Friday, July 17, 2015

அர்ஜுனன் குறித்துப் பீஷ்மரின் மதிப்பீடு! - உத்யோக பர்வம் பகுதி 170

Arjuna in the judgement of Bhisma! | Udyoga Parva - Section 170 | Mahabharata In Tamil

(ரதாதிரதசங்கியான பர்வம் – 5)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் நகுல சகாதேவர்களின் வீரத்தைக் குறித்துப் பீஷ்மர் துரியோதனிடம் சொன்னது; மொத்தமாகப் பாண்டவர்கள் அனைவரும் மனித சக்திக்ககு அப்பாற்பட்டவர்கள் என்று சொன்னது; ராஜசூய வேள்வியின் போது துரியோதனன் கண்ணெதிரிலேயே நிகழ்ந்தவற்றை நினைவுப்படுத்திச் சொன்னது; அர்ஜுனனின் வீரத்தையும், அவனது தகுதிகளையும், அவனுக்கு இணையான வீரன் இந்த உலகத்திலேயே எவனும் இல்லை என்றும் பீஷ்மர் துரியோதனனிடம் சொன்னது; பாண்டவர்கள் மற்றும் அர்ஜுனனின் வீரத்தை நினைத்துப் பார்த்த கௌரவத் தரப்பு மன்னர்கள் உற்சாகமிழந்ததாக வைசம்பாயனர் சொல்வது...

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, உனது ரதர்களும், அதிரதர்களும், பாதி ரதர்களும் யார் என்பதைக் குறித்து இப்போது நான் சொன்னேன். பாண்டவர்களில் ரதர்கள் மற்றும் அதிரதர்களின் கணக்கை இப்போது கேள். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டவர்களின் படையில் உள்ள ரதர்களின் கணக்கில் ஏதாவது ஆவலை நீ உணர்ந்தால், இந்த ஏகாதிபதிகளுடன் சேர்ந்து கேட்பாயாக.


பாண்டு மற்றும் குந்தியின் மகனான மன்னனே {யுதிஷ்டிரனே} ஒரு பலமிக்க ரதனாவான். ஓ! ஐயா {துரியோதனா}, சுடர்மிகும் நெருப்பைப் போல அவன் போர்க்களத்தில் உலவுவான்; ஓ! மன்னா {துரியோதனா}, பீமசேனன் எட்டு {8} ரதர்களுக்கு இணையாகக் கருதப்படுகிறான். கதாயுத மோதலிலோ, கணைகளின் மோதலிலோ அவனுக்கு {பீமனுக்கு} இணையாக எவனும் இல்லை. பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், செருக்கு நிறைந்தவனுமான அவன் {பீமன்}, ஆற்றலில் மனிதசக்திக்கு ஆப்பாற்பட்டவனாவான். மனிதர்களில் காளையரான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் ரதர்களாவர். அழகில் அசுவினி இரட்டையர்களைப் போன்ற அவர்கள், பெரும் சக்தியை உடையவர்களாக இருக்கிறார்கள்.
தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் இருக்கும் அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, தங்கள் பாடுகளை நினைவுக்கூர்ந்து, பல இந்திரர்களைப் போலப் போர்க்களத்தில் உலவுவார்கள் என்பதில் ஐயமில்லை. உயர் ஆன்மா கொண்ட அவர்கள் அனைவரும் உடற்கட்டில் உயரமாகச் சால மரத்தண்டுகளைப் போல இருக்கிறார்கள். உடற்கட்டில் பிற மனிதர்களைவிட அரை முழம் உயரமாக இருக்கும் பாண்டுவின் மகன்கள் அனைவரும், சிங்கம் போன்ற வீரத்தையும், பெரும் பலத்தையும் கொண்டவர்களாவர். ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் அனைவரும் பிரம்மச்சரிய நோன்புகளையும், பிற தவத்துறவுகளையும் பயின்றவராவர்.

அடக்கமுடையவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்}, உண்மையான புலியின் கடும் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேகத்தில், அடிப்பதில், (எதிரிகளை) நசுக்குவதில், அவர்கள் அனைவரும், {சாதாரண} மனிதனைவிட மேலானவர்களாக இருக்கிறார்கள். உலகளாவிய கைப்பற்றல் இயக்கத்தின் போது, அவர் அனைவரும் பெரும் மன்னர்களை வீழ்த்தினார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அவர்களுடைய ஆயுதங்கள், கதைகள், கணைகள் ஆகியவற்றை வேறு எந்த மனிதனாலும் தரிக்கமுடியாது. உண்மையில், ஓ! கௌரவா {துரியோதனா}, அவர்களது வில்லில் நாணேற்றவோ, அவர்களது கதாயுதங்களை உயர்த்தவோ, அவர்களது கணைகளைப் போரில் அடிக்கவோ வேறு எந்த மனிதனாலும் முடியாது.

