Sunday, December 07, 2014

“நீர் ஏன் அலியானீர்?” - விராட பர்வம் பகுதி 45

Why did you become a eunuch? | Virata Parva - Section 45 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 20)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : உத்தரன் அர்ஜுனனிடம் அவன் ஏன் அலியாக நேரிட்டது என்பது குறித்து வினவுவது; அர்ஜுனன் அளிக்கும் விளக்கம்; அர்ஜுனன் தனியாகவும், கௌரவர்கள் அணியாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டி உத்தரன் அஞ்சுவது; அர்ஜுனன் உத்தரனுக்குத் துணிவூட்டி தேரை நடத்தச் செய்தது...

உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்ட இந்தப் பெரிய தேரில் ஏறும். (எதிரிப்) படையின் எந்தப் பகுதிக்குள் நீர் ஊடுருவ வேண்டும்? உம்மால் கட்டளையிடப்படும் நான், உம்மை அங்கே அழைத்துச் செல்வேன்!” என்றான்.

அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அஞ்சுவதற்கான எந்தக் காரணமும் உனக்கில்லை. ஓ! பெரும் வீரா, நான் உனது எதிரிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, நீ வசதியாக {சுகமாக} இரு. நடக்கவிருக்கும் அடிதடிச்சண்டையில் {melee}, பயங்கரமான பெரிய சாதனைகளைச் செய்து, நான் உன் எதிரிகளுடன் போரிடுவேன். எனது தேரில் அந்த அம்பறாத்தூணிகள் அனைத்தையும் விரைந்து கட்டு. (அவற்றுக்கிடையில்) இருக்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முனை பளபளப்பாக்கப்பட்டதுமான ஒரு வாளை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொள்” என்றான் {அர்ஜுனன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்தச் சொற்களைக் கேட்ட உத்தரன் அனைத்துச் சோம்பலையும் கைவிட்டான். மரத்தில் இருந்து விரைந்து இறங்கி, தன்னுடன் அர்ஜுனனின் ஆயுதங்களைக் கொண்டு வந்தான். பிறகு அர்ஜுனன் அவனிடம் {உத்தரனிடம்}, “நான் கௌரவர்களுடன் போரிட்டு, உனது பசுக்களை மீட்பேன். என்னால் பாதுகாக்கப்பட்ட நிலையில், இந்தத் தேரின் மேல் பாகம் உனக்கு ஒரு அரணாக இருக்கும். வழிகளும், குறுகிய சந்துகளும் மற்றும் தெருக்களின் இதர பகுதிகளும் அந்த அரண் {கோட்டை} கொண்ட நகரத்தின் மாளிகைகளாக இருக்கும். இந்த எனது கரங்கள், அதன் {அரணின்} மதில்களாகவும் நுழைவாயில்களாகவும் இருக்கும். இந்தத் திரிதண்டமும் {ஏர்க்கலப்பை போன்ற இந்தத்தண்டும்}, எனது அம்பறாத்தூணியும் எதிரிகள் அணுகாதபடி தற்காப்பு படைகளாக அமையும். ஒற்றையானதும், பிரம்மாண்டமானதுமான எனது இந்தப் பதாகையே {கொடியே}, உனது நகரத்தில் இருக்கும் அனைத்துக் கொடிகளுக்கும் சமமாக இருக்காதா? இந்த எனது வில்லின் நாண், கவண்பொறிகளாகவும் {Catapult – உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி}, தகரிகளாகவும் {பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி} செயல்பட்டு, முற்றுகையிட்டிருப்போரின் ஆவிகளின் மீது ஏவுகணைகளை உமிழும். தூண்டப்பட்ட எனது கோபம் அவ்வரணை வல்லமைமிக்கதாகச் செய்யும். {அப்போது எழும்} எனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி உனது தலைநகரின் பேரிகைகளை ஒத்திருக்காதா? காண்டீவம் தாங்கிய என்னால் ஓட்டப்படும் இந்தத் தேர், எதிரிப்படையால் வீழ்த்த முடியாததாக இருக்கும். ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் இவற்றைக் கண்டு இனியும் அஞ்சமாட்டேன். போரில், கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, இந்திரனுக்கும் உள்ள உறுதியைப் போன்ற உமது உறுதியை நான் அறிவேன். ஆனால் இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, நான் தொடர்ந்து மனக்குழப்பத்துக்கு உள்ளாகிறேன். ஒரு நிச்சயமான முடிவுக்கு வர இயலாத மூடனாக இருக்கிறேன். இவ்வளவு அழகிய அங்கங்களும், மங்கலக்குறிகளையும் கொண்ட ஒரு மனிதன், எத்தகு துயர்நிறைந்த சூழல் வந்தால் தனது ஆண்மையை இழப்பான் {அலியாவான்}? உண்மையில் உம்மைக் கண்டால் மகாதேவனோ {சிவனோ}, இந்திரனோ, கந்தர்வர்களின் தலைவனோ {குபேரனோ}, மூன்றாவது பாலினப் போர்வையில் {மாறுவேடத்தில்} வசிப்பது போலத் தெரிகிறது” என்றான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் எனது அண்ணனின் {யுதிஷ்டிரரின்} ஆணையை ஏற்றுக் கொண்டு, ஓராண்டு முழுவதும் இந்த நோன்பை நோற்று வருகிறேன் என்பதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {உத்தரா}, உண்மையில் நான் அலியில்லை. ஆனால், இன்னொருவரின் {ஊர்வசியின்} விருப்பத்திற்கு {சாபத்துக்கு} அடிபணிந்தும், அறத்தகுதிகளில் விருப்பம் கொண்டுமே, நான் இந்த அலித்தன்மையேற்கும் நோன்பை நோற்று வந்தேன். ஓ! இளவரசே {உத்தரா}, நான் இப்போது அந்த நோன்பை முடித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “இப்போது என் சந்தேகம் முற்றிலும் ஆதாரமற்றது என்று என்னைக் காணச் செய்ததால், ஒரு மகத்தான உதவியை இன்று நீர் எனக்குச் செய்திருக்கிறீர். உண்மையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, உம்மைப் போன்ற ஒரு மனிதன் அலியாக இருக்க முடியாது. போர்க்களத்தில் எனக்கு இப்போது ஒரு கூட்டாளியைப் பெற்றுவிட்டேன். என்னால் இப்போது தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது அச்சங்கள் விலகின. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கட்டளையிடும். கற்ற ஆசானால் தேரோட்டப் பயிற்றுவிக்கப்பட்ட நான், ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, எதிரிப் படைத்தலைவர்களின் தேர்களை உடைக்கவல்ல உமது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பேன். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, வாசுதேவனின் தாருகனைப் போன்றோ, சக்ரனின் {இந்திரனின்} மாதலி போன்றோ, நான் திறமைமிக்கத் தேரோட்டி {ரதசாரதி} என்பதை அறிந்து கொள்ளும்.

