Monday, March 23, 2015

காண்டீவத்தின் கொட்டாவி! - உத்யோக பர்வம் பகுதி 48உ

The yawn of Gandiva! | Udyoga Parva - Section 48e | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை நினைத்து அர்ஜுனன் சூளுரைப்பது; கற்றோரின் துணை தங்களுக்கு இருப்பதாகவும், அவர்கள் துரியனின் வீழ்ச்சியை முன்னறிவிப்பதகாவும் அர்ஜுனன் சொல்வது; அனைத்துச் சகுனங்களும் தங்களுக்குச் சாதகமாகவே இருப்பதை அர்ஜுனன் எடுத்துரைப்பது; துரியோதனனின் மடமையைச் சஞ்சயனிடம் எடுத்துச் சொல்லி, தங்கள் நாட்டு முதியோர் சொல்வது போலக் கௌரவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழட்டும் என்று அர்ஜுனன் வாழ்த்தியது...

{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “சந்தனுவின் மகனையும் {பீஷ்மரையும்}, துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் ஒப்பற்ற மகனையும் {கிருபரையும்} வணங்கி, எங்கள் நாட்டை மீட்க நான் போரிடுவேன். பாண்டவர்களுடன் போரிடும் பாவிக்கு, நீதித்தேவனே {தர்மதேவனே} அழிவைக் கொண்டு வருவான் என்று நான் நம்புகிறேன்.


அந்த இழிந்தவர்களால் {கௌரவர்களால்} ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்தப்பட்ட அரச பிறப்புடைய {பாண்டவர்களாகிய} நாங்கள், காட்டில் பெருந்துன்பத்துடன் பனிரெண்டு {12} ஆண்டுகளையும், நீண்ட ஒரு வருட மறைந்த நிலை வாழ்வையும் {அஞ்ஞாதவாசம்} கழித்தோம்.

அந்தப் பாண்டவர்கள் உயிரோடு இருக்கையில், திருதராஷ்டிரரின் மகன்கள், தாங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தாலும் செல்வச்செழிப்பாலும் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்? இந்திரனின் தலைமையைக் கொண்ட தேவர்களைக் கொண்டு அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களைப் போரில் வீழ்த்திவிட்டால், அறப்பயிற்சிகளைவிட {தர்மத்தைவிட} மறமே {அதர்மமே} சிறந்ததென்று ஆகிவிடும். மேலும் இந்தப் பூமியில் நீதி போன்ற எதுவும் நிச்சயமாக இருக்காது. மனிதன் அவன் செய்யும் செயல்களால் பாதிப்பை அடைகிறான் என்றால், நாங்கள் {பாண்டவர்கள்} துரியோதனனைவிட மேன்மையானவர்கள் என்றால், வாசுதேவனை {கிருஷ்ணனை} எனக்கு அடுத்தவனாகக் கொண்டு {எனது துணைவனாகக் கொண்டு} {with Vasudeva as my second}, துரியோதனனை அவனது இரத்த உறவுகளோடு சேர்த்து நான் கொல்வேன் என்றே நம்புகிறேன்.

ஓ! மனிதர்களின் தலைவா {சஞ்சயா}, எங்கள் நாட்டைத் திருடியது தீமை என்றால், எங்களது இந்த நற்செயல்கள் கனியற்றதாகாது {பலனற்றதாகாது} என்றால், இதுவும் அதுவும் ஆகிய இரண்டையும் நோக்குகையில் {ஆலோசிக்கையில்}, துரியோதனனின் வீழ்ச்சி உறுதி என்றே எனக்குப் படுகிறது.

கௌரவர்களே, அவர்கள் {துரியோதனாதிபதிகள்} எங்களுடன் போரிட்டால், திருதராஷ்டிரர் மகன்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை உங்கள் கண்ணால் நீங்களே காண்பீர்கள். போரிடுவதைத் தவிர்த்து வேறுமாதிரியாகச் செயல்பட்டால் அவர்கள் வாழ்வார்கள்; ஆனால் வரப்போகும் போரினால் அவர்களில் எவரும் உயிருடன் எஞ்சமாட்டார்கள். கர்ணனுடன் சேர்த்து திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்று, அவர்களது முழு நாட்டையும் நான் வெல்வேன். அதே வேளையில், நீங்கள் எதையெல்லாம் சிறந்ததாக நினைப்பீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள், உங்கள் மனைவியரையும், வாழ்வின் பிற இனிமையான பொருட்களையும் அனுபவியுங்கள் {அனுபவித்துவிடுங்கள்}.

