Wednesday, September 10, 2014

ராமனும், சீதையும் கொண்ட நட்பு! - வனபர்வம் பகுதி 278

The friendship begot by Rama and Sita!  | Vana Parva - Section 278 | Mahabharata In Tamil

(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)

சுக்ரீவனோடு நட்பு கொண்ட ராமன் வாலியைக் கொன்றது; கிஷ்கிந்தையில் ராமன் நான்கு மாதங்கள் இருந்தது; அசோகவனத்தில் ராட்சசிகள் பாதுகாப்புடன் சீதையை வைத்த ராவணன்; திரிஜடை சீதையைத் தோழி என்று அழைத்தது; அவிந்தியன் சொன்னது; சீதைக்குத் திரிஜடை நம்பிக்கையூட்டியது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சீதை கடத்தப்பட்ட துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த ராமன், பல்வேறு வகையான தாமரைகள் நிறைந்திருந்த பம்பை என்ற தடாகத்தை வெகு தூரம் செல்வதற்கு முன்னரே அடைந்தான். காட்டிலிருந்து வீசிய இனிய, நறுமணமிக்க, குளிர்ந்த காற்றால், திடீரென ராமன் தனது அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைவுகூர்ந்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, தன் அன்பிற்குரிய மனைவியை {சீதையை} நினைத்துப் பார்த்த அவன் {ராமன்}, அவளது பிரிவின் நினைவால் மிகவும் துன்பப்பட்டுப் புலம்பி அழுதான். பிறகு சுமித்திரையின் மகன் {லட்சுமணன்} அவனிடம் {ராமனிடம்}, “ஓ! தகுந்தவர்களுக்கு முறையான மரியாதையளிப்பவரே, முறையான வாழ்வு வாழும் முதிர்ந்த மனிதனை நோய் அண்டுவதில்லை. எனவே, இது போன்ற {நோய் போன்ற} மனத்தளர்ச்சி உம்மை அண்டுவதற்கு விடாதீர். ராவணன் குறித்தும், விதேக இளவரசி {வைதேகி, சீதை} குறித்தும் நீர் தகவலைப் பெற்றீர்! இனி உமது முயற்சியாலும், புத்திக்கூர்மையாலும் அவளை விடுவியும்! இப்போது, நாம் மலையின் மேல் இருக்கும் குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனை அணுகலாம்! உமது சீடனும், அடிமையும், கூட்டாளியுமான நான் உம் அருகில் இருக்கிறேன் {என்பதை மறவாதீர்}. எனவே உம்மை ஆறுதல் படுத்திக் கொள்ளும்" என்றான் {லட்சுமணன்}.



லட்சுமணனால் சொல்லப்பட்ட இவையும், இவைபோன்ற வேறு வார்த்தைகளையும் கேட்ட ராமன் தனது இயற்கையான தன்மையை {இயல்பை} அடைந்து, காரியத்தைச் செய்யத் தொடங்கினான். பம்பையின் நீரில் குளித்து, தன் முன்னோர்களுக்கு நீர்க்காணிக்கைகள் செலுத்திய ராமன், லட்சுமணன் ஆகிய அந்த இரு வீரச் சகோதரர்களும் (ரிஷ்யமுகத்திற்கு) கிளம்பினார்கள். கனிகளும், கிழங்குகளும், மரங்களும் நிறைந்த ரிஷ்யமுகத்தை அடந்தை அந்த வீரர்கள், மலைச் சிகரத்தின் மேலே ஐந்து குரங்குகளைக் காண்டார்கள். அவர்கள் {அந்தச் சகோதரர்கள்} தங்களை அணுகுவதைக் கண்ட சுக்ரீவன், இமய மலை போன்ற பெரிய உருவம் படைத்த தனது ஆலோசகனான {அமைச்சனான} புத்திக்கூர்மை கொண்ட ஹனுமானை அவர்களை வரவேற்க அனுப்பினான். முதலில் ஹனுமானிடம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட அச்சகோதரர்கள், {பின்பு} சுக்ரீவனை அணுகினார்கள். பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராமன் சுக்ரீவனைத் தனது நண்பனாக்கிக் கொண்டான். ராமன் தன் மனதில் இருந்த நோக்கத்தைச் சுக்ரீவனிடம் சொன்ன போது, ராவணனால் தூக்கிச் சொல்லப்படுகையில், குரங்குகளுக்கு மத்தியில் சீதை வீசிய துணித்துண்டை சுக்ரீவன் அவனுக்குக் {ராமனுக்குக்} காட்டினான். அந்தச் சான்றுகளை அவனிடம் {சுக்ரீவனிடம்} இருந்து பெற்றுக் கொண்ட ராமன், பூமியில் உள்ள குரங்குகளுக்கு மன்னனாகச் சுக்ரீவனை நிறுவினான். மேலும் ராமன் போரில் வாலியைக் கொல்வதெனப் பற்றுறுதியை ஏற்றுக்கொண்டான்.

