Wednesday, January 28, 2015

இந்திரனுக்குச் சற்றே குறைந்த யுதிஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 23

Yudhishthira, little inferior to Indra! | Udyoga Parva - Section 23 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 23)
பதிவின் சுருக்கம் : சஞ்சயன் யுதிஷ்டிரனை அடைந்து நலம் விசாரிப்பது; யுதிஷ்டிரனும் பதிலுக்குச் சஞ்சயனிடம் நலம் விசாரிப்பது? குருக்களின் உடல் நலம், பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், யுயுத்சு ஆகியோரின் நலனை யுதிஷ்டிரன் விசாரிப்பது; தங்கள் மீது யாரும் எந்தக் குற்றத்தையும் சொல்கிறார்களா என்று கேட்பது; கோஷ யாத்திரையின் போது துவைதவனத்தில் துரியோதனனும், கௌரவர்களும் அடைந்த அவமானத்தையும் யுதிஷ்டிரன் சஞ்சயனிடம் நினைவுபடுத்துவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட சஞ்சயன், அளவிட முடியாத சக்தி கொண்ட பாண்டவர்களைக் காண உபப்பிலாவியம் சென்றான். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை அணுகி, தன் மரியாதையை முதலில் அவனுக்குச் செலுத்தி பிறகு பேச ஆரம்பித்தான்.

சஞ்சயன் என்ற பெயர் கொண்டவனும், சூத சாதியைச் சேர்ந்தவனுமான கவல்கணன் மகன், அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக இப்படிப் பேசினான், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் இந்திரனுக்குச் சற்றே குறைந்து, நண்பர்களால் உதவப்பட்டு நோயற்றவனாக இருக்கும் உன்னைக் காணும் நான் நற்பேறையே பெற்றிருக்கிறேன். அம்பிகையின் மகனும் முதிர்ந்த விவேகியுமான மன்னர் திருதராஷ்டிரர், உனது நலனை விசாரித்தார். பீமசேனன் நலமாக இருக்கிறான் என்றும் பாண்டவர்களில் முதன்மையான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மாத்ரியின் இந்த இரு மகன்களும் {இந்த நகுலனும், சகாதேவனும்} நலமாக இருக்கின்றனர் என்றும் நான் நம்புகிறேன். வீரர்களின் மனைவியும், பெரும் சக்தி கொண்ட மங்கையும், உண்மையின் பாதையில் இருந்து எப்போதும் வழுவாதவளும், துருபதன் மகளுமாகிய இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} நலமாக இருக்கிறாள் என நம்புகிறேன். நீங்கள் விரும்பத்தக்க இன்பங்கள் எல்லாம் யாரை மையம் கொண்டிருக்கிறதோ, உங்களின் நலனுக்காக யார் தொடர்ச்சியாக வேண்டுவாளோ அவள் {திரௌபதி}, தனது மகன்களுடன் நலமாக இருக்கிறாள் என நான் நம்புகிறேன்” என்றான் {சஞ்சயன்}.


அதற்கு யுதிஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! கவல்கணர் மகனான சஞ்சயரே, உமது பயணம் பாதுகாப்பாக இருந்ததா? உம்மைக் கண்டதால் நாங்கள் மகிழ்ந்தோம். நீர் எப்படி இருக்கிறீர் என்று பதிலுக்கு நான் வினவுகிறேன். ஓ! கல்விமானே, எனது தம்பிகளுடன் கூடிய நான் அற்புத உடல்நலத்துடன் இருக்கிறேன். ஓ! சூதரே, நீண்ட காலத்திற்குப் பிறகு, பரதனின் வழித்தோன்றலான குருக்களின் முதிர்ந்த மன்னரிடம் {திருதராஷ்டிரரிடம்} இருந்து செய்தியைப் பெறுகிறேன். ஓ! சஞ்சயரே, உம்மைக் கண்டதால், மன்னரையே {திருதராஷ்டிரரையே} கண்டது போல மனநிறைவை உணர்கிறேன்.

