Sunday, January 15, 2017

கைகேயத்து விந்தானுவிந்தர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 13

Vinda and Anuvida of Kekaya! | Karna-Parva-Section-13 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கேகயத்து இளவரசர்களான விந்தானுவிந்தர்கள் மற்றும் சாத்யகிக்கு இடையில் நடந்த மோதல்; சாத்யகியால் கொல்லப்பட்ட விந்தானுவிந்தர்கள்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கவனும், வீரமிக்க வில்லாளியுமான கர்ணன், அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(1) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும், கோபத்தால் நிறைந்து, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது மகனுடைய {துரியோதனனுடைய} படையைத் தாக்கத் தொடங்கினர்.(2) கர்ணனும், ஓ! மன்னா, அந்தப் போரில், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்படவையும், சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடியவையுமான துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பாண்டவப் படையைக் கொன்றான்.(3) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் உரக்கப் பிளிறி, தங்கள் பலத்தை இழந்து மயக்கமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் திரிந்தன.(4)


அந்தப் படையானது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு அழிக்கப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} நோக்கி நகுலன் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(5) கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டிருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து பீமசேனன் விரைந்தான். சாத்யகி, கைகேய இளவரசர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரைத் தடுத்தான்[1].(6) மன்னன் சித்திரசேனன் முன்னேறி வரும் சுருதகர்மனை எதிர்த்து விரைந்தான்; பிரதிவிந்தியன், அழகிய கொடிமரத்தையும், அழகிய வில்லையும் கொண்ட சித்திரனை எதிர்த்து விரைந்தான்.(7) துரியோதனன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்; அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூட்டம் கூட்டமாக வந்த கோபக்கார சம்சப்தகர்களை எதிர்த்து விரைந்தான்.(8) பெரும் வீரர்கள் கொல்லப்பட்ட அம்மோதலில், திருஷ்டத்யும்னன் கிருபரை எதிர்த்துச் சென்றான். வெல்லப்படமுடியாத சிகண்டி கிருதவர்மனோடு மோதினான்.(9) சுருதகீர்த்திச் சல்லியனுடன் மோதினான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாத்ரியின் மகனான வீரச் சகாதேவன், உமது மகன் துச்சாசனனோடு மோதினான்.(10)

[1] “அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும் அர்ஜுனனால் முன்பே கொல்லப்பட்டனர். இங்கே குறிப்பிடப்படும் இரண்டு போர்வீரர்களும் அவந்தியைச் சார்ந்தவர்கள் அல்ல; அவர்கள் கைகேயர்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அவந்தியின் விந்தானுவிந்தர்கள் கொல்லப்பட்டது துரோண பர்வம் பகுதி 98 ல்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் போரில் கைகேய இளவரசர்கள் இருவரும், சுடர்மிக்கக் கணைமாரியால் சாத்யகியை மறைத்தனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்னவனும் {சாத்யகியும்}, அந்த இரு கைகேயச் சகோதரர்களை மறைத்தான்.(11) காட்டில் இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒரு பகையானையைத் தாக்குவது போல, அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் சாத்யகியின் மார்பை ஆழத் துளைத்தனர்.(12) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்த இரு சகோதரர்களும், பழுதற்ற செயல்களைச் செய்யும் சாத்யகியைத் தங்கள் கணைகளால் துளைத்தனர்.(13) எனினும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைமாரியால் மறைத்த சாத்யகி, புன்னகைத்துக் கொண்டே, அவ்விரு சகோதரர்களையும் தடுத்தான்.(14) சிநியின் பேரன் {சாத்யகி} ஏவிய அந்தக் கணைமாரியால் தடுக்கப்பட்ட அவ்விரு சகோதரர்களும், தங்கள் கணைகளால் அந்தச் சிநியின் பேரனுடைய தேரை மறைத்தனர்.(15)

பெரும் புகழைக் கொண்ட அந்தச் சௌரின் {சாத்யகி}, அவ்விருவரின் அழகிய விற்களை வெட்டிவிட்டு அந்தப் போரில் தன் கூரிய கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(16) வேறு அழகிய இரு விற்களையும், பெரும் எண்ணிக்கையிலான பலமிக்கக் கணைகளையும் எடுத்துக் கொண்ட அவ்விருவரும், சாத்யகியை மறைத்து, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் திரியத் தொடங்கினர்.(17) கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அவ்விரு சகோதரர்களால் ஏவப்பட்டவையுமான அந்த வலிமைமிக்கக் கணைகள் திசைகளின் அனைத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே பாயத் தொடங்கின.(18) அவர்களுக்கிடையிலான அந்தப் பயங்கரப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் அங்கே இருளை உண்டாக்கின. பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் விற்களை வெட்டினர்.(19)