பிறகு ஒரு புரிதலை அடைந்து, ஒருவருக்கொருவர் முழு நம்பிக்கைவைத்த அவர்கள் அனைவரும் (வாலியுடன்) போரிட விரும்பி கிஷ்கிந்தைக்குச் சென்றார்கள். கிஷ்கிந்தையை அடைந்ததும், சுக்ரீவன், மலைவீழாறு போல ஆழ்ந்த கர்ஜனையை உரக்க எழுப்பினான். இந்த அறைகூவலைத்  தாங்கிக் கொள்ளாத வாலி, வெளியே வந்தான். (ஆனால் அவனது மனைவி) தாரை அவனது வழியில் நின்று, “பெரும்பலத்தோடு கூடி சுக்ரீவர் கர்ஜிக்கும் முறை, அவர் ஏதோ துணையை அடைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என நான் கருதுகிறேன். எனவே நீர் வெளியே செல்வது தகாது!” என்றாள். அவளால் {தாரையால்} இப்படிச் சொல்லப்பட்ட குரங்குகள் மன்னனும், தங்க மாலை அணிந்திருந்தவனும், நாநயமிக்கவனுமான வாலி, நிலவு போன்ற அழகு முகம் கொண்ட தாரையிடம், “அனைத்து உயிரினங்களின் குரலையும் நீ புரிந்து கொள்கிறாய். {எனவே}, பெயரளவுக்கே எனது தம்பியான இவன் {சுக்ரீவன்}, யாருடைய உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதைச் சிந்தித்துச் சொல்!” என்றான்.

அவனால் {வாலியால்} இப்படிச் சொல்லப்பட்டவளும், சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டவளும், ஞானமுள்ளவளுமான தாரை, ஒரு நொடியே சிந்தித்த பிறகு தனது தலைவனிடம் {வாலியிடம்}, “ஓ! குரங்குகளின் ஏகாதிபதியே, கேளும்! வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் வலிமை படைத்தவனும், தன் மனைவியை இழந்தவனும், தசரதன் மைந்தனுமான ராமன், தாக்குதலுக்காவும், தற்காப்புக்காகவும் சுக்ரீவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறான். சுக்ரீவரின் நோக்கம் வெல்வதற்காகச் சுமித்திரையின் வீழ்த்தப்பட முடியாத மகனும், வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனுமான லட்சுமணனும் அவன் {ராமன்} அருகில் நிற்கிறான். மயிந்தன் {Maind}, திவிவிதன் {Dwivida}, பவனனின் மகனான ஹனுமான் {ஹனுமான்} மற்றும் கரடி மன்னனான ஜாம்பவான் (Jamvuman} ஆகியோர் சுக்ரீவரின் அருகில் ஆலோசகர்களாக {அமைச்சர்களாக} இருக்கிறார்கள். இந்தச் சிறப்புமிக்கவர்கள் அனைவரும், பெரும் பலமும், புத்திக்கூர்மையும் கொண்டவர்களாவர். இவர்கள் அனைவரும் ராமனின் வலிமையையும் சக்தியையும் நம்பி, உம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றனர்!” என்றாள் {தாரை}.

