Tuesday, October 14, 2014

தம்பிகளுக்காக அழுத யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 311அ

Yudhishthira cried for his brothers!  | Vana Parva - Section 311a | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

தன் தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்டு யுதிஷ்டிரன் அழுது புலம்பியது; யமனைத் தவிர வேறு யாராலும் தன் தம்பிகளைக் கொன்றிருக்க முடியாத என யுதிஷ்டிரன் தீர்மானிப்பது; பிறகு தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தடாகத்தில் இறங்கியது; முன்பு போலவே யக்ஷன் எச்சரித்தது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்திரனின் புகழைக் கொண்ட தனது தம்பியர், யுகத்தின் முடிவில் தங்கள் கோளங்களில் {Spheres} {துறைகளில்} இருந்து விழுந்து கிடக்கும் லோகபாலர்களைப் போல இறந்து கிடப்பதைக் கண்டான் யுதிஷ்டிரன் {Yudhishthira}. தன் வில் மற்றும் கணைகளுடன் தரையில் விழுந்து இறந்து கிடக்கும் அர்ஜுனனையும், உயிர் இழந்து அசைவற்றுக் கிடக்கும் பீமசேனனையும், இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} சூடான நீண்ட பெருமூச்சுவிட்டு, துயரத்தில் ஏற்பட்ட கண்ணீரால் குளித்தான்.


தனது தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்ட வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, துயரத்தால் பதட்டம் கொண்ட இதயத்துடன், நிற்காது அழுது புலம்பத் தொடங்கி, “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட விருகோதரா {Vrikodara-பீமா}, "போர்க்களத்தில் துரியோதனனின் தொடைகளை எனது கதைகளால் நொறுக்குவேன்" என்று சொன்னாயே! ஓ! குருக்களின் புகழை அதிகரிப்பவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட உயர் ஆன்மா கொண்டவனே {மகாத்மாவே} {பீமனே}, உனது மரணத்தால், அவை அனைத்தும் கனியற்றதாகிவிட்டனவே! மனிதர்களின் வாக்குறுதிகள் பலனற்றதாயிருக்கலாம்; ஆனால் உன்னைக் குறித்துத் தேவர்கள் சொன்ன வார்த்தைகள் ஏன் கனியற்றதாகின?

ஓ! தனஞ்சயா {Dhananjaya- அர்ஜுனா}, நீ உனது தாயின் பிரசவ அறையில் இருந்தபோது, தேவர்கள், “ஓ! குந்தி, இந்த உனது மகன், ஆயிரம் கண் கொண்டவனுக்குச் {இந்திரனுக்குச்} சற்றும் குறைந்தவனல்ல!” என்று சொன்னார்கள். வடக்கேயுள்ள பாரிபாத்திர மலைகளில் “எதிரிகளால் திருடப்பட்ட (இந்தக் குலத்தின்) செழிப்பனைத்தும் தாமதமில்லாமல் இவனால் மீட்கப்படும். போர்க்களத்தில் இவனை எவரும் வீழ்த்த முடியாது. அதே வேளையில், இவனால் வீழ்த்த முடியாத யாரும் இருக்க மாட்டார்கள்" என்று அனைத்துயிர்களும் பாடின. பிறகேன், பெரும் பலம் கொண்ட அந்த ஜிஷ்ணு {Jishnu- அர்ஜுனன்} மரணத்துக்கு ஆட்பட்டான்? ஓ! எவனை நம்பி இந்தப் பேரிடர் அனைத்தையும் நாங்கள் பொறுத்தோமோ அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் எனது நம்பிக்கைகளையெல்லாம் கொன்று [1] இப்படித் தரையில் கிடக்கிறான்?

[1] மூலத்தில் உள்ள சம்ஹிருத்யா எனும் சொல்லுக்கு கொல்லுதல் என்று பொருள் எனச்சொல்கிறார் கங்குலி.

