Friday, June 17, 2016

சிவன் அளித்த வரம்! - துரோண பர்வம் பகுதி – 081

The boon granted by Siva! | Drona-Parva-Section-081 | Mahabharata In Tamil

(பிரதிஜ்ஞா பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : சிவனும் கிருஷ்ணனும் ஒன்றெனக் கண்டு மலைத்த அர்ஜுனன்; கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒரு தடாகத்திற்கு அனுப்பிய சிவன்; வில்லையும் அம்பையும் சிவனிடம் கொடுத்த கிருஷ்ணார்ஜுனர்கள்; ஆயுதம் பயன்படுத்த வேண்டிய முறையை அறிந்து கொண்ட அர்ஜுனன்…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சிமிக்க ஆன்மாவுடன் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாக {காளையைக் கொடியாகக்} கொண்டவனும், அனைத்து சக்திகளின் கொள்ளிடமுமான அந்தத் தேவனை (ஆச்சரியத்தில்) கண்களை விரித்துப் பார்த்தான். ஒவ்வொரு இரவும் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அவன் செலுத்திய காணிக்கைகளை, அந்த முக்கண் தேவனின் {சிவனின்} அருகில் கண்டான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மனப்பூர்வமாகக் கிருஷ்ணன், சர்வன் {சிவன்} ஆகிய இருவரையும் வணங்கிப் பின்னவனிடம் {சிவனிடம்}, “தெய்வீக ஆயுதத்தை (அடைய) விரும்புகிறேன்” என்றான்.


விரும்பிய வரத்தை வேண்டிய பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவன் சிவன், புன்னகையுடன் வாசுதேவனிடமும், அர்ஜுனனிடமும், "ஓ! மனிதர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நல்வரவு. உங்கள் மனத்தின் விருப்பத்தையும், நீங்கள் இங்கே வந்த காரியத்தையும் நான் அறிவேன். நீங்கள் விரும்பியதை நான் தருவேன். ஓ! எதிரிகளைக் கொல்பவர்களே, இந்த இடத்திற்கு வெகு அருகில், அமிர்தம் நிறைந்த தெய்வீகத் தடாகம் ஒன்று இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, அந்த எனது தெய்வீக வில்லும், கணையும் அங்கே வைக்கப்பட்டன. அதைக் கொண்டே தேவர்களின் எதிரிகள் அனைவரையும் போரில் நான் கொன்றேன். கிருஷ்ணா, அந்தச் சிறந்த வில்லில் கணையைப் பொருத்தி இங்கே கொண்டு வருவாயாக" என்றான் {சிவன்}. சிவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுடன் சேர்ந்து "அப்படியே ஆகட்டும்" என்றான்.

பிறகு, நூற்றுக்கணக்கான தெய்வீக அற்புதங்களைக் கொண்டதும், அனைத்துப் பொருளையும் அருள வல்லதும், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனால் {சிவனால்} குறிப்பிடப்பட்டதுமான அந்தப் புனிதத் தடாகத்திற்குச் சிவனின் துணைவர்கள் அனைவரின் துணையுடன் அந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். முனிவர்களான நரனும், நாராயணனும் (அஃதாவது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}) அந்தத் தடாகத்திற்கு அச்சமில்லாமல் சென்றனர்.

சூரியவட்டிலைப் போன்றப் பிராகாசமுடன் இருந்த அந்தத் தடாகத்தை அடைந்த அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்}, அதன் நீருக்குள் ஒரு பயங்கரப் பாம்பைக் கண்டனர். மேலும் அங்கே ஆயிரம் {1000} தலைகளைக் கொண்ட மற்றுமொரு பாம்பையும் கண்டனர். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பாம்பு {நெருப்பின்} கடுந்தழல்களைக் கக்கிக் கொண்டிருந்தது. அப்போது, கிருஷ்ணனும், அர்ஜுனனும், நீரைத் தொட்டுத் தங்கள் கரங்களைக் குவித்து, காளையைத் தன் அடையாளமாகக் {காளைக்கொடி} கொண்ட தேவனை {சிவனை} வணங்கி அந்தப் பாம்புகளை அணுகினர். வேதங்களை அறிந்தவர்களான அவர்கள் அந்தப் பாம்புகளை அணுகும்போதே, அளவிலா சக்தி கொண்ட பவனை {சிவனைத்} தங்கள் நேர்மையான ஆன்மாக்களால் வணங்கியபடியே, ருத்ரனைப் புகழ்ந்து வேதங்களில் உள்ள {சதருத்ரியம் என்ற} நூறு பத்திகளை {ஸ்லோகங்களை} உரைத்தனர்.

