணவு உண்ணாத நிலையில் இருந்த தவசியான முத்கலர் மீண்டும் உஞ்ச வாழ்வுமுறையை மேற்கொண்டு சோளம் சேகரிப்பதில் மீண்டும் ஈடுபட்டார். பசியால் அவரது உள்ளச்சமநிலையைக் {மன அமைதியை [அ] பற்றற்ற தன்மையைக்} கலைக்க முடியவில்லை. கோபம், சூது, இழிந்த உணர்வு, கிளர்ச்சி ஆகியவற்றால் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து, தன் மனைவி மற்றும் மகனுடன் இருந்த அந்த அந்தணர்களில் சிறந்தவரின் {முத்கலரின்} இதயத்திற்குள் நுழையமுடியவில்லை.

இப்படி, துர்வாசர், தொடர்ந்து வந்த ஆறு காலங்களிலும் உஞ்ச வகை வாழ்வு வாழ்ந்து வந்த அந்தத் தவசிகளில் சிறந்தவர் {முத்கலர்} முன்பு பல முறை சென்றார். இருப்பினும், அந்த முனிவரால் {துர்வாசரால்}, முத்கலரின் இதயத்தில் எந்தக் கிளர்ச்சியையும் காண இயலவில்லை. சுத்தமான ஆன்மாவைக் கொண்ட அந்தத் துறவியின் சுத்தமான இதயம், எப்போதும் சுத்தமாக இருப்பதைக் கண்டார். அதனால் மனம் நிறைந்த அந்தத் தவசி {துர்வாசர்}, முத்கலரிடம், “உன்னைப் போன்ற சூதற்றவனும், தானம் செய்பவனும் இவ்வுலகில் இல்லை. பசியின் வேட்கை நேர்மையான உணர்வை வெகு தூரத்திற்கு ஓட்டி, மனிதர்களின் பொறுமை அனைத்தையும் இழக்க வைக்கும். சுவையை விரும்பும் நாக்கு, மனிதர்களை, அவற்றை நோக்கி ஈர்க்கும். உணவாலேயே உயிர் நிலைத்திருக்கிறது. மேலும் மனமானது நிலையற்றதாகவும், அடக்கிவைக்கக் கடினமானதாகவும் இருக்கிறது. குவிந்த நிலையில் உள்ள மனமும், புலன்களும் {கொண்ட நிலை} நிச்சயமாகத் தவத்துறவே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வலிகளால் அடைந்தவற்றைச் சுத்தமான மனதுடன் கைவிடுவது மிகக்கடினமாகும். இருப்பினும், ஓ! பக்திமானே {முத்கலா}, இவை அனைத்தும் உன்னால் முறையாக அடையப்பட்டுள்ளது. உனது துணையால் நாம் கடமையுணர்ச்சியையும், மனநிறைவையும் உணர்கிறோம். சுயக்கட்டுப்பாடு, மனோபலம், நீதி, புலன் மற்றும் உள்ளுணர்வு அடக்கம், கருணை, நல்லொழுக்கம் ஆகிய இவை அனைத்தும் உன்னில் நிலைபெற்றிருக்கின்றன. உனது செயல்களால் நீ பல உலகங்களை வென்றுவிட்டாய். அதனால், அருள் உலகங்களுக்குச் செல்லும் வழிகளை நீ அடைந்துவிட்டாய். ஆ! சொர்க்கவாசிகள் கூட உனது தானத்தைப் பெருஞ்செயல் எனப் பிரகடனம் செய்கிறார்கள். ஓ! நோன்புகள் நோற்பவனே {முத்கலா}, நீ உனது உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்வாய்" என்றார் {துர்வாசர்}.

முனிவர் துர்வாசர் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, முத்கலர் முன்பு, ஒரு தேவ தூதன் தோன்றினான். அவன் {தேவ தூதன்}, அன்னங்களும் கொக்குகளும் பூட்டப்பட்டு, கிண்கிணி மணிகள் நிறைந்து, தெய்வீக நறுமணத்துடன், அழகாக வண்ணம் பூசப்பட்டிருந்த, நினைத்த இடம் செல்லக்கூடிய ஒரு தேரில் வந்திருந்தான். அவன் {தேவதூதன்}, அந்த அந்தண முனிவரிடம் {முத்கலரிடம்}, “ஓ தவசியே {முத்கலரே}, உமது செயல்களால் நீர் அடைந்த இத்தேரில் ஏறும். உமது தவத்தின் கனியை நீர் அடைந்துவிட்டீர்" என்றான்.

அந்தத் தேவர்களின் தூதன் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தத் தவசி {முத்கலர்} அவனிடம் {தேவ தூதனிடம்}, “ஓ! தேவதூதா, அங்கே {தெய்வலோகத்தில்} வசிப்பவர்களின் குணங்களை நீர் எனக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்குத் தவம் எது? அதற்கான காரணங்கள் யாது? ஓ! தேவர்களின் தூதனே, சொர்க்கத்தில் நிலவும் மகிழ்ச்சிக்கு எது காரணம்? அதனால் ஏற்படும் பாதகம் என்ன? பக்திமான்களுடன் நட்புடன் இருப்பது என்பது, ஏழு பதங்களால் {சொற்கள் அல்லது காலடிகள்} அடையப்படுகிறது என்று நல்ல குலத்தில் பிறந்த அறம்சார்ந்த மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஓ! தலைவா {தேவதூதா}, அந்த நட்பின் பேரால் நான் உன்னிடம் கேட்கிறேன், “தயங்காமல் நீ எனக்கு உண்மையைச் சொல். அதுவே இப்போது எனக்கு நன்மையைப் பயக்கும். நீ சொல்வதைக் கேட்ட பிறகு, உனது வார்த்தைகளின் படி, நான் எவ்வழியைத் தொடர வேண்டும் என்பதை நான் உறுதி செய்வேன்" என்றார் {முத்கலர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்