எதிரிகளை எப்போதும் கொல்பவர்களும், எந்த ஆயுதத்தாலும் தடுக்கப்படாதவர்களுமான குந்தியின் பலமிக்க மகன்களான பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய அந்த வீரர்கள் ஏன் எதிரியின் சக்திக்கு அடங்கினர்! இன்று இந்த இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} தரையில் கிடப்பதைக் கண்டும் இரண்டாகப் பிளக்காத இந்த எனது தீய இதயம் நிச்சயம் வஜ்ரத்தால் ஆனதாக {adamant =பிடிவாதம் நிறைந்ததாக=வஜ்ரம் அல்லது வரைக்கல் போன்ற கடினம் நிறைந்ததாக என்று பொருள் கொள்ளலாம்} இருக்க வேண்டும்! புனித ரித்துகளை அறிந்து, காலம் இடம் ஆகியவற்றை அறிந்து தவத்தகுதி கொண்டு, அனைத்து புனித சடங்குகளையும் செய்த இந்த மனிதர்களில் காளையரே, உங்களுக்குத் தகுந்த செயல்களைப் புரியாமல் ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்? ஐயோ, எதிரிகளால் வெல்லப்படாதவர்களே, உங்கள் மேனில் புண் கொள்ளாமல், உங்கள் நோன்புகள் {சபதங்கள்} நிறைவேறாமல் ஏன் இப்படிப் பூமியில் உணர்வற்று கிடக்கிறீர்கள்?” என்றான்{என்று சொல்லி அழுதான் யுதிஷ்டிரன்}. மலைச்சரிவுகளில் (அவர்கள் எப்போதும் உறங்குவது போல) இனிமையாகத் துயிலும் தங்கள் தம்பியரைக் கண்ட அந்த உயர் ஆன்ம மன்னன் {யுதிஷ்டிரன்}, துன்பம் மேலிட, வியர்வையில் குளித்து, துயர நிலையை அடைந்தான். பிறகு, “இது இப்படிஆனதே" என்று சொல்லி, துயரக்கடலின் நடுவில் நின்று, மனங்குழம்பிய அந்த மனிதர்களில் அறம் சார்ந்த தலைவன் {யுதிஷ்டிரன்}, அதற்கான (அந்தப் பேரழிவின்) காரணத்தை ஆலோசித்தான். பிறகு, இடம் நேரம் ஆகியவற்றின் பிரிவுகளை அறிந்த அந்த வலிமையான கரங்கள் மற்றும் உயர் ஆன்மா கொண்டவனால் {மகாத்மாவான யுதிஷ்டிரனால்}, செய்யத்தக்க தனது செயலைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.

இப்படித் துயரத்தால் மிகவும் அழுது புலம்பிய தர்மன் அல்லது தபுவின் {Dharma or Tapu,}மகனான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது ஆன்மாவை {மனதை} அடக்கி, இந்த வீர்ர்களைக் கொன்றவன் யார் எனத் தனது மனதில் நினைக்கத் தொடங்கினான். “இவர்களின் மேல் ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் ஏதுமில்லை. யாருடைய கால்தடங்களும் இங்கில்லை. யாரால் எனது தம்பிகள் கொல்லப்பட்டனரோ அவன் மிகுந்த வலிமை மிக்க உயிரினமாக {பூதமாக} இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மனப்பூர்வமாக நான் இதைச் சிந்திக்க வேண்டும். அல்லது முதலில் நான் இந்த நீரைக் குடித்துப் பிறகு அனைத்தையும் அறிவேன். பழக்கத்தினாலேயே கோணல் புத்தி கொண்ட துரியோதனன், கந்தர்வர்கள் மன்னனைக் கொண்டு ரகசியமாக இந்த நீர்நிலையை இங்கு வைத்திருக்க வேண்டும். எவனிடம் நன்மையும் தீமையும் சமமாக இருக்கிறதோ, தீய ஆசைகள் கொண்ட அந்த இழிந்தவனை எந்தப் புத்தியுள்ள மனிதனால்தான் நம்ப முடியும்? அல்லது, ஒருவேளை, தனது ரகசிய தூதர்கள் மூலம் இந்தச் செயலை அந்தத் தீய ஆன்ம கொண்டவன் செய்திருப்பானா?” என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.

