Showing posts with label கால அட்டவணை. Show all posts
Showing posts with label கால அட்டவணை. Show all posts

Friday, August 12, 2016

மஹாபாரதம் - கால அட்டவணை - 4



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

48. சைந்தவனின் {ஜெயத்ரதன்} மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை பதினோறாம் நாளில் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான். அன்று இரவும் போர் தொடர்ந்தது. துரோணர் மார்கழி மாதம் தேய்பிறை பனிரெண்டாம் நாளில் நடுப்பகலில் கொல்லப்பட்டார்.



49. கர்ணனின் மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை 14ம் நாளில் கர்ணன் கொல்லப்பட்டான். சல்லியன் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொல்லப்பட்டான்.

50. துரியோதனனின் வீழ்ச்சி: மார்கழி மாதம் அமாவாசை / தைமாதம் வளர்பிறை முதல் நாள் மாலையில் அவன் வீழ்ந்தான். அடுத்த நாள் காலையில் தை மாதம் வளர்பிறை முதல் நாளில் அவன் இறந்தான்.

51. பலராமன் கார்த்திகை மாதம் தேய்பிறை 5ம் நாளில், பூச நட்சத்திரத்தில் தன் யாத்திரயைத் தொடங்கினார். அதேபோல நாள் வாரியாகவும், நட்சத்திர வாரியாகவும் அந்த யாத்திரை 42 நாட்கள் நடந்தது.

52. அஸ்வத்தாமன் மார்கழி மாதம் அமாவாசை / தை மாதம் வளர்பிறை 1ம் நாள் இரவில் பாண்டவர்களின் மகன்களைக் கொன்று அந்தப் பயங்கரச் செய்தியை துரியோதனனிடம் வளர்பிறை 1ம் நாள் காலையில் சொன்னான். தைமாதம் வளர்பிறை 1ம் நாளில் அஸ்வத்தாமன் வீழ்த்தப்பட்டான்.

53. பாண்டவப் படைகள் 7 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 551,33,83,260.
கௌரவப் படைகள் 11 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 866,38,87,960,
மொத்தம் 18 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 1417,72,71,240.

பாண்டவர்களின் தரப்பில், பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி, யுயுத்சு ஆகியோரையும், கௌரவர் தரப்பில், கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் ஆகியோரையும் தவிர எஞ்சிய அனைவரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்டிரன், போரில் 94 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான்.

பாண்டவ வீரர்கள் கௌரவப்படையினரை எப்படி அப்புறப்படுத்தினர் என்ற தகவல்கள் இக்காவியத்தில் தெளிவாக இல்லை. 13வது நாளில் அபிமன்யு மட்டும் 0.5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான். 14வது நாளில் அர்ஜுனன் மட்டும் 5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான்.

54. பாண்டவத்தரப்பைத் தாக்கி

பீஷ்மர் மட்டும் கிட்டத்தட்ட 1.27 அக்ஷௌஹிணிகள் = 100,00,00,000
துரோணர் மட்டும் கிட்டத்தட்ட 1.00 அக்ஷௌஹிணி = 78,75,26,180
கர்ணன் மட்டும் கிட்டத்தட்ட 2.37 அக்ஷௌஹிணிகள் = 186,28,78,540
சல்லியன் மட்டும் கிட்டத்தட்ட 0.29 அக்ஷௌஹிணி = 22,60,46,000
அஸ்வத்தாமன் மட்டும் கிட்டத்தட்ட 0.09 அக்ஷௌஹிணி = 7,20,24,400 
போர்வீரர்களைக் கொன்றனர்.

எஞ்சிய போர்வீரர்கள் 1.98 அக்ஷௌஹிணிகள் = 156,48,08,140
மொத்தம் 7.00 அக்ஷௌஹிணிகள் = 55,33,83,260

55. அப்போது யுதிஷ்டிரனின் வயது 91 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 27 நாட்களாகும். பாண்டவர்கள் தை மாதம் வளர்பிறை 1ம் நாளில் இருந்து 13ம் நாள் வரை துக்கம் அனுசரித்தனர். 14ம் நாளில் மொத்த தகனம் நடந்தது. அதே நாள் மாலையில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றனர்.

