Monday, January 16, 2017

சுருதகர்மனும்! பிரதிவிந்தியனும்!! - கர்ண பர்வம் பகுதி – 14

Srutakarma and Prativindya! | Karna-Parva-Section-14 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சுருதகர்மனுக்கும், சித்திரசேனனுக்கும் இடையிலான போர்; சுருதகர்மனால் கொல்லப்பட்ட சித்திரசேனன்; பிரதிவிந்தியனுக்கும் சித்திரனுக்கும் இடையில் நடந்த போர்; பிரதிவிந்தியனால் கொல்லப்பட்ட சித்திரன்; பீமசேனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ! மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதிலுக்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் ஆழத்துளைக்கப்பட்டவனும், உயர் ஆன்மா கொண்ட இளவரசனுமான வீரச் சித்திரசேனன், பெரும் வலியை உணர்ந்து மயக்கமடைந்தான்.(4) இந்த இடைவேளையில், பெரும் புகழைக் கொண்ட சுருதகர்மன், (உணர்வற்றிருந்த தன் எதிராளியான) அந்தப் பூமியின் தலைவனை {சித்திரசேனனை} தொண்ணூறு கணைகளால் மறைத்தான்.(5)


[1] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தச் சுருதகர்மனும் ஒருவனாவான். இவன் அர்ஜுனனுக்குப் பிறந்தவனாவான். இவன் சுருதகீர்த்தி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறான்.

அப்போது உணர்வுகள் மீண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சித்திரசேனன், தன் எதிராளியின் வில்லை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டி, ஏழு கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான்.(6) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பலமாகத் தாக்க வல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சுருதகர்மன், தன் கணைகளின் அலைகளால் சித்திரசேனனை {முள்ளம்பன்றி போன்ற} அற்புதத் தோற்றம் கொண்டவனாக ஆக்கினான்.(7) அந்தக் கணைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இளமை நிறைந்தவனும், அழகிய மாலைகளை அணிந்தவனுமான மன்னன் {சித்திரசேனன்}, சபைக்கு மத்தியில் நல்ல அலங்காரத்துடன் கூடிய ஓர் இளைஞனைப் போல அந்தப் போர்க்களத்தில் தெரிந்தான்.(8) ஒரு கணையால் சுருதகர்மனின் நடுமார்பை விரைவாகத் துளைத்த அவன் {சித்திரசேனன்}, அவனிடம், “நில், நில்” என்றான்.(9) போரில் அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சுருதகர்மனும், செஞ்சுண்ணச் சாற்றின் ஓடையை உதிர்க்கும் ஒரு மலையைப் போல இரத்தம் சிந்தத் தொடங்கினான்.(10) குருதியில் குளித்து, அதனால் கறைபடிந்த அந்த வீரன் {சுருதகர்மன்}, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றினைப் போலப் போரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)

அப்போது எதிரியால் இப்படித் தாக்கப்பட்ட அந்தச் சுருதகர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ! மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அவனைக் கொன்றவனை {சுருதகர்மனை}) எதிர்த்து மூர்க்கமாக விரைந்தன.(16) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளி {சுருதகர்மன்}, தன் கணைகளை ஏவியபடியே, அண்ட அழிவின் போது சீற்றத்தால் நிறைந்து, அனைத்து உயிரினங்களையும் எதிர்த்துச் செல்லும் யமனைப் போல, அந்தப் படையை எதிர்த்துச் சென்றான்.(17) அந்தப் போரில் வில் தரித்த உமது பேரனால் {சுருதகர்மனால்} கொல்லப்பட்ட அவர்கள், காட்டுத்தீயால் எரிக்கப்படும் யானைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகத் தப்பி ஓடினர்.(18) எதிரியை வெல்வதில் நம்பிக்கை இழந்து தப்பி ஓடும் அவர்களைக் கண்டு, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தொடர்ந்து சென்ற சுருதகர்மன் (தன் தேரில்) பிரகாசமாகத் தெரிந்தான்.(19)

