Thursday, September 03, 2015

படைகளின் நிலையறிந்த திருதராஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 020

Dhirtarashtra knows the position of the forces! | Bhishma-Parva-Section-020 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 8)

பதிவின் சுருக்கம் : ஒவ்வொரு தரப்பின் உற்சாகம் மற்றும் மனநிலை ஆகியவற்றையும், எந்தத் திசையை நோக்கி ஒவ்வொறு படையும் நின்றன என்பதையும்; யானையின் மீது பவனி வந்த துரியோதனன், யானைகளைப் பொறுக்காத யானைகள், பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் துரியோதனாதிகளின் நிலைகள் ஆகியவை குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொன்னது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சூரியன் உதித்தபோது, ஓ! சஞ்சயா, பீஷ்மரால் வழிநடத்தப்பட்ட எனது படை, பீமனால் வழிநடத்தப்பட்ட பாண்டவப் படை ஆகியவற்றில் போரிட விரும்பி மற்ற படையை உற்சாகமாக அணுகியது எது {எந்தப் படை}? சூரியன், சந்திரன், பகையான காற்று ஆகியவை எந்தப் பக்கத்தில் {எந்தப் படைக்குப் பின்புறத்தில்} இருந்தன? யாருக்கு எதிராக இரை தேடும் விலங்குகள் அமங்கலமான ஒலிகளை எழுப்பின? எந்த இளைஞர்களின் முகங்கள் உற்காகத்துடனும் நிறத்துடனும் இருந்தன? இவை அனைத்தையும் எனக்கு உண்மையாகவும் முறையாகவும் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.


அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, அணிவகுக்கப்பட்ட போது அந்த இரு படைகளும் சமமான மகிழ்ச்சியுடனேயே இருந்தன. இரு படைகளும், பூத்துக் குலுங்கும் வனத்தின் தன்மையுடன் சமமான அழகுடனேயே திகழ்ந்தன. இரு படைகளுமே யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளால் நிறைந்திருந்தன. இரு படைகளுமே பயங்கரத் தன்மையுடன் பரந்து இருந்தன; மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றை ஒன்று பொறுத்துக் கொள்ளாதவையாகவும் இருந்தன. அவை இரண்டும் சொர்க்கத்தையே வெல்லும் பொருட்டு அணிவகுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை இரண்டும் சிறந்தவர்களைக் கொண்டிருந்தன.

திருதராஷ்டிரத் தரப்பைச் சேர்ந்த கௌரவர்கள் மேற்கை நோக்கி {மேற்கு முகமாக} நின்றும், அதே வேளையில், பார்த்தர்கள் {பாண்டவர்கள்} கிழக்கை நோக்கி {கிழக்கு முகமாக} நின்றும் போரை எதிர்கொண்டார்கள். கௌரவர்களின் துருப்புகள் தானர்வர்களின் {அசுரர்களின்} தலைவனுடைய படையைப் போலத் தெரிந்தன. அதே வேளையில் பாண்டவர்களின் துருப்புகள் தேவர்களின் படையைப் போலத் தெரிந்தன. பாண்டவர்களின் பின்புறமிருந்து (தார்தராஷ்டிரர்களின் முகங்களுக்கு எதிராக) {கௌரவர்களை நோக்கி} காற்று வீசத் தொடங்கியது. இரை தேடும் விலங்குகள் தார்தராஷ்டிரர்களுக்கு எதிராகக் கத்தத் தொடங்கின.

அருங்காட்சியகத்தில் இரும்புக் கவசத்துடன்
வைக்கப்பட்டுள்ள யானை
(பாண்டவர்களின்) பெரும் யானைகள் வெளியிட்ட மதப்பெருக்கின் கடும் நெடியை, உமது மகன்களுக்குச் சொந்தமான யானைகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாமரையின் நிறமுடையதும், மதப்பெருக்குக் கொண்டதும், (தன் முதுகில்) தங்கமயமான கச்சையைக் கொண்டதும், இரும்பாலான மேல்விரிப்பைக் கொண்டதுமான ஒரு யானையின் மீதேரி துரியோதனன் வந்தான். அவன் குருக்களுக்கு மத்தியில் துதிபாடிகள் {வந்திகள்}, பாடகர்கள் {மாகதர்கள்} ஆகியோரால் துதிக்கப்பட்டான். சந்திரப் பிரகாசம் கொண்ட ஒரு வெண்குடை, தங்க ஆரத்துடன் {மாலையுடன்} இருந்த அவனது {துரியோதனனது} தலைக்கு மேல் பிடிக்கப்பட்டிருந்தது.

காந்தாரர்களின் ஆட்சியாளனான சகுனி, தன்னைச் சுற்றிலும் அமர்த்தப்பட்ட மலைநாட்டு மக்களால் பின்தொடரப்பட்டான். மரியாதைக்குரிய பீஷ்மர், தனது தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, வில் மற்றும் வாள் தரித்தவராக, வெள்ளைத் தலைப்பாகையுடன் {வெண்கிரீடத்துடன்}, (தனது தேரில்) வெள்ளைக் கொடியுடன், (அதில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளுடன், மொத்தத்தில் ஒரு வெண்மலையைப் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தலைமையில் இருந்தார்.

