Wednesday, July 01, 2015

பாளையமிறங்கிய பாண்டவப்படை! - உத்யோக பர்வம் பகுதி 153

The encampment of Pandava army! | Udyoga Parva - Section 153 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 82) {சைனியநிர்யாண பர்வம் -3}

பதிவின் சுருக்கம் : விலங்குகளுக்கு ஓய்வு கொடுத்து, குருக்ஷேத்திரத்தை நோக்கி பாண்டவப் படை முன்னேறிச் சென்றது; இறுதியாகக் குருக்ஷேத்திரத்தின் வழியாக ஓடும் ஹிரண்வதீ நதியை அடைந்து, அதன் அருகே பெரிய அகழியை வெட்டி, திருஷ்டத்யும்னன் மற்றும் சாத்யகியைக் கொண்டு முகாமுக்கான இடத்தை அளந்து பாசறைகளை அமைத்தது; பாண்டவர்கள் பெற்றிருந்த இராணுவத்தளவாடங்கள் மற்றும் உணவு, நீருக்கான ஏற்பாடுகள் குறித்த குறிப்பு...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, மன்னன் *யுதிஷ்டிரன், சமமானதும், குளுமையானதும், புற்களும், விறகுகளும் நிறைந்ததுமான ஒரு பகுதியில் தனது துருப்புகளை முகாமிடச்செய்தான் {தங்கச் செய்தான்}. சுடுகாடுகள், கோவில்கள், தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்கள், தவசிகளின் ஆசிரமங்கள், புண்ணியத்தீர்த்தங்கள் மற்றும் பிற புனிதமான இடங்கள் ஆகியவற்றைத் தவிர்த்த குந்தியின் உயர் ஆன்ம மகன் யுதிஷ்டிரன், இனிமையான, வளமான, திறந்தவெளியில் தனது துருப்புகளைத் தங்கச் செய்தான். தனது விலங்குகளுக்குப் போதுமான ஓய்வைக் கொடுத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் எழுந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏகாதிபதிகள் சூழ இன்பமாகப் புறப்பட்டான்.


பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்திருந்த கேசவன் {கிருஷ்ணன்}, {வழியில்} (புறக்காவலர்களாக வைக்கப்பட்டிருந்த) திருதராஷ்டிரனின் படைவீரர்களில் எண்ணற்றவர்களைச் சிதறடித்தபடி நகர ஆரம்பித்தான். சாத்யகி என்றும் அழைக்கப்படுபவனும், பெரும் சக்தி கொண்ட பலமிக்கத் தேர்வீரனுமான யுயுதானனும், பிரஷத குல திருஷ்டத்யும்னனும் முகாமுக்கான {பாசறை அமைப்பதற்கான} இடத்தை அளந்தனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, குருக்ஷேத்திரத்ததின் வழியே ஓடுவதும், புனித நீர் நிறைந்ததும், கூரான கற்களும் சேறும் இல்லாத படுகைகொண்டதும், அற்புதமான தீர்த்தமாகக் கருதப்பட்டதுமான புனிதமான ஹிரண்வதீ நதியை அடைந்த கேசவன் {கிருஷ்ணன்}, அங்கு ஓர் அகழியைத் தோண்டச் செய்து, அதன் பாதுகாப்புக்காகப் போதுமான எண்ணிக்கையிலான துருப்புகளை முறையான கட்டளைகளுடன் நிறுத்தினான். உயர் ஆன்ம பாண்டவர்களின் பாசறைகளை நிறுவுவதில் எந்த ஏற்பாடுகளைச் செய்தானோ, அதையே (அவர்களின் கூட்டாளிகளான} பிற மன்னர்களின் பாசறைகளுக்கும் கேசவன் {கிருஷ்ணன்} பின்பற்றினான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மன்னர்க்களுக்காக, பூமியின் மேற்பரப்பில் ஒன்றுக்கொன்று இடைவெளி கொண்டவையும், தாக்கப்பட முடியாதவையும், விலையுயர்ந்தவையுமான நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாசறைகளை நிறுவினான். பானகங்கள், உணவு வகைகள் மற்றும் விறகுகள் நிறைந்த அவை {பாசறைகள் [அ] கூடாரங்கள்} அரண்மனைகளைப் போன்றிருந்தன. ஒழுங்கான ஊதியம் பெற்ற இயந்திரக் கைவினைஞர்கள் {Mechanics}, நூறு நூறாக அங்கே கூடினர். சுய அறிவியலில் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் {Physicians} மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் {Surgeons} ஆகியோர், தேவையான அனைத்து மூலப் பொருட்களுடனும் அங்கு இருந்தனர்.

மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொரு பாசறையிலும் அதிக அளவிலானவையும், மலைகளைப் போன்று உயரமாக இருந்தவையுமான, நாண்கள், விற்கள், கவசங்கள், ஆயுதங்கள், தேன் மற்றும் தெளிந்த நெய், ரசப்பொடிகள், நீர், கால்நடைகளுக்கான தீவனங்கள், வைக்கோல் மற்றும் நிலக்கரி {உமிக் காந்தல்கள், கனரக இயந்திரங்கள், நாராசங்கள் {நீண்ட அம்புகளைப் போன்றவை}, தோமரங்கள் {ஈட்டிகளைப் போன்றவை}, போர்க்கோடரிகள், விற்தண்டுகள் {நாணற்ற விற்கள்}, மார்புக்கவசங்கள், ரிஷ்டிகள் {குறுவாள்கள்} மற்றும் அம்பறாத்தூணிகள் ஆகியவை நிறைந்திருக்கச் செய்தான்.

இரும்பு முள்ளுள்ள கவசம் பூண்டவையும், மலைகளைப் போன்று பெரியவையும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவரோடு {நூறாயிரம் பேருடன்} போர்புரியவல்ல எண்ணிலடங்கா யானைகளும் அங்குக் காணப்பட்டன. அந்தக் களத்தில் பாண்டவர்கள் பாளையமிறங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்த அவர்களது கூட்டாளிகள் {கூட்டணியில் உள்ள மன்னர்கள்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, தங்கள் படைகள், விலங்குகளோடு அங்கே அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர். பிரம்மச்சரிய நோன்புகள் பயின்றவர்களும், (புனிதமாக்கப்பட்ட = consecrated) சோமத்தைக் குடித்தவர்களும், வேள்விகளில் அந்தணர்களுக்குப் பெரும் கொடைகளை அளித்தவர்களுமான பல மன்னர்கள், பாண்டு மகன்களின் வெற்றிக்காக அங்கே வந்தனர்."




*யுதிஷ்டிரன், சமமானதும், குளுமையானதும், புற்களும், விறகுகளும் நிறைந்த ஒரு பகுதியில் தனது துருப்புகளை முகாமிடச்செய்தான்.....

திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்:அரண்/ குறள்:742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடைய தரண்.

தமிழ் விளக்கவுரை-மு.வரதராசன் (மு.வ.) :
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்