Sunday, October 04, 2015

குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 038

Religion by Separation from the Qualities - Gunatraya–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-038 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 26) {பகவத் கீதை - பகுதி 14}

பதிவின் சுருக்கம் : பொருள் இயல்புகளின் தொடர்புடைய நற்குணம், பேரார்வம் மற்றும் அறிவின்மை ஆகிய மூன்று வழிமுறைகளை (குணங்களை) கிருஷ்ணன் விளக்குவது; உடல்கொண்டு வாழும் ஓர் உயிரில் அவை ஏற்படுத்தும் விளைவுகள், பண்புகள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கிருஷ்ணன் விளக்குவது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "எதை அறிந்து, முனிவர்கள் அனைவரும் இந்த உடலில் (உடலின் பந்தங்களில்) இருந்து உயர்ந்த முழுமையை {பரமசித்தியை} அடைந்தார்களோ, அதே அற்புத அறிவியலை, அறிவியல்களில் தெய்வீக அறிவியலை நான் மீண்டும் உனக்கு அறிவிக்கிறேன் {சொல்கிறேன்}. 14:1

இந்த அறிவியலை அடைந்து, எனது இயல்பை அடைந்தோர், (புதிய) {உலக} படைப்பிலும் கூட {அண்டம் அழிந்து புதியதாக மலரும்போது கூட} மறுபிறவியை அடையாமலும், ஊழிக்காலத்தில் {பிரளயத்தின் போதும்} கலங்காமலும் இருக்கிறார்கள். 14:2


எனக்குக் கருவறையாக வலிமைமிக்கப் பிரம்மமே இருக்கிறது. அதில் நான் கருவை {உயிரை} வைக்கிறேன் {அதில் நான் கருத்தரிக்கிறேன்}. அதில்தான், ஓ! பாரதா {அர்ஜுனா} உயிரினங்கள் அனைத்தும் பிறப்பை அடைகின்றன. 14:3

கருவறைகள் அனைத்திலும் பிறக்கும் (உடல்கொண்ட) வடிவங்கள் யாவைக்கும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பிரம்மமே வலிமைமிக்கக் கருவறையாக இருக்கிறது. (மேலும்) நானே விதையைத் தரும் தந்தையாக இருக்கிறேன். 14:4

இயற்கையில் பிறக்கும் நற்குணம் {சத்வ குணம்}, பேரார்வம் {ரஜோகுணம்}, இருள் {தமோ குணம்} ஆகிய இந்தக் குணங்களே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நித்தியமான பண்புருவத்தை [ஆத்மாவை] இந்த உடலில் கட்டுகிறது. 14:5

இவற்றில், நற்குணம் {சத்வகுணம்}, தனது பிழையில்லா இயல்பால் தெளிவைத் தரும் ஒளியாகவும் {அறிவாகவும்}, துன்பங்கள் அற்றதாகவும் இருப்பதால், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, மகிழ்ச்சியையும், அறிவையும் அடைந்து {அது} (ஆன்மாவைக்) கட்டுப்படுத்துகிறது. 14:6

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஆசையையே தன் சாறாகக் கொண்ட பேரார்வம் {ரஜோ குணம்}, தாகத்திலும் {ஏக்கத்திலும்}, பற்றிலும் இருந்து பிறப்பது என்பதை அறிவாயாக.  செயலில் பற்று காரணமாகவே பண்புருவத்தை (ஆத்மாவை) அது {உடலில்} கட்டுகிறது. 14:7

ஓ! பாரதா {அர்ஜுனா}, எனினும், இருளோ {தமோ குணமோ}, அறியாமையில் பிறக்கிறது என்பதை அறிவாயாக. (மேலும்) பண்புருவங்கள் (ஆத்மாக்கள்) அனைத்தையும் அது {தமோ குணம்} கலக்கமடையச் {மயங்கச்} செய்கிறது. பிழை {தவறு}, சோம்பல் மற்றும் உறக்கத்தில் {ஆத்மாவை} அது {தமோ குணம்} கட்டுகிறது. 14:8

ஓ! பாரதா {அர்ஜுனா}, நற்குணம் {சத்வ குணம்} இன்பத்துடன் (ஆத்மாவை) ஒன்றிணைக்கிறது {பற்றுறச் செய்கிறது}; பேரார்வம் {ரஜோகுணம்}, செயலுடன் {ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது; ஆனால் இருளோ, அறிவுக்குத் திரையிட்டு, பிழையுடன் {தவறுடன்ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது. 14:9

ஓ! பாரதா {அர்ஜுனா}, பேரார்வத்தையும் {ரஜோகுணத்தையும்}, இருளையும் {தமோ குணத்தையும்} அடக்கி, நற்குணம் {சத்வ குணம்}, நிலைநிற்கிறது. பேரார்வத்தையும், நற்குணத்தையும் அடக்கி இருள் நிலைநிற்கிறது; (மேலும்) இருளையும், நற்குணத்தையும் அடக்கி பேரார்வம் நிலைநிற்கிறது. 14:10

எப்போது இந்த உடலில் உள்ள வாயில்கள் அனைத்திலும் அறிவொளி பிறக்கிறதோ, அப்போது நற்குணம் {சத்வ குணம்} வளர்ச்சி பெறுகிறது என்பதை ஒருவன் அறிய வேண்டும். 14:11