பீஷ்மரின் படைப்பிரிவிலேயே திருதராஷ்டிரரின் மகன்கள் அனைவரும் இருந்தனர். அவர்களுடன் பாஹ்லீக நாட்டவரில் ஒருவனான சலனும், அம்பஷ்டர்கள் என்று அழைக்கப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், சிந்துக்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், சௌவீரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும், ஐந்து நதிகள் பாயும் நாட்டில் [1] வசிக்கும் வீரர்களும் இருந்தனர். சிவந்த குதிரைகள் பூட்டப்பட்ட தங்கத் தேரில், கையில் வில்லுடனும், என்றும் தோற்காத இதயத்துடனும் {கம்பீரத்துடனும்} இருந்தவரும், கிட்டத்தட்ட மன்னர்கள் அனைவருக்கும் ஆசானானவருமான உயர் ஆன்ம துரோணர், துருப்புகள் அனைத்துக்கும் பின்புறத்தில் இருந்து அவற்றை இந்திரனைப் போலப் பாதுகாத்தார்.

[1] இன்றைய பஞ்சாப் மாநிலம். மூலத்தில் "பஞ்சநதா:" என்றிருக்கிறது.

படையின் முன்னணியில் போரிடுபவரும் [2], உயர் ஆன்மா கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும், கௌதமர் என்று அழைக்கப்படுபவரும், அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவருமான சரத்வானின் மகன் {கிருபர்}, சகர்கள், கிராதர்கள், யவனர்கள், பஹ்லவர்கள் {ஒரு வேளை பல்லவர்களாக இருக்கலாம்} ஆகியோருடன் அந்தப் படையின் வடக்கு எல்லையில் தனது நிலையை ஏற்றுக் கொண்டார். அந்தப் பெரும்படை, விருஷ்ணி மற்றும் போஜ குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், நல்ல ஆயுதங்களைத் தாங்கியவர்களும், ஆயுதங்களின் பயன்பாடுகளை நன்கு அறிந்தவர்களும், கிருதவர்மனால் வழிநடத்தப்பட்டவர்களுமான சூராஷ்டிர வீரர்களாலும் நன்கு பாதுகாக்கப்பட்டது. {அப்படிப் பாதுகாக்கப்பட்டபடியே} அந்தப் படை தெற்கு நோக்கி முன்னேறியது.

[2] மூலத்தில் இங்கே Uttaradhus என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் அது மிகவும் சந்தேகத்திற்கிடமானது என்கிறார் கங்குலி. இந்த இடத்தில் வேறு பதிப்பில் சிறந்த முறையில் போரின் சுமையைத் தாங்குபவரும் என்று கிருபரைக் குறித்து இருக்கிறது. பின்னதே சரியானதாகத் தெரிகிறது.

அர்ஜுனனின் மரணத்திற்காகவோ, புகழுக்காகவோ {வாழ்வுக்காகவோ} உண்டாக்கப்பட்டவர்களும், ஆயுதங்களில் திறம் பெற்றவர்களுமான சம்சப்தகர்களின் பத்தாயிரம் {10,000} தேர்கள், வீரமிக்கத் திரிகார்த்தர்களுடன் அர்ஜுனனின் பாதங்களைப் பின்பற்றும் நோக்குடன் [3] வெளியே சென்றன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையில், போரிடும் சக்திகளில் முதன்மையானவையான ஆயிரம் {1000} யானைகள் இருந்தன.
ஒவ்வொரு யானைக்கும், நூறு {100} தேர்களும்;
ஒவ்வொரு தேருக்கும் நூறு {100} குதிரைப்படை வீரர்களும்;
ஒவ்வொரு குதிரைப்படை வீரனுக்கும், பத்து {10} வில்லாளிகளும்;
ஒவ்வொரு வில்லாளிக்கும் வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய பத்து {10} போராளிகளும் ஒதுக்கப்பட்டனர்.

[3] "இங்கே இருக்கும் மூலச் சொல் Yenarjunastena ஆகும். இங்கு Yena என்பது yatra, அல்லது "யாத்திரை", அல்லது "பயணம்" என்றும், tena என்பது tatra அல்லது "அந்த இடத்தில்" என்ற பொருளும் கொண்ட சொற்களாகும் என்று நீலகண்டர் விளக்குகிறார். இதன் மொத்தப் பொருள், "எங்கு அர்ஜுனன் எங்கிருப்பானோ, அங்கிருப்பவர்கள்" என்பதாகும்" என்கிறார் கங்குலி.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படைப்பிரிவுகள் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டன. சந்தனுவின் மகனான உமது படைத்தலைவர் பீஷ்மர், ஒவ்வொரு நாளின் விடியலின் போதும், சில நேரங்களில் மனித முறையிலும், சில நேரங்களில் தேவ முறையிலும், சில நேரங்களில் கந்தரவ முறையிலும், சில நேரங்களில் அசுர முறையிலும் உமது துருப்புகளை அணிவகுத்தார். பெரும் எண்ணிக்கையிலான மகாரதர்கள் திரண்டிருந்ததும், கடலைப் போல முழங்கியதுமான அந்தத் தார்தராஷ்டிரப் படை, பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, போருக்காக மேற்கு நோக்கி நின்றது. வரம்பற்ற உமது படை, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பயங்கரமாகக் காட்சியளித்தது; ஆனால் பாண்டவர்களின் படையோ, (எண்ணிக்கையில்) அப்படியில்லையென்றாலும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் அதன் தலைவர்களாக இருந்ததால் மிகப் பெரியதாகவும், ஒப்பற்றதாகவும் தோன்றியது" என்றான் {சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்