Sunday, November 30, 2014

சுசர்மன் விராடன் மோதல்! விராட பர்வம் பகுதி 32

The encounter between Susarma and Virata!
Virata Parva - Section 32 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 7)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : திரிகார்த்தர்களுக்கும், மத்ஸ்யர்களுக்கு இடையில் நடந்த போர்; சுசர்மனுக்கும் விராடனுக்கும் இடையே நடந்த மோதல் ஆகியவற்றைக் குறித்த வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து புறப்புட்டு வெளியே சென்று, போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற வீரர்களான மத்ஸ்யர்கள், சூரியன் தீர்க்க ரேகையை {meridian} கடக்கும்போது {சூரிய அஸ்தமனத்தின்போது} திரிகார்த்தர்களை முறியடித்தார்கள். உக்கிரத்தால் உற்சாகமடைந்து, {எதிரி} மன்னனை அடைய விரும்பிய அந்த ஈரணியினரும் {இரு அணியினரும்}; போரில் அடக்கப்படமுடியாதவர்களான அந்தப் பெரும் பலமிக்கத் திரிகார்த்தர்களும், மத்ஸ்யர்களும் பெரும் கர்ஜனை செய்தார்கள். பிறகு, ஈரணிகளையும் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த போராளிகளால் நடத்தப்பட்ட பயங்கரமான மதம் கொண்ட யானைகள், தோமரங்களாலும், அங்குசங்களாலும் தூண்டப்பட்டு ஒன்றுக்கொன்று மோத வைக்கப்பட்டன.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரியன் கீழே அடிவானத்தில் இருந்தபோது, ஈரணியினரின் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைகள் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற அந்த மோதல், மயிர்க்கூச்சரியும் வகையிலும், யமனுடைய நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்கக் கணிக்கப்பட்டதாகவும், கடுமையாகவும், பயங்கரமாகவும், பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரைப் போலவும் இருந்தது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்காகப் போராளிகள் விரைந்தபோது, அடர்த்தியான தூசிப்படலம் எழுந்தது. எனவே, {யாராலும்} எதையும் பார்க்க முடியவில்லை.

படைகளின் மோதலால் ஏற்பட்ட அந்தத் தூசிப்படலத்தால், பறவைகள் பூமியில் விழத்தொடங்கின. அடர்த்தியாக இருந்த கணைமழைக்குப் பின்னால் சூரியனே மறைந்து போனான். ஆநேகமாயிரம் மின்மினிப்பூச்சிகள் இருப்பது போல ஆகாயம் பிரகாசமாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தண்டுகளைக் கொண்ட தங்கள் விற்களை ஒரு கையில் இருந்து மறுகைக்கு மாற்றிய அந்த வீரர்கள், இடமாகவும், வலமாகவும் தங்கள் கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தேர்கள் தேர்களோடும், காலாட்படை காலாட்படையோடும் குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், யானைகள் பெரும் பலமிக்க யானைகளோடும் மோதிக் கொண்டன. வாட்கள், கோடரிகள், பராசங்கள், எறிவேல்கள், இரும்பு கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த வலிய கரங்கள் கொண்ட போர்வீரர்கள் ஒருவருக்கொருவர் உக்கிரமாகத் தாக்கிக் கொண்டாலும், அந்த மோதலில் எந்த அணியாலும் மற்ற அணியை முறியடித்து வெற்றி காண முடியவில்லை. அழகான மூக்குகளுடன் சிலவும், மேல் உதடு ஆழமாக வெட்டப்பட்ட சிலவும், காது வளையங்களுடன் சிலவும், காயங்களால் வகுக்கப்பட்ட சிலவும், நன்கு வெட்டி நேர்த்தியாக்கப்பட்ட முடிகளோடு கூடிய சிலவும் எனப் பல தலைகள் தூசி படிந்த தரையில் உருண்டன.