பிறகு, {யுதிஷ்டிரனின் மகன்} பிரதிவிந்தியன் [2] , ஐந்து கணைகளால் சித்திரனைத் துளைத்து, மூன்றால் அவனது சாரதியைத் தாக்கி, ஒரு கணையால் அவனது கொடிமரத்தையும் தாக்கினான்.(20) சித்திரன், தங்கச் சிறகுகள் மற்றும் கூர்முனைகளைக் கொண்டவையும், கங்க மற்றும் மயில் இறகுகளைக் குஞ்சமாகக் கொண்டவையுமான ஒன்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது {பிரதிவிந்தியனின்} கரங்களிலும், மார்பிலும் தாக்கினான்.(21) பிறகு பிரதிவிந்தியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஈட்டி ஒன்றை உமது பேரன் {பிரதிவிந்தியன்} மீது ஏவினான்.(23) எனினும் பிரதிவிந்தியன் அந்தப் போரில், ஒளிரும் விண்கல்லைப் [3] போலத் தன்னை நோக்கி வந்த அந்த ஈட்டியை, மூன்று துண்டுகளாக மிகவும் எளிதாக வெட்டினான்.(24) பிரதிவிந்தியனின் கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ஈட்டியானது, யுக முடிவில் அனைத்து உயிர்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வஜ்ரத்தைப் போலக் கீழே விழுந்தது.(25)

[2] உப பாண்டவர்களான திரௌபதியின் மகன்கள் ஐவரில் இந்தப் பிரதிவிந்தியனும் ஒருவனாவான். இவன் யுதிஷ்டிரனுக்குப் பிறந்தவனாவான்.

[3] “அல்லது சுடர்மிக்கப் பந்தம் ஒன்றைப் போல” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட சித்திரன், தங்க வலையால் அலங்கரிக்கப்பட்ட கனமான கதாயுதம் ஒன்றை எடுத்துப் பிரதிவிந்தியன் மீது அதை வீசினான்.(26) அந்தப் போரில் அந்தக் கதாயுதம், பின்னவனின் {பிரதிவிந்தியனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்று, தவிரவும் அவனது தேரையும் நசுக்கி பெரும் மூர்க்கத்துடன் பூமியில் விழுந்தது.(27) அதேவேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ! பாரதரே, அதே ஆயுதத்தைப் பிரதிவிந்தியன் மீது {திரும்ப} வீசினான்.(29) துணிச்சல் மிக்கப் பிரதிவிந்தியனைத் தாக்கிய அந்தச் சுடர்மிக்க ஈட்டி, அந்தப் போரில் அவனது வலக்கரத்தைத் துளைத்து, இடியின் வெடிப்பைப் போல மொத்த பகுதிக்கும் ஒளியூட்டியபடியே பூமியில் விழுந்து.(30)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சினத்தால் நிறைந்த பிரதிவிந்தியன், சித்திரனுக்கு அழிவை உண்டாக்க விரும்பி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் {தோமரம்} ஒன்றை அவன் {சித்திரன்} மீது ஏவினான். அந்த வேலானது, அவனது {சித்திரனின்} கவசத்தையும், மார்பையும் ஊடுருவி, பொந்துக்குள் நுழையும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(32) அந்த வேலால் தாக்கப்பட்ட அந்த மன்னன், பெரியவையும், பருத்தவையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பானவையுமான தன் கரங்களை விரித்தபடியே கீழே விழுந்தான்.(33) சித்திரன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், போர்க்கள ரத்தினங்களுமான உமது போர்வீரர்கள், பிரதிவிந்தியனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மூர்க்கமாக விரைந்தனர்.(34) பல்வேறு வகைகளிலான கணைகளையும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட சதக்னிகளையும் ஏவிய அவர்கள், சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போல, பிரதிவிந்தியனை விரைவில் மறைத்தனர்.(35) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அந்தப் பிரதிவிந்தியன், போரில் அப்படித் தன்னைத் தாக்குபவர்களைத் தன் கணைமாரியால் எரித்து, வஜ்ரதாரியான சக்ரன் {இந்திரன்}, அசுரப்படையை முறியடித்ததைப் போல உமது படையை முறியடித்தான்.(36)

இப்படியே போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட உமது துருப்புகள், ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றுதிரண்ட மேகத்திரள்கள் காற்றால் விரட்டப்படுவதைப் போலத் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(37) அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட உமது படையினர் இவ்வாறு ஓடியபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மட்டும் தனியனாக வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(38) (பழங்காலத்தில்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், விருத்திரனுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த மோதலைப் போல, அங்கே அவர்களுக்குள் ஒரு கடும் மோதல் உடனேயே நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்