Sunday, December 07, 2014

“நான் அர்ஜுனன்!” - விராட பர்வம் பகுதி 44

I am Arjuna! | Virata Parva - Section 44 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 19)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : பிருஹந்நளை, தானே அர்ஜுனன் என்பதை உத்தரனுக்குச் சொல்வது; விராடனின் அலுவல்களில் ஈடுபட்டிருந்த பிற பாண்டவர்களின் அடையாளங்களையும் பிருஹந்நளை சொன்னது; உத்தரன் அர்ஜுனனின் பத்து பெயர்களையும் அதற்கான காரணங்களையும் சொன்னால்தான், இவையாவையும் தன்னால் உண்மை என்று நம்ப முடியும் என்று பிருஹந்நளையிடம் சொன்னது; அர்ஜுனன் தனது பெயர்களையும், அதற்கான காரணங்களையும் உத்தரனிடம் சொன்னது; உத்தரனின் அச்சம் விலகியது...

உத்தரன் {பிருஹந்நளையான அர்ஜுனனிடம்} சொன்னான், “வேகமான கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்}, இந்த ஆயுதங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகக் காண்பதற்கு அழகு மிகுந்தவையாக இருக்கின்றன என்பது நிச்சயம். ஆனால், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், குரு குலத்தின் யுதிஷ்டிரன், பாண்டுவின் {பிற} மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் {இப்போது} எங்கே இருக்கின்றனர்? பகடையால் நாடிழந்தவர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களைக் குறித்து ஒன்றும் கேள்விப்பட முடியவில்லையே. பகடைத் தோல்விக்குப் பிறகு பாண்டு மகன்களைக் காட்டுக்குத் தொடர்ந்து சென்றவளும், பாஞ்சால இளவரசியும், மங்கையரில் ரத்தினமுமான திரௌபதி {இப்போது} எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் {உத்தரன்}.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “பார்த்தன் என்றும் அழைக்கப்படும் நானே அர்ஜுனன். உனது தந்தையின் அரசவை {தலைமை} உறுப்பினராக இருப்பது யுதிஷ்டிரர் என்றும்; உனது தந்தையின் சமையற்காரனான வல்லவனே பீமர் என்றும்; குதிரை கண்காணிப்பாளனே நகுலன் என்றும்; மாட்டுக் கொட்டகையில் இருப்பவனே சகாதேவன் என்றும்; யார் பொருட்டுக் கீசகர்கள் கொல்லப்பட்டார்களோ, அந்தச் சைரந்திரியே திரௌபதி என்றும் அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் முன்பு கேள்விப்பட்டிருக்கும், பார்த்தனின் {அர்ஜுனனின்} பத்துப் பெயர்களை நீ கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், நான் இவை யாவையும் {உண்மையென} நம்புவேன்!” என்றான்.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! விராடனின் மகனே {உத்தரா}, நான் எனது பத்துப் பெயர்களை உனக்குச் சொல்கிறேன். அவற்றைக் கேட்டு, நீ ஏற்கனவே கேள்விப்பட்டதோடு ஒப்பீடு செய்து கொள். அவற்றைக் குவிந்த மனத்துடனும், நெருக்கமான கவனத்துடனும் கேள். அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.

[1] இந்த இடத்தில் “கிருஷ்ணன்” என்று இல்லாமல் “பார்த்தன்” என்ற பெயரையே வேறு பதிப்புகள் கூறுகின்றன.

உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “நீ விஜயன் என்றும் ஸ்வேதவாகனன் என்றும் எதனால் அழைக்கப்படுகிறாய் என்பதை உண்மையாகச் சொல். கிருஷ்ணன், அர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, பீபத்சு என்றெல்லாம் உனக்கு ஏன் பெயர்கள் ஏற்பட்டன. எதற்காக நீ தனஞ்சயன் என்றும் சவ்யசச்சின் என்று அழைக்கப்படுகிறாய்? அந்த வீரனின் {அர்ஜுனனின்} பல்வேறு பெயர்களின் மூலத்தைக் குறித்து நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் உன்னால் சொல்ல முடிந்தால்தான் நான் உனது சொற்களில் நம்பிக்கை கொள்ள முடியும்” என்றான்.

அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்},

“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.

ஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.

எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.

அடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.

முன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.

போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.

காண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.

பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.

அணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.

எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.

[2] இங்கே பல பதிப்புகளில் பார்த்தன் என்ற பெயருக்கான காரணம்தான் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அர்ஜுனன், பிருதையின் மகன் என்பதால் பார்த்தன் என்று அழைக்கப்பட்டான் என்ற விளக்கமும் இங்குக் கொடுக்கப்படுகிறது. அந்த விளக்கத்தைத் தொடர்ந்து, “கிருஷ்ணன்” என்ற பெயருக்கான விளக்கமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் அஃது அர்ஜுனனின் பதினோராவது பெயர் என்று சொல்லப்படுகிறது. காண்டவ வனப் போரில் அர்ஜுனன் மூர்ச்சையடைந்தபோது, அவனைக் காண சிவனும், பிரம்மனும் வந்ததாகவும். அவர்களைக் கண்டதும் உணர்வு பெற்று எழுந்த அர்ஜுனன், தரையில் தலை பதித்து அவர்களை வணங்கியதாகவும். அவனுடைய {அர்ஜுனனுடைய} வீரத்தைக் கண்ட சிவனும் பிரம்மனும், அவனுக்கு, “கிருஷ்ணன்” என்ற பதினோராவது பெயரை வைத்ததாகவும், அர்ஜுனன் உத்தரனிடம் சொல்வதாகக் கும்பகோணம் பதிப்பில் வருகிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பார்த்தனை {அர்ஜுனனை} நெருக்கமாக அணுகி, வணங்கிய விராடனின் மகன் {உத்தரன்}, “என் பெயர் பூமிஞ்சயன். நான் உத்தரன் என்றும் அழைக்கப்படுகிறேன். ஓ! பார்த்தரே, நற்பேறாலேயே நான் உம்மைக் காணும்படி நேர்ந்தது. ஓ! தனஞ்சயரே, உமக்கு நல்வரவு. ஓ! சிவந்த கண்கள் கொண்டவரே, யானையின் துதிக்கையைப் போன்ற இரு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {அர்ஜுனரே}, அறியாமையால் நான் சொன்ன யாவற்றையும் பொருத்தருள்வதே உமக்குத் தகும். மேலும், இதற்கு முன்பு, உம்மால் சாதிக்கப்பட்ட அற்புதமானவையும், கடினமானவையுமான செயல்களால், எனது அச்சங்கள் விலகிவிட்டன. உண்மையில், எனக்கு உம்மிடம் அதிகமான அன்பு உண்டாகியிருக்கிறது” என்றான் {உத்தரன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்