Tuesday, February 10, 2015

தன்னால் தன்னை அறிய வேண்டும்! - உத்யோக பர்வம் பகுதி 34

Know one's self by means of one's own self! | Udyoga Parva - Section 34 | Mahabharata In Tamil

(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 34) {விதுர நீதி - 5}
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மனதில் என்ன ஓடுகிறது என்றும் இருவருக்கும் நன்மை எதுவோ அதைச் சொல்லுமாறும் திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்பது; ஒப்பந்தங்களை மதித்து அறம் பொருள் ஆகியவற்றை அறிந்து செயல்படுபவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான் என்று விதுரன் சொல்வது; புலன்களிடம் தோற்கும் மனிதன் அனைத்திலும் தோற்பதைச் சொல்வது; புலன்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைப்பது; தன்னையே அடக்கமுடியாதவனால் எதிரிகளை வீழ்த்த முடியாது என்று சொல்வது; பாவிகளோடு தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படும் இயற்கை நீதியை எடுத்துச் சொல்வது;  பேச்சைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் சொல்வது; தோல்வியடைய விதிக்கப்பட்டவனே புலன்களில் மயக்கம் கொள்வான் என்றும், அதனால் அவன் வீழ்வான் என்றும் சொல்வது; யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனின் புகழைப் பாதுகாக்கும்பொருட்டே துன்பத்தை அனுபவித்தான் என்றும், அவனே மூவுலகங்களையும் ஆளும் தகுதி படைத்தவன் என்று விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னது...

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான் “உறக்கமற்று, துயரத்தால் எரிந்து கொண்டிருக்கும் மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பதை நீ எனக்குச் சொல். ஏனென்றால், நம்மில் நீ ஒருவனே, ஓ! குழந்தாய் {விதுரா}, அறம் மற்றும் பொருளை அறிந்திருக்கிறாய். ஓ! விதுரா, ஞானத்துடன் எனக்கு ஆலோசனை கூறுவாயாக. ஓ! மேன்மையான இதயம் கொண்டவனே {விதுரா}, எதிர்காலத் தீமைகளை அறிந்து கொண்டு, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} நன்மையானவை என்றும், குருக்களின் நன்மையை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை என்றும் நீ கருதுவதைச் சொல்வாயாக. எனது முந்தைய குற்றத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். பதட்டம் நிறைந்த இதயத்துடன் நான் உன்னைக் கேட்கிறேன், ஓ! கற்றவனே {விதுரா}, அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சரியாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

{செயல்கள்}


அதற்கு விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவனின் தோல்வியை {அவமானத்தை} விரும்பாத ஒருவன், கேட்கப்படாத போதும், தனது வார்த்தைகள் நன்மையானவையாகவோ தீமையானவையாகவோ, வெறுப்புடனோ, இனியுடனோ இருக்குமேயானாலும் கூட உண்மையைச் சொல்ல வேண்டும். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் குருக்களுக்கு நன்மை எதுவோ அதையே சொல்வேன். எது நன்மை என்றும், எது அறநெறி சார்ந்தவை என்றும் இரண்டையும் நான் சொல்வேன். நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீதியற்ற முறையற்ற வெற்றியின் வழிகளில் உமது இதயத்தை நிலைநிறுத்தாதீர். நியாயமான, முறையான வழிவகைகளில் தனது நோக்கத்தின் பயன்பாடு நிற்கவில்லையென்றால், அதன் வெற்றியைக் குறித்து ஒரு புத்திசாலி மனிதன் வருந்தக்கூடாது. ஒருவன் ஒரு செயலில் ஈடுபடும் முன்னர், செயலைச் செய்பவரின் திறன், செயலின் இயல்பு, அதன் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்துச் செயல்களும் இவற்றையே சார்ந்திருக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டே ஒருவன் செயல்பட வேண்டும். திடீர் உந்துதலால் {ஆர்வக் கோளாறால்} எதையும் செய்யக்கூடாது.

ஞானமுள்ளவன், தனது சொந்த திறனையும், செயலின் இயல்பையும், வெற்றியினால் உண்டாகும் விளைவுகளையும் முழுதும் கருத்தில் கொண்டே செயல்படவோ, செயல்படாமலோ இருக்க வேண்டும். நாட்டைப் பொறுத்தவரை அதன் விகிதாச்சாரம், அளவு, ஆதாயம், இழப்பு, கருவூலம், மக்கள் தொகை, தண்டை ஆகியவற்றை அறியாத மன்னன் தனது நாட்டை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதே வேளையில், மறுபுறம், ஒப்பந்தங்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அறிந்து, அறம் மற்றும் பொருளின் அறிவை அறிந்தவன் தனது நாட்டைத் தக்க வைத்துக் கொள்வான்.

{புலனடக்கம்}

 
கோள்களால் பாதிக்கப்படும் நட்சத்திரங்களைப் போல, இவ்வுலகம் புலன்களால் பாதிக்கப்படுகிறது. கட்டுத்தப்படாத அவை தங்களுக்குரிய பொருட்களின் மீது செலுத்தப்படும்போது இவ்வுலகம் பாதிப்படைகிறது. வளர்பிறை நாட்களில் இருக்கும் நிலவைப் போல, இயற்கையான நிலையில் உள்ள தங்கள் ஐம்புலன்களால் வீழ்த்தப்படும் மனிதனின் துயரங்கள் அதிகரிக்கவே செய்யும். அவை எப்போதும் அவனைப் பல்வேறு செயல்பாடுகளை நோக்கி இட்டுச் செல்லும்.

