Monday, December 08, 2014

மீண்டும் எச்சரித்த துரோணர்! - விராட பர்வம் பகுதி 46

Drona warned again! | Virata Parva - Section 46 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 21)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சங்கொலியைக் கேட்டு உத்தரன் நடுங்குவது; அர்ஜுனனின் குதிரைகள் தரையில் விழுவது; அர்ஜுனன் அவற்றை நிமிர்த்தி, உத்தரனுக்குத் துணிவூட்டியது; துரோணர் கண்ட துர்நிமித்தங்கள்; துரோணர் துரியோதனனை எச்சரிப்பது; பிறகு பசுக்களை முன்னே விட்டு, அனைவரையும் போருக்குத் தயாராக அணிவகுக்கச் செய்யும்படி துரோணர் துரியோதனனிடம் கோருவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உத்தரனைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, அந்த வன்னிமரத்தை வலம் வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது ஆயுதங்கள் அத்தனையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சிங்க உருவம் பொறிக்கப்பட்ட பதாகையை இறக்கி, வன்னிமரத்தின் அடியில் வைத்த அந்தப் பலமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, தனது தேருக்கு உத்தரனைத் தேரோட்டியாக வைத்துக் கொண்டு புறப்பாட்டான். விஸ்வகர்மனால் வகுக்கப்பட்ட தெய்வீக மாயையில் உருவானதும், சிங்க வால் கொண்ட குரங்கின் உருவம் தாங்கியதுமான தனது தங்கப்பதாகையை அந்தத் தேரில் ஏற்றினான். உண்மையில் அவன் {அர்ஜுனன்} அக்னி அளித்த கொடையை எண்ணிப் பார்த்தவுடனேயே, அவனது {அர்ஜுனனின்} விருப்பத்தை அறிந்து கொண்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களை அந்தப் பதாகையில் இடம்பெறச் செய்தான் {விஸ்வகர்மன்}.

அழகிய தயாரிப்பான அந்தக் கொடியையும், அதனுடன் இணைக்கப்பட்ட அம்பறாத்தூணிகளையும் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக அழகுடையதுமான அந்த அற்புத கொடிக்கம்பம் வானத்தில் இருந்து திடீரென அவனது தேரில் விழுந்தது. அந்தப் பதாகை {கொடி}, தனது தேருக்கு வந்ததைக் கண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அதை முறையாக வலம் வந்தான். குரங்கு பதாகை கொண்ட குந்தியின் மகனும், ஸ்வேதவாகனன் என்று அழைக்கப்பட்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, உடும்புத் தோலாலான விரலுறைகளை அணிந்து கொண்டு, தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டான்.

பெரும் பலம் கொண்டவனான அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது பெரிய சங்கை எடுத்துப் பலமாக ஊதி, எதிரிகளை மயிர்ச்சிலிர்க்கச் செய்யும் இடியின் ஓசையை எழுப்பினான். அவ்வொலியைக் கேட்ட, வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தரையில் விழுந்தன. பெரிதும் அஞ்சிய உத்தரனும் கீழே தேர்க்காலில் அமர்ந்தான். பிறகு குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தானே கடிவாளத்தைப் பிடித்து, குதிரைகளை எழுப்பி, அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்தான்.

பிறகு உத்தரனை ஆரத்தழுவி, அவனுக்கு உற்சாகமூட்டும் வகையில், “ஓ! இளவரசர்களில் முதன்மையானவனே {உத்தரா}, அஞ்சாதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பிறப்பால் நீயொரு க்ஷத்திரியன். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, பிறகேன் எதிரிகளுக்கு மத்தியில் நீ உற்சாகமிழக்கிறாய்? பல சங்குகளின் ஒலிகளையும், பல பேரிகைகளையும், போருக்காக அணிவகுக்கப்பட்ட தலைவர்களுக்கு மத்தியில் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் இதற்கு முன்னர் நீ கேட்டிருப்பாயே. எனினும், ஏதோ சாராரண மனிதனைப் போல, இந்தச் சங்கொலியால் உற்சாகமிழந்து, கலக்கமடைந்து, நீ ஏன் பயந்து போயிருக்கிறாய்?” என்றான் {அர்ஜுனன்}.