வேகத்தில், இலக்கை அடிப்பதில், உண்பதில், புழுதியில் விளையாடுவதில் என அவர்கள் {பாண்டவர்கள்} சிறுவர்களாக இருந்த போதே உங்கள் அனைவரையும் வீழ்த்தினார்கள். கடுமையும் பலமும் கொண்ட அவர்கள், இந்தப் படையுடன் மோதும்போது, போரில் அதை நிர்மூலமாக்குவார்கள். எனவே, அவர்களுடன் ஒரு மோதல் விரும்பத்தக்கது அல்ல. அவர்களில் ஒவ்வொரும் தனியாகவே பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் ஆவர். ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, ராஜசூய வேள்வியின் போது உனது கண்களுக்கு எதிராகவே அது நடந்தது. திரௌபதியின் பாடுகளையும், பகடையாட்டத்தின் போது பேசப்பட்ட கடுமொழிகளையும் நினைவு கூரும் அவர்கள் {பாண்டவர்கள்}, பல ருத்ரர்களைப் போலப் போர்களத்தில் உலவுவார்கள்.

நாராயணனை {கிருஷ்ணனைத்} தனது கூட்டாளியாகக் கொண்டிருக்கும், கண்கள் சிவந்த குடகேசனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இரு படைகளிலும் அவனுக்கு இணையாகக் கருதும்படி துணிச்சல் மிக்க வீரன் எவனும் கிடையாது. மனிதர்களை விட்டுவிடு, தேவர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களில் இதுவரை பிறந்தவர்களிளோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களிலோ அவனைப் போன்ற தேர்வீரன் இருப்பதாக நாம் கேள்விப்படவில்லை.

ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, குரங்குக் கருவி {ஹனுமன் உருவம்} தாங்கிய கொடி பொருத்திய தேரைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன் கொண்டிருக்கிறான்}; அந்தத் தேரைச் செலுத்துபவனோ வாசுதேவனாவான் {கிருஷ்ணனாவான்}. அதில் இருந்து போரிடும் வீரன் தனஞ்சயனாவான் {அர்ஜுனனாவான்}; அவனது வில்லோ காண்டீவமாகும்; காற்றைப் போன்ற வேகமாகக் குதிரைகளை அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கிறான்; தெய்வீக வடிவமைப்பிலான அவனது கவசம் துளைக்கமுடியாததாகும்; அவனது அம்பறாதூணிகள் இரண்டும் வற்றாதனவாக இருக்கின்றன.; பெரும் இந்திரன், ருத்ரன், குபேரன், யமன், வருணன் ஆகியோரிடம் இருந்து தனது ஆயுதங்களை அவன் பெற்றிருக்கிறான்; அவனது தேரில் பயங்கரத் தோற்றம் கொண்ட கதாயுதங்களும், தங்களுக்கிடையே வஜ்ரத்தையும் கொண்டுள்ள பிற பெரும் ஆயுதங்களும் இருக்கின்றன.

ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான தானவர்களை, தனித்தேரில் நின்று கொன்ற அவனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையாகக்கருத வேறு எந்தத் தேர்வீரன் இருக்கிறான்? பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான அந்த ஆயுதம் தாங்கிய வீர்ன் {அர்ஜுனன்}, தனது படையைக் காத்துக் கொண்டே, உனது துருப்புகளை நிச்சயம் அழித்துவிடுவான். ஓ! பெரும் மன்னா, கணைமாரியை {அம்பு மழையைச்} சிதறடிக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக முன்னேறத்தக்கவர்கள், {பீஷ்மனான} நானும், ஆசானும் {துரோணரும்} மட்டுமே; மூன்றாவதாக வேறு எந்தத் தேர்வீரனும் கிடையாது. மழைக்காலத்தில் காற்றால் உந்தப்பட்ட மேகங்களைப் போலக் கணைமாரியைப் பொழியும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனக்கு அடுத்தவனாகக் கொண்டு போரில் நுழைகிறான்! அவனோ {அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்டு, பாண்டு மகன்களின் நன்கறியப்பட்ட வீரத்தை நடுங்கும் இதயத்துடன் நினைவுப்படுத்திக் கொண்டு, அதைத் தங்கள் கண்கள் முன்பாகவே கண்டதுபோல நினைத்துப் பார்த்த அந்த மன்னர்களின் சந்தனக்குழம்பு பூசப்பட்ட, தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் கரங்கள், பலம் இழந்து தொங்குவது போலத் தோன்றிற்று".


{அர்ஜுனனோ} திறன்மிக்கவனாகவும், *இளைஞனாகவும் இருக்கிறான்; அதே வேளையில் நாங்களோ வயதானவர்களாகவும், {முதுமையால்} நைந்து போனவர்களாகவும் இருக்கிறோம்" என்றார் {பீஷ்மர்}.
மேலும் விவரங்களுக்கு:
13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது 
யுதிஷ்டிரனுக்கு வயது   :89 
பீமனுக்கு வயது         :88 
அர்ஜுனனுக்கு வயது    :87 
நகுல சகாதேவர்களுகு   :86 
துரியோதனனுக்கு வயது :88 
கர்ணனுக்கு வயது       :105 
கிருஷ்ணனுக்கு வயது   :87

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்