Friday, October 17, 2014

யுதிஷ்டிரனை உற்சாகப்படுத்திய பீமன்! - வனபர்வம் பகுதி 313

Bhima encouraged Yudhishthira! | Vana Parva - Section 313 | Mahabharata In Tamil

(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)

முனிவர்களிடமும் யதிகளிடமும் விடைபெற அனுமதி கோரிய பாண்டவர்கள்; யுதிஷ்டிரன் மயங்கி விழுந்தது; தௌமியர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீமன் யுதிஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; அந்தணர்களும் முனிவர்களும் பாண்டவர்களிடம் விடைபெற்றது; தாங்கள் அப்போதிருந்த இடத்தில் இருந்து ஒரு குரோச தூரம் சென்று ஆலோசனை நடத்திய பாண்டவர்கள்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி கண்டறியப்படாமல் கழிக்கப்பட வேண்டிய {அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடத்தை மாறுவேடத்தில்  கழிக்க, நீதியின் தலைவனால் {தர்மதேவனால்} கட்டளையிடப்பட்டவர்களும், உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்டு நோன்புகள் நோற்கும் உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்களுடன் கானக வாழ்வில் ஒன்றாக வசித்த கற்றோர் மற்றும் நோன்பு நோற்கும் துறவிகள் முன்பு அமர்ந்தனர். குறித்த வகையில் பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்க அனுமதி கோரும் நோக்கில், கூப்பிய கரங்களுடன் அவர்களிடம் {கற்றோர் மற்றும் துறவிகளிடம்} இந்த வார்த்தைகளை அவர்கள் {பாண்டவர்கள்} பேசினர்.

அவர்கள் {பாண்டவர்கள்},திருதராஷ்டிரரின் மகன்கள் எங்கள் நாட்டை வஞ்சகமாக அபகரித்தனர் என்பதும், எங்களுக்கு இன்னும் பல தீங்குகளைச் செய்தனர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே! நாங்கள் பெரும் துக்கத்துடன் பனிரெண்டு {12} வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டோம். கண்டறியப்படாமல் {ஆஞ்ஞாதவாசத்தில்} கழிக்க வேண்டிய பதிமூன்றாவது வருடம் மட்டுமே மீதம் இருக்கிறது. இப்போது நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய அந்த ஒரு வருடத்தைக் கழிக்க நீங்கள் அனுமதிப்பதே உங்களுக்குத் தகும். செற்றம் {#} நிறைந்த எங்கள் எதிரிகளான சுயோதனன் {துரியோதனன்}, தீய மனம் கொண்ட கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் எங்களைக் கண்டுபிடித்தால், குடிமக்களுக்கும், நமது நண்பர்களுக்கும் பெரும் தீங்கிழைப்பார்கள்! {அப்படி நடந்தால்} அந்தணர்களுடன் கூடிய நாங்கள் எங்கள் நாட்டில் மீண்டும் நிறுவப்படுவோமா?” என்றனர் {என்று கேட்டனர்}.

இதைச் சொன்னபிறகு, பரிசுத்த மனம் கொண்ட அறமன்னனான {தர்மராஜாவான} யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரம் மேலிட மயங்கினான். அதன்பிறகு, அவனது {யுதிஷ்டிரனின்} தம்பிகளுடன் சேர்ந்த அந்தணர்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} தேற்றத் தொடங்கினர். பிறகு தௌமியர், வலிமைமிக்க {சிறந்த} பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை அந்த மன்னனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சொன்னார். அவர் {தௌமியர் - யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ கற்றவன், இழப்பைத் தாங்கிக் கொள்ள இயன்றவன், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவன், புலன்களை அடக்கியவன்! இப்படிப்பட்ட முத்திரை கொண்ட மனிதர்கள் பேரிடர்களில் மதிமயங்கமாட்டார்கள். உயர் ஆன்மா கொண்ட தேவர்கள் கூட எதிரிகளை வெல்வதற்காகப் பலதரப்பட்ட இடங்களில் மாறுவேடங்களில் திரிந்திருக்கிறார்கள். இந்திரன், தனது எதிரிகளை வெல்லும் பொருட்டு நிஷாத நாட்டின் கிரிபிரஸ்தத்தில் {நகரம்} உள்ள ஆசிரமத்தில் மாறுவேடத்தில் வசித்துத் தனது முடிவை அடைந்தான்.