56. யுதிஷ்டிரன் சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் மூடிசூடப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு அப்போது 91 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களாகும்.

57. பாண்டவர்கள் (அம்புப்படுக்கையில் கிடந்த) பீஷ்மரிடம் தை மாதம் தேய்பிறை 2ம் நாளில் சென்று 8ம் நாள் வரை அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி ,15 நாட்கள் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கி, மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் பீஷ்மரிடம் மீண்டும் சென்றனர். 8வது, 9வது, 10வது, 11வது நாட்களில் பீஷ்மர் தியானத்தில் இருந்தார். 12வது நாளில் தமது உடலைத் துறந்தார். அதன்காரணமாகவே தை மாதம் தேய்பிறையின் 8ம் நாள் முதல் 12ம் நாள் வரை பீஷ்ம பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை 7ம் நாளில் விழுந்த பீஷ்மர், 8ம் நாளில் இருந்து மாசி மாதம் வளர்பிறை 11ம் நாள் வரை, 48 நாள் கடந்திருந்தது. "அஷ்ட பஞ்சசதம் ராத்ரியாசயணச் சியாசியாம கதை AshtaPanchasatam ratryassayana syasyama gatha" என்பது பீஷ்மர் தான் போர்க்களத்தில் கழித்ததாகச் சொன்ன 58 (10 + 48) நாட்களாகும். "ஸரஷு நிஸிதகிரேசு யதா வர்ஷ சதம் தஹா Sarashu nisitagresu yatha varsha satam tatha" என்பது 100 வருடங்களாகத் தோன்றினாலும், கூரிய கணைகளில் படுத்திருந்த அந்தக் காலம் ஆகும். "திரிபாகச் சேஷ பக்ஷியம் சுக்லோ Tribhaga seshah pakshyam suklo" என்பது 3 பகுதிகள் மீந்திருந்த வளர்பிறைக் காலமாகும். (வளர்பிறை காலத்தை 10 பகுதிகளாக வகுத்தால், 7 பகுதிகள் என்பது 10.5 நாள் அல்லது 11வது நாள் நடைபெறும் காலமாகும். மீதம் மூன்று பகுதிகள் என்பது பௌர்ணமிக்கு முன்பு எஞ்சியிருந்த 4.5 நாட்களாகும்).

58. அஸ்வமேத யாகம் சோபகிருது வருடம் மாதி மாதம் 12ம் நாளில் தொடங்கியது. அதற்குச் சற்று முன்பே உத்தரைக்கு மகனாகக் குறைப்பிரசவத்தில் பரிக்ஷித் இறந்து பிறந்து பிறந்து, கிருஷ்ணனால் மீண்டும் உயிர்பெற்றான். 15 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் திருதராஷ்டிரன் காடேகினான். அதற்கடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காண காட்டுக்குச் சென்றனர். விதுரன் இறந்தான். அதற்கு அடுத்து 1 மாதத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுத்தீயில் கொல்லப்பட்டனர்.

59. பெரும்போர் முடிந்து 36 வருடங்கள் கழித்து வந்த வெகுதானிய வருடத்தில் துவாரகையில் தீய சகுனங்கள் தென்பட்டன. சாம்பன் கருத்தரித்து, {அதன் மூலம்} இரும்பு உலக்கை ஒன்று (முசலத்தைப்) பிறந்தது.

60. யுதிஷ்டிரன் 36 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு ஆட்சி செய்தான். சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் இருந்து வெகுதானிய வருடம் தை மாதம் பௌர்ணமி வரை 36 வருடங்களும் 2 மாதங்களும் 15 நாட்களும் கழிந்திருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கலியுகம் பிறந்த நாளானது பிரமாதி வருடம் வளர்பிறை 1ம் நாளாக இருந்தது.

