Thursday, October 16, 2014

வரங்களளித்த தர்மதேவன்! - வனபர்வம் பகுதி 312

The Lord of Justice granted boons! | Vana Parva - Section 312 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

யக்ஷன் சொன்னது போலவே பாண்டவர்கள் துயிலிலிருந்து எழும்புவது போலப் புத்துணர்ச்சி பெற்ற எழும்புவது; யுதிஷ்டிரனைப் பாராட்டிய தர்மதேவன், அவனுக்கு வரங்களை அருளியது; பாண்டவர்கள் அந்தணருக்கு அவரது அரணிகளைத் திருப்பிக் கொடுத்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு யக்ஷனின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாண்டவர்கள் எழுந்தனர்; அவர்களது பசியும், தாகமும் ஒரு கணத்தில் அவர்களை விட்டு அகன்றன. பிறகு யுதிஷ்டிரன், “வீழ்த்தப்பட முடியாதவராக, குளத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் உம்மை யக்ஷராக என்னால் எடுத்துக் {ஏற்றுக்} கொள்ள முடியவில்லை; ஆதலால் நீர் எந்தத் தேவன்? வசுக்களில் முதன்மையானவரா? ருத்திரர்களில் முதன்மையானவரா? மருதர்களின் தலைவரா? அல்லது வஜ்ரத்தைத் தாங்கும் தேவர்களின் தலைவரா {இந்திரனா}? எனது இந்தத் தம்பிகள் ஒவ்வொருவரும் போரில் நூறாயிரம் வீரர்களுக்குச் சமமானவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொல்லும் ஒரு வீரனையும் நான் காணவில்லை {கண்டதில்லை}! ஏதோ இனிமையான தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல அவர்களின் புலன்கள் புத்தணர்வு பெற்றிருப்பதை நான் காண்கிறேன். நீர் எங்களது நண்பரா? அல்லது எங்களது தந்தையா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான் பெரும் பராக்கிரமம் படைத்த நீதியின் தலைவன் {யமன்=தர்மதேவன்}. நான் உனது தந்தையுமாவேன்! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைக் காண விரும்பியே நான் இங்கு வந்தேன் என்பதை அறிந்து கொள்! புகழ், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, தூய்மை {பரிசுத்தம்}, வெளிப்படைத்தன்மை {candour = நடுநிலைமை}, பணிவு, உறுதியான நிலை, தானம், தவம், பிரம்மச்சரியம் ஆகியன எனது உடலாகும்! ஊறிழைக்காமை {அகிம்சை}, நடுநிலை {சமத்துவம்}, அமைதி, தவங்கள், தூய்மை {புனிதம்}, துர்க்குணம் விலக்கல் ஆகியவையே (என்னை அணுகுவதற்கான) கதவுகள். நீ எப்போதும் எனது அன்புக்குரியவனே! நல்லூழின் {#} காரணமாகவே நீ ஐந்துக்கும் [1] உன்னை அர்ப்பணித்திருக்கிறாய். மேலும் நல்லூழின் காரணமாகவே நீ ஆறை {ஆறு-ஐ} {ஷடபதீ-களை} [2] வென்றிருக்கிறாய். மனிதர்களை அடுத்த உலகிற்கு அனுப்பும் நிமித்தமாக, அந்த ஆறில், முதல் இரண்டு {பசி, தாகம் ஆகியன} வாழ்வின் முதல் பகுதியிலும்; இன்னும் இரண்டு {துக்கம், மோகம் ஆகியன} நடுப்பகுதியிலும், மீதம் உள்ள இரண்டு {மூப்பும், மரணமும்} கடைசியிலும் தோன்றும்.

[1] 1. மன அமைதி, 2. சுயக்கட்டுப்பாடு, 3. சிற்றின்பம் தவிர்த்தல், 4. ஒழிவு {ஓய்வு} 5.யோகத்தியானம் என்கிறார் கங்குலி.

[2] 1. பசி, 2. தாகம், 3. துக்கம், 4. மோகம் {மழுங்கிய [மயக்கம் தரும்] மனித உணர்வு}, 5. மூப்பு, 6. மரணம் என்கிறார் கங்குலி.

