Saturday, March 04, 2017

“அர்ஜுனனை எனக்குக் காட்டிக் கொடுத்தால்?” என்ற கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 38

“If a person Discovers Arjuna to me?” said Karna! | Karna-Parva-Section-38 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைத் தன்னிடம் காட்டிக் கொடுப்பவனுக்கு, அவன் விரும்பும் பரிசுகளைத் தான் அளிக்கப் போவதாகப் பாண்டவத் துருப்பினரிடம் சொன்ன கர்ணன்; மீண்டும் சல்லியன் கர்ணனிடம் பேசத் தொடங்குவது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படைக்கு மகிழ்வூட்டியபடி கர்ணன் போருக்குப் புறப்பட்ட பிறகு, தான் சந்தித்த ஒவ்வொரு பாண்டவப் படைவீரனிடமும் அவன் {கர்ணன்} இவ்வார்த்தைகளைப் பேசினான்:(1) “வெண்குதிரைகளைக் கொண்ட உயர் ஆன்மத் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று எனக்குச் சுட்டிக் காட்டுபவனுக்கு, அவன் விரும்பும் எந்தச் செல்வத்தையும் நான் அளிப்பேன்.(2) அதைப் பெற்ற பின்பும் அவன் நிறைவடையவில்லையென்றால், அதற்கு மேலும் அதிகமாக நான் கொடுப்பேன். அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு ஒரு வண்டிச்சுமை அளவுக்கு ரத்தினங்களையும், நகைகளையும் அளிப்பேன்.(3) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவன் நிறைவடையவில்லையெனில், அவனுக்கு நூறு பசுக்களையும், அவற்றில் பால் கறப்பதற்காக அதே அளவு பித்தளை பாத்திரங்களையும் கொடுப்பேன்.(4) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு முதன்மையான நூறு கிராமங்களை அளிப்பேன். அர்ஜுனனை எனக்குக் காட்டுபவனுக்கு, கருங்கண்களையும், நீண்ட கூந்தலையும் கொண்ட காரிகைகள் பலரையும், வெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றையும் அளிப்பேன்.(5)


அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், யானைகள் அளவுக்குப் பெரியவையான ஆறு காளைகள்[1] பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான மற்றுமொரு தேரை நான் அளிப்பேன்.(6) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தங்கக் கழுத்தணி பூண்டவர்களும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களும்[2], பாடல் மற்றும் ஆடலில் சாதித்தவர்களுமான நூறு காரிகைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(7) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், நூறு யானைகளையும், நூறு கிராமங்களையும், நூறு தேர்களையும்,(8) பருத்தவையும், சிறந்த தன்மைகள் பலவற்றைக் கொண்டவையும், தேர்களை இழுக்க வல்லவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான பத்தாயிரம் {10000} குதிரைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(9) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குத் தங்கக் கொம்புகள் கொண்ட நூனூறு பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் கொடுப்பேன்.(10) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாகத் தங்க இழைகளாலும், தங்க நகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஐநூறு {500} குதிரைகளை நான் அவனுக்கு அளிப்பேன். நன்கு கீழ்ப்படியும் தன்மை கொண்ட வேறு பதினெட்டு குதிரைகளையும் நான் கொடுப்பேன்.(11,12) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், முதன்மையான காம்பாஜக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான பிரகாசமான ஒரு தேரையும் அளிப்பேன்.(13)

[1] “அல்லது இது, “காளைகளாகச் செயல்படும் ஆறு யானைகள் பூட்டப்பட்ட தேர்” என்ற பொருளையும் தரலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “அர்ஜுனனைக் காட்டுகின்ற மனிதன் அதில் திருப்தியடையாவிடில் அவனுக்கு மறுபடியும் ஸ்வர்ணமயமான கஜராஜனே நான் கொடுப்பேன்” என்று சொல்லிவிட்டு, அதற்கு அடிக்குறிப்பாக, “யானை போன்ற வடிவமுள்ள ஆறு காளைக் கட்டிய பொன்னாலாக வேறொரு தேர்”, அல்லது “யானைகளையே காளைகளைப் போல் கட்டிய தேர்” எனப் பொருள் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