படத்தை பெரிதாக்க சொடுக்கவும்
பல்வேறு அறிவியல்களை அறிந்தவர்களும், இனிமையான நடத்தை, நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்டவர்களும், வருடச் சுழற்சிகளை அறிந்தவர்களும், சோதிடக் கல்வியில் ஈடுபடுபவர்களும், கோள்களின் அசைவுகளையும், நட்சத்திரக் கூடுகைகளையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வல்லவர்களும், விதியின் புதிர்களை விளக்கவல்லவர்களும், எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களும், இராசிச் சக்கரத்தின் {zodiac} இராசிகளை {signs} அறிந்தவர்களும், ஒவ்வொரு மணி நேரத்தின் நிகழ்வுகளை அறிந்தவர்களுமான முதிர்ந்த அந்தணர்கள் பலர் எங்களிடம் இருக்கிறார்கள். ஒருபோதும் யாரையும் எதிரியாக்காத யுதிஷ்டிரர், தனது எதிரிகளைப் படுகொலை செய்வதன் விளைவாகத் தனது நோக்கங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று கருத வைப்பது போல, குருக்கள் மற்றும் ஸ்ரீன்ஜயர்களின் {சிருஞ்சயர்களின்} பெரும் அழிவையும், பாண்டவர்களின் முழு வெற்றியையும் அவர்கள் {அந்த அந்தணர்கள்} முன்னறிவிக்கின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்தின் அறிவை {ஞானத்தைக்} கொண்டிருக்கும் விருஷ்ணிகளில் சிங்கமான ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, இவையனைத்தையும் ஐயமறக் காண்கிறான். தவறாத தொலைநோக்குப் பார்வை கொண்ட நானும், அந்த எதிர்காலத்தையே காண்கிறேன். பழங்காலத்தில் அடையப்பட்ட எனது தொலை நோக்குப் பார்வை தடைசெய்யப்படவில்லை. திருதராஷ்டிரர் மகன்கள் போரிட்டால், அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.

கையாளப்படாமல் இருக்கும் எனது வில்லான காண்டீவம் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது; நீட்டி இழுக்கப்படாமல் இருக்கும் எனது வில்லின் நாண்கயிறு நடுங்கிக் கொண்டிருக்கிறது; எனது அம்பறாத்தூணியின் வாயில் இருந்து வெளிப்படும் அம்புகளும், மீண்டும் மீண்டும் பறக்க எத்தனிக்கின்றன. தனது சட்டையைவிட்டு அகலும் பாம்பைப் போல, எனது பிரகாசமான கூன்வாள் உறையைவிட்டு வெளியே வருகின்றது; எனது கொடிக்கம்பத்துக்கு மேலே, “ஓ! கிரீடி, எப்போது உனது தேர் பூட்டப்படும்?” என்று பயங்கரக் குரல்கள் கேட்கின்றன. இரவில் எண்ணிலடங்கா நரிகள் பயங்கரமாக ஊளையிடுகின்றன, மேலும் அடிக்கடி வானத்தில் இருந்து ராட்சசர்கள் கீழே இறங்குகின்றனர்; எனது வெண்குதிரைகளை எனது தேரில் பூட்டும்போது, மான்கள், நரிகள், மயில்கள், காகங்கள், கழுகுகள், கொக்குகள், ஓநாய்கள் மற்றும் தங்கச் சிறகு கொண்ட பறவைகள் அதைப் {அந்தத் தேரைப்} பின்தொடர்கின்றன.

எனது அம்பு மழையால், தனி மனிதனான என்னால், போர்குணமிக்க அனைத்து மன்னர்களையும் இறந்தவர்களின் உலகத்திற்கு {யமனுலகுக்கு} அனுப்ப முடியும். வெப்ப காலத்தில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு, ஒரு காட்டையே எரித்துவிடுவதைப் போல, பல்வேறு வழிமுறைகளை வெளிப்படுத்தி, அந்தப் பெரும் ஆயுதங்களான, ஸ்தூர்-கர்ணம் {ஸ்தூணாகர்ணம்}, பாசுபதம் {பாசுபதாஸ்திரம்} மற்றும் பிரம்மம் {பிரம்மாஸ்திரம்} ஆகியவற்றையும், சக்ரன் {இந்திரன்} எனக்குக் கொடுத்தவையான கடும் மூர்க்கம் கொண்ட {ஐந்திரம் உள்ளிட்ட} அந்த அனைத்து ஆயுதங்களையும் நான் வீசுவேன் {பயன்படுத்துவேன்}.

அவற்றின் துணை கொண்டு, அந்த ஏகாதிபதிகளின் அழிவை எனது இதயத்தில் நிறுத்தி, போர்க்களத்திற்கு வருவோர் யாரையும் நான் எஞ்சவிடமாட்டேன். இவை யாவற்றையும் செய்த பிறகே நான் ஓய்வேன். இதுவே நான் முடிவெடுத்திருக்கும் எனது தலைமையான தீர்மானமாகும்.

ஓ! கவல்கணர் மகனே {சஞ்சயரே}, இவற்றை அவர்களுக்குச் {கௌரவர்களுக்குச்} சொல்லும். துரியோதனனின் மடமையைப் பாரும்! ஓ! சூதரே, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே தங்கள் துணையாகக் கொண்டு, போரில் வல்லவர்களாய் இருப்பவர்களிடம் கூட அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} போரையே விரும்புகிறான். ஆனால், “கௌரவர்கள் அனைவரும் நீண்ட காலம் வாழட்டும்” என்று சந்தனுவின் மகனான முதிர்ந்த பீஷ்மரும், கிருபரும், மகனுடன் {அசுவத்தாமனுடன்} கூடிய துரோணரும், பேரறிவு கொண்ட விதுரரும் சொல்வது போலவே, அப்படியே ஆகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்