உத்தரன் {அர்ஜுனனிடம்}, “பல சங்கொலிகளையும், படையணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகு சங்கொலியை நான் எப்போதும் கேட்டதில்லை. மேலும் இது போன்ற ஒரு பதாகையை நான் எப்போதும் கண்டதில்லை. இது போன்ற நாணொலியை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. அய்யா, உண்மையில், இந்தச் சங்கொலியாலும், வில்லின் நாணொலியாலும், இந்தப் பதாகையில் இருக்கும் உயிரினங்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட கதறல்களாலும், இந்தத் தேரிச் சக்கரங்களின் சடசடப்பொலியாலும், எனது மனம் மிகவும் குழப்பமடைந்துள்ளது. திசை குறித்த எனது பார்வையும் குழம்பிப் போயிருக்கிறது. எனது இதயம் வலியால் பீடிக்கப்பட்டிருக்கிறது. முழு வானமே இந்தப் பதாகையால் மூடப்பட்டது போல எனக்குத் தெரிகிறது. அனைத்தும் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதைப் போல எனக்குத் தோன்றுகிறது. காண்டீவத்தின் நாணொலியால் எனது காதும் செவிட்டு நிலையை அடைந்துவிட்டது” என்றான் {உத்தரன்}.

அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் மீண்டும் எனது சங்கை ஊதப் போகிறேன். ஆகையால், பாதங்களைத் தேரில் அழுத்தி உறுதியாக நில். கடிவாளத்தை இறுக்கமாக பற்றிக் கொள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அர்ஜுனன் மீண்டும் தனது சங்கை ஊதினான். அந்தச் சங்கு, எதிரிகளைத் துன்பத்தால் நிறைத்து, நண்பர்களின் இன்பத்தை அதிகரித்தது. மலைகளைப் பிளப்பது போலவும், மலைக்குகைகளையும், திசைப்புள்ளிகளையும் துளைப்பது போலவும் அவ்வொலி பெருத்த ஒலியாக இருந்தது. அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் பூமி நடுங்குவதாகத் தெரிந்தது. உத்தரனின் அச்சத்தைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளித்தான்.

அதே வேளையில் துரோணர், “தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், மேகங்கள் வானத்தை மூடியிருக்கும் விதத்தாலும், இந்தப் பூமியே நடுங்குகிறது. இந்தப் போர்வீரன் சவ்யசச்சினை {அர்ஜுனனைத்} தவிர வேறு யாருமில்லை. நமது ஆயுதங்கள் ஒளிரவில்லை; நமது குதிரைகள் உற்சாகமிழந்திருக்கின்றன; நமது நெருப்புகளுக்கு எரிபொருள் கொடுக்கப்பட்டாலும் அவை சுடர்விடவில்லை. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நமது விலங்குகள் அனைத்தும் சூரியனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி, பயங்கரமாக அலறுகின்றன. நமது பதாகைகளில் காக்கைகள் அமர்கின்றன. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதோ, அது {நரி} அடிபடாமல் தப்பி விட்டது.
நரி ஊளையிடுதல்
நமது படைகளுக்கு மத்தியில் பரிதாபமாக ஊளையிட்டபடியே நரி ஓடுகிறது.

இவையாவும் கடுமையான பேரிடரை முன்னறிவிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மயிர்ச்சிலிர்த்திருக்கிறது. நிச்சயமாக, இது போரில் க்ஷத்திரியர்களுக்கு ஏற்படும் பெரும் அழிவை  முன்குறிக்கிறது. ஒளிகொண்ட அனைத்துப் பொருட்களும் மங்கியிருக்கின்றன; விலங்குகளும் பறவைகளும் பார்ப்பதற்குக் கடுமையாக இருக்கின்றன; க்ஷத்திரிய அழிவுக்கு அறிகுறியாகப் பல பயங்கர அத்தாட்சிகள் சாட்சியாகக் காணப்படுகின்றன. இந்தச் சகுனங்கள், நமக்கு மத்தியில் நிகழப்போகும் பெரும் அழிவை முன்னறிவிக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, எரியும் விண்கற்களால் உனது அணிகள் குழப்பத்துக்கு ஆழ்வதாகத் தெரிகிறது.
கழுகு
உனது விலங்குகள் உற்சாகமிழந்ததாகத் தெரிகிறது. அவை அழுகின்றன. கழுகுகளும் பறவைகளும் உனது துருப்புகளைச் சுற்றிப் பறக்கின்றன. பார்த்தனின் கணைகளால் உனது படை துன்புறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். உண்மையில், நமது அணிகள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே தெரிகிறது. அவர்களில் யாரும் போரிட ஆவலாக இல்லை. நமது வீரர்களின் முகங்கள் அனைத்தும் மங்கிப்போய் உணர்விழந்து இருக்கின்றன. பசுக்களை முன்னே விட்டு, நமது வீரர்களைப் போருக்காக அணிவகுக்கச் செய்து, தாக்குவதற்குத் தயாராக நாம் இங்கேயே நிற்கலாம்” என்றார் {துரோணர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்