[2] இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சியாமை Cyaamaa என்ற சொல், குளர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ந்ததாகவும் உள்ளதும், புடம்போட்ட தங்கத்தைப் போன்றதும், பிரகாசமான நிறத்தைக் கொண்டதுமான தோலை உடைய காரிகை ஒருத்தியைக் குறிக்கும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மிகவும் மதிப்புமிக்கப் பரிசாகக் கழுத்துகளில் தங்க ஆரங்களுடையவையும், தங்க அம்பாரிகளால் மறைக்கப்பட்டவையும், பெருங்கடலின் மேற்குக் கடற்கரைகளில் பிறந்தவையும்,[3] யானைப்பழக்கிகளால் பயிற்சியளிக்கப்பட்டவையுமான அறுநூறு {600} யானைகளை நான் அவனுக்கு அளிப்பேன்.(14,15) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, மக்கள் நிறைந்தவையும், செல்வம் நிறைந்தவையும், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை அருகாமையில் கொண்டவையும், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், (இன்றியமையாதவை பிறவற்றுடன் சேர்த்து) நன்கு அமைக்கப்பட்டவையும், மன்னர்களால் அனுபவிக்கத் தகுந்தவையுமான பதினான்கு {14} வைசியக் கிராமங்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(16,17) தனஞ்சயனை {அர்ஜுனனை} எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு, தங்கக் கழுத்தணி கொண்டவர்களும், மகதர்களின் நாட்டைச் சேர்ந்தவர்களும், மிக இளவயதுடையவர்களுமான நூறு அடிமைப்பெண்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(18) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, உண்மையில் அவனே வேண்டுவதைக் கொடுப்பேன்.(19) நான் கொண்டுள்ள மகன்கள், மனைவியர், இன்பங்கள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் அவன் விரும்பினால் நான் கொடுப்பேன்[4].(20) உண்மையில், கேவசவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் நான் கொன்ற பிறகு, அவர்களை எனக்குக் கண்டுபிடித்துத் தந்தவனுக்கு, அவர்களிடம் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம்} எஞ்சியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுப்பேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(21)

[3] “இந்த வெளிப்பாட்டில் ஆப்ரிக்கா பற்றிய குறிப்பைக் கண்டுபிடிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இங்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலச் சொல் அபராந்தேஷு aparaanteshu ஆகும், அதாவது மறுமுனை என்பதாகும். இது கிட்டத்தட்ட, நான் இட்டிருப்பதைப் போலக் கடலின் மறுகரை என்ற பொருளைக் கொண்டதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] வேறொரு பதிப்பில், “பிள்ளைகளையும், பெண்டாட்டியையும் தவிர, என்னிடம் வேறு எந்தப் பொருள் இருக்கிறதோ அதையும், பின்னும் எந்த எந்த வஸ்துவை மனத்தினால் விரும்புகிறானோ அந்த அந்த வஸ்துவையும் நான் அவனுக்குக் கொடுப்பேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “அர்ஜுனனை எனக்குக் காட்டும் மனிதன் இது போதவில்லை எனக் கருதினால் நான் அவனுக்கு, அவன் விரும்பும் வேறு வரத்தையும் கொடுப்பேன். மகன்கள், மனைவியர் மற்றும் செல்வங்களை நான் கொண்டுள்ளேன். அவன் விரும்பினால், இவற்றை நான் அவனுக்குக் கொடுப்பேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியின் பதிப்பிலுள்ள சுலோகம் எண் 14 முதல் 20வரையிலான செய்திகள் எதுவும் இல்லை.

அந்தப் போரில் இப்படிப் பல்வேறு பேச்சுகளைப் பேசிய கர்ணன், கடலில் பிறந்ததும், இனிய ஒலியை உண்டாக்குவதுமான தன் சிறந்த சங்கை எடுத்து ஊதினான்.(22) சூதன் மகனின் நிலைக்குத் தகுந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் நிறைந்தவன் ஆனான்.(23) அந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் காளையே, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில், மிருதங்கங்கள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்கள், சிங்க முழக்கங்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியன அங்கே பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளோடு கலந்து எழுந்தன. மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்களின் கூச்சல்களும் அங்கே எழுந்தன.(24,25) இவ்வாறு (கௌரவத்) துருப்புகள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த போது, வெறுப்புடன் சிரித்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போரெனும் பெருங்கடலுக்குள் மூழ்கச் செல்பவனும், இத்தகு வீண் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}[5].(26)

[5] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியில் மொத்தம் 19 சுலோகங்களே இருக்கின்றன. வேறொரு பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் எந்தப் பகுதியிலும் சுலோக எண்கள் சுட்டப்படுவதில்லை. பல பகுதிகளின் செய்திகள் முன்னுக்குப்பின்னாக மாறி மாறியே வருகின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பு எல்லாப் பகுதிகளிலும், இந்தப் பகுதியைப் போன்ற சிலவற்றைத் தவிரக் கங்குலியின் பதிப்புடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்றது.
--------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 38-ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்