(உமது தேரின்) வலதுகை துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டிருப்பதும், ஓடும்போது {அதன்} குளம்புகள் {பாதம்போன்ற அடிக்கால்கள்} தரையில் படுவது அரிதாகவே தெரிவதுமான இந்தக் குதிரை, கிருஷ்ணனின் சுக்ரீவத்திற்கு {சுக்ரீவம்} ஒப்பாயிருக்கிறது. தன் இனங்களில் முதன்மையானதும், இடது துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டதுமான இந்த மற்றொரு அழகிய குதிரையை, மேகபுஷ்பத்துக்கு {மேகபுஷ்பம்} இணையான வேகம் கொண்டதாக நான் கருதுகிறேன். தங்கக்கவசம் பூண்டதும், இடதுபுறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டதுமான இந்த (மூன்றாவது) அழகிய குதிரையை, வேகத்தில் சைப்பியத்திற்கு {சைப்பியம்} நிகரானதாகவும், அதைவிடப் பலத்தில் மேன்மையானதாகவும் நான் கருதுகிறேன். வலப்புறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த (நான்காவது) அழகிய குதிரையை, வேகத்திலும் பலத்திலும் வலாஹகத்திற்கு {வலாஹகம்} மேன்மையானதாக நான் கருதுகிறேன். உம்மைப்போன்ற ஒரு வில்லாளியைப் போர்க்களத்தில் சுமப்பதற்கு இந்தத் தேர் தகுதிவாய்ந்ததாக இருக்கிறது. நீரும் இந்தத் தேரில் இருந்து போரிடத் தகுதி வாய்ந்தவராக இருக்கிறீர். இதைதான் நான் நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.