61. 7 நாட்கள் கழித்து வளர்பிறையின் 7ம் நாளில் துவாரகை நகரம் பெருங்கடலில் மூழ்கியது. கலியுகத்திற்கு 75 வருடங்கள் முன்பு இருந்து கலியுகம் தொடங்கிய பின்னர் 25 வருடங்கள் வரை சப்தரிஷிகள் மக நட்சத்திரத்தில் இருந்தனர். யுதிஷ்டிரனின் காலகட்டமானது {Yudhishthir Shaka யுதிஷ்டிரனின் சகாப்தமானது} அவனது பட்டமேற்பு நாளில் இருந்து தொடங்கியது. அதன்படி, யுதிஷ்டிரன் காலகட்டத்தில் 36 வருடங்கள், 2 மாதங்கள், 15 நாட்களில் கிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்தான்.

62. பாண்டவர்கள் அதற்கடுத்து 6 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு பிரமாதி வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 12 நாளில் தங்கள் முடிவை அடைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடைய பரீக்ஷித் அதே நாளில் ஹஸ்தினாபுரத்தில் மகுடம் சூட்டப்பட்டான்.

63. சுவர்க்கரோஹணம் என்பது இந்தக் காவியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது 26 வருடங்களுக்குப் பிறகாக இருக்கலாம். பாண்டவர்களின் சுவர்க்கரோஹணத்திற்குப் பிறகே, அதாவது கலியுகம் தொடங்கி 26 வருடங்கள் கழித்தே முனிவரான வேத வியாசர் இந்தப் பெருங்காப்பியத்தைக் கணபதியிடம் உரைத்தார்.

64. பரீக்ஷித் 60 வருடங்கள், 25 வயதான தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனான்.

65. எனவே, முனிவரான வேதவியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பிறகே பாகவதம் எழுதப்பட்டது. அது கலியுகத்தின் 60வது வருடத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.

66. துவாபர யுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள் வரை வாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhapyam} என்ற நான்கு நிலைகள் இருந்தன. துவாபர யுகத்தில் பால்ய பருவம் என்பது 40 வருடங்கள் வரையும், யௌவனம் 120 வருடங்கள் வரையும், அதன்பிறகு கௌமாரம் மற்றும் வார்த்தக்ய பருவங்களும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கலியுகத்தில் பால்ய பருவம், 15 வருடங்கள் வரையும், யௌவன பருவம் 45 வருடங்கள் வரையும், கௌமார பருவம் 60 வருடங்கள் வரையும், வார்த்தக்யம பருவம் 60 வருடங்களுக்கு மேலும் என இருக்கிறது.

இந்தத் தகவல்கள் யாவும்  சம்ஸ்க்ருதப் பெருங்காப்பியமான மகாபாரதத்தில் இருந்தும், பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் திரட்டப்பட்டவையாகும்.

முற்றும்.

- Dr.K.N.S.பட்நாயக்

தமிழில் செ. அருட்செல்வப்பேரரசன்.

 

Monday, April 04, 2016

மஹாபாரதம் - கால அட்டவணை - 3



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

36. கானக வாழ்வு: சர்வதாரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளில் பாண்டவர்களின் கானக வாழ்வு தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனின் வயது 76 வருடம் 10 மாதம் 18 நாட்களாகும். ராட்சசன் கிர்மீரன் அன்றிலிருந்து 3-ம் நாளில், அதாவது தேய்பிறை 10-ம் நாளில் கொல்லப்பட்டான். 12 வருட காட்டு வாழ்க்கை சார்வரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் ஏழாம் நாளில் முடிவுற்றது.



37. 13-ம் ஆண்டுக் கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய காலம் பிலவ ஆண்டு ஆவணி மாதம் தேய்பிறையின் 7ம் நாளில் முடிவுற்றது.

38. கீசகன், பிலவ ஆண்டு ஆடி மாத தேய்பிறையின் 8ம் நாள் இரவில் கொல்லப்பட்டன். அவனது தம்பிகள் அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் கொல்லப்பட்டனர்.