ஓ! அய்யா {சஞ்சயரே}, பெரும் சக்தி கொண்டவரும், உயர்ந்த ஞானம் கொண்டவரும், எப்போதும், தனது வகைக்குரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவரும் குருவின் வழித்தோன்றலுமான எங்கள் முதிர்ந்த பாட்டன் {பிதாமகரான} பீஷ்மர் உடல்நலத்தோடு இருக்கிறாரா? அவரது அனைத்து பழக்க வழக்கங்களையும் அவர் இன்னும் தக்கவைத்திருப்பார் என நம்புகிறேன். விசித்திரவீரியன் மகனான உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னர் திருதராஷ்டிரரும் அவரது மகன்களும் உடல்நலத்துடன் இருப்பார்கள் என நம்புகிறேன். பெரும் கல்விபெற்றவரும், பிரதீபனின் மகனுமான பெரும் மன்னன் பாஹ்லீகர் உடல்நலத்துடன் இருப்பார் என நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, அந்தச் சோமதத்தன் உடல்நலத்துடன் இருப்பான் என்றும், பூரிஸ்ரவஸ், சத்தியசந்தன், சலன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தணரான கிருபர் ஆகியோர் நலமாகவும் இருப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன். இந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் நோயற்றவர்களாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.

ஓ! சஞ்சயரே, உயர்ந்த புத்திக்கூர்மை கொண்டவர்களும், எழுத்துகளை நன்றாக அறிந்தவர்களும், ஆயுதம் தாங்குவோரில் மிக மேன்மையான இடத்தில் இருப்பவர்களுமான இந்தச் சிறந்த பெரிய வில்லாளிகள் அனைவரும் தங்களைக் குருக்களுடன் {கௌரவர்களுடன்} பிணைத்துக் கொண்டுள்ளனர். அந்த வில்லாளிகள் அனைவரும் முறையான மதிப்பைப் பெறுகிறார்கள் என நான் நம்புகிறேன். பலமிக்கவரும், அழகிய வில்லாளியும், நல்ல நடத்தையுள்ளவருமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எந்த நாட்டில் வசிக்கிறாரோ அங்கே வாழ்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்? திருதராஷ்டிரருடைய வைசிய மனைவி மூலம், அவருடைய {திருதராஷ்டிரருடைய} மகனான உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட யுயத்சு உடல்நலத்துடன் இருக்கிறான் என நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, மந்தபுத்தியுள்ள சுயோதனன் {துரியோதனன்} யாருடைய ஆலோசனைகளைக் கேட்பானோ, அந்த ஆலோசகன் கர்ணன் உடல்நலத்துடன் இருக்கிறான் என நம்புகிறேன். திருதராஷ்டிரர் வீட்டைச் சார்ந்தவர்களும் பாரதக் குலத்தின் தாய்மார்களுமான முதிர்ந்த மங்கையர், மடைப்பள்ளிக் காரிகைகள் {பெண் சமையல் கலைஞர்கள்}, பணிப்பெண்கள், மருமகள்கள், மகன்கள், சகோதரிகளின் மகன்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் மகன்கள் ஆகியோர் அனைவரும் தொல்லையில்லாமல் இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

ஓ! அய்யா {சஞ்சயரே}, அந்தணர்களின் பிழைப்பாதாரங்களை முன்பிருந்ததைப் போலவே மன்னர் {திருதராஷ்டிரர்} இன்னும் அனுமதிக்கிறார் என நம்புகிறேன். ஓ! சஞ்சயரே, அந்தணர்களுக்கு நான் அளித்த கொடைகளைத் {மானியங்களைத்} திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கைப்பற்றவில்லை என நான் நம்புகிறேன். தனது மகன்களுடன் கூடிய திருதராஷ்டிரர், அந்தணர்கள் தரப்பின் நடத்தையைப் பொறுமையுடன் சந்திக்கிறார் என நம்புகிறேன். சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரே நெடுஞ்சாலையான அவர்களுடைய {அந்தணர்களின்} தேவைகளைப் பூர்த்திச் செய்வதை எப்போதும் அவர் தவிர்ப்பதில்லை என நான் நம்புகிறேன். இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்குப் படைப்பாளர் {பிரம்மா} தந்துள்ள தெளிந்த அற்புதமான ஒளி இதுவே. மந்த புத்தி கொண்டோரைப் போலக் குருவின் மகன்கள் அந்தணர்களைப் பொறுமையுடன் நடத்தவில்லையென்றால், முற்றான அழிவு அவர்களுக்கு ஏற்படும்.