விரைவில், கணைகளால் அறுக்கப்பட்டு. ஆச்சா மரங்களின் அடிமரத்தைப் போலக் கிடந்த க்ஷத்திரிய வீரர்களின் அங்கங்களால், அந்தப் போர்க்களமே நிறைந்தது. காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும், பாம்புகளின் உடல்களைப் போல இருந்த சந்தனம் பூசப்பட்ட கரங்களும் சிதறிக் கிடந்ததால், அந்தப் போர்க்களம் பார்ப்பதற்கு மிக அழகாக ஆனது {became exceedingly beautiful}. தேர்கள் தேர்களோடும், குதிரையில் இருப்போர் குதிரையிலிருப்போராடும், காலாட்படையினர் காலாட்படையினரோடும், யானைகள் யானைகளோடும் மோதிக்கொண்ட போது எழுந்த பயங்கரமான தூசிப்படலம், விரைவில் இரத்த ஊற்றால் நனைந்தது. போராளிகளில் சிலர் மயக்கமடைந்தனர். மனிதம், நட்பு, உறவு என்பனவற்றைக் கருதாமல், ஈவிரக்கம் பாராமல் வீரர்கள் போரிடத் தொடங்கினர். கணைமழையால் அவர்களது பார்வையும், வழியும் தடைசெய்யப்பட்டபோது, கழுகுகள் தரையில் இறங்கத் தொடங்கின. ஆனால், என்னதான் அந்த வலிய கரங்கள் கொண்ட போராளிகள் மூர்க்கமாகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டாலும், ஈரணியைச் சேர்ந்த வீரர்களாலும் தங்கள் எதிரிகளை வீழ்த்துவதில் வெல்ல முடியவில்லை.

எதிரிகளில் நூறு பேரைக் கொன்ற சதானீகனும்,  நானூறு பேரைக் கொன்ற விசாலாக்ஷனும் {மதிராக்ஷனும்} அந்தப் பெரும் திரிகார்த்தப் படையின் மத்தியில் நுழைந்தனர். அந்த அடர்ந்த திரிகார்த்தப்படைக்குள் புகுந்த அந்தப் புகழ்பெற்ற வலிமைமிக்க வீரர்கள், தங்கள் எதிரிகளுடன் நெருக்கமாகப் போர் புரிந்தனர். அந்தப் போராளிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கிழித்தனர். வலுவான எண்ணிக்கை கொண்ட திரிகார்த்தர்களின் தேர்கள், ஒன்றுதிரட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்ட அந்த வீரர்கள், கடைசியாக அதை நோக்கித் தங்கள் தாக்குதலைச் செய்தனர்.

சூரியதத்தனைத் தனது தேரிலும், மதிராக்ஷனைத் தனக்குப் பின்னாலும் கொண்டிருந்த தேர் வீரர்களில் முதன்மையான மன்னன் விராடன், அந்த மோதலில் ஐநூறு தேர்களையும், எண்ணூறு குதிரைகளையும், பெரும் தேர்களில் இருந்த ஐந்து வீரர்களையும் அழித்து, அந்தப் போர்க்களத்தில் தனது தேரின் மீது இருந்து தனது பல்வேறு திறமைகளை {தந்திர உத்திகளை} வெளிப்படுத்தினான். இறுதியில் மன்னன் {விராடன்}, தங்கத்தேரில் இருந்த திரிகார்த்த ஆட்சியாளனை {சுசர்மனை} எதிர்த்தான். உயர் ஆன்மா கொண்டவர்களும், பலமிக்க வீரர்களுமான அவர்கள், {தங்களுக்குள்} சண்டையிட விரும்பி, மாட்டுக்கொட்டகையில் உள்ள இரு காளைகள் போல உறுமிக் கொண்டு விரைந்தனர்.

பின்பு, மனிதர்களில் காளையும், போரில் கட்டுக்கடங்காதவனுமான திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன், தேரில் இருந்து புரியும் தனிப்போர் செய்ய மத்ஸ்யனுக்கு {விராடனுக்குச்} சவால்விட்டான். பிறகு சினத்தால் துடித்த அந்தப் போர்வீரர்கள் தங்கள் தேர்களில் ஒருவரை ஒருவர் எதிர்த்தபடி மழையூற்றைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையைப் பொழியத் தொடங்கினர்.  ஒருவரிடம் ஒருவர் சினம் கொண்டவர்களும், ஆயுதங்களில் நிபணத்துவம் கொண்டவர்களுமான அந்த இரு கடும் போர்வீரர்களும் வாட்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைத் தாங்கி, ஒருவரை ஒருவர் கூர்மையான கணைகளால் தாக்கிக் கொண்டு (போர்க்களத்தில்) களமாடினர்.

மன்னன் விராடன், சுசர்மனை பத்து கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளாலும் துளைத்தான். அபாயகரமான ஆயுதங்களை அறிந்த, போர்க்களத்தில் கட்டுக்கடங்காத சுசர்மனும், மன்னன் மத்ஸ்யனை {விராடனை} கூர்மையான ஐம்பது கணைகளால் துளைத்தான். பிறகு, ஓ! பலமிக்க ஏகாதிபதியே {ஜனமேஜயா}, போர்க்களத்தில் எழுந்த புழுதியின் விளைவாக, சுசர்மன் மற்றும் மத்ஸ்ய மன்னன் ஆகியோரது படைவீரர்களால் ஒருவரை ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்