Wednesday, July 01, 2015

கடல் போலத் தெரிந்த தலைநகரம்! - உத்யோக பர்வம் பகுதி 154

The capital was like an ocean! | Udyoga Parva - Section 154 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 83) {சைனியநிர்யாண பர்வம் -4}

பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து கிருஷ்ணன் புறப்பட்டதும், தங்களுக்குள் ஆலோசித்த துரியோதனன், கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர், போர் நிச்சயம் என்பதை உறுதி செய்து கொண்டு, அடுத்த நாள் படை புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தீர்மானித்தது; கௌரவப்படையின் மன்னர்களும், வீரர்களும் போருக்குக் கிளைம்பிய விதம்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிய ஹஸ்தினாபுரத்தின் தோற்றம்...

வைசம்பாயணரும் ஜனமேஜயனும்
ஜனமேஜயன் {வைசம்பயனரிடம்} சொன்னான், "போரை விரும்பி, தனது துருப்புகளை அணிவகுக்கச் செய்து, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, விராடன் மற்றும் துருபதன், மற்றும் அவர்களுடைய மகன்கள் {விராடன் மற்றும் துருபதனின் மகன்கள்} ஆகியோர் துணையுடன், கேகயர்கள், விருஷ்ணிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற மன்னர்கள் என ஆதித்தியர்களால் பாதுகாக்கப்படும் பெரும் இந்திரனைப் போல, பலமிக்க எண்ணற்ற தேர்வீரர்களால் கவனிக்கப்பட்டு வந்த யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தில் முகாமிட்டுவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டதும், மன்னன் துரியோதனன் என்ன ஆலோசித்தான்? என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தான்?

ஓ! உயர் ஆன்மா கொண்டவரே {வைசம்பாயனரே}, அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் குருஜாங்கலத்தில் {கௌரவ நாடு = குருஜாங்கலம்} நடந்தது அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்}, விராடன், துருபதன், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பலமிக்க யுதாமன்யு, பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஆகியோர் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களுக்கே சிக்கலைக் கொடுக்கவல்லவர்களுமாவர். எனவே, ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் பாண்டவர்கள் ஆகியோரின் செயல்களை அனைத்தையும், அவை நடந்தவாறே விபரமாகக் கேட்க நான் விரும்புகிறேன்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குருக்களின் சபையில் இருந்து) தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} புறப்பட்டதும், கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரிடம் பேசிய மன்னன் துரியோதனன், "தனது நோக்கத்தைச் சாதிக்க இயலாத கேசவன் {கிருஷ்ணன்}, பிருதையின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டான். கோபத்தால் நிறைந்த அவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை நிச்சயம் தூண்டிவிடுவான். எனக்கும், பாண்டவர்களுக்குமான போரை வாசுதேவன் {கிருஷ்ணன்} மிகவும் விரும்புகிறான். பீமசேனனும், அர்ஜுனனும் எப்போதும் அவனைப் {கிருஷ்ணனைப்} போன்ற மனம் கொண்டவர்களே. மேலும், யுதிஷ்டிரனோ, எப்போதும் பீமசேனனின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பவன். தம்பிகள் அனைவருடனும் கூடிய இந்த யுதிஷ்டிரன் முன்னர் என்னால் துன்புறுத்தப்பட்டிருக்கிறான்.

நான் பகைமை பாராட்டி வந்த விராடனும், துருபதனும் வாசுதேவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கீழ்ப்படிந்து, யுதிஷ்டிரனின் படையில் தலைவர்களாக இருக்கிறார்கள். எனவே, கடுமையானதும், பயங்கரமானதுமான போர் நடக்கப் போகிறது. எனவே, சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, மோதலுக்கான அனைத்து தயாரிப்புகளைச் செய்வீர்களாக. (எனது கூட்டாளிகளான) மன்னர்கள் அனைவரும், குருக்ஷேத்திரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கள் பாசறைகளை அமைக்கட்டும். அகன்றதும், எதிரிகளால் அணுகமுடியாததும், நீரும், விறகும் நிறைந்ததும், செய்திகள் மற்றும் பொருட்களை எதிரிகள் தடுக்க முடியாத வகையில் உள்ளதுமான இடங்களில், பல்வேறு வகை ஆயுதங்கள், கொடிகள் மற்றும் கொடிச்சீலைகள் நிறைந்ததுமான பாசறைகளை அமைப்பீர்களாக. நமது நகரத்தில் இருந்து அந்த முகாமுக்குச் செல்லும் சாலைகள் சமமாக ஆக்கப்படட்டும். இன்றே, தாமதமில்லாமல் இஃது அறிவிக்கப்பட்டு, *நாளை நமது அணிவகுப்பு தொடங்கட்டும்" என்றான் {துரியோதனன்}.

(மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட) அவர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். அடுத்த நாளில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {கர்ணன், துச்சாசனன் மற்றும் சகுனி ஆகியோர்}, தாங்கள் ஏவப்பட்டபடியே, அந்த ஏகாதிபதிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள் மற்றும் அனைத்துத் தேவைகளையும் செய்தனர்.

(அதே வேளையில்) அந்த ஏகாதிபதிகள் அனைவரும் மன்னனின் {துரியோதனனின்} கட்டளையைக் கேட்டு, அவனது நோக்கங்களை உணர்ந்து, தங்கள் விலையுயர்ந்த இருக்கைகளில் இருந்து கோபத்துடன் எழுந்தனர். அவர்கள் கதாயுதம் {பரிகாயுதம்} போன்றவையும், தங்கத் தோள்வளைகளால் சுடர்விடுவனவுமான தங்கள் கரங்களில் சந்தனக் குழம்பையும், மற்ற பிற வாசனைத் திரவியங்களையும் {கோரோசனை} மெதுவாகப் பூச ஆரம்பித்தனர். தாமரை போன்றன தங்கள் கரங்களால், தலைப்பாகைகளையும் அரை {கீழ்} மற்றும் மேலாடைகளையும், பல்வேறு வகை ஆபரணங்களையும் அணிந்து கொண்டனர்.

தேர்வீரர்களில் முதன்மையான பலர் தங்கள் தேர்களை மேற்பார்வையிட்டனர். குதிரை மரபுகளை அறிந்தவர்கள், தங்கள் குதிரைகளைப் பூட்ட ஆரம்பித்தனர், யானைகள் சம்பந்தமான காரியங்களை அறிந்தவர்கள், பெரிய விலங்குகளான அவற்றில் சாதனங்களைப் பொருத்தினர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் பல்வேறு விதமாக அழகிய கவசங்களை அணிந்து கொள்ளவும், பல்வேறு விதமான ஆயுதங்களால் தங்களைத் தயார் செய்து கொள்ளவும் தொடங்கினர். காலாட்படை வீரர்கள் பல்வேறு விதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, தங்கத்தாலான பல்வேறு விதமான கவசங்களைத் தங்கள் உடல்களில் அணிந்து கொண்டனர்.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகிழ்ச்சியான கோடி {1,00,00,000} பேரால் நிறைந்திருந்த துரியோதனனின் அந்த நகரம் {ஹஸ்தினாபுரம்}, பண்டிகை காலத்தைப் போலப் பிரகாசமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் அந்தத் தலைநகரம் {ஹஸ்தினாபுரம் = நாகபுரம்}, நிலவு தோன்றும்போது காணக்கிடைக்கும் கடலைப் போலத் தெரிந்தது. மனித குலத்தின் பெரும் கூட்டத்தால் அது {ஹஸ்தினாபுர நகரம்}, எதிர்ச்சுழிப்புகளைக் கொண்ட கடலின் நீர் போலவும்; தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன மீன்களாகவும்; சங்குகள் மற்றும் துந்துபிகளின் ஒலி, அதன் {அக்கடலின்} கர்ஜனை போலவும்; பொக்கிஷ சாலைகள், அதன் ரத்தினங்கள் மற்றும் கற்களைப் போலவும்; பல்வேறு விதமான ஆபரணங்களும் கவசங்களும் அதன் அலைகளாகவும்; பிரகாசமான ஆயுதங்கள் அதன் வெண் நுரையாகவும்; வீடுகளின் வரிசைகள் கடற்கரையில் இருக்கும் மலைகளைப் போலவும்; சாலைகளும், கடைவீதிகளும் {ஹஸ்தினாபுரம் என்ற கடலில் கலக்கும்} ஏரிகளைப் போலவும் தெரிந்தன.



*நாளை நமது அணிவகுப்பு தொடங்கட்டும்" என்றான் {துரியோதனன்}... 
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைமாட்சி/ குறள்:762.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் 
தொல்படைக் கல்லால் அரிது.
தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :
தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்