39. இவையனைத்தும் சந்திரமான வருடங்களென்பதால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 அதிக மாதங்கள் இருக்கும். 13 வருடங்களில் 5 அதிக மாதங்களும், 12 நாட்களும் இருந்திருக்கும். ஆனால் இவை அதிக மாதங்கள் எனச் சந்திரமான வருடங்களில் கலக்கப்பட்டிருந்தன. திதிவயங்கள் போன்றவற்றில் பீஷ்மரும், யுதிஷ்டிரனும் இந்தக் கணக்கீடே சரி என்று அதையே பின்பற்றினர், ஆனால் துரியோதனனோ அந்தக் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சூரியமான வருடங்களின்படி பாண்டவர்கள் கண்டறியப்பட்டதாக வலியுறுத்தினான்.

40. மறைந்திருக்க வேண்டிய காலம் முந்தைய நாளே முடிந்ததால், அர்ஜுனன் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான். பிரமோதூத ஆண்டு முதல் சார்வரி ஆண்டுவரை 30 ஆண்டுகளாக அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைத் தாங்கி வந்தான். அர்ஜுனன் உத்தரனிடம் மேலும் 35 ஆண்டுகள் அவன் அதைத் தாங்கப்போவதாகச் சொன்னான். அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 89 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களாகும்.

41. பாண்டவர்கள் {விராட தேசத்தில்} உபப்லாவ்யத்தில் 1வருடம் 2 மாதம் 17 நாட்களுக்குத் தங்கியிருந்தனர். இந்நாட்களில்தான் ஆலோசனைகளும், சுபகிருத ஆண்டு ஆனி மாதத்தில் உத்தரை அபிமன்யு திருமணமும், படைகளைத் திரட்டுவதும், துருபதன் புரோகிதர் மற்றும் சஞ்சயன் ஆகியோர் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐப்பசி {Aswyuja} மாதத்தில் தீமையையும், அழிவையும் முன்னறிவிக்கும் வகையில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் நேர்ந்தன.

42. ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான் [1].

[1] இங்கே ஏதோ குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. கேட்டை நட்சத்திரம் பூரம் நட்சத்திரத்தில் இருந்த ஏழாவது நட்சத்திரமாக வரும். ஆனால் இங்கே தெளிவாகப் பூசம் Pushyami Star என்று கொடுக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலத்தில் வருவது இதுதான்: Shri Krishna started on Shubhakrit Kartik Bright 2nd Day, in Revati Star, reached Hastinapur on the 13th Day, and held peace talks upto Dark 8th Day. On his last day, His Vishwaroopa was shown. Since talks failed, he started on his return journey the same day in Pushyami Star, told Karna that in 7 days, on New Moon Day in Jyeshta Star, all should assemble at Kurukshetra for the Great War, and returned to Upaplavya.

43. எனவே, பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் 1 வருடம் 2 மாதங்கள் 17 நாட்கள் + 15 நாட்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 2 நாட்கள் தங்கியிருந்தனர்.

44. பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு படையினரும் குருக்ஷேத்திரத்திற்குப் புது நிலவில் அமாவாசையில் சென்றனர். மார்கழி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 12ம் நாள் வரை படைகளின் பாசறை அமைப்பதும், போர் ஒத்திகைகளும் நடந்தன.

45. மகாபாரதப் பெரும்போர் சுபகிருத வருடம் மார்கழி மாதம் வளர்பிறை 13/14ம் நாள், செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் தொடங்கியது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 91 வருடம், 2 மாதம் 9 நாட்களாகும். அதற்கு முந்தைய நாளில் அதாவது வளர்பிறை 11/12ம் நாளில் படைகள் வியூக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் மயங்கினான். அதன் காரணமாகக் கிருஷ்ணன் புகழ்பெற்ற பகவத்கீதை உரையாடலை அர்ஜுனனிடம் நிகழ்த்தினான்.