அந்த ருத்ரத் துதிகளுடைய சக்தியின் விளைவால் அந்தப் பயங்கரப் பாம்புகள் இரண்டும், தங்கள் பாம்பு வடிவங்களைத் துறந்து, எதிரிகளைக் கொல்லும் வில் மற்றும் கணையின் வடிவை ஏற்றன. (தாங்கள் கண்டதில்) நிறைவுற்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும் பெரும் பிரகாசம் கொண்ட அந்த வில்லையும் கணையையும் கைப்பற்றினர். பிறகு அந்த உயர் ஆன்ம வீரர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சிறப்புமிக்க மஹாதேவனிடம் {சிவனிடம்} அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தனர். அப்போது சிவனுடைய உடலின் ஒருபகுதியில் இருந்து பழுப்பு நிறக் கண்களைக் கொண்ட ஒரு பிரம்மச்சாரி வெளிவந்தான். தவத்தின் புகலிடமாக அவன் தெரிந்தான். நீலத் தொண்டையும், சிவப்பு குழல்களும் கொண்ட அவன் பெரும் பலம் கொண்டவனாகவும் இருந்தான்.

அந்தச் சிறந்த வில்லை எடுத்த அந்தப் பிரம்மச்சாரி (வில் மற்றும் தனது பாதம் ஆகிய இரண்டையும் முறையாக வைத்துக் கொண்டு) நிலையாக நின்றான் [1]. கணையை வில்லின் நாணில் பொருத்திய அவன், பின்னதை {வில்லை} முறையாக வளைக்கத் தொடங்கினான். நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவன் {அந்த பிரம்மச்சாரி} விற்பிடியைப் பிடித்திருக்கும், நாணை வளைக்கும், பாதங்களை நிலைநிறுத்தும் முறைகளைக் கண்டும், பவனால் {சிவனால்} உச்சரிக்கப்பட்ட மந்திரங்களைக் கேட்டும் அனைத்தையும் முறையாகக் கற்றான். வலிமையும், பலமும் மிக்க அந்தப் பிரம்மச்சாரி அந்தக் கணையை அதே தடாகத்தில் ஏவினான். மேலும் அவன் அந்த வில்லையும் அதே தடாகத்தில் மீண்டும் வீசியெறிந்தான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "அவர் அந்த உத்தமமான வில்லைக் கையிலெடுத்து ஏகாக்ரசித்தராகி வீரன் நிற்கும் நிலைமையோடு நின்றார்" என்றிருக்கிறது.

நல்ல நினைவுத்திறனைக் கொண்ட அர்ஜுனன், தன்னிடம் பவன் {சிவன்} மனம்நிறைந்தான் என்பதை அறிந்தும், காட்டில் தனக்குப் பின்னவன் {சிவன்} அளித்த வரத்தையும், தனிப்பட்ட முறையில் தனக்குக் காட்சியளித்ததையும் நினைவுகூர்ந்தும், "இவை அனைத்தும் கனியை {பலனை} உண்டாக்குவதாக அமையட்டும்" என்று மனப்பூர்வமாக விரும்பினான். அவனது விருப்பத்தைப் புரிந்து கொண்ட பவன் {சிவன்}, அவனிடம் நிறைவடைந்து அவனுக்கு வரத்தை அளித்தான். மேலும் அந்தத் தேவன் {சிவன்}, பயங்கரப் பாசுபதாயுதத்தையும் [2], உறுதிமொழியின் நிறைவேற்றத்தையும் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அருளினான். இப்படியே உயர்ந்த தேவனிடம் {சிவனிடம்} இருந்து மீண்டும் பாசுபதாயுதத்தை அடைந்தவனும், வெல்லப்பட முடியாதவனும், {தான் கண்ட காட்சியால்} மயிர் சிலிர்ப்பை அடைந்தவனுமான அர்ஜுனன், ஏற்கனவே தன் காரியம் சாதிக்கப்பட்டதாகவே கருதினான்.

[2] வனபர்வம் பகுதி 166ல் அர்ஜுனன் சிவனிடம் முதல்முறையாகப் பாசுபதத்தைப் பெற்றது குறிப்பிடப்பட்டுள்ளது. வனபர்வம் 172ல் அர்ஜுனன் பாசுபதத்தை முதல்முறையாகத் தானவர்கள் {பௌலோமர்கள் மற்றும் காலகேயர்கள்} மீது பயன்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கனவில் மீண்டும் சிவனிடம் இருந்து அதே பாசுபத ஆயுதத்தைப் பெறுகிறான்.

பிறகு மகிழ்ச்சியால் நிறைந்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், தங்கள் தலைகளைத் தாழ்த்தி, அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} தங்கள் வழிபாட்டைச் செலுத்தினர். பவனால் {சிவனால்} அனுமதிக்கப்பட்ட அர்ஜுனன், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய வீரர்கள் இருவரும் மகிழ்ச்சியின் வரத்தால் நிறைந்து கிட்டத்தட்ட உடனேயே தங்கள் முகாமுக்குத் திரும்பினர். ஜம்பனைக் கொல்ல விரும்பிய இந்திரன், விஷ்ணு ஆகிய தேவர்கள் இருவரும், பெரும் அசுரர்களைக் கொல்பவனான பவனின் {சிவனின்} அனுமதியைப் பெற்று மகிழ்ச்சியை அடைந்ததைப் போலவே உண்மையில் அவர்களது {கிருஷ்ணார்ஜுனர்களின்} மகிழ்ச்சியும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்