Thursday, November 03, 2016

ஜடாசுரன் மகனைக் கொன்ற கடோத்கசன்! - துரோண பர்வம் பகுதி – 174

Ghatotkacha killed Jatasura’s son! | Drona-Parva-Section-174 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : கௌரவ முகாமுக்கு ஜடாசுரன் மகன் அலம்புசனின் {அலம்பலனின்} வருகை; அலம்புசனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற கடோத்கசன், அலம்புசனின் தலையைத் துரியோதனனின் தேரின் மீது வீசியது; துரியோதனனிடம் பேசிய கடோத்கசன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கடோத்கசனானவன், சூதனின் மகனான கர்ணனைப் போரில் கொல்வதற்காக, அவனது தேரை நோக்கிச் செல்வதைக் கண்ட உமது மகன் துரியோதனன்,(1) {தன் தம்பியான} துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு அவனை எதிர்த்துப் போரிட வேகமாகச் செல்கிறான்.(2)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான்.(5)


அதே வேளையில், தாக்குபவர்களில் முதன்மையான ஜடாசுரனின் வலிமைக்க மகன் {அலம்புசன் / அலம்பலன்}, துரியோதனனை அணுகி, அவனிடம், “ஓ! துரியோதனா, உன்னால் ஆணையிடப்படும் நான், போரில் எளிதில் வெல்லப்பட முடியாத போர்வீரர்களும், புகழ்பெற்ற உன் எதிரிகளுமான பாண்டவர்களையும், அவர்களைப் பின்தொடர்வோரையும் கொல்ல விரும்புகிறேன். ராட்சசர்களில் முதன்மையானவரும் வலிமைமிக்கவருமான ஜடாசுரரே என் தந்தையாவார். முன்பொரு சமயம்,(6,7) பிருதையின் {குந்தியின்} அற்ப மகன்கள், ராட்சசர்களைக் கொல்லும் சில மந்திரங்களைச் சொல்லி அவரைக் {ஜடாசுரரைக்} கொன்றனர் [1]. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இறந்து போன என் தந்தைக்கு {ஜடாசுரருக்கு}, அவரது எதிரிகளின் குருதியையும்,(8) இறைச்சியையும் காணிக்கையளித்து அவரை வழிபட விரும்புகிறேன். {என் தந்தையின் கொலைக்காக நான் பாண்டவர்களைப் பழி வாங்க விரும்புகிறேன்}. {இதற்கு} எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அலம்புசன்}.

[1] வன பர்வம் பகுதி 156ல் ஜடாசுரன் வதம் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துரியோதனன்}, மிகவும் மகிழ்ந்து, அவனிடம் {அந்த ஜடாசுரன் மகனான அலம்புசனிடம்}, “துரோணர், கர்ணன் மற்றும் பிறரின் துணையுடன் என் எதிரிகளை வெல்லத்தக்கவனாகவே நான் இருக்கிறேன். எனினும், ஓ! ராட்சசா {அலம்புசா}, என்னால் உத்தரவிடப்படும் நீ, மனிதனுக்குப் பிறந்தவனும், கடுஞ்செயல்களைச் செய்யும் ராட்சசனும், பாண்டவர்களின் நலனில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், எப்போதும் ஆகாயத்தில் நின்று கொண்டு, எங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களைப் போரில் கொல்பவனுமான கடோத்கசனிடம் போரிட்டு, அப்போரில் அவனைக் கொல்வாயாக.(10,11) ஓ! அவனை {கடோத்கசனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவாயாக” என்றான் {துரியோதனன்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனைப் போருக்கு அழைத்த(12) அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்}, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அந்தப் பீமசேனன் மகனை {கடோத்கசனை} மறைத்தான். எனினும், அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்தாலும், மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அலசம்புசனையும் [2], கர்ணனையும், பரந்த குரு படையையும் கலங்கடிக்கத் தொடங்கினான். (கடோத்கச) மாயையின் சக்தியைக் கண்ட அந்த ராட்சசன் அலம்புசன்,(13,14) பல்வேறு வகைகளிலான கணைமாரிகளால் கடோத்கசனை மறைத்தான். பீமசேனன் மகனை {கடோத்கசனைப்} பல கணைகளால் துளைத்த அலம்புசன்,(15) நேரம் எதையும் இழக்காமல், தன் கணைகளால் பாண்டவப் படையைப் பீடிக்கத் தொடங்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனால் {அலம்புசனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள்,(16) சூறாவளியால் விரட்டப்படும் மேகங்களைப் போல அந்த நள்ளிரவில் அணிபிளந்து தப்பி ஓடின. அதே போலவே, கடோத்கசனின் கணைகளால் சிதைக்கப்பட்ட உமது படையும்,(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் தங்கள் தீப்பந்தங்களைக் கீழே வீசிவிட்டு ஆயிரக்கணக்கில் தப்பி ஓடினர்.