46. பீஷ்மரின் வீழ்ச்சி : மார்கழி தேய்பிறை 7ம் நாளில்

47. அபிமன்யுவின் மரணம்: அபிமன்யு மார்கழி மாதம் தேய்பிறை 10ம் நாளில் {போரில் சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போது அவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் (பிரமோதூதம் முதல் சுபகிருது வரை). அவனது திருமணம் ஆனி மாதத்தில் நடந்ததால் 6 மாத காலமே அவன் திருமண வாழ்வை வாழ்ந்திருந்தான். அவன் இறக்கும்போது உத்தரை 6 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.




Sunday, October 13, 2013

மஹாபாரதம் - கால அட்டவணை - 2



மஹாபாரத நிகழ்வுகளின் தொடர்ச்சி…

12. வில்வித்தைக் கண்காட்சி: பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்றது. 

{இப்போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது}

13. மன்னன் துருபதனைக் கைப்பற்றியது: பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சபகிருது (Subhakrit) வருடம் திருவாதிரை (Bhadrapada) {Ardra} மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 31 வருடம் 5 நாள்.

{துருபதனை கைதாக்கிய போது பீமனுக்கு 30 வயது, அர்ஜுனனுக்கு 29 வயது, நகுல சகாதேவர்களுக்கு 28 வயது என அறியவும்}

15. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தல் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க (Plavanga) வருடம் மாசி (Maagha) மாதம் அமாவசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.

16. பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.

17. கீலக (Keelaka) வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்டது. (ஒரு நாள் என்பது 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) {இரவை நான்காகப் பிரித்தால் வரும் 3வது ஜாமத்தில் தீ வைக்கப்பட்டது}. பாண்டவர்கள் கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் கங்கை நதியைக் கடந்தனர்.

18. ஹிடிம்ப வதம்: சவுமிய (Sowmya) வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் கொல்லப்பட்டான்.
{பீமனால் ராட்சசன் ஹிடிம்பன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
பீமன் ஹிடிம்பன் மோதல் - ஆதிபர்வம் பகுதி 155
ஹிடிம்பனைக் கொன்றான் பீமன் - ஆதிபர்வம் பகுதி 156

19. கடோத்கசன் பிறப்பு: சவுமிய வருடம், ஐப்பசி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் கடோத்கசன் பிறந்து அன்றே பெரிய மனிதனாக வளர்ந்தான்.
{பீமனுக்கும் ராட்சசி ஹிடிம்பிக்கும் கடோத்கசன்
பிறந்த போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்:
கடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157

20. பாண்டவர்கள் சாலிஹோதாஷ்ரமம் என்ற இடத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி (Ashwayuja) {Ashwin} மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண (Sadharana) வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.

21. பாண்டவர்கள் ஏகச்சக்கரபுரத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும்.

22. பகன் வதம்: சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாளில். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 39 வருடம் 5 நாள் ஆகும்.
{பீமனால் பகாசுரன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:

பகவதம் -ஆதிபர்வம்-முழுமஹாபாரதம் (159-166)
அந்தணன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 159
"என்னைக் கைவிடு" என்றாள் மனைவி - ஆதிபர்வம் பகுதி 160
பாலகனின் மழலைச் சொற்கள் - ஆதிபர்வம் பகுதி 161
துயர் விசாரித்தாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 162
குந்தியின் சொல்லமுதம் - ஆதிபர்வம் பகுதி 163
குந்தியைக் கடிந்து கொண்ட யுதிஷ்டிரன் - ஆதிபர்வம் பகுதி 164
பீம பகாசுர மோதல் - ஆதிபர்வம் பகுதி 165
புதிய பண்டிகை உதயமானது - ஆதிபர்வம் பகுதி 166

23. பாண்டவர்க்ள ஏகச்சக்கரபுரத்தில் மேலும் 1 மாதமும் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் மார்கழி (Margashirsha) மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால நாடு நோக்கி நடந்து 3 நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் 15 நாட்கள் தங்கினர். 18வது நாளில் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சால நாட்டுத் தலைநகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் தை (Pausha) மாதம் 7ம் நாள் அடைந்தனர்.
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
பாண்டவர்களின் புரோகிதரானார் தௌமியர் - ஆதிபர்வம் பகுதி 185

24. திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
சுயம்வர பர்வம் மற்றும் வைவாஹிக பர்வம் - ஆதிபர்வம் (186-201)
பாஞ்சாலம் செல்கையில் - ஆதிபர்வம் பகுதி 186
அரங்கிற்கு வந்தாள் திரௌபதி - ஆதிபர்வம் பகுதி 187
சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்? - ஆதிபர்வம் பகுதி 188
காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189
குறியை அடித்த அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 190
பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 191
அர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 192
அம்மா பிச்சை கொண்டு வந்தோம் - ஆதிபர்வம் பகுதி 193
ஒளிந்திருந்தான் திருஷ்டத்யும்னன் - ஆதிபர்வம் பகுதி 194
திருமண விருந்து தயார்! - ஆதிபர்வம் பகுதி 195
விருந்தும் கண்காட்சியும் - ஆதிபர்வம் பகுதி 196
உமது மகள் எங்களுக்குப் பொது மனைவியாவாள் - ஆதிபர்வம் பகுதி 197
ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198
பல கணவர்களுக்குப் பொது மனைவி - ஆதிபர்வம் பகுதி 199
ஒவ்வொரு நாளும் கன்னியானாள் திரௌபதி - ஆதிபர்வம் பகுதி 200

25. பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதிகிருது (Virodhikrithu) வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.

26. விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் அழைக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்தனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள (Pingala) வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.

27. பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.

{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}

28. அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி (Kalayukthi) வருடத்தில் சென்று பிரமோதூத (Pramodhoota) வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.
{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57. அபிமன்யு பிறக்கும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57}
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221
சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222

29. அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.

30. பிரமோதூது வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.

31. பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி (Prajopatthi) வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.

32. பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித்த (Sarvajit) வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.

33. பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையில் நடைபெற்ற மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை (Kartika) மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.

34. சர்வதாரி (Sarvadhari) வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.

35. பகடை ஆட்டம்: இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். ஆகப் பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கிச் சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :76
பீமனுக்கு வயது :75
அர்ஜுனனுக்கு வயது :74
நகுல சகாதேவர்களுகு :73
துரியோதனனுக்கு வயது :75
கர்ணனுக்கு வயது :92
கிருஷ்ணனுக்கு வயது :74

13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :89
பீமனுக்கு வயது :88
அர்ஜுனனுக்கு வயது :87
நகுல சகாதேவர்களுகு :86
துரியோதனனுக்கு வயது :88
கர்ணனுக்கு வயது :105
கிருஷ்ணனுக்கு வயது :87



Saturday, October 12, 2013

மஹாபாரதம் - கால அட்டவணை - 1


(http://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html  என்ற வலைத்தளத்தில்
Dr.K.N.S.பட்நாயக் ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதை
இங்குத் தமிழாக்கி வெளியிடுகிறோம்)

தற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்குத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.


மகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.

பிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.

மஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு.

நட்சத்திரங்கள்
 
தமிழ் English தமிழ் English தமிழ் English
01 அஸ்வினி Ashwini 10 மகம் Magha 19 மூலம் Moola
02 பரணி Bharani 11 பூரம் Poorva 20 பூராடம் Poorvashadha
03 கார்த்திகை Krutika 12 உத்திரம் Uttara 21 உத்திராடம் Uttarashadha
04 ரோகிணி Rohini 13 அஸ்தம் Hastha 22 திருவோணம் Shravana
05 மிருகசீரிஷம் Mruga 14 சித்திரை Chitra 23 அவிட்டம் Dhanishta
06 திருவாதிரை Ardra 15 சுவாதி Swati 24 சதயம் Satabhisha
07 புனர்பூசம் Punarvasu 16 விசாகம் Vishakha 25 பூரட்டாதி Poorvabhadra
08 பூசம் Pushya 17 அனுஷம் Anuradha 26 உத்திரட்டாதி Uttarabhadra
09 ஆயில்யம் Aslesha 18 கேட்டை Jyeshta 27 ரேவதி Revati


