Thursday, July 02, 2015

யுதிஷ்டிரனின் தயக்கம்! - உத்யோக பர்வம் பகுதி 155

The hesitation of Yudhishthira! | Udyoga Parva - Section 155 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 84) {சைனியநிர்யாண பர்வம் -5}

பதிவின் சுருக்கம் : துரியோதனனின் சொல்லைப் பொறுக்காத யுதிஷ்டிரன், அதை மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்பது; இனி அது குறித்துப் பேசிப் பயனில்லை, போரே ஒரே வழி என்று கிருஷ்ணன் சொன்னது; தன் கூட்டணியில் இருந்த மன்னர்களைப் போருக்குத் தயாராகும்படி சொன்ன யுதிஷ்டிரன் தனது தம்பிகளிடம், பெரியோர்களை எதிர்த்து அவர்கள் எப்படிப் போரிடப் போகிறார்கள் என்பதைக் குறித்து வினவுவது; போரைத் தவிர்க்க முடியாது என யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்த யுதிஷ்டிரன், மீண்டும் ஒரு முறை அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, தீயவனான துரியோதனனால் எப்படி இதைச் சொல்ல முடியும்? ஓ! மங்காப் புகழ் கொண்டவனே {கிருஷ்ணா}, வந்திருக்கும் சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வழியில் செயல்படுவதால், நாங்கள் எங்கள் கடமையின் பாதையில் செல்ல முடியும்? {எந்நோன்பிருந்தால் நாம் நமது அறத்திலிருந்து நழுவாதிருப்போம்?}


ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் நோக்கங்களை நீ நன்கு அறிந்தவனாவாய். என்னாலும், எனது தம்பிகளாலும் எத்தகு நோக்கங்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றன என்பதையும் நீ அறிவாய். விதுரர் மற்றும் பீஷ்மர் ஆகிய இருவரும் உதிர்த்த வார்த்தைகளையும் நீ கேட்டிருக்கிறாய்.. ஓ! பெரு அறிவு கொண்டவனே {கிருஷ்ணா}, குந்தியால் பேசப்பட்ட அறிவுச் சொற்களையும் முழுமையாக நீ கேட்டிருக்கிறாய். இவை அனைத்தையும் கடந்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நன்கு ஆலோசித்த பிறகு, எங்களக்கு நன்மை எது என்பதைத் தயக்கமில்லாமல் எங்களுக்குக் கூறுவாயாக", என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன், மேகங்கள் மற்றும் துந்துபியின் ஆழ்ந்த குரலுடன் {யுதிஷ்டிரனிடம்}, "துரியோதனனுக்குச் சாதகமானவையும், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் இசைவானவையும், குருக்களின் சபையில் என்னால் சொல்லப்பட்டவையுமான அந்த வார்த்தைகளுக்கு, அறிவு இருக்க வேண்டிய இடத்தில் வஞ்சகத்தைக் கொண்டிருக்கும் குரு இளவரசனான துரியோதனிடம் எந்தப் பதிலையும் காண முடியவில்லை {அடைய முடியவில்லை}. {அந்த வார்த்தைகள் துரியோதனனிடம் நிலைபெறவில்லை}. தீய புரிதல் கொண்ட அந்த இழிந்தவன் {துரியோதனன்}, பீஷ்மர், விதுரர், நான் ஆகியோர் சொன்ன ஆலோசனைகளைச் சிறிதும் கேட்கவில்லை {எங்கள் ஆலோசனைகளில் ஒன்றையும் கேட்கவில்லை}. அவன் {துரியோதனன்} அனைவரையும் மீறுகிறான். அவன் {துரியோதனன்} அறம் ஈட்டவும் விரும்பவில்லை, அதே போல புகழையும் அவன் {துரியோதனன்} விரும்பவில்லை.