தனது சுயத்தைக் {தன்னைக்} கட்டுப்படுத்தாத ஒருவன் தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவனோ, தனது ஆலோசகர்களைக் கட்டுப்படுத்தாது தனது பகைவர்களை வீழ்த்துபவனோ, கடைசியில் வலிமையை இழந்து போக நேரும். எனவே, முதலில் தன்னையே எதிரி என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவன், கடைசியின் தனது ஆலோசகர்களையோ, எதிரிகளையோ வெல்வதில் தோல்வியுற மாட்டான். தனது புலன்களை வெல்பவனுக்கோ, தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்துபவனுக்கோ, குற்றமிழைப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கும் திறன் பெற்றவனுக்கோ, நீதியுடன் செயல்படுபவனுக்கோ, பொறுமையால் அருளப்பட்டவனுக்கோ பெரும் செழுமை காத்திருக்கிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவனின் உடல் அந்த ஒருவனின் தேராகும்; அதற்குள் இருக்கும் ஆன்மாவே அதன் ஓட்டுநராகும்; புலன்கள் அதன் குதிரைகளாகும். அந்த நன்கு பழக்கப்பட்ட அந்த அற்புதமான குதிரைகளால் இழுக்கப்படும் ஞானி, தனது வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக நடத்தி, நிம்மதியாகக் கண் விழிக்கிறான். அடக்கப்படாத, கட்டுப்படுத்த இயலாத குதிரைகள், நிபுணத்துவம் இல்லாத ஓட்டுநரால் செலுத்தப்பட்டு, பயணத்தின் வழியில் அழிவடைய நேர்கிறது; எனவே அடக்கப்படாத ஒருவனின் புலன்கள் அழிவுக்கே வழிகோலுகின்றன. அனுபவமற்ற மனிதன் ஒருவன், இந்த அடக்கப்படாத புலன்களால் வழிநடத்தப்பட்டு, நன்மையில் இருந்து தீமையையும், தீமையில் இருந்து நன்மையையும் பெற்று மகிழ்ச்சியைத் துயரம் எனக் குழப்பிக் கொள்கிறான்.

அறம் பொருள் ஆகியவற்றைக் கைவிட்டவன், புலன்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, செழிப்பு, வாழ்வு, செல்வம் மனைவி ஆகியவற்றைத் தாமதமில்லாமல் இழக்கிறான். புலன்களுக்கல்லாமல் செல்வங்களுக்கு மட்டுமே தலைவனாக இருப்பவன், புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாகத் தனது செல்வங்களை நிச்சயமாக இழக்கிறான். ஒருவன் தன்னைத் தன்னால் அறிய வேண்டும். {சுயத்தைச் சுயத்தால் அறியவேண்டும்}. தானே தனக்கு நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், ஒருவன் தனது மனம், அறிவு மற்றும் புலனங்களைக் கட்டுப்படுத்தி, தன்னால் தன்னை அறிய வேண்டும். தானே தனக்கு நண்பனும், எதிரியும் ஆனதால், தன்னால் தன்னை வென்ற மனிதன், தன்னைத் தன் நண்பனாகக் கொள்கிறான்.

{ஆசையும் கோபமும்}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல, ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும். அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன், தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான். மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன், பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

{தீயோருடன் நட்பு}


ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.

அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்த தவறி, ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான். கபடமற்ற தன்மை, எளிமை, தூய்மை, மனநிறைவு, இனிமையான பேச்சு, தற்கட்டுபாடு {சுய கட்டுப்பாடு}, உண்மை, உறுதி ஆகியன எப்போதும் தீயவர்களின் குணங்களாகாது. தன்னறிவு {சுயஞானம்}, உறுதி, பொறுமை, அறத்தில் அர்ப்பணிப்பு, ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது, ஈகை ஆகியவை ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.

தவறான நிந்தனைகள் {போலிக் குற்றச்சாட்டுகள்}, தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர். இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர். தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்; குற்றவியல் சட்டத்திலும், பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.

{பேச்சு [உரை]}


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது. பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல. நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்; தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும். கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம், ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.


குறிப்பு--------------------------------------------------------------------
தீயினாற் சுட்டபுண்  உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

திருக்குறள் > அறத்துப்பால் > அடக்கமுடைமை
--------------------------------------------------------------------------------

கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம், ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது. வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.

{தோல்வி விதிக்கப்படும்போது}


தேவர்களால் தோல்வி விதிக்கப்பட்ட ஒருவன் புலன்களில் மயக்கம் கொள்வதாலேயே, கீழான காரியங்கள் செய்வதில் விழுகிறான். அறிவு மங்கிப் போய், அழிவின் விளிம்பில் இருக்கும் போது சரியாகத் தெரியும் தவறு, அவனது இதயத்தை உறுதியாக அடிக்கும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் அதைத் தெளிவாகக் காணவில்லை. பாண்டவர்களிடம் கொண்ட பகைமையின் விளைவால், அறிவை மூடும் அந்த மேகம் {புலன்மயக்கம்} இப்போது உமது மகன்களைப் பீடித்திருக்கிறது.

அனைத்து நற்குறிகளையும் பெற்று, மூவுலகங்களையும் ஆளும் தகுதி பெற்ற யுதிஷ்டிரன் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறான். ஓ! திருதராஷ்டிரரே, உமது மகன்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, உமது வாரிசுகள் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன் பூமியை ஆளும்படி செய்வீராக. சக்தி, ஞானம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு, அறம் பொருள் ஆகியவற்றின் உண்மைகளை அறிந்து, நீதிமிக்க மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், ஓ! மன்னர்கள் மன்னா {திருதராஷ்டிரரே}, உம்முடைய புகழைப் பாதுகாக்கும்பொருட்டே, இரக்கம் மற்றும் கருணையால் பெரும் துன்பத்தை அனுபவித்தான்” என்றான் {விதுரன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்