வைம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பெரும் சக்தி கொண்ட அர்ஜுனன், தனது கரங்களில் இருந்த கடகங்களைக் {சங்கு வளையங்களைக்} களைந்து, தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகிய கையுறைகளை அணிந்து கொண்டான். பிறகு, சுருண்ட தனது கரிய கூந்தலை, ஒரு வெண்துணியால் கட்டினான். பிறகு முகம் கிழக்கு பார்த்தபடி, அந்த அற்புதத் தேரில் அமர்ந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது உடலைச் சுத்திகரித்து, ஆன்மாவைக் குவித்து, தன் மனதில் தனது அனைத்து ஆயுதங்களையும் நினைவுகூர்ந்தான் {தியானித்தான்}. அனைத்து ஆயுதங்களும் வந்து, அரசமகனான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, நாங்கள் இங்கே இருக்கிறோம். ஓ! இந்திரனின் மகனே, நாங்கள் உனது பணியாட்கள்” என்று சொல்லின. அவற்றை வணங்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, அவற்றைத் தனது கரங்களில் பெற்றுக் கொண்டு, அவற்றிடம் {அந்த ஆயுதங்களிடம்}, “எனது நினைவில் வசிப்பீர்களாக” என்றான் {அர்ஜுனன்}.

தன் அனைத்து ஆயுதங்களையும் அடைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} மகிழ்ச்சியாகத் தெரிந்தான். பிறகு, விரைந்து தனது வில்லான காண்டீவத்தில் நாணேற்றி, அதில் நாணொலி எழுப்பினான். அவ்வில்லின் நாணொலி இரு பலமிக்கக் காளைகளின் மோதலைப் போல் அதிக ஒலியுடன் இருந்தது. அப்படிப் பூமியை நிறைத்த அவ்வொலி பயங்கரமானதாக இருந்தது. எல்லாப்புறங்களிலும் வீசிய காற்று உக்கிரமாக வீசியது.
விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.

[1] “சில உரைகள் ஒரே பெரிய விண்கல் விழுந்ததாகச் சொல்கின்றன” என்கிறார் கங்குலி.

[2] “சில உரைகளில் மஹா-துருமம் {Maha-drumam) என்பதற்குப் பதில், பாரதத் துவிஜம் {Bharata dwijam} என்றும் மஹா-ஹர்தம் {Maha-hardam} என்று இருக்கின்றன. அப்படியென்றால் “(எதிரிப்படையின்) பதாகைகள் {கொடிகள்} நடுங்க ஆரம்பித்தன” என்றும் “பெரும் குளங்கள் கலங்கின” என்றும் பொருள் வரும்” என்கிறார் கங்குலி.

பிறகு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டவர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நீர் தனியாக இருக்கிறீர். இந்தப் பலமிக்கத் தேர்வீரர்களோ பலராக இருக்கின்றனர். அனைத்து வகை ஆயுதங்களிலும் திறம்பெற்ற இந்த அனைவரையும் போர்க்களத்தில் நீர் எப்படி வெல்லப்போகிறீர்? ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனரே}, நீர் ஒரு தொண்டருமற்றிருக்கிறீர்; அதே வேளையில் கௌரவர்களுக்குப் பலர் இருக்கின்றனர். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மருகில் இருக்கும் நான் இதற்காகவே அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன்” என்றான் {உத்தரன்}.

உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவனை {உத்தரனை} நோக்கி, “ஓ! வீரா {உத்தரா}, அஞ்சாதே. கோஷயாத்திரை நிகழ்வில், வலிமைமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்ட போது, நட்புடன் என்னைப் பின்பற்றி வந்த {தொண்டர்} யாரை பெற்றிருந்தேன்? காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தேவர்கள் மற்றும் தானவர்கள் பலருடன் பயங்கர மோதலில் ஈடுபட்ட எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? வலிமைமிக்க நிவாடகவசர்கள் மற்றும் பௌலோமர்களுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} சார்பாக நான் போரிட்ட போது, எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? ஓ! குழந்தாய் {உத்தரா}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} சுயம்வரத்தில் எண்ணற்ற மன்னர்களுடன் நான் மோதிய போது, அந்தப்போர்க்களத்தில் எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்?

ஆசான் துரோணராலும், சக்ரனாலும் {இந்திரனாலும்}, வைஸ்ரவணனாலும், யமனாலும், வருணனாலும், அக்னியாலும், கிருபராலும், மதுகுலத்தின் கிருஷ்ணனாலும், பினகைதாங்கியாலும் (சிவனாலும்) ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்போது, நான் ஏன் இவர்களுடன் போரிட முடியாது? எனது தேரை விரைந்து நடத்து. உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்