அதிதியின் கருவறையில் பிறவியெடுக்கும் முன்னர், தைத்தியர்களை அழிக்கும்பொருட்டு, ஹயக்கிரீவன் {குதிரை கழுத்து கொண்ட} வடிவமேற்ற விஷ்ணு நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தான். அதன்பிறகு குள்ளன் {வாமனன்} வேடத்தைத் தரித்த அவன் {விஷ்ணு}, தனது பராக்கிரமத்தால் பலியின் நாட்டை இழக்கச் செய்ததை நீ கேட்டிருக்கிறாய்! நீருக்குள் நுழைந்த ஹுதாசனன் {அக்னி}, அங்கேயே மறைந்திருந்து, தேவர்களின் காரியத்தைச் சாதித்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய். ஓ! கடமையை அறிந்தவனே {யுதிஷ்டிரா}, பகைவரை வெல்லும் நோக்கில், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ராயுதத்தில் நுழைந்த ஹரி அங்கேயே மறைந்திருந்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளரான {பிராமணரான} அவுர்வ {ஔர்வ} முனிவர் ஒரு காலத்தில் தேவர்களின் காரியத்திற்காகத் தனது தாயின் கர்ப்பத்திலேயே மறைந்திருந்தார் என்பதை நீ கேட்டிருக்கிறாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, பூமியின் அனைத்து பகுதியிலும் மறைந்திருந்த, சிறந்த சக்தி கொண்ட விவஸ்வத் {சூரியன்}, முடிவில் தனது எதிரிகளை அனைவரையும் எரித்தான். தசரதனின் வசிப்பிடத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்த, கடுஞ்செயல்கள் புரியும் விஷ்ணு {ராமன்}, போர்க்களத்தில் பத்துக்கழுத்தனை {ராவணனைக்} கொன்றான். முன்னர், பல இடங்களில் மாறுவேடத்தில் இருந்த உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள் தங்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் இப்படியே வென்றிருக்கிறார்கள்" என்றார் {தௌமியர்}.

இப்படித் தௌமியரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டவனும், சாத்திரங்களால் அடையப்பட்ட தன் ஞானத்தை நம்புபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது சுயநினைவை மீண்டும் அடைந்தான். பிறகு, வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனான வலிமை மிக்கக் கரங்கள் கொண்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமசேனன், மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மிகவும் உற்சாகமூட்டும் வகையில், “கடமையுணர்ச்சியுடன் செயல்படுபவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, (அனுமதிக்காக) உமது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பாரும். அவன் {அர்ஜுனன்} இன்னும் எத்தகு முரட்டுத்தனத்தையும் காட்டவில்லை. கடும் பராக்கிரமம் கொண்ட நகுலனும், சகாதேவனும் எதிரியை அழிப்பதற்கு முழுவதும் இயன்றவர்களாக இருப்பினும், என்னால் எப்போதும் தடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்! எங்களை நீர் எதில் ஈடுபடுத்துவீரோ அதிலிருந்து நாங்கள் எப்போதும் விலக மாட்டோம்! செய்ய வேண்டியதை எங்களுக்கு நீர் சொல்லும்! விரைவில் நாங்கள் நம் எதிரிகளை வெல்வோம்!” என்றான் {பீமன்}.

பீமசேனன் இதைச் சொன்னதும், அந்தணர்கள் பாரதர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லினர். பிறகு அவர்களது {பாண்டவர்களின்} அனுமதியைப் பெற்று, அவரவர் பகுதிகளுக்குச் சென்றனர். வேதங்களை அறிந்த முனிவர்களிலும், யதிகளிலும் முதன்மையானவர்களும், பாண்டவர்களை மீண்டும் காண மிகுந்த ஆவல் கொண்டவர்களுமான அவர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். பிறகு, கற்ற வீரர்களும், நோன்புகள் கொண்டவர்களுமான அந்த ஐந்து பாண்டவர்களும் தௌமியருடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} {அங்கிருந்து} கிளம்பினர். தனித்தனி அறிவியல்களையும் {சாத்திரங்களையும்}, மந்திரங்களையும், எப்போது அமைதி தீர்மானிக்கப்பட வேண்டும், எப்போது போர் தொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நன்கறிந்த மனிதர்களில் புலியான அவர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும், கண்டறியப்படக்கூடாத வாழ்வுக்குள் நுழைவதற்காக, அடுத்த நாளில் ஒரு குரோச தூரம்* சென்று, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்யும் நோக்கில் கீழே அமர்ந்தனர்.

*குரோச தூரம்- 2.0 - 2.5மைல் தூரம் (அ) கூப்பிடும் தூரம்.

*********ஆரணேயப் பர்வம் முற்றிற்று*********

*********வன பர்வம் முற்றிற்று*********

இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்