தன் நன்மைக்காகச் சொல்லப்பட்ட அவளது {தாரையின்} வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரங்குகளின் மன்னன் {வாலி}, அவை அனைத்தையும் மொத்தமாக அலட்சியப்படுத்தினான். பிறகு பொறாமையால் நிறைந்த அவன், சுக்ரீவன் மீது அவள் {தாரை} இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறாள் எனச் சந்தேகப்பட்டான்! பிறகு தாரையிடம் கடும் வார்த்தைகள் பேசிவிட்டு, குகையை விட்டு வெளியேறி, மால்யவாத மலைகளின் {Malyavat} அருகில் நின்று கொண்டிருந்த சுக்ரீவனின் முன்பு வந்து, “முன்பு என்னால் அடிக்கடி வீழ்த்தப்பட்ட நீ, உனது உயிரை விரும்பியதால், என்னுடன் நீ கொண்ட உறவு முறைக்காக, {உயிருடன்} தப்பிச் செல்ல என்னால் அனுமதிக்கப்பட்டாய். இவ்வளவு விரைவாக உன்னை மரணத்தை விரும்ப வைத்தது எது?” என்று கேட்டான்.

வாலியால் இப்படிச் கேட்கப்பட்ட எதிரிகளைக் கொல்பவனான சுக்ரீவன், என்ன நடந்தது என்பதை ராமனுக்குச் சொல்வது போல, தன் அண்ணனிடம் {வாலியிடம்} "ஓ! மன்னா, உன்னால் மனைவியையும், நாட்டையும் இழந்த நான், உயிர் வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அதற்காகவே {மனைவிக்காகவும், நாட்டுக்காகவுமே} நான் வந்திருக்கிறேன் என்பதை அறி!” என்ற சிந்தனைக்குரிய வார்த்தைகளைப் பேசினான். பிறகு, இது போலவும், வேறு வார்த்தைகளாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட வாலியும், சுக்ரீவனும் மோதலுக்கு விரைந்தனர். பிறகு அவர்கள் ஆச்சா மரங்கள், பனை மரங்கள் மற்றும் கற்களைக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பூமியில் அடித்துக் கீழே வீழ்த்தினர். காற்றில் உயர குதித்த அவர்கள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தங்கள் நகங்களையும் பற்களையும் கொண்டு ஒருவரையொருவர் சிதைத்துக் கிழித்தனர். அவர்கள் இருவரும் ரத்ததால் மூடப்பட்டிருந்தனர் {ரத்தத்தில் நனைந்தனர்}.


அவர்கள் இருவரும் பூத்திருக்கிற புரசமரம் {Kinshuka} போல அப்போது விளங்கினார்கள். அவர்கள் அப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது (தோற்றத்தில்) அவர்களிடையே ஒரு வேற்றுமையும் காணப்படவில்லை. பிறகு ஹனுமான், சுக்ரீவனின் கழுத்தில் மலர்களால் ஆன மாலையை அணிவித்தான். பிறகு அந்த வீரன் {சுக்ரீவன்}, வரிசையான மேகங்களுடன் கூடிய மால்யா {மால்யாவாதம்} எனும் பெரும் சிகரத்தைப் போல அழகாக, கழுத்திலிருந்த அந்த {மலர்} மாலையால் ஒளிர்ந்தான். அந்தக் குறிப்பால் சுக்ரீவனை அடையாளம் கண்ட ராமன், விற்களில் முதன்மையான தனது பெரும் வில்லை எடுத்து, தனது இலக்காக வாலியைக் குறிவைத்தான். ராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரைக் கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான். பிறகு மால்யவாதமலையின் அழகிய மார்பில் நான்கு மாதங்கள் வசித்த புத்திக்கூர்மை கொண்ட ராமன், சுக்ரீவனால் எப்போதும் சரியான முறையில் வழிபடப்பட்டான்.