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, பேராசை, செயல்பாடு, செயல்களின் தொடக்கம், அமைதியின்மை, ஏக்கம் ஆகியவைகளே, பேரார்வம் {ரஜோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:12

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, இருள் {ஒளியின்மை}, செயலின்மை, பிழை {தவறுதல்}, மயக்கம் ஆகியவையே, இருள் {தமோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:13

உடலைத் தாங்குபவன் ஒருவன், ஊழிக்காலத்தின் {தன் மரணத்தின்} போது, நற்குணம் {சத்வ குணம்} வளர்ந்து சென்றால், அவன் பிரம்மத்தை அறிந்தவர்களின் களங்கமில்லா உலகங்களை அடைகிறான். 14:14

பேரார்வம் {ரஜோகுணம்} நிலவும்போது மரணமடைந்து சென்றால், அந்த ஒருவன் {மறுபிறவியில்} செயலில் பற்றுடையோருக்கு மத்தியில் பிறக்கிறான். அதே போல இருளில் {தமோ குணத்துடன்} இருக்கும்போது இறந்தால், ஒருவன் மூடர்களை ஈன்றெடுக்கும் கருவறைகளில் பிறக்கிறான். 14:15

நற்செயலின் பலன் நன்மையானது என்றும், களங்கமில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, பேரார்வத்தின் பலன் துன்பமாகும்; (மேலும்) இருளின் பலன் அறியாமையாகும். 14:16

நற்குணத்தில் {சத்வ குணத்தில்} இருந்தே அறிவு பிறக்கிறது; பேரார்வத்தில் {ரஜோ குணத்தில்} பேராசையும்; (மேலும்) இருளில் {தமோ குணத்தில்} பிழை, மயக்கம் மற்றும் அறியாமையும் பிறக்கின்றன. 14:17

நற்குணத்தில் {சத்வ குணத்தில்} வசிப்போர் உயர்வடைகின்றனர்; பேரார்வத்திற்கு {ரஜோகுணத்திற்கு} அடிமையானோர் நடுவில் இருக்கிறார்கள்; (அதே வேளையில்) இருளில் {தமோ குணத்தில்} வசிப்போர், இழிகுணத்திற்கு அடிமையாகி வீழ்ச்சியடைகின்றனர் {தாழ்ந்த உலகங்களை அடைகின்றனர்}. 14:18

குணங்களைத் தவிரச் செயல்படுபொருள் வேறு எதுவும் இல்லை எனக் கண்டு, அவற்றைக் கடந்திருப்பதை உணரும் ஒரு பார்வையாளன், எனது இயல்பையே அடைகிறான் {அறிகிறான்}. 14:19

அனைத்து உடல்களின் மூலாதாரமாக இருக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட பண்புருவம் {ஆத்மா}, அழிவற்ற தன்மையை அனுபவிக்கிறது {அமிர்த நிலையை அடைகிறது}" என்றான் {கிருஷ்ணன்}. 14:20

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த மூன்று குணங்களையும் கடந்து மேம்பட்டிருக்கும் ஒருவனின் அறிகுறிகள் என்னென்ன? அவனது நடத்தை எது? இந்த முக்குணங்களையும் ஒருவன் கடந்து மேம்படுவது எவ்வாறு?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 14:21

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஒளி, செயல், மாயை ஆகியவற்றில் - அவை இருக்கும்போது வெறுப்பையும், இல்லாதபோது விருப்பையும் [1] கொள்ளாதவன் எவனோ {22}, கவலையற்றவனாக அமர்ந்து, அந்தக் குணங்களால் அசைக்கப்படாதவன் எவனோ; அந்தக் குணங்களே (தங்களுக்குரிய செயல்பாடுகளில்) ஈடுபடுகின்றன (தானல்ல) என்று நினைத்து அசையாமல் அமர்ந்திருப்பவன் எவனோ {23}, துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கொள்பவன் எவனோ, தன்னிறைவு கொண்டவன் எவனோ, பூமியின் புல்லையும், கல்லையும், தங்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, ஏற்புடையவற்றையும் ஏற்பில்லாதவற்றையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, பகுத்தறிபவன் எவனோ, இகழையும் புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ {24}, மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, நண்பனையும் எதிரியையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, {பலன் தரும்} முயற்சிகள் அனைத்தையும் துறந்தவன் எவனோ, அவனே குணங்களைக் கடந்து மேம்பட்டவன் எனச் சொல்லப்படுகிறான் {25}. 14:22-25

[1] மூன்று குணங்களின் விளைவுகளைக் குறிப்பதே ஒளி, செயல்பாடு மற்றும் மாயை ஆகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

மேலும், தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் {வேறுபாடில்லாத பக்தி யோகத்தில்} என்னை வழிபடுபவன் எவனோ, அவனே இந்தக் குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிரம்மத்தின் இயல்புக்குள் நுழையத் தகுந்தவனாகிறான். 14:26

ஏனெனில், பிரம்மம், அழிவின்மை, கேடின்மை, நிலையான அறம் மற்றும் தடையற்ற இன்பம் ஆகியவற்றின் உறைவிடமாக நானே இருக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்} 14:27



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்