உனக்கு நன்மையே விளையட்டும், நான் நீதியின் தலைவன் {தர்ம தேவன்}, நான் உனது தகுதியைச் சோதிக்கவே இங்கு வந்தேன்! தீங்கில்லாத உன்னைச் சாட்சியாகக் கண்டு நான் மனம் நிறைந்தேன்; ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா} நான் உனக்கு வரங்களை அளிப்பேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} நீ என்னிடம் வரங்களைக் கேள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உனக்கு நிச்சயம் அளிப்பேன். என்னை வணங்குவோர், துயரங்கொள்ளார்!” என்றான் {யமன்}. யுதிஷ்டிரன் {யமனிடம்}, “அந்தணர் ஒருவரின் அரணிகளை ஒரு மான் தூக்கிச் சென்றது. எனவே, முதல் வரமாக, அந்த அந்தணரின் அக்னி வழிபாடு தடைபடாதிருக்கட்டும் என்று கேட்பேன்!” என்றான். யக்ஷன் {தர்மதேவன்} {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிரகாசமிக்கக் குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னைச் சோதிப்பதற்காக, மானின் வேடம் கொண்டு நானே, அந்த அந்தணரின் அரணிகளைத் தூக்கிச் சென்றேன்!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்! உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ! தேவனைப் போல இருப்பவனே, புதிதாக வேறு வரத்தைக் கேள்!” என்றான். யுதிஷ்டிரன், “காட்டில் பனிரெண்டு வருடங்களைக் கழித்தோம்; பதிமூன்றாவது வருடம் வந்துவிட்டது; இந்த வருடத்தை நாங்கள் எங்காவது கழிக்கும்போது யாரும் எங்களை அடையாளம் காணாது இருக்கட்டும்!" என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதற்கு அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்" என்றான். பிறகு, உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்ட குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மீண்டும் உறுதியளிக்கும் விதமாக, அவன் {தர்மதேவன்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உங்கள் சரியான உருவங்களில் {இயற்கையான உங்கள் தோற்றத்திலேயே} நீங்கள் {இந்த முழு} பூமியில் உலவினாலும், மூவுலகில் உள்ள எவரும் உங்களை அடையாளம் காண மாட்டார்கள். குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களே, எனது அருளால், ரகசியமாகவும், அடையாளம் காணப்படாமலும், இந்தப் பதிமூன்றாவது {13} வருடத்தை விராட நாட்டில் நீங்கள் கழிப்பீர்கள். உங்களில் ஒவ்வொருவராலும், அவரவர் விரும்பும் வடிவத்தை ஏற்க இயலும்! இப்போது நீ அந்த அந்தணருக்கு அவரது அரணிகளைக் கொடுக்கலாம். உன்னைச் சோதிப்பதற்காகவே நான் மானின் வடிவம் கொண்டு அவற்றைத் தூக்கிச் சென்றேன்! {என்று சொல்லி அரணிகளை யுதிஷ்டிரன் கையில் தர்மதேவன் கொடுத்திருக்க வேண்டும்}. ஓ! மனதிற்கினிய யுதிஷ்டிரா, நீ விரும்பும் மற்றுமொரு வரத்தைக் கேள்! நான் அதை உனக்கு அளிப்பேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனக்கு {அந்த} வரங்களை வழங்கியதன் மூலம் நான் இன்னும் மனநிறைவு கொள்ளவில்லை. என் மகனே {யுதிஷ்டிரா}, பெரியதும் ஒப்பற்றதுமான மூன்றாவது வரத்தை ஏற்றுக் கொள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ என்னால் பிறந்தவன், விதுரன் எனது பகுதிகளில் ஒருவன்!” என்றான் {தர்மதேவன்}.

அதன்பிறகு யுதிஷ்டிரன் {தர்மதேவனிடம்}, “தேவர்களுக்கு தேவனான நித்தியமான {தர்மதேவனான} உம்மை, எனது புலன்களைக் கொண்டு கண்டதே எனக்குப் போதுமானது! ஓ! தந்தையே {தர்மதேவரே}, நீர் எனக்கு என்ன வரமளித்தாலும், நான் அதை நிச்சயம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்! ஓ! தலைவா {தர்மதேவரே}, பேராசை, மூடத்தனம், கோபம், ஆகியவற்றை நான் எப்போதும் வெல்ல வேண்டும். மேலும், ஈகை {#}, உண்மை {சத்தியம்}, தவச்சடங்கு ஆகியவற்றில் எனது மனம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்!” என்று சொன்னான். அதற்கு நீதியின் தலைவன் {தர்மதேவன் - யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ நீதியின் தலைவனேயாகையால் {நானே ஆகையால்} இந்தக் குணங்கள் அனைத்தும் உன்னிடம் இயற்கையாகவே இருக்கின்றன! நீ கேட்டதை மீண்டும் அடைவாயாக!” என்றான் {தர்மதேவன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்து உலகங்களிலும் ஆழ்ந்து பார்க்கும் பொருளான வணங்கத்தக்க நீதியின் தலைவன் {தர்மதேவன்}, இவ்வார்த்தைகளைச் சொன்னதும் அங்கேயே மறைந்து போனான்; இனிமையாக உறங்கிய அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டனர். களைப்பு நீங்கிய அவ்வீரர்கள், ஆசிரமத்திற்குத் திரும்பி, அந்த அந்தணருக்கு, அவரது அரணிகளைத் திரும்பக் கொடுத்தனர்.

(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்