Wednesday, November 05, 2014

கீசகனிடம் சென்றாள் திரௌபதி! - விராட பர்வம் பகுதி 15

Draupadi went to Kichaka! | Virata Parva - Section 15 | Mahabharata In Tamil

(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 2)


இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : கீசகன் சுதேஷ்ணையிடம் பேசுவது; கீசகனிடம் இரக்கம் கொண்ட சுதேஷ்ணை அவனுக்கு ஒரு திட்டத்தைச் சொல்வது; அத்திட்டத்தின் படியே திரௌபதியை கீசகனிடம் சுதேஷ்ணை அனுப்பியது …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த இளவரசியால் {திரௌபதியால்} நிராகரிக்கப்பட்ட கீசகன், வெறிகொண்ட காமத்தால் தாக்குண்டு, உடைமைத்தன்மை குறித்த உணர்வுகளை மறந்து சுதேஷ்ணையிடம், “கேகேயன் மகளே {சுதேஷ்ணையே}, உனது சைரந்திரி {மாலினி என்ற திரௌபதி} எனது கரங்களுக்குள் வருவது போல நீ செயல்படு. ஓ! சுதேஷ்ணை, யானை நடை கொண்ட அந்தக் காரிகை என்னை ஏற்கும் வழிகளைக் கடைப்பிடி; {என் உயிரை} உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஆசையால் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் {கீசகன்}”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனின் {கீசகனின்} பயங்கரப் புலம்பல்களைக் கேட்ட விராடனின் புத்திசாலி மனைவியான அந்த மென்மையான பெண் {சுதேஷ்ணை} அவனிடம் இரக்கம் கொண்டாள். தனக்குள்ளேயே ஆலோசித்து, கீசகனின் நோக்கத்தையும், கவலையோடு இருக்கும் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} நினைத்துப் பார்த்த சுதேஷ்ணை அந்தச் சூதனின் மகனிடம் {கீசகனிடம்}, “ஏதாவதொரு விழாவின் போது, நீ எனக்காகப் பலகாரங்கள் மற்றும் மது வகைகளைக் கொள்வன செய். அதன் பின்னர் நான் அந்த மதுவைக் கொண்டு வரும் பாசாங்கில், எனது சைரந்திரியை {மாலினி என்ற திரௌபதியை} உன்னிடம் அனுப்புகிறேன். அவள் {சைரந்திரி) அங்கே தனிமையில் வரும்போது, குறுக்கீடு ஏதும் இல்லாமல், நீ விரும்பியவாறு அவளிடம் {சைரந்திரியிடம்} நகைச்சுவை செய். இப்படி அமைதிப்படுத்துவதன்மூலம், அவள் தனது மனதில் உன்னை விரும்பலாம்” என்றாள் {சுதேஷ்ணை}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்டதும் அவன் {கீசகன்}, தனது சகோதரியின் {சுதேஷ்ணையின்} அறையில் இருந்து வெளியேறினான். விரைவில் ஒரு மன்னனுக்குத் தகுந்த வகையில் நன்கு வடிகட்டப்பட்ட மதுவைக் கொள்முதல் செய்தான். பிறகு திறன் கொண்ட சமையற்கலைஞர்களை நியமித்து, தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வகைகளிலான பலகாரங்களையும், சுவையான பானங்களையும் மற்றும் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட பல வகைகளிலான இறைச்சிகளையும் தயார் செய்தான். இவை அனைத்தும் முடிந்த பிறகு, மென்மையான பெண்ணான சுதேஷ்ணை, ஏற்கனவே கீசகனுடன் ஆலோசித்தபடி, தனது சைரந்திரியை கீசகனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி, அவளிடம் {மாலினி என்ற திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நான் தாகத்தால் துன்புறுவதால், எழுந்து, மதுவைக் கொண்டு வர கீசகன் வசிப்பிடம் செல்” என்றாள் {சுதேஷ்ணை}.

அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, என்னால் கீசகனின் அறைக்குச் செல்ல இயலாது. ஓ! ராணி {சுதேஷ்ணையே}, அவன் {கீசகன்} எப்படிப்பட்ட வெட்கங்கெட்டவன் என்பதை நீயே அறிவாய். ஓ! களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! அழகான பெண்ணே, உனது அரண்மனையில் எனது கணவர்களுக்கு விசுவாசமற்றவளாகி காம வாழ்வை என்னால் வாழ முடியாது. ஓ! மென்மையான பெண்ணே, ஓ! அழகானவளே, உனது வீட்டுக்குள் நுழையும் முன்னர் நான் வைத்த நிபந்தனைகளை நினைத்துப் பார். ஓ! வசீகரமான சுருள் முனைகளுடைய கேசம் கொண்டவளே, காம தேவனால் தாக்கப்பட்ட மூடனான கீசகன் என்னைப் பார்த்தால், என்னை அவமதிப்பான்.

எனவே, நான் அவன் {கீசகன்} இருக்கும் இடத்திற்குச் செல்லமாட்டேன். ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, உனக்குத்தான் நிறையப் பணிப்பெண்கள் இருக்கிறார்களே. உனக்கு மங்களம் உண்டாகட்டும். என்னை நிச்சயம் கீசகன் அவமதிப்பானாதலால், அவர்களில் ஒருத்தியை அனுப்பு” என்றாள் {திரௌபதி}. அதற்கு சுதேஷ்ணை, “எனது வசிப்பிடத்தில் இருந்து என்னால் அனுப்பப்படுவதால், அவன் உனக்குத் தீங்கிழைக்க மாட்டான்” என்றாள். இப்படிச் சொன்ன அவள் {சுதேஷ்ணை}, அவளது கையில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொடுத்தாள். பயம் நிறைந்து, அழுது கொண்டு, பாதுகாப்புக்காகத் தேவர்களிடம் மனதுக்குள்ளேயே வேண்டுதல் செய்த திரௌபதி, மதுவைப் பெறுவதற்காகக் கீசகன் வசிப்பிடத்திற்குக் கிளம்பினாள். அவள் {மாலினி என்ற திரௌபதி}, “எனது கணவர்களைத் தவிர வேறொரு மனிதரை நான் அறியாததால், அந்த அறத்தின் உண்மைத்தன்மையால் {சத்தியத்தால்}, நான் கீசகனின் முன்னிலைக்குச் சென்றாலும், அவனால் {கீசகனால்} என்னை வீழ்த்த முடியாது போகட்டும்” என்று சொன்னாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஆதரவற்ற காரிகை {திரௌபதி} பிறகு, ஒரு நொடி சூரியனைப் புகழ்ந்தாள். அவள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் கருத்தில் கொண்ட சூரியன், காட்சிக்குப் புலப்படாமல் அவளை {திரௌபதியை} பாதுகாக்க ஒரு ராட்சசனுக்குக் கட்டளையிட்டான். அந்த நேரத்தில் இருந்து அந்த ராட்சசன் அந்தப் பழியற்ற மங்கையை எந்தச் சூழ்நிலையிலும் காக்க ஆரம்பித்தான். பயந்த புறாவைப் போலத் தன் முன்னிலையில் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்ட அந்தச் சூதன் {கீசகன்}, தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அடுத்தக் கரைக்குச் செல்ல விரும்பும் ஒருவன், ஒரு படகை அடைந்தால் எவ்வளவு மகிழ்வானோ அவ்வளவு மகிழ்ந்தான்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்