[2] வேறொரு பதிப்பில் இவனது {இந்த அலம்புசனின்} பெயர் அலம்பலன் என்று சொல்லப்பட்டுள்ளது. துரோண பர்வம் பகுதி 108ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட வேறொரு ராட்சசனையும் கடோத்கசன் கொன்றிருக்கிறான்.  துரோண பர்வம் பகுதி 139ல் அலம்புசன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவனைச் சாத்யகி கொன்றான்.

அப்போது பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், யானையைத்தாக்கும் பாகனைப் போல, அந்தப் பயங்கரப் போரில் பீமசேனன் மகனை {கடோத்கசனைக்} கணைகள் பலவற்றால் தாக்கினான். பிறகு கடோத்கசன், தனது எதிரியின் {அலம்புசனின்} தேர், சாரதி, மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டி, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரித்தான். அப்போது கடோத்கசன், மேருவின் மலைகளில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கர்ணன், அலம்புசன் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் மீதும் கணைமாரிகளைப் பொழிந்தான். அந்த ராட்சசனால் பீடிக்கப்பட்ட குரு {கௌரவப்} படையானது மிகவும் கலங்கிப் போனது.(18-21) நால்வகைப்படையணிகளையும் கொண்ட உமது படையானது, ஒன்றையொன்று நெருக்கி நசுக்கத் தொடங்கியது. அப்போது தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் இருந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(22) கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் தன் கைமுட்டிகளால் கடோத்கசனைத் தாக்கினான். இப்படித் தாக்கப்பட்ட கடோத்கசன்,(23) மரங்கள், கொடிகள், புற்களுடன் கூடிய மலையானது, நிலநடுக்கத்தின் போது நடுங்குவதைப் போல நடுங்கினான்.

பிறகு, சினத்தால் வெறிகொண்ட பீமசேனன் மகன் {கடோத்கசன்}, பரிகத்துக்கு {முட்களுடன் கூடிய கதாயுத்துக்கு} ஒப்பானதும், எதிரியைக் கொல்வதுமான தன் கரத்தை உயர்த்தி, அந்தச் ஜடாசுரன் மகனை {அலம்புசனைக்} கடுமையாகக் குத்தினான். சினத்தால் அவனை {அலம்புசனை} நசுக்கிய அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, விரைவாக அவனைக் கீழே தூக்கி எறிந்து,(24,25) இரண்டு கரங்களாலும் அவனைப் {அலம்புசனைப்} பற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். பிறகு, கடோத்கசனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்த அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(26) பெரும் மூர்க்கத்துடன் கடோத்கசனைத் தாக்கினான். அந்த அலம்புசனும், ராட்சசனான கடோத்கசனை அந்தப் போரில் இழுத்து கீழே வீசியெறிந்து, சினத்துடன் அவனைப் பூமியின் பரப்பில் நசுக்கத் தொடங்கினான்.