அதே வேளையில், காமத்தால் உந்தப்பட்ட ராவணன், தனது நகரான இலங்கையை அடைந்ததும், அசோகங்களின் {அசோகர மரங்கள் நிறைந்த} காட்டில், நந்தனத்தை ஒத்திருக்கும் வசிப்பிடத்தில், துறவிகளின் ஆசிரமம் போல இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சீதையை அமர்த்தினான். அகன்ற கண்கள் கொண்ட சீதை, கனிகளையும், கிழங்குகளையும் கொண்டு வாழ்ந்து, துறவியின் ஆடை (குறிப்பிட்ட வகை ஆடை) உடுத்தி, உண்ணா நோன்புகளுடன் கூடிய தவங்களைப் பயின்று, தனது கணவனின் பிரிவை எண்ணி நாளுக்கு நாள் மெலிந்து, தனது நாட்களைத் துன்பகரமாகக் கழித்தாள். ராட்சசர்களின் மன்னன் {ராவணன்}, சீதைக்குப் பாதுகாவலாகப் பராசங்களையும், வாள்களையும், சூலங்களையும், போர்க்கோடரிகளையும், தண்டாயுதங்களையும், எரிகொள்ளிகளையும் தாங்கிய பல ராட்சசிகளை நியமித்தான். அவர்களில் சிலர் இரண்டு கண்களுடனும், சிலர் மூன்றுடனும் இருந்தனர். சிலருக்கு நெற்றியில் கண்கள் இருந்தன. சிலருக்கு நீளமான நாக்கும், சிலருக்கு நாக்கு இல்லாமலும் இருந்தது. சிலருக்கு மூன்று கொங்கைகளும், சிலருக்கு ஒரே காலும் இருந்தன. சிலருக்குத் தலையில் மூன்று சடைகள் இருந்தன. சிலர் ஒரே கண்ணைக் கொண்டிருந்தனர். இவர்களும், சுடர்மிகும் கண்கள் கொண்ட பிறரும், ஒட்டகத்தின் முடி போல மேல்நோக்கிய முடி கொண்டவர்களும், சீதையின் அருகில் நின்று கொண்டு, இரவும் பகலும் கவனமாக அவளைச் சூழ்ந்திருந்தனர். பயங்கரக் குரலும் கொடூரத் தன்மையும் கொண்ட அந்தப் பெண்பிசாசங்கள், அந்த அகன்ற கண் கொண்ட மங்கையிடம் {சீதையிடம்} கடுமையான தொனியிலேயே பேசினார்கள். அவர்கள் {அந்தப் பிசாசுகள்}, "நமது தலைவனை அவமதித்து இங்கே வசிக்கும் இவளைத் தின்றுவிடுவோம், இவளைச் சிதைப்போம், இவளைத் துண்டு துண்டாகக் கிழிப்போம்" என்றனர்.