இப்படி அந்தப் பெரும் புத்திக் கூர்மை கொண்டவன் {யுதிஷ்டிரன்} பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டான். “எனது தம்பிகளின் முகத்தின் நிறம் மங்கவில்லை!” என்று நினைத்த யுதிஷ்டிரன், {தன் தம்பியர்} இறந்தனர் எனினும் பிணத்தைப் போன்ற நிறமிழப்பு அவர்களுக்கு ஏற்பட வில்லை என்பதைக் கண்டு, அந்த நீர் நஞ்சு கலக்கப்பட்டது என்பதை நம்பவில்லை. பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} {இப்படித்} தொடர்ந்தான், “இந்த மனிதர்களில் முதன்மையானவர் ஒவ்வொருவரும் மழைவீழாறு {#} போன்றவர்கள். எனவே, அனைத்துப் பொருட்களுக்கும் குறித்த நேரத்தில் முடிவைக் கொண்டு வரும் யமனைத் தவிர வேறு யாரால் இவர்களை இப்படிக் கலங்கடித்திருக்க முடியும்?” {என்றான் யுதிஷ்டிரன்}

இதை உறுதியாகத் தீர்மானித்த அவன் {யுதிஷ்டிரன்}, அந்தத் தடாகத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள {நீராடலைத்} தொடங்கினான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} அதற்கு {தடாகத்துக்குள்} இறங்கிய போது, வானத்தில் இருந்து யக்ஷனால் {Yakshaஉதிர்க்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். {யக்ஷன்}, “நான் சிறு மீனைக் {உண்டு} கொண்டு வாழும் ஒரு கொக்கு. ஆவி பிரிந்தவர்களின் தலைவனுடைய {யமனின்} கட்டுப்பாட்டுக்கு என்னாலேயே உனது தம்பிகள் அனுப்பட்டனர். ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}, நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால், நீயும் ஐந்தாவது சவமாவாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ {நீரைக்} குடித்து, (உனக்குத் தேவைப்படும் அளவுக்கு) எடுத்துச் செல்!" என்றான் {யஷன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “நீ ருத்திரர்களில் முதன்மையானவனா? வசுக்களில் முதன்மையானவனா? மருதர்களில் முதன்மையானவனா? நான் கேட்கிறேன், நீ எந்தத் தேவன்? இதை ஒரு பறவையால் செய்திருக்க முடியாது! இமயம், பாரிபாத்திரம், விந்தியம், மலயம் { the Himavat, the Paripatra, the Vindhya, and the Malaya}ஆகிய இந்த மலைகளையும் எவன் வீழ்த்தியவன்? பலமிக்க மனிதர்களில் முதன்மையான உன்னால் செய்யப்பட்ட சாதனை பெரிது! ஒரு பெரும் மோதலில் தேவர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கூடக் கொல்லப்பட இயலாதவர்கள், உன்னால் கொல்லப்பட்டுள்ளனர்! எனவே உன்னால் செய்யப்பட்ட இந்தக் காரியம் மிகவும் அற்புதமானது! உனது காரியம் என்னவென்பதை நான் அறியேன். அதன் காரணத்தையும் நான் அறியேன். எனவே, எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவலும் பயமும் பெரிதாக இருக்கிறது! எனது மனம் பெரிதும் கலங்கியிருக்கிறது. எனது தலை வலிக்கிறது. எனவே, ஓ! வழிபடத்தகுந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். இங்கே வசிக்கும் நீ யார்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷன், “உனக்கு நன்மை விளையட்டும். நான் ஒரு யக்ஷன்; இருநிலையில் {நிலத்திலும் நீரிலும்} வாழும் பறவையல்லேன். என்னாலேயே, பெரும்பலமிக்க உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்!” என்றான் {யக்ஷன்}
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்