மாதங்கள்
 
மாதம் (தமிழ்)சமசுகிருதம்செந்தமிழ் In English
01சித்திரைசைத்ர மேழம் Chaitra
02வைகாசிவைஸாயுகயு விடை Vaishakha
03ஆனிஆநுஷி / ஜ்யேஷ்ட ஆடவை Jyeshta
04ஆடிஆஷாட கடகம் Aashadha
05ஆவணிஸ்யுராவண மடங்கல் Shravana
06புரட்டாசிப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ கன்னி Bhadrapada
07ஐப்பசிஆஸ்யுவிந துலை Ashwin
08கார்த்திகைகார்திக: நளி Kartika
09மார்கழிமார்கயூஸீயுர்ஷ சிலை Margasheersha
10தைதைஷ்யம்/ பவுஷ: சுறவம் Pausha
11மாசிமாக கும்பம் Maagha
12பங்குனிபாயுல்குயூந: மீனம் Phalguna


வருடங்கள்
தமிழ் English தமிழ் English தமிழ் English
01 பிரபவ Prabhava 21 சர்வஜித்த Sarvajittu 41 பிலவங்க Plavanga
02 விபவ Vibhava 22 சர்வதாரி Sarvadhari 42 கீலக Keelaka
03 சுக்கில Sukla 23 விரோதி Virodhi 43 சவுமிய Sowmya
04 பிரமோதூத Pramoodotha 24 விகிர்தி Vikriti 44 சாதாரண Sadharana
05 பிரசோத்பத்தி Pajothpatthi 25 கர Khara 45 விரோதிகிருது Voridhikrutu
06 ஆங்கீரச Agnirasa 26 நந்தன Nandana 46 பரிதாபி Paridhavi
07 ஸ்ரீமுக Srimukha 27 விஜய Vijaya 47 பிரமாதீச Pramadicha
08 பவ Bhava 28 ஜய Jaya 48 ஆனந்த Ananda
09 யுவ Yuva 29 மன்மத Manmatha 49 இராக்ஷஸ Rakshasa
10 தாது Dhata 30 துன்முகி Durmukhi 50 நள Nala
11 ஈசுவர Eswara 31 ஏவிளம்பி Havilambi 51 பிங்கள Pingala
12 வெகுதானிய Bahudhanya 32 விளம்பி Vilhambi 52 காளயுக்தி Kalayukti
13 பிரமாதி Pramadi 33 விகாரி Vikari 53 சித்தார்த்தி Siddharthi
14 விக்ரம Vikrama 34 சார்வரி Sarvari 54 ரவுத்ரி Roudri
15 விஷு Vishu 35 பிலவ Plava 55 துன்மதி Durmati
16 சித்திரபானு Chitrabhanu 36 சுபகிருது Shubhakritu 56 துந்துபி Dundubhi
17 சுபானு Swabhanu 37 சோபகிருது Sobhakruthu 57 உருத்ரோத்காரி Rudhirodgari
18 தாரண Tharana 38 குரோதி Krodhi 58 இரத்தாக்ஷி Rathakshi
19 பார்த்திப Parthiva 39 விஸ்வாவசு Vishwavasu 59 குரோதன் Krodhana
20 விய Vyaya 40 பரிதாவி Paridhavi 60 அக்ஷய Akshaya


கலியுகம்

பிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளில், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.

இனி மகாபாரத நிகழ்வுகள்

மஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.

1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.

2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.

3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)

4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.

5. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.

{பீமனை விட 1 வருடம் இளையவன்}
{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }
{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}


6. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் அமாவசை நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.

{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}
{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}
{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }
{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}

7. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகிணி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.

8. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.

9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.

10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.

11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.


 

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்