மாநிலத்தின் செயல்பாடுகளுக்கு வேண்டியவற்றை மன்னர் திருதராஷ்டிரரும் அவரது மகனும் {துரியோதனனும்} கொடுக்க முயல்கிறார்கள் என நான் நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, அவர்களது அழிவுக்காகச் சூழ்ச்சி செய்யும் எதிரிகள் யாரும் நண்பர்கள் என்ற போர்வையில் அவர்களிடம் இல்லை என நான் நம்புகிறேன். ஓ! அய்யா {சஞ்சயரே}, இந்தக் குருக்களில் யாரும் நாங்கள் ஏதாவது குற்றமிழைத்திருப்பதாகப் பேசுவதில்லை என நம்புகிறேன். நாங்கள் எவ்வகையிலேனும் குற்றமிழைத்தோம் எனத் துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, வீரரான கிருபரும் பேசுவதில்லை என நான் நம்புகிறேன். மன்னர் திருதராஷ்டிரரையும், அவரது மகன்களையும் குருக்கள் அனைவரும் தங்கள் குலத்தைக் காப்பவர்களாகப் பார்க்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

கொள்ளையர்க்கும்பலைக் காணும் போது, போர்க்களத்தின் அனைத்துத் துறைகளிலும் தலைமையில் நின்று அர்ஜுனன் செய்த செயல்களை அவர்கள் நினைவுகூர்வார்கள் என நான் நம்புகிறேன். அவனது {அர்ஜுனனது} கைவிரல்களின் தீண்டுதலுடன், காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்டு, நன்றாக இழுக்கப்பட்ட வில்லின் நாணுடைய விசையினால், இடியைப் போன்ற பேரொலியை எழுப்பியபடி, காற்றில் நேரான பாதையில் பறந்து செல்லும் கணைகளை அவர்கள் நினைவுகூர்வார்கள் என நான் நம்புகிறேன். கல்லில் தீட்டப்பட்டவையும், அற்புத இறகுகள் படைத்தவையுமான கூர்மையான அறுபத்தியோரு {61} கணைகளை ஒரே முயற்சியில் அடிக்கும் அர்ஜுனனுக்குச் சமமாகவோ, அவனை விஞ்சுபவனாகவோ நான் எந்த வீரனையும் கண்டதில்லை.

நாணல் நிறைந்த காட்டைக் {கோரைக்காடுகளைக்} கலங்கடிக்கும் மதங்கொண்ட யானையைப் போல, போர்க்களத்தில் அணிவகுத்திருக்கும் எதிரிப்படையினரை அச்சத்தால் நடுங்கச் செய்பவனான பீமனை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களா? இடது, வலது என இரு கைகளாலும் கணைகளை அடித்து, தந்தகூரத்தில் கலிங்கர்களை வீழ்த்திய மாத்ரியின் மகனான பலமிக்கச் சகாதேவனை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா? ஓ! சஞ்சயரே, உமது பார்வையின் கீழ், சிபிக்களையும், திரிகார்த்தர்களையும் வென்று, மேற்குப் பகுதியை எனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த நகுலனை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா?

தீய ஆலோசனையின் பேரில், துவைதவனத்தில் தங்கள் கால்நடைகளைக் கொண்டு செல்லும் பாசாங்கில் {கோஷயாத்திரையாக} வந்த அவர்கள் {கௌரவர்கள்} அடைந்த அவமானத்தை நினைவில் கொண்டுள்ளார்களா? அந்தத் தீயவர்கள் எதிரிகளிடம் அகப்பட்ட போது, பீமசேனனாலும், அர்ஜுனனாலும் பின்பு விடுவிக்கப்பட்டதையும், {அதற்கு முன்பு ஏற்பட்ட போரில்} அர்ஜுனனின் பின்புறத்தைப் பாதுகாத்து வந்த என்னையும், மாத்ரி மகன்களின் பின்புறத்தைப் பாதுகாத்து வந்த பீமனையும், அந்தப் போர்க்களத்தில் அழுத்தத்தில் எதிரி கூட்டத்தைக் கொன்றொழித்து, காயமில்லாமல் திரும்பி வந்த காண்டீவந்தாங்கியையும் {அர்ஜுனனையும்} அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்களா? ஓ! சஞ்சயரே, எங்கள் அனைத்து முயற்சிகள் மூலமும் நாங்கள் திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} {அன்பால்} வெல்ல முடியாதபோது, ஒற்றை நல்ல காரியத்தால் இங்கே மகிழ்ச்சியை அடைய முடியாது!” என்றான் {யுதிஷ்டிரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்