அப்போது வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்வதன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அதில் நாணேற்றி, கத்தி தலை கொண்ட கூரிய கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் அனுவிந்தனின் தலையை அறுத்தான்.(20) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய தலையானது, ஓ! மன்னா, (பழங்காலத்தில் நடந்த) பெரும்போரில் கொல்லப்பட்ட சம்பரனின் தலை போல விழுந்தது. மேலும் அது கைகேயர்கள் அனைவரையும் துயரில் நிறைக்கும்படி உடனே பூமியை அடைந்தது.(21) துணிச்சல் மிக்க அந்தப் போர்வீரன் {அனுவிந்தன்} கொல்லப்பட்டதைக் கண்ட அவனது சகோதரனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விந்தன், மற்றொரு வில்லுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சிநியின் பேரனைத் தடுக்கத் தொடங்கினான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது {60} கணைகளால் சாத்யகியைத் துளைத்த அவன் {விந்தன்}, “நில், நில்” என்று சொன்னபடியே உரக்க முழங்கினான்.(23) பிறகு அந்தக் கைகேயர்களின் வலிமைமிக்கத் தேர்வீரன் {விந்தன்}, பல்லாயிரம் கணைகளால் சாத்யகியின் கரங்களையும் மார்பையும் வேகமாகத் தாக்கினான்.(24)

அனைத்து அங்கங்களிலும் கணைகளால் காயம்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(25) அந்த மோதலில் உயர் ஆன்ம கைகேயனால் துளைக்கப்பட்ட சாத்யகி, (பதிலுக்கு) இருபத்தைந்து கணைகளால் அந்தக் கைகேயனை {விந்தனை} மிக எளிதாகத் துளைத்தான்.(26) பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவ்விரு போர்வீரர்களும் {விந்தனும் சாத்யகியும்}, அம்மோதலில் ஒருவரின் அழகிய வில்லை மற்றவர் அறுத்து, ஒருவரின் சாரதியையும், குதிரைகளையும் மற்றவர் வேகமாகக் கொன்று, வாளால் போரிடுவதற்காக ஒருவரையொருவர் காலால் நடந்தே அணுகினர்.(27) பருத்த கரங்களைக் கொண்டவர்களான அவ்விருவரும், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பெரும் வலிமையுடன் கூடிய இருவரான ஜம்பன் மற்றும் சக்ரனை {இந்திரனைப்} போல, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும், ஒரு சிறந்த வாளையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பரந்த அரங்கில் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) அந்தப் பெரும்போரில் அவர்கள் இருவரும் வட்டமாக {மண்டலகாரமாகத்} திரியத் தொடங்கினர். பிறகு அவர்கள் ஒருவரையொருவர் அருகில் அணுகி, ஒருவரோடொருவர் வேகமாக மோதத் தொடங்கினர்.(29)

அப்போது அந்தச் சாத்வதன் {சாத்யகி}, அந்தக் கைகேயனின் {விந்தனின்} கேடயத்தை இரண்டாகப் பிளந்தான். பின்னவனும் {விந்தனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் கேடயத்தை இரண்டாகப் பிளந்தான்.(30) நூறு நட்சத்திரங்களால் மறைக்கப்பட்ட தன் எதிராளியின் கேடயத்தைப் பிளந்த கைகேயன், (சில நேரங்களில்) முன்னேறியும், பின்வாங்கியும் வட்டமாகத் திரியத் தொடங்கினான்.(31) அப்போது பெறும் சுறுசுறுப்பைக் கொண்ட சிநியின் பேரன் {சாத்யகி}, இவ்வாறு கையில் வாளுடன் அந்தப் பரந்த அரங்கில் திரிந்து கொண்டிருந்த கைகேயர்களின் இளவரசனை {விந்தனை} ஒரு பக்கத் தாக்குதால் {குறுக்காக} வெட்டினான்.(32) கவசம் பூட்டப்பட்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கைகேய இளவரசன் {விந்தன்} இவ்வாறு அந்தப் பெரும்போரில் இரண்டாகப் பிளக்கப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலக் கீழே விழுந்தான்.(33)

போரில் அவனைக் கொன்றதும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், எதிரிகளை எரிப்பவனுமான துணிச்சல்மிக்கச் சிநியின் பேரன் {சாத்யகி}, வேகமாக யுதாமன்யுவின் தேரில் ஏறிக் கொண்டான்.(34) பிற்பாடு, முறையாக (அனைத்தையும்) அடையப்பெற்ற மற்றொரு தேரில் ஏறிய சாத்யகி, தன் கணைகளால் கைகேயர்களின் பெரும்படையைக் கொல்லத் தொடங்கினான்.(35) இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்தக் கைகேயர்களின் பரந்த படையினர், தங்கள் எதிரியை {சாத்யகியை} விட்டுவிட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(36)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்