Sunday, October 12, 2014

அரணிகளைத் தூக்கிச் சென்ற மான்! - வனபர்வம் பகுதி 309

The | Vana Parva - Section 309 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வம்)

ஓர் அந்தணரின் ஆசிரமத்தில் இருந்து அவரது அணிகளையும், கடைக்கோலையும் ஒரு மான் தூக்கிச் செல்வது; அந்த அந்தணர் பாண்டவர்களிடம் வந்து அவற்றை மீட்டுத் தரும்படி கோருவது; தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரன் அந்த மானைத் தேடிச் செல்வது; பாண்டவர்கள் அம்மானைக் கண்டடைவது; நீண்ட நேரம் துரத்தி ஆயுதங்கள் வீசியும் மானைத் துளைக்க முடியாதது; மான் திடீரென மறைவது; அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்வது; நகுலன் துயரத்துடன் பேசுவது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தங்கள் மனைவி {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, பாண்டவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணை {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்த மங்காப் புகழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் காம்யக வனத்தைவிட்டு, காண்பதற்கு இனிய காட்சிகள் கொண்டதும், மரங்களும், இனிய பழங்களும் கிழங்குகளும் நிறைந்த துவைத வனத்திற்குத் திரும்பினான். தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள் பழங்களை மிகச் சொற்பமாக உண்டு, கடும் நோன்புகள் பயின்று அங்கே வசிக்கலாயினர். எதிரிகளை அடக்குபவர்களான, குந்தியின் மகனான அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ஜுனன், மற்றும் மாத்ரியிடம் பாண்டுவுக்குப் பிறந்த மற்ற மகன்கள் {நகுலனும் சகாதேவனும்}, கடும் நோன்புகள் பயின்று துவைத வனத்தில் வசித்து வந்தபோது, ஓர் அந்தணரின் காரணமாகப் பெரும் சிக்கலுக்கு ஆளானார்கள். எனினும் அக்காரியம் அவர்களது எதிர்கால மகிழ்ச்சிக்காகவே வந்ததாக அமைந்தது. அந்தக் குருக்களில் முதன்மையானோர் {பாண்டவர்கள்}, அந்த வனத்தில் வசித்து வந்தபோது ஏற்பட்ட சிக்கலைக் குறித்தும், இறுதியில் அது அவர்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சியைக் குறித்தும் உனக்கு முழுமையாகச் சொல்கிறேன். அதை நீ கேள்!

ஒரு முறை, ஒரு மான் திரிந்து கொண்டிருந்த போது, தவத்துறவுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஓர் அந்தணருக்குச் சொந்தமான இரு அரணிகளும் {#}, ஒரு கடைக்கோலும் {#} அதன் கொம்புகளில் மாட்டிக் கொண்டன. அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேகம் கொண்ட, நீண்ட எட்டுகள் வைக்கும் திறன் கொண்ட அந்தச் சக்தி மிக்க மான், அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆசிரமத்தை விட்டு வெகு வேகமாக ஓடியது. ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பொருட்கள் இப்படித் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட அந்த அந்தணர், தனது அக்னிஹோத்ரம் குறித்துக் கவலை கொண்டு, விரைவாகப் பாண்டவர்கள் முன் வந்தார். நேரத்தைக் கடத்தாமல், காட்டில் தனது தம்பிகளுடன் அமர்ந்திருந்த அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த துயர் மிகுந்த அந்த அந்தணர், இந்த வார்த்தைகளைச் சொன்னார் “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு மான் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரும் மரத்தில் மாட்டப்பட்டிருந்த எனது அரணிகளும், கடைக்கோலும், அதன் {மானின்} கொம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட அந்தச் சக்திமிக்க மான், நீண்ட எட்டுகள் வைத்து ஆசிரமத்தை விட்டு வேகமாக, அந்தப் பொருட்களுடன் ஓடிவிட்டது. ஓ! மன்னா, அதன் கால் தடங்களைக் கொண்டு அந்தச் சக்தி மிக்க மானை கண்டடைந்து, ஓ! பாண்டுவின் மகன்களே எனது அக்னிஹோத்ரம் நின்றுவிடாதவாறு, எனது அந்தப் பொருட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்" {என்றார் அந்த அந்தணர்}.

அந்த அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் மிகவும் கவலை கொண்டான். அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது தம்பிகளுடன் வெளியே கிளம்பினான். கவசம் பூண்டு, தங்கள் விற்களை எடுத்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், அந்த அந்தணருக்குச் சேவை செய்யும் நோக்கோடு, மானைத் தேடி விரைவாக வெளியே சென்றனர். நீண்ட தூரத்திற்கு முன்னரே அந்த மானைக் கண்டுபிடித்த அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள், அதன்மீது முள் அம்புகளையும், எறிவேல்களையும், கணைகளையும் அடித்தனர். ஆனால், பாண்டுவின் மகன்களால் அதனை எவ்வகையிலும் துளைக்க முடியவில்லை. அவர்கள் அதைக் கொல்ல நினைத்து, அதைத் தொடர்ந்து செல்லத் திணறிய போது, அந்தச் சக்திமிக்க மான் திடீரென மறைந்து போனது. மானின் மீதிருந்த தங்கள் பார்வையைத் தொலைத்த உன்னத மனம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்கள், களைத்துப் போய், ஏமாற்றம் அடைந்து, பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்பட்டு அந்தக் காட்டின் ஆழத்தில் {நடுவில்} இருந்த ஓர் ஆல மரத்தை அடைந்து, அதன் குளிர்ந்த நிழலில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் அமர்ந்த பிறகு, சோகத்தால் வாட்டப்பட்ட நகுலன், பொறுமையின்மையால் உந்தப்பட்டு, குரு குலத்தின் மூத்த அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது குலத்தில் {முயற்சியின்மையால்} அறம் எப்போதும் தியாகம் செய்யப்பட்டது கிடையாது; செருக்கால் செல்வத்தையும் இழந்தது கிடையாது. கேட்கப்பட்ட போது எந்த உயிரினத்துக்கும் "இல்லை!” என்று எப்போதும் சொன்னதில்லை. பின்னர் ஏன் தற்போதைய இந்நிகழ்வில், நாம் {அந்தணர் கேட்டு இல்லை என்று சொல்லும்} இந்தப் பெருந்துன்பத்தை அடைந்திருக்கிறோம்?” என்று கேட்டான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்