முழங்கிக் கொண்டிருந்தவர்களும், ராட்சசப் போர்வீரர்களுமான கடோத்கசன் மற்றும் அலசம்புசன் ஆகிய அந்த இருவருக்கிடையில் நடந்த போரானது மிகக் கடும் நிலையை அடைந்து, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தங்கள் மாய சக்திகளின் மூலம் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றவர்களும், செருக்குமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள்,(27-29) இந்திரனையும் விரோசனன் மகனையும் போலப் பெரும் சக்தியுடன் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருப்பு மற்றும் கடலாகவும், மேலும், கருடன் மற்றும் தக்ஷகனாகவும்,(30) மேலும், மேகம் மற்றும் சூறாவளியாகவும், பிறகு இடி மற்றும் பெரும் மலையாகவும், மீண்டும் யானை மற்றும் புலியாகவும், பிறகு ராகு மற்றும் சூரியனாகவும்(31) மாறி மாறி, ஒருவரையொருவர் அழிக்க வேண்டி, இப்படியே நூறு வகைகளிலான மாயைகளை வெளிப்படுத்தினர். உண்மையில், அலம்புசனும், கடோத்கசனும், பரிகங்கள், கதாயுதங்கள், வேல்கள், உலக்கைகள், கோடரிகள், குறுகதைகள் {முத்கரங்கள்} மற்றும் மலைச்சிகரங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி அற்புதமாகப் போரிட்டனர்.(32,33) பெரும் மாய சக்திகளைக் கொண்டவர்களான அந்த ராட்சசர்களில் முதன்மையானோர் இருவரும், குதிரையின் முதுகில் ஏறியோ, யானையிலோ, காலிலோ, தேரிலோ சென்று ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(34)

அப்போது அலம்புசனைக் கொல்ல விரும்பிய அந்தக் கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்துடன் உயரப் பறந்து, பிறகு ஒரு பருந்தைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான்.(35) தன்னுடன் இப்படிப் போராடிக் கொண்டிருந்தவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சச இளவரசனான அலம்புசனைப் பிடித்து, போரில் (அசுரன்) மயனைக் கொன்ற விஷ்ணுவைப் போல அவனைப் பூமியில் நசுக்கினான்.(36) அளவற்ற ஆற்றலைக் கொண்ட கடோத்கசன், அற்புதத் தோற்றத்துடன் கூடிய ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சீற்றமும், வலிமையும் கொண்டவனான தன் எதிரியினுடையதும், பயங்கரமாக அலறிக் கொண்டே இருந்ததுமான அவனுடைய {அலம்புசனின்} பயங்கரத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(37,38) குருதியில் நனைந்த அந்தத் தலையை மயிரோடு பற்றிக் கொண்ட கடோத்கசன், விரைவாகத் துரியோதனனின் தேரை நோக்கிச் சென்றான். (குரு மன்னனை) அணுகிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்} சிரித்துக் கொண்டே, பயங்கர முகமும், மயிரும் கொண்ட அந்தத் தலையைத் துரியோதனனின் தேரில் வீசினான்.(40)

அப்போது, மழைக்கால மேகங்களைப் போல ஆழமான கடும் முழக்கம் செய்த அவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரியோதனனிடம்,(41) “நீர் எவனுடைய ஆற்றலைப் பார்த்துக் கொண்டிருந்தீரோ அந்த உமது கூட்டாளி {அலம்புசன் [அலம்பலன்]} இப்போது கொல்லப்பட்டான். மேலும் கர்ணன் மற்றும் உமது கொலையையும் நீர் காண்பீர்.(42) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றையும் நோற்பவன் எவனும், மன்னன் ஒருவனையோ, பிராமணன் ஒருவனையோ, பெண் ஒருத்தியையோ வெறுங்கையுடன் காண {செல்லக்} கூடாது[3].(43) கர்ணனை நான் கொல்லும் வரையில் மகிழ்ச்சியாக வாழ்வீராக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {கடோத்கசன்} நூற்றுக்கணக்கான கூரிய கணைகளைக் கர்ணனின் தலையில் ஏவியபடியே அந்தக் கர்ணனை நோக்கிச் சென்றான்.(44) அதன் பிறகு, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {கர்ணனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(45)

[3] “இதன் காரணமாகவே உம்மைக் காண இந்தத் தலையை நான் காணிக்கையாகக் கொண்டு வந்தேன் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
---------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி 174-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 45

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்