தன் தலைவனின் பிரிவால் துன்பம் நிறைந்த சீதை ஆழமான பெருமூச்சுவிட்டு, அந்த ராட்சசிகளிடம், "மரியாதைக்குரிய மங்கையரே {ராட்சசிகளே}, தாமதமில்லாமல் என்னை உண்ணுங்கள்! நீலநிறத்தவரும், அலைபாயும் கூந்தல் கொண்டவரும், தாமரை இதழ்களைப் போன்ற கண்கள் கொண்டவருமான எனது கணவர் {ராமர்} இல்லாது நான் வாழ விரும்பவில்லை! உணவருந்தாமல், உயிர்மேல் கிஞ்சிற்றும் ஆசையில்லாமல், வேல மரத்திற்குள்ளிருக்கும் பெண் பாம்பு (ஒடுங்கி) {பனிக்ககாலத்தில் ஓய்வெடுக்கப் பாம்பு மரப்பொந்துக்குள் உறங்குதல்} போல இருந்து, என் அங்கங்களை மெலியச் செய்வேன். ரகு குல வழித்தோன்றலைத் {ராமரைத்} தவிர நான் வேறு எந்த மனிதனின் பாதுகாப்பையும் எப்போதும் நாடமாட்டேன் என்பது அறியுங்கள். இது நிச்சயம். இதை அறிந்த பிறகு, தகுந்ததென்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள்!" என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட கரடுமுரடான குரல் கொண்ட அந்த ராட்சசிகள் ராட்சசர்களின் மன்னனிடம் {ராவணனிடம்} சென்று அவள் {சீதை} சொன்னது அனைத்தையும் சொன்னார்கள்.

இப்படி அந்த ராட்சசிகளை அனைவரும் சென்ற பிறகு, அவர்களில் {ராட்சசிகளில்} ஒருத்தியும், அறம்சார்ந்த, ஏற்புடைய பேச்சு கொண்டவளும், திரிஜடை என்ற பெயரால் அறியப்படுபவளுமான ராட்சசி, விதேக இளவரசிக்கு {சீதைக்கு} ஆறுதல் கூறத் தொடங்கினாள். அவள் {திரிஜடை}, "ஓ! சீதையே கேள்! நான் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன்! ஓ தோழி, நான்சொல்வதை நம்பு! ஓ! அழகிய இடை கொண்டவளே, உனது அச்சத்தை விலக்கி, நான் சொல்வதைக் கேள். புத்திக்கூர்மை கொண்டவனும், ராட்சசர்களின் முதிய தலைவனுமான ஒருவன் அவிந்தியன் என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் {அவிந்தியன்}, ராமனின் நலத்தை எப்போதும் நாடுபவனாவான். அவன் {அவிந்தியன்}, உனக்காக என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

{அவிந்தியன்} "என் பெயரைச் சொல்லி சீதைக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டி, நான் சொன்னதாக, "உனது கணவனான வலிமைமிக்க ராமன் நன்றாக இருக்கிறான். அவனை லட்சுமணன் காக்கிறான். ரகுவின் அருளப்பட்ட அந்த வழித்தோன்றல் {ராமன்} ஏற்கனவே குரங்குகள் மன்னன் சுக்ரீவனின் நட்பைப் பெற்று, உனக்காகச் செயல்படத் தயாராக இருக்கிறான். மேலும், ஓ! அச்சம் கொண்ட மங்கையே, முழு உலகும் நிந்திக்கும் ராவணனைக் கண்டு அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஓ! மகளே, அவன் {ராவணன்} நளகூபரனிடம் {நளகுபேரனிடம்} பெற்ற சாபத்தின் காரணமாக நீ பாதுகாப்பாகவே இருப்பாய். உண்மையில், இந்தப் பாவி {ராவணன்}, தனது மருமகளான ரம்பையைக் களங்கப்படுத்தியதால் முன்பே சபிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் காமாந்தகப்பாவி {ராவணன்}, எந்தப் பெண்ணையும் பலவந்தமாக அடைவதற்கு சக்தியுடையவனல்ல. சுக்ரீவனால் பாதுகாக்கப்பட்டு, புத்திக்கூர்மையுள்ள சுமித்திரையின் மகனால் {லட்சுமணனால்} பின்தொடரப்பட்டு விரைவாக வரும் உனது கணவன் {ராமன்}, உன்னை மிக விரைவில் மீட்டுச் செல்வான் என்று சொல்" என்றான் {அவிந்தியன்}.

ஓ! மங்கையே {சீதையே}, தீய சகுனமாக, புலஸ்திய குலத்தின் தீய மனம் கொண்ட பாவியின் அழிவைக் குறிக்கும் மிகப் பயங்கரக் கனவொன்றை நான் {திரிஜடை} கண்டேன். இழிந்த செயல்கள் புரியும் இரவு உலாவியான இவன், உண்மையில் மிகத் தீயவனும் கொடூரனுமாவான். தனது இயல்பின் குறைபாடுகளால் அவன் {ராவணன்} தீய நடத்தையையும், பயங்கரங்களையும் மேற்கொள்கிறான். விதியால் தனது அறிவை இழந்த அவன் {ராவணன்}, தேவர்களுக்கே அறைகூவல் விடுகிறான். அவனது வீழ்ச்சியைக் குறிக்கும் அனைத்து குறியீடுகளையும் நான் எனது பார்வையில் {அந்தக் கனவில்} கண்டேன். தலைகள் மழிக்கப்பட்ட அந்தப் பத்துத் தலையன் {the Ten-headed} {தசக்ரீவன்}, உடலெங்கும் எண்ணெய் பூசி, சகதியில் மூழ்கினான். அடுத்த நொடியில் கழுதைகளால் இழுக்கப்பட்ட வாகனத்தில் கூத்தாடினான். முழுவதும் நிர்வாணமாக, தலை மழிக்கப்பட்டவர்களாக, சிவப்பு மலர்மாலைகள் தரித்து, களிம்பு சிவப்பு மேற்பூச்சு} பூசியிருந்த கும்பகர்ணனும், மற்றவர்களும், தென்திசை நோக்கி ஓடினார்கள்.

தலைக்கு மேல் குடையுடனும் தலைப்பாகை அணிந்து, வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த விபீஷணன் மட்டுமே, வெண்மலையின் உச்சியில் ஏறியதை நான் கண்டேன். வெண்மாலைகள் தரித்து, களிம்பு {வெண்சந்தனம்} அணிந்திருந்த அவனது நான்கு ஆலோசகர்களும் {அமைச்சர்களும்} அவனுடன் உச்சிக்கு ஏறுவதையும் நான் கண்டேன். எதிர்வரும் பயங்கரத்தில் இவர்கள் மட்டுமே காக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது. ராமனின் கணைகளால், இந்தக் கடல் சூழ்ந்த பூமி மறைக்கப்படுப்போகிறது. ஓ! மங்கையே, உனது கணவன் {ராமன்}, தனது புகழால் இந்த முழு உலகையும் நிறைப்பான். (தனது கணைகளால்), லட்சுமணன் அனைத்துப் புறங்களையும் எரிப்பதையும், எலும்புக்குவியல் மீது ஏறி தேனும், கண்ணமுதும் பருகுவதையும் கண்டேன். ஓ! மங்கையே, அழுது கொண்டு, இரத்தத்தால் நனைந்து, ஒரு புலியால் பாதுகாக்கப்பட்ட நீ, வடதிசை நோக்கி ஓடுவதையும் கண்டேன்! ஓ! விதேக இளவரசியே, ஓ! சீதை, தம்பியின் துணையுடன் இருக்கும் ரகு குல வழித்தோன்றலான உனது கணவனுடன் {ராமனுடன்} மீண்டும் சேர்ந்து, நீ விரைவில் மகிழ்ச்சியை அடைவாய்!" என்றாள் {திரிஜடை}.

இளமான்களின் கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சீதை}, திரிஜடையின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தலைவனுடன் சேரும் நம்பிக்கையை மீண்டும் வளர்க்க ஆரம்பித்தாள். கடுமையும் கொடுமையும் நிறைந்த பிசாசங்களான {ராவணனிடம் சென்ற} அந்தப் பாதுகாவலர்கள், திரும்பி வந்த போது, முன்பு போலவே திரிஜடையுடன் அமர்ந்திருக்கும் அவளைக் {சீதையைக்} கண்டனர்."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்