தீய ஆன்மா கொண்ட அவன் {துரியோதனன்}, கர்ணனை நம்பி, அனைத்தும் ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகக் கருதுகிறான். உண்மையில், தீய இதயம் படைத்தவனும், பாவம் நிறைந்த தீர்மானங்கள் கொண்டவனுமான சுயோதனன், **என்னைச் சிறையிலடைக்கவும் உத்தரவிட்டான். இருப்பினும், அவனது {துரியோதனனின்} அந்த ஆசை வெற்றிபெறவில்லை. பீஷ்மரோ, துரோணரோ இது குறித்து எதுவும் சொல்லவில்லை.** உண்மையில் விதுரரைத் தவிர அவர்கள் அனைவரும் துரியோதனனையே பின்பற்றினார்கள். ஓ! மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மூடனும், பழியுணர்ச்சி கொண்டவனுமான துரியோதனனிடம், சுபலனின் மகன் சகுனி, கர்ணன், துச்சாசனன் ஆகிய மூடர்கள் உம்மைக் குறித்துத் தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். உண்மையில், அந்தக் குரு இளவரசன் சொன்னதையெல்லாம் உம்மிடம் மீண்டும் கூறுவதால் என்ன பயன்?

சுருங்கச் சொல்லின், அந்தத் தீய ஆன்மா படைத்தவன் உம்மிடம் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. உம்முடைய படையில் இருக்கும் மன்னர்கள் அனைவரிடமும் நல்லெண்ணம் கொள்ளாத அளவுக்கு, துரியோதனனுக்குள் மட்டும் இவ்வளவு பாவமும், தீமையும் நிரம்பி வசிக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நமது உடைமையைக் கைவிட்டுக் கௌரவர்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள நாம் விரும்பவில்லை. எனவே, இப்போது நடைபெற வேண்டியது போரே" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வாசுதேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, எதையும் சொல்லாமல் யுதிஷ்டிரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாதிபதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையரோடு {நகுலன் மற்றும் சகாதேவனோடு} சேர்ந்து, "துருப்புகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யுங்கள்" என்றான்.

அந்தக் கட்டளைச் சொல்லைக் கடந்ததும், பாண்டவப் படையில் பெரும் ஆரவாரக் குரல்கள் கேட்டன. படைவீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கொல்லப்படத் தகாதவர்களின் (வரப்போகும்) படுகொலையைக் கண்டு பெருமூச்சு விடத் தொடங்கி, பீமனிடமும் விஜயனிடமும் {அர்ஜுனனிடமும்}, "எதற்காக வனவாசத்தை ஏற்று, இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்தோமோ, அந்தப் பேரிடர் நிலைத்த நோக்கத்தோடு நம்மைப் பின்தொடர்கிறது. எதற்காக இவ்வளவு முயன்றோமோ, அது நாம் முயலாதது போலவே நம்மை விட்டுச் செல்கிறது. மறுபுறம், நாம் அழைக்காமலே நம்மைப் பெருந்துயரம் பின்தொடர்ந்து வருகிறது. எக்காரணம் கொண்டும் நம்மால் கொல்லமுடியாத (நமது) மரியாதைக்குரிய பெரியோர்களிடம் நாம் எப்படிப் போரிடப் போகிறோம்? வயது முதிர்ந்த நமது ஆசான்களைக் கொன்று நம்மால் அடையப்படும் வெற்றி எந்த வகையானது?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். மீண்டும் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்த அர்ஜுனன், "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவகி மகனால் {கிருஷ்ணனால்} திரும்பச் சொல்லப்பட்ட குந்தி மற்றும் விதுரரின் வார்த்தைகள் அனைத்தையும் நீர் நிச்சயம் புரிந்திருப்பீர். விதுரரோ, குந்தியோ, இவர்களில் எவரும் பாவம் நிறைந்த எதையும் சொல்லமாட்டார்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். இஃது ஒரு புறமிருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில் ஈடுபடாமல் நம்மால் விலக முடியாது" என்றான் {அர்ஜுனன்}.

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} உரையைக் கேட்ட வாசுதேவனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அது (நீ சொல்வது) சரிதான்." என்றான். "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா} பிறகு, பாண்டுவின் மகன்கள் தங்கள் மனங்களைப் போருக்குத் தயார் செய்து, தங்கள் படைவீரர்களுடன் அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தார்கள்."


** இது உத்யோக பர்வம் பகுதி 130-ல் {கிருஷ்ணனையா பிடிப்பாய்?} வருகிறது.

திருக்குறள்/ பொருட்பால